புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_m10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_m10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_m10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_m10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_m10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_m10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_m10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_m10இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Nov 28, 2013 5:01 pm

இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை UrDsPjvsR7SvDxA5rCv5+sirumalai
திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக உள்ள மலைவாசஸ்தலம் சிறுமலை. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ளது.

சிறுமலை,திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புக் களில் ஒன்று. மலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
புராணத்தில் சிறுமலை: புராண காலத்தில் இருந்தே இந்த மலைக்கு என ஒரு தனி மகிமை உண்டு. அனுமன், மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை தூக்கிச்சென்றபோது அதில் இருந்து ஒரு சிறு துண்டு திண்டுக்கல் பகுதியில் விழுந்தது. அது தான் சிறுமலை என்று அழைக்கப்படுகிறது, என புராணங்கள் மூலம் அறியப்படுகிறது.

சிறுமலையை சுற்றி புதூர், பனையூர், சக்கிலிப்பட்டி, அரளக்காடு, தவிட்டுக்கடை, தாழைக்காடு, கடமான்குளம் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. சித்தர்கள் வாழ்ந்த மலை என்பதால் இங்கு மூலிகைகளுக்கு பஞ்சமில்லை. பெரும்பாலான மூலிகைகள் குறித்து தற்போதுள்ள மக்களுக்கு தெரியவில்லை என்பதால், பயன்பாடு இன்றி உள்ளது. வளர்ந்தோங்கிய மரங்கள், சோலைகள் என பசுமையில் ரம்மியாக காட்சியளிக்கிறது சிறுமலை. வாழை, பலா, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை மலைப்பகுதியில் முக்கிய பயிர்கள்.

நம்பிக்கை: சிறுமலையில் இரண்டு ஆறுகள் உருவாகின்றன. ஒன்று சந்தானவர்த்தினி ஆறு, இது மலையில் உருவாகி திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடுகிறது. மற்றொன்று சாத்தையாறு, மலையில் உருவாகி மதுரை மாவட்டம் நோக்கி செல்கிறது. சந்தானவர்த்தினி ஆற்றில் நீராடுபவர்களுக்கு சந்தானம் (சந்ததிகள்) பெருகும் என்பது நம்பிக்கை. மலையில் இருந்து வரும் காற்று, மூலிகைகள் பலவற்றை கடந்து வருவதால் காசநோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது என்றும் கூறப்படுகிறது.

சுற்றுலாத்தலம்: சிறுமலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டபோதும், அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை. இதற்காக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து திட்டங்களை தீட்டியுள்ளது. இதை செயல்படுத்த அரசிடம் நிதியை எதிர்பார்த்து காத்துள்ளது.

சிறுமலைக்கு செல்ல...

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வசதியுண்டு.

கே.சுசீந்திரன்(விவசாயி, சிறுமலை): கடந்த எட்டு தலைமுறையாக எங்கள் குடும்பம் சிறுமலையில் வசித்து வருகிறோம். சிறுமலை இன்றும் இயற்கை மாறாமல் உள்ளது. தொடர்ந்து இயற்கை வளத்தை பாதுகாக்கவேண்டும். சுற்றுலா பயணிகள் வருகை
அதிகம் இல்லாததால் பாலிதீன் உள்ளிட்ட தொந்தரவுகளில் இருந்து ஒதுங்கி உள்ளது. 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

புராணங்கள், இதிகாசங்கள் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிறந்த இடம் பிடித்துள்ளது சிறுமலை. சிறுமலையில் உருவாகும் ஆறுகள் பராமரிப்பின்றி உள்ளதால் இதன் முழுபயன் மக்களுக்கு சென்றடைவதில்லை.மேற்கு தொடர்ச்சி மலையில் சேராமல் தனியாக உள்ளது சிறுமலை. மலையை பராமரிப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொண்டால் இன்னும் பல தலமுறைகளுக்கு சிறுமலையின் இயற்கையை கொண்டு செல்லலாம்.

சிறுமலை... சிலவரிகளில்...

சிறுமலையில் முதன்முதலாக 1838 ல் காப்பி பயிரிடப்பட்டது. இதை பயிரிட்ட ஆங்கிலேயர் வில்லியம் எலாய்டு.
மலையில் 895 வகையான தாவர வகைகள் உள்ளன.
மலையின் உயரமான இடம் முள்ளுபன்றி மலை.
மலையிலுள்ள வெள்ளி மலைக்கோயிலில் அருள்பாலிப்பவர் சிவன்.
சிறுமலைக்கு வந்த ஆங்கிலேயர்கள், இங்குள்ள குளிர் போதாது என அறிந்த பிறகு, கொடைக்கானல் சென்றுள்ளனர்.
சிறுமலையின் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிலி செல்சியஸ், அதிகளவு 30 டிகிரி செல்சியஸ்.
சிறுமலையிலுள்ள மீன்முட்டிபாறை பகுதியில் உள்ள குகைகளில் ஆதிவாசிகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன.

வாழைக்கு தனி ருசி...
இங்கு விளையும் மலை வாழைக்கு தனி சுவை. பழநி கோயிலின் பிரசாதமான பஞ்சாமிர்தம் சிறுமலை வாழையில் தயாரித்தபோது
அதன் ருசியே தனி. முடிக்கொத்து நோயால் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து மலைப்பகுதியில் வாழை விவசாயம் குறைந்துவிட்டது. இதனால் பழநி மலைக்கோயிலுக்கு போதுமான வாழைப்பழங்கள் வழங்கமுடியாதநிலை. வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சிறுமலை பழம் அனுப்பபட்டு வந்த காலமும் உண்டு.

சிறுமலையில் விளையும் பழங்களுக்கு என திண்டுக்கல் ரயில்வேஸ்டேஷன் அருகே சிறுமலை ஷெட் எனப்படும் தனி மார்க்கெட் உண்டு. இங்கு மலையில் விளையும் வாழை, எலுமிச்சை ஆகியவை விற்கப்படுகிறது.மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.

சிறுமலையின் சிறப்பு பாடல்..

அஞ்சனாதேவி அனுமந்தன் கைவீச்சில் சிதறுண்ட
சஞ்சீவிமலையின் சிறுதுண்டே சிறுமலை
மிஞ்சிய கடுநோய் தீர்க்கும் மூலிகைகள் மிகவுண்டு
செஞ்சுவையில் சிறப்புற்ற சிறு கதலி பழமும் உண்டு
நெஞ்சடக்கி தவம்புரிந்த சித்தர்கள் கதைகளுண்டு
நஞ்சரவம் கடித்தாலும் பயமில்லா நியதியுண்டு
பஞ்சடைந்த இரும்பையும் பொன்னாக்கும் தைலகிணறுண்டு
செஞ்சடையான் அருள் சுரக்கும் வெண் நாவல்பழமுண்டு
வஞ்சியர் மனதிழுக்கும் செண்பக மலருண்டு
மஞ்சு சூழ் சிகரத்தில் வெள்ளியங்கிரி நாதன் உண்டு
தலசோலையாம் ஒடுக்கத்திலே சொர்ணதீர்த்தமுண்டு
வந்தாரை அனைத்தருளும் திரிசூல ருத்ராச்ச விருச்சமுண்டு
கேட்டோருக்கு கேட்ட வர மருளும் கலியுக
அகஸ்தியர் அதிஸ்டானமும்முண்டு.
-(சிறுமலை குறித்த பாடல் ஒன்று)

நன்றி: தினமலர்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Nov 28, 2013 5:06 pm

சுற்றுலாபயணிகளின் வசதிக்காக சிறுமலை பகுதியில் ரூ.6 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பகுதி சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டாலும், பயணிகள் சென்று வர அடிப்படை வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லை. இவற்றை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், சிறுமலைக்கு அதிக சுற்றுலாபயணிகளை ஈர்க்க முடியும். இதையடுத்து வனத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், சுற்றுலா பயணிகளுக்கென வசதிகள் ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை மூலம் சிறுமலையில், ரூ.10 லட்சம் செலவில் மலைப்பாதை உருவாக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் "டிரக்கிங்' செல்ல ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இயற்கை எழில் காட்சிகளை கண்டுகழிக்க ரூ. 6 லட்சம் செலவில் இரண்டு "வாட்சிங் டவர்' அமைக்கப்படவுள்ளது. சோலார் மின்விளக்குகள் அமைப்பது, 10 ஹெக்டேர் பரப்பில் ரூ.20 லட்சம் செலவில் மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகள் தோட்டம் அமைக்கப்படவுள்ளது.

தலா ரூ.2 லட்சம் செலவில் சுற்றுலாபயணிகள் தங்க வசதியாக மூங்கில் வீடுகள் ஐந்தும், வெள்ளிமலைக்கோயிலை சுற்றி நடைபாதை, கழிப்பறை வசதியுடன் காத்திருப்போர் அறை ரூ.10 லட்சம் செலவில் கட்டப்படவுள்ளது. வனத்துறை சார்பில் மொத்தம் ரூ.2.90 கோடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம், சிறுமலைபுதூரில் ரூ.1.50 கோடி செலவில் 15 "காட்டேஜ்' கள் கட்டப்படவுள்ளது. குடிநீர் வசதியை மேம்படுத்த, போர்வெல், மேல்நிலைத்தொட்டி, குழாய் வசதிகள் ரூ.20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
ரூ.15 லட்சம் செலவில் குழந்தைகள் பூங்கா, நடைபாதை, கண்காணிப்பு கோபுரம், பயணிகள் விடுதியை சீரமைக்க ரூ.9 லட்சம் என, பல்வேறு பணிகளுக்காக மொத்தம் ரூ.3.09 கோடி க்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் சேர்ந்து சிறுமலையில் ரூ. 6 கோடியில் பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதற்கான நிதி அரசிடமிருந்து பெறப்பட்டவுடன் பணிகள் துவங்கும்.

நன்றி: தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 6:05 pm

இங்கு விளையும் திராட்சை சுவையானது...
-


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 22, 2014 8:44 pm

சிறுமைலையைப் பெரிதாகப் பேசும் செய்தியைத்தந்த தினமலருக்கும் பார்த்திபன் அவர்களுக்கும் நன்றி !
சுற்றுலாத் துறை இதுபோன்ற் இடங்களை  மேம்படுத்தினால் இந்தியாவில் பொன் கொழிக்கும் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக