புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
24 Posts - 44%
mini
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
381 Posts - 58%
heezulia
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
20 Posts - 3%
prajai
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
4 Posts - 1%
mini
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
3 Posts - 0%
Barushree
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
2 Posts - 0%
Saravananj
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!'


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:35 am

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' P86a

பரம்பொருளையும் அதன் அம்சமான மகான்களின் திருவருளையும் நமக்கு உணர்த்துவது, சிலிர்க்க வைக்கும் சில அனுபவங்களே! அப்படி, எனது வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

திருமணமாகி 6 மாதங்களில் நான் கருவுற்றேன். மருத்துவப் பரிசோதனையின்போது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைவாக உள்ளது என்றும், இதனால் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் கூறிய மருத்துவர்கள், 'கருவைக் கலைத்து விடுவதே நல்லது' என்றும் கருத்து தெரிவித்தனர். அதேநேரம்... 'முதல் குழந்தை என்பதால்... 10 நாட்களுக்குப் பிறகு ஸ்கேன் செய்து, குழந்தையின் இதயத் துடிப்பை மீண்டும் ஒருமுறை பரிசோதித்த பிறகு முடிவெடுக்கலாம்' என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. எனக்கு தானாகவே கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. இதில் எனது முதுகெலும்பில் இன்பெக்ஷன் (தொற்று) ஏற்பட... 'இனி, நீங்கள் கருத்தரிப்பது கடினம்' என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். என் குலம் தழைக்க வாய்ப்பே இல்லை என்றதும் தவித்துப் போனேன்.

இக்கட்டான தருணங்களில், என் இஷ்ட தெய்வமான மகான் ராகவேந்திரரிடம் என் மன பாரத்தை சமர்ப்பித்து விடுவேன். இப்போதும் அப்படித்தான்... அந்த பிருந்தாவன தெய்வத்தை மனமுருக வேண்டிக் கொண்டேன். அவர் அருளால் எனது பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கழித்தேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்று அலுவலகம் விடுமுறை என்பதால் நீண்ட நேரம் தூங்கி விட்டேன். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டே கண்விழித்தேன். வாசலுக்கு வந்து கதவைத் திறந்தால், பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். தனது பெண்ணுக்குத் திருமணம் நடத்துவதற்கு ஏதேனும் பொருளுதவி செய்யுமாறு வேண்டினார். நானும் என்னால் இயன்ற பணத்தைக் கொடுத்தேன். அப்போது அவர், ''என்னம்மா குழந்தை பிறக்காதே என்று வருத்தமா? கவலைப்படாதே... அடுத்த நவராத்திரிக்கு உன் மடியில சைல பிரம்மராம்பிகையே குழந்தையா தவழப் போறா!'' என்று கூறி விட்டு நகர்ந்தார். எனக்கு வியப்பு கலந்த அதிர்ச்சி!

என் கணவரிடம் சென்று நடந்ததை விவரித்தேன். 'பெண்ணுக்குத் திருமணம் என்றால் இன்னும் அதிகம் பணம் கொடுத்திருக்கலாமே' என்று என்னிடம் குறை பட்டுக்கொண்டார் கணவர். உடனே நான் வெளியே ஓடி வந்தேன். அக்கம்பக்கத்து வீடுகளில் அவர் நின்றிருந்தால், கூடுதலாகப் பணம் கொடுத்து அனுப்பலாமே என்று எண்ணினேன். ஆனால், எங்கள் தெருவில் மட்டுமல்ல; அக்கம்பக்கத்து தெருக்களில் தேடியும் அவரைக் காண முடியவில்லை.

இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதுகு வலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயத்தைச் சொன்னார் மருத்துவர். ஆம்... நான் கருவுற்றி ருப்பதாகக் கூறினார் மருத்துவர்!

அந்தப் பெரியவர் சொன்னதுபோல், அடுத்து வந்த நவராத்திரியின்போது அதுவும் வெள்ளிக்கிழமை... எந்தச் சிரமமும் வைக்காமல் சுகப் பிரசவமாக என் மகள் பிறந்தாள்! ராகவேந்திரரே பெரியவராக வந்திருந்து அருள் புரிந்து சென்றிருக்கிறார் என்று என் குடும்பமே மகிழ்ந்தது.

இன்னுமொரு விஷயத்தை யும் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் நாள் ராகவேந்திரர் ஜயந்தி. அன்று துவங்கி, அடுத்த ஜயந்தி வரை அதாவது 21.1.2010 வரை ராகவேந்திர அஷ்டாக்ஷர கோடி ஜபம் நடைபெறுகிறது. இதற்காக, திருவல்லிக்கேணி ராகவேந்திர மடத்தில் என் மகளின் பெயரையும் பதிவு செய்தேன். அப்போது, அருகில் இருந்த என் மகள்(இப்போது அவளுக்கு 4 வயது) இதுகுறித்து விவரம் கேட்டாள். நான் ஜபம் செய்யப்போவது குறித்து எளிமையாக விளக்கினேன். உடனே, ''அம்மா என் பெயரில்தானே ஜபம் செய்யப் போறீங்க. நானே செய்கிறேன்'' என்றாள். நான் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விளையாட்டாகச் சொல்கிறாள் என்று விட்டு விட்டேன்.

ஆனால் அவள், தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து, சிரத்தையுடன் ஜப மாலையை உருட்டியபடி, 'ராகவேந்திராய நம' என்று தியானம் செய்வதைப் பார்க்கும்போது குரு ராகவேந்திரரே எனக்குப் பெண்ணாக வந்து பிறந்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது; எல்லாம் குருவின் திருவருள்!

- மு.ருக்மணி பாலாஜி, பொன்னேரி

http://raghavendra.info/?p=111

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 21, 2013 10:37 am

நன்றி பிரமிப்பாக உள்ளது ,

'ராகவேந்திராய நம'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக