புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
3 Posts - 75%
Manimegala
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 6:49 pm

First topic message reminder :

ஒவ்வொரு ஆண்டும், கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டும் 44-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவ., 20ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 10நாட்கள் நடக்கும் இவ்விழா நவ., 30 ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என 100க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படகாரர்கள், டி.வி., கேமரா மேன்கள் கோவாவை முற்றுகையிட்டு திரைப்பட விழா குறித்த செய்திகளை எழுதவும், ஒலி, ஒளிபரப்பவும் செய்து வருகின்றனர்.

நான் இயக்குநர்களின் கதாநாயகி... கோவா பட விழாவில் பத்மப்ரியா பேட்டி!!

கோவாவில் நடைபெற்று வரும் 44வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் சினிமாவில் இருந்து தங்கமீன்கள் படம் தேர்வானது. இதற்காக இப்படத்தில் நடித்த ராம், ஷெல்லி, பத்மப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பத்மப்ரியா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* கொஞ்ச நாளாக தமிழ் சினிமாவில் உங்களை காணோமே...?

தவமாய் தவமிருந்து, பட்டியல், மிருகம், சத்தம் போடாதே, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பொக்கிஷம் போன்ற பல படங்கள் மூலம் மக்களிடையேயும், மீடியாவிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளேன். உலகில் ஏழாவது சிறந்த பல்கலைக்கழகம் என்று கருதப்படும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் ஒன்றரை ஆண்டு தங்கி முதுகலைப்பட்டம் படித்து பட்டம் பெற்றிருக்கிறேன். நல்ல பயனுள்ள அனுபவம். அதுதான் இந்த இடைவெளி என்கிறார்.

* தமிழ் திரை உலகினரோடு தொடர்பில் இருக்கிறீர்களா...?

நான் நடித்த எல்லா படங்களின் இயக்குனர்களோடும், சக நடிகர், நடிகைகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.

* இந்த கோவா திரைப்பட விழாவில் நல்ல படங்களை பார்த்தீங்களா...?

பொதுவாக சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பான படங்களையே பார்ப்பது என் வழக்கம். ஆனால் இந்த வருடம் மிகவும் நல்ல சில படங்களை இந்தியன் பனோரமாவில் பார்த்தேன். நாகராஜ் மஞ்சுளே டைரக்ட் செய்திருக்கும் பாண்டரி இந்த திரைப்பட விழாவின் பாப்புலர் படம். ஜாதி வித்தியாசம் பிரச்னை பற்றிய கமலேஷ்வர் முகர்ஜி இயக்கியுள்ள மேகே தாஜா தாரா வங்காள மொழிப்படம். பிரபல வங்காள இயக்குனர் ரித்விக் கடக்கின் வாழ்க்கை பற்றிய படம். கெளசிக் கங்குலி இயக்கியுள்ள அபுர் பாஞ்சாலி வங்காள படம். அடுத்து அருமையான ஒரு கனடா நாட்டுபடம். ஆங்கிலத்தில் சாமுவேல் பெக்கெட் என்ற புகழ்பெற்ற ஆங்கில கவிஞன் பற்றி படம். இன் சர்ச் ஆப் எ புயட் சாமுவேல் பக்கெட் எழுதியுள்ள நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் கவிதைகள் எனக்கு பிடிக்கும். இன்னும் ஒரு சில படங்களை பார்த்துவிட ஆசை தான்.

* எந்த மாதிரி பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்...?

நான், டைரக்டர்களின் நடிகை. நான் பணிபுரியும் எந்த டைரக்டருக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பவள். மாடர்ன் பெண், கிராமத்து பெண், இளவரசியோ, ஏழையோ என எந்த மாதிரி கதாபாத்திரம் எனக்கு கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே சிறப்பாக செய்து டைரக்டரிடமும், ஆடியன்சிடமும் நல்ல பெயர் வாங்க முடியும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

* இப்போது ஏதாவது தமிழ்ப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறீர்களா...?

உண்மையாக எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. கைவசம் தமிழ்ப்படம் இல்லை. இந்த ரோலை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர்கள் நினைக்கும்போது நிச்சயம் என்னை கூப்பிடுவார்கள். எந்த மொழிப்படமாக இருந்தாலும் எனது கேரக்டர் எனக்கு பிடித்தாள் நடிக்க ஒப்புக்கொள்ளுவேன்.

* மாறுபட்ட கதை அம்சம் உள்ள பல தமிழ்படங்கள் இப்போது வெற்றி பெறுகின்றன. மக்கள் விரும்பி பார்க்கிறார்கள், அந்த மாதிரி படங்களை பார்த்திருக்கிறீர்களா...?

சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற இன்னும் சில படங்களை ரசித்து பார்த்தேன்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 6:57 pm

விவரமாய் , விளக்கமாய் நிறைய எழுதி இருக்கீங்க, நிதானமாய்த்தான் படிக்கணும் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 6:58 pm

வரா ஏ பிளசிங் விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!

பூடான் - அமெரிக்கா ஹாங்காங் தயாரிப்பாக வெளிவந்திருக்கும் இந்த வரா படம் 96 நிமிடங்கள் ஓடும் படமாக வெளிவந்துள்ளது. வரா(தமிழில் வரம் என்பது பொருத்தமாக இருக்கும்). ஆங்கில படத்தின் முதல் சிறப்பு இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் முழுநேர புத்தமத குரு, பகுதிநேர சினிமா இயக்குனர் கையன்ட்ஸே நோர்பு. புத்தமதம் பற்றி பிடித்துவிட்டு, அமெரிக்காவில் அரசியலும், சினிமா பற்றியும் படித்திருக்கிறார். லிட்டல் புத்தர் என்ற படத்தின் தயாரிப்பில் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.

இந்தியாவில் காட்டு பகுதி கிராமத்தில் நடைபெறும் கதை. வினிதா, அந்த கிராமத்து கோவிலில் நடனமாடும் தேவதாசி. லீலா, அவரது அழகிய மகள், நல்ல டான்ஸர். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞன் ஷாம் சிற்பியாக ஆக வேண்டும் என்ற ஆசைப்படுகிறான். முஸ்லீம் முதியவர் அவனுக்கு சிற்ப கலை பயிற்சி அளிக்கிறார். சரஸ்வதி சிலை உருவாக்க, லீலாவை மாடலாக பயன்படுத்துகிறான். கிராமத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்துவிட்டால் ஆபத்து என்று தெரியும், இருந்தாலும் சிலை வடிக்கிறான். அந்த சிலை முடியும் தருவாயில் ஜாதி வெறியர்கள் சிலை உடைத்து விடுகிறார்கள். முஸ்லிம் முதியவர் அதற்கு முன்பாகவே சிலையை வடிக்க உதவியதற்காக தாக்கப்படுகிறார்.

சிலைக்கு போஸ் பண்ணும் போது லீலாவும், ஷாமும் உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள். தான் கர்ப்பமாக இருப்பதை லீலா உணர்ந்து கொள்கிறாள். கிராமத்தின் ஜமீன்தாரின் மகன், லீலாவின் அழகில் மயங்குகிறான். தான் கர்ப்பமானதை மறைத்து ஜமின்தாரின் மகனை, லீலா மணக்கிறாள்.

லீலாவின் பாத்திரத்தை தத்ரூபமாக நடிகை ஷஹானா கோஸ்வாமி வாழ்ந்து காட்டுகிறார். மறக்க முடியாத எக்ஸ்பிரஸிவ். உணர்ச்சிகளை கொட்டும் கண்கள், செதுக்கி வைத்த முகம். தமிழ்த்திரைப்படத்துறைக்கு நடிப்பு திறமை உள்ள ஒரு கதாநாயகி ரெடி. காட்டில் உள்ள கிருஷ்ணன் சிலை முன்பு பல காட்சிகள் கிருஷ்ணனை நண்பராக, காதலனாக பாவிக்கிறாள். உரிமையாக கிருஷ்ணனுடன் பேசுவது, ஜமீன்தார் வீட்டில் டிவியில் பார்த்த சினிமா குத்து டான்ஸை கிருஷ்ணனுக்கு ஆடி காண்பிப்பது. (தியேட்டரில் பயங்கர கைதட்டல்). பாடல் காட்சிகளில் டான்ஸ் மூவ்மென்ட் எவ்வளவு செய்ற்கையாக நம் படங்களில் இருக்கிறது என்பதை விளக்குகிறது). குழந்தை தனமாக கிரிக்கெட் ஆடுவது என்று பல காட்சிகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் கடவுள் கிருஷ்ணன் மீது பக்திப் பாடல்களுக்கு, லீலா உள்பட பல இளம் பெண்கள் பரத நாட்டியம் ஆடும் காட்சிகளும் ரசிக்கத்தக்கவை.

பசுமையான சூழ்நிலையும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் ப்ராட் போர்டு யங்கின் போட்டோகிராபி, நிதின் சாஹ்னியின் இசையும் பிரமமாதம். ஜமீன்தாரின் மகனுடன் தனக்கு திருமணம் ஆவதற்கு முன்பு, ஷாமை சந்திக்கு லீலா அவனிடம் பேச விழைகிறாள், முயற்சிக்கிறாள். அதற்குள் ஷாம் போய்விடுகிறான். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீ தான் தகப்பன், வேறு வழியின்றி (ஜாதி பேதம்) ஜமீன்தார் மகனை மணக்கிறேன் என்று சொல்லிவிட வேண்டும் என்று துடிப்பாள். ஆனால் அது நடக்காது. அத்துடன் படம் முடிகிறது.

இந்திய கிராமிய பின்னணியில் எளிமையான படத்தை உருவாக்கிய நோர்புவை பாராட்டலாம். தேவதாசி, பிற்படுத்தப்பட்ட ஜாதி மீது அருவருப்பு எல்லாம் இன்னும் இருக்கின்றனவா? என்பது கேள்விக்குறி.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 7:44 pm

வரா ஏ பிளசிங் படத்தில் ஒரு காட்சி
-
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 T9vy9Z0ySq2lGLAkvgvm+vara-a-blessing-001

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 7:54 pm


சுனில் கங்கோபாத்யா
-
7 September 1934 - 23 October 2012 (aged 78)
-
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 UTIGs6PhQ4ixMN05vGIQ+Sunil_Gangopadhyay_taken_by_Ragib
--
இவரால் எழுதப்பட்ட சிறுகதை Rakta Aar Kanna-ன்
திரைப்பட வடிவமே Vara, A Blessing என்பதாகும்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 8:00 pm

வாலெஸா - மேன் ஆப் ஹோம் படத்தில் ஒரு காட்சி
-
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 2 Pf2Eqg9S3OjfOb2IUwQo+Walesa.ManofHope_3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:16 am

தொடர் விளக்கங்களுக்கு நன்றி ஐயா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:17 am

ஆஸ்கர் விழாவில் அந்த 3 விநாடிகள்...!! கோவா விழாவில் பாம்பே ஜெயஸ்ரீ நெகிழ்ச்சி!!

பிரபல கர்நாடக இசை கலைஞரும், தமிழில், சுட்டும் விழி சுடரே... வசீகரா... போன்ற சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருப்பவரும், ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஒரே இந்திய பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில், சினிமாவில் இசை என்பது பற்றி மாஸ்டர் கிளாஸ் என்ற நிகழ்ச்சியில் பேசினார். இசைப்பிரியர்களின் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக இது இருந்தது. அவர் பேசியதிலிருந்து இதோ...

* பாம்பே ஜெயஸ்ரீ என்ற பெயர் எப்படி வந்தது?

பொதுவாக கர்நாடக இசை கலைஞர்கள் தங்கள் ஊர் அல்லது குடும்பத்தின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது வழக்கம். கோல்கட்டாவில் நான் பிறந்தாலும், பம்பாயில் தான் வளர்ந்தேன். என் பெற்றோர்கள் தான் எனக்கு முதல் குரு. பிறகு பாலா மணி என்பவரிடமும், சென்னைக்கு வந்து வயலின் மேதை லால்குடி ஜெயராமனிடமும் இசை பயின்றேன். லால்குடி ஜெயராமன் பிரபல வயலின் வித்துவானாக இருந்தாலும், நன்றாக பாடுவார். இசைக் கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் நிறைய பேர் நன்றாக வாய்ப்பாட்டும் பாடுவார்கள். நான் பம்பாயிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வந்தவள். ஒரு விமர்சகர் என்னை பாம்பே ஜெயஸ்ரீ என்று குறிப்பிட்டு எழுதினார். பின்னாளில் அந்த பெயரே நிலைத்து விட்டது.

* திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு எப்படி வந்தது?

இளையராஜா சார் தான் எனக்கு படங்களில் பாடும் வாய்ப்பு முதலில் கொடுத்தார். அவர் ஒரு ஜீனியஸ். பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம். அவ்வளவு ஞானம். எப்படி வார்த்தையை அழுத்தமாக பாடவேண்டும், எப்படி உணர்வு கொண்டு வர வேண்டும், பாடும்போது எப்படி மூச்சுவிட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். வியட்நாம் காலனி என்ற படத்தில் கையில் வீணையை ஏந்தும் கலைவாணியே... என்ற பாடல். பிஹாக் ராகத்தில் அமைந்த பாட்டு. படத்தின் ஆரம்பத்தில் டைட்டீலில் வரும்போது அந்தபாட்டு வரும். அந்தப்பாட்டு பெரிய ஹிட் ஆகவில்லை.

சென்னைக்கு வருவதற்கு முன்பு, பம்பாயில் பள்ளி, கல்லூரி மாணவியாக பல விளம்பர பாடல்கள்(ரேடியோ, டி.வி.,) பாடியிருக்கிறேன். இருபது வினாடிகள் மட்டுமே வரும் பாடல்கள். ரெக்ஸோனா, பாண்ட்ஸ், ட்ரீம்ப்ளவர் டால்கம் பவுடர் போன்ற விளம்பரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடியிருக்கிறேன். மொழிக்கு மொழி தனித்தன்மை உண்டு. அவற்றை அறிந்து கொண்டேன். நிகழ்ச்சியின் போது அந்த விளம்பர பாடல்களை பாடியும் காண்பித்தார்.

* ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வசீகரா பாடல் பாடியது பற்றி?

ஹாரிஸ் ரொம்ப ஹாப்பி மியூசியன். மின்னலே படத்தில் முதன்முறையாக நான், ஹாரிஸ், தாமரை மூவரும் ஒன்று இணைந்தோம். பிறகு மீண்டும் கஜினி படத்தில் சுட்டு விழிச் சுடரே... என்ற பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகி பாப்புலராகிவிட்டன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:18 am


* லைப் ஆப் பை படத்தில் பாடியது பற்றி?


16 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மகன் பிறந்தான். அவனுக்கு என் அம்மா, பாட்டி பாடிய மற்றும் நிறைய சினிமா பாடல்கள் எல்லாம் பாடி தாலாட்டு பாடுவேன். ஒரு நண்பரின் தூண்டுதலின் பேரில் வாத்ஸல்யம் என்ற ஆல்பம் பண்ணினேன். தாய், குழந்தை இடையே உள்ள பிணைப்பு பாசம் தான் அந்த ஆல்பம். மற்றொரு நண்பர் மூலமாக டைரக்டர் ஆங்லீ-யின் தொடர்பு கிடைத்தது. உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஆங்லீ படத்தின் கதையையும், பாட்டின் பின்னணியையும், பின்னர் பை வளர்ந்த பிறகு தனியாக கடலில் இருக்கும்போது தாய் பாசத்தை உணர்த்த வேண்டும் என்பதையும் விளக்கினார். நான் எழுதிய அந்த தாலாட்டு பாடலை பாடினேன். ஆங்லீக்கு பரிபூரண மகிழ்ச்சி.பாடலை பம்பாயில் ரெக்கார்டிங் செய்தார். லாஸ் ஏஞ்சல் நகரிலும் அந்த பணி தொடர்ந்தது. லைப் ஆப் படத்தை ஆமதாபாத்தில் சென்று பார்த்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது. இயக்குநர் ஆங்லீ, கனடாவை சேர்ந்த இசை அமைப்பாளர் மைக்கேல் டானா, சென்னையை சேர்ந்த நான், எங்களின் மூவரது காம்பினேஷன் நன்றாக ஒர்க்-அவுட்டானது. ஆங்லீக்கு தமிழ் புரியாவிட்டாலும் எனது குரல் எந்த இடத்தில் சாப்ட்டாக இருந்தது, எங்கு லவுடாக இருந்தது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.

* நீங்கள் பாடிய அந்தப்பாடல் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டபோது எப்படி இருந்தது?

என்னால் முதலில் நம்ப முடியவில்லை. டி.வி.யில் செய்தியை கேட்டதும் அவ்வளவு மகிழ்ச்சி. ஆஸ்கர் பரிசளிப்பு விழாவிற்கு சென்றது மறக்க முடியாத அனுபவம். சிறந்த பாடல், சிறந்த பாடகிக்கான பரிசு வேறு ஒருவருக்கு அறிவிக்கப்பட்டபோது மூன்று விநாடிகள் மட்டுமே வருத்தமாக இருந்தது. பின்னர் அந்த எண்ணம் மாறி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்ப்பாடல் ஒன்று ஆஸ்கருக்கு சிபாரிசு செய்யப்பட்டு கெளரவத்தை கொண்டு வர முடிந்தது என்று எண்ணியபோது மிகவும் பெருமையாக இருந்தது. ஆங்லீ, மைக்கேல் டானா இருவருக்கும் மனமார நன்றிகளை கூறிக் கொள்கிறேன் என்றார்.

பாம்பே ஜெயஸ்ரீ, விரைவில் வெளிவர இருக்கும் யான் படத்திலும் மற்றும் புதிய இந்தி படத்திலும் பாடியிருக்கிறார். பதினெட்டு திரைப்பட பாடல்கள் மட்டுமே அவர் பாடியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பாம்பே ஜெயஸ்ரீ பேசும்போது மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் சரியாக இல்லாததால் பார்வையாளர்களுக்கு அதிக இரைச்சலையும், சத்தத்தையும் கொடுத்தது. இதனால் அரங்கில் சிறிது சலசலப்பு நிலவியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:18 am

ரசிகர்களின் அன்புக்கு நன்றி - கோவா படவிழாவில் கமல் பேச்சு

44வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 20ம் தேதி கோலகலமாக துவங்கியது. துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசனை பேச அழைக்கும்போது எனக்கும், அவருக்கும் ஒரே குடும்பம். ஒரே ஜீன்கள், ஒரே டி.என்.ஏ., அவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், ஏழு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து எல்லா மொழிகளிலும் தானே டப்பிங் பேசி சாதனை ஏற்படுத்தியிருப்பவர், தமிழ் கவிதைகள் எழுதுபவர், போட்டோகிராபர், வயலின், மிருதங்கம், போன்ற இசை கருவிகளையும் இசைக்க தெரிந்தவர், தனது நான்காவது வயதில் ஜனாதிபதியிடம் விருது பெற்றவர், நான்கு முறை தேசிய விருது பெற்றவர் என்று கமலை பற்றி சிறப்பாக அறிமுகப்படுத்தினார் நடிகை சுஹாசினி.

கமல் பேசும்போது, என்னைப்பற்றி பல ரகசியங்களை சொல்லி அறிமுகப்படுத்தினார். இப்போது அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்றை சொல்லுகிறேன். அவர் சொன்ன இசைக்கருவிகளை எல்லாம் பயிற்சி எடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவற்றை வாசிப்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களில், 30 திரைப்பட விழாக்களுக்கு நான் சென்றிருக்கிறேன். முதலில் நிறைய நேரம் இருந்தது. ஆனால் டில்லி சென்று விழாவில் கலந்து கொள்ள போதுமான பணம் இருக்கவில்லை. பின்னர் பண வசதி வந்தது. ஆனால் விழாக்களில் பங்கேற்க நேரம் கிடைப்பதில்லை. 1974-ல்(37 ஆண்டுகளுக்கு முன்பு) இந்திய திரைப்பட விழாவில் என்னை சிறப்பு விருந்தினராக கூப்பிடபோகிறார்கள் என்று யாராவது சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

எனது மூன்றரை வயதில் சினிமாவிற்கு வந்தேன். பள்ளிக்கு கூடம் சென்றது கிடையாது. அன்றிலிருந்து இன்றும் ரசிகர்களின் ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அன்புக்கு நான் என்ன சொல்ல முடியும்? நன்றியை தவிர. எனது மகா குரு, செக் நாட்டின் பிரபல இயக்குனர் ஜிரி மென்ஜெல்(இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறவர்) இங்கு இருக்கிறார். அவரிடமிருந்து நான் அறிந்தவை பல. எனது படங்களிலும் அவற்றை காணலாம். அவர் இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைப்படத்துறையில் இன்று நான் பெற்றுள்ள இந்த இடத்திற்காக உலக சினிமாவிற்கு என் நன்றியை கூறுகிறேன்.

இவ்வாறு கமல் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:19 am

44வது கோவா சர்வதேச திரைப்பட விழா: துவக்க விழா நிகழ்ச்சி துளிகள்...!!

* மூன்று கோடி ரூபாய் செலவில் பானாஜி நகரில், கம்பல் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் உருவாக்கப்பட்ட தற்காலிகமான அமைப்பில் 44வது கோவா சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது.

* மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்தி நடிகர், இயக்குனர் ரஜத் கபூர், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை சுஹாசினி இருவரும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். எனக்கு 15 வயதிலிருந்தே திரைப்படம் பண்ண ஆசை, இன்று சர்வதேச திரைப்பட விழாவில் நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்றார் சுஹாசினி.

நான் நான்கு மொழிகள் நன்றாக பேசுவேன். (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) ஆனால் இங்கிலீஷ் அவற்றில் இல்லை. ஏதாவது குறை இருந்தால் சினிமா மீது எனக்குள்ள தீவிர ஈடுபாடு அதை பேலன்ஸ் செய்து விடும் என்று ஆரம்பித்தார் சுஹாசினி.

* மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரி, கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், நடிகை வஹீதா ரஹ்மான், ஹாலிவுட் நடிகை சூசன் ஸரண்டன், பிரபல ஈரானிய டைரக்டர் மஜித் மஜிதி, உலகநாயகன் கமல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்கள். சினிமாவின் இதயமே விளக்கு தான் என்றார் அமைச்சர் திவாரி. மேலும் இந்தியா 39 மொழி திரைப்படங்களை தயாரிக்கிறது என்று பெருமைப்பட கூறினார்.

* டெட் மேன் வாக்கிங் படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை சூசன் ஸரண்டன், நிறைய இந்திய படங்களை பார்க்கவில்லையே என்று வருத்தம் தெரிவித்தார்.

* நடிகை ரேகா, நடிகை ரிது பர்னா சென்குப்தா, ராணி முகர்ஜி, வெங்கடேஷ், மாதவன், தீப்தி நாவல், நானா படேகர், ராணா டகுபதி, ரம்யா, ஜாக்கி ஷெராப் ஆகியோர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.

* வெளிர் மஞ்சள் நிற பட்டுப் புடவை அணிந்திருந்த நடிகை ரேகா, வஹீதா ரஹ்மான், ஆஷா பாஸ்லே இருவரின் கால்களையும் தொட்டு வணங்கினார்.

* விழாவில் பிரபல கதக் நிபுணர் பிஜூ மஹாராஜ் குழுவினரின் கதக் நடனம், மிகவும் சிறப்பாக இருந்தது. 7 பெண்கள், 7 இளைஞர்கள் கண்களை பறிக்கும் வகையில் வண்ண வண்ண உடைகளில் நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். பகீஸா, ஷத்ரஞ்ச் கே கிலாடி, தேவதாஸ், விஸ்வரூபம் - தமிழ், இந்தி படங்களில் வரும் கதக் நடன காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டு, இளம் கலைஞர்கள் மேடையில் அதே நடனத்தை ஆடினார்கள். விஸ்வரூபம் கமல் படம் திரையில் வந்தபோது பயங்கர கைதட்டல்.

* நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விஷேச விருது வழங்கிய போது, அவர் நடித்த கெய்டு, சி.ஐ.டி., பியாஸ்ஸா தீஸ்ரி கசம், காமோஷி, லம்ஹே போன் படத்திலிருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. வஹீதா ரஹ்மான் விருது பெற்றபோது அரங்கமே எழுந்து நின்று நீண்ட நேரம் கரகோஷம் செய்தார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக