புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவின் பிரதமர் கனவைக் காலி பண்ணுகிறார் சோ!” - ம.நடராசன்
Page 1 of 1 •
அத்தனை களேபரங்கள், கைது படலங்களுக்குப் பிறகும் உற்சாகம் துளிகூட குறையவில்லை ம.நடராசனிடம்!
''பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், சர்வதேச வாழ்வியல் சமூகத்தின் மாநாடு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும். இந்த வருடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்தது. 52 நாடுகளைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்களுடன் இந்தியா சார்பில் நான் கலந்துகொண்டு மனித உரிமைகள் பற்றி பேசினேன். வட அமெரிக்காவில் உள்ள டொரொன்டோ நகரில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற கரும்புலிகள் தினத்தில் பங்கெடுத்து, ஈழத்துக்காக உயிரைத் தியாகம் செய்த கரும்புலிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினோம். அப்படியே வரும் வழியில் இருக்கும் பல நாடுகளில் அலுவல்ரீதியாகவும் மன மகிழ்ச்சிக்காகவும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தேன். தமிழக அரசியலில் இனி நடராசனின் அடுத்த கட்டப் பாய்ச்சலைப் பார்க்கலாம்!'' என்கிறார் கலகலப்பாக.
''அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு எப்படி அமையும்?''
'' 'கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டுசென்ற காங்கிரஸ், மதவாதக் கொள்கைகளைக்கொண்ட பி.ஜே.பி. இரண்டு கட்சிகளுடனும் இனி கூட்டணி இல்லை’ என்று அ.தி.மு.க. எப்போதோ அறிவித்துவிட்டது. இடதுசாரிகளின் மூன்றாவது அணி முயற்சியும் கலைந்துபோகும் மேகம் போலத்தான். தி.மு.க. தலைவர் கருணாநிதி, வழக்கமான தனது ராஜதந்திரத்துடன் பி.ஜே.பி-க்கு வாலையும், காங்கிரஸுக்குத் தலையையும் காட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இரண்டு கட்சிகளில் எதற்கு அதிக இடங்கள் கிடைக்கிறதோ, அவர்களுடன் ஒட்டிக்கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவருடைய திட்டம்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பக்கம் சாய்வது போலத் தெரிகிறது. அது அவரது உரிமையாக இருக்கலாம். ஆனால், அண்ணா வழியில் வந்தவர்கள், திராவிடக் கொள்கையின் மேல் உண்மையான பற்றுக் கொண்டவர்கள் யாரும் பி.ஜே.பி-யோடு கூட்டு வைக்க மாட்டார்கள். அப்படியே கூட்டணி சேர்ந்தாலும் அவர் களால் அங்கு காலம் தள்ள முடியாது. அதனால்தான் ஜெயலலிதாவே 13 மாதங்களுக்கு மேல் அவர்களுடன் கூட்டணியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், கருணாநிதியால் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது என்றால், அதற்கு அவர் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு குடும்ப நலனை மட்டும் மனதில்கொண்டதுதான் காரணம்.
விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பர். ஆனால், அவர் கட்சிக்குப் பெயர் வைத்ததில் தொடங்கி, இன்று வரை அவருடைய எல்லா நடவடிக்கைகளிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்று அவர் கட்சிக்கு பெயர் வைத்ததே பெரிய குழப்பம். தேசியமும் திராவிடமும் எப்போதும் ஒன்றிணைய முடியாது. அதேபோல் தன்னை 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அவர் அழைத்துக் கொள்வதையும் முதல் ஆளாக நான்தான் விமர்சனம் செய்தேன். 'அண்ணா என்றால் ஒருவர்தான். பெரியார் என்றால் ஒருவர்தான். அதேபோல் எம்.ஜி.ஆர். என்றாலும் ஒருவர்தான். அப்படி நீங்கள் சுயமாக ஓர் அடையாளத்தைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்றேன். இப்படிப்பட்ட குழப்பங்களால், அவருடைய செல்வாக்கு ஒவ்வொரு நாளும் சரிந்துகொண்டுதான் இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அவருடைய கட்சிக்கு அக்னிப் பரீட்சை. அதில் அவர் தவறான கட்சியுடன் கூட்டணி வைத்தால், அவருடைய ஓட்டு வங்கி நான்கு சதவிகிதத்துக்குச் சரிந்துவிடும்!''
''மத்தியில் காங்கிரஸ், பி.ஜே.பி. என்ற இரண்டு கட்சிகளைத் தவிர்த்து தேசிய அளவில் செல்வாக்கான கட்சி எதுவுமே இல்லையே? மூன்றாவது அணி என்பது இன்றும் கானல் நீர்தான். இந்த நிலையில் வேறு யார்தான் மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்?''
''தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி அமைத்த காலம் நேரு, இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியோடு முடிந்துவிட்டது. இனி மாநிலக் கட்சிகளின் தயவுடன் கூட்டணி மந்திரி சபைதான் அமைக்க முடியும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டுக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்காது. மூன்றாவது அணி அமைவது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட திரிசங்கு நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பும் யாராலும் அல்லது எந்தத் தேசியக் கட்சியானாலும், மாநிலக் கட்சிகளின் ஆதரவைத்தான் நம்ப வேண்டும். அப்போது அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட ஓர் ஆட்சிதான் மத்தியில் அமைய முடியும். ஆக, எந்த மாநிலக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுகிறதோ, அதன் பிரதிநிதிதான் பிரதமரை ஆட்டுவிப்பார். அல்லது அவரேகூட பிரதமராக வருவார். அந்தப் பிரதிநிதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவாகக்கூட இருக்கலாம்!''
''அது ஏன் ஜெயலலிதா? வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அந்தத் தகுதி இல்லையா?''
''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கக்கூடியவர். தன்னுடைய நோக்கத்தில் தடுமாற்றம் இல்லாதவர். எந்த நிலையிலும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர். அவர் நாட்டின் பிரதமராக வரும்போது, தமிழகத்தின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார். இந்தியாவின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார். அதனால் பிரதமர் பதவிக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார்!
மன்மோகன் சிங்கே பிரதமராக பணியாற்றும்போது, இந்த நாட்டில் உள்ள யாராலும் பிரதமராகப் பணியாற்ற முடியும் என்றுதானே அர்த்தம். அப்போது ஜெயலலிதாவால் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட முடியும்!''
''நீங்கள் அ.தி.மு.க-வில் அதிகாரம் செலுத்தியதாகச் சொல்லிதானே உங்கள் குடும்பத்தினரை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார்கள்... ஆனால், இப்போதும் அதே உரிமையுடன் ஜெயலலிதாவின் பிரதமர் லாபி பற்றி பேசுகிறீர்களே!''
''நாங்கள் எங்கே அதிகாரம் செலுத்தினோம்? ஊடகங்களும் முதலமைச்சரின் அரசியல் ஆலோசகர் என்று சொல்லிக்கொண்டு ஆதாயம் அடைந்துவரும் 'சோ’வும் சேர்ந்துதான் அப்படி ஒரு பிம்பத்தைச் சித்திரித்தார்கள். எந்தக் கட்சியை நாங்கள் உயிர் மூச்சாக நினைத்தோமோ, அந்தக் கட்சியில் யாரை முன்னணிக்குக் கொண்டுவரப் பாடுபட்டோமோ... அவராலேயே வெளியேற்றப் பட்டோம். எங்கள் குடும்பத்தினர் மீது வரிசையாக வழக்குகள் போடப்பட்டன. ஆனால், எதையாவது நிரூபிக்க முடிந்ததா? முடியவில்லையே!
'சசிகலாவும் நாங்களும் இருந்தால், ஜெயலலிதாவை இல்லாமல் ஒழித்துவிடுவோம். கட்சியை அழித்துவிடுவோம்’ என்றார்கள். ஆனால், பெங்களூரு வழக்கில் என்ன நடந்தது? 'நடந்த அனைத்துக்கும் நான்தான் பொறுப்பு’ என்று எல்லாப் பழியையும் சசிகலா ஏற்றுக்கொண்டார். 'எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று ஒதுங்கியாகொண்டார்? இல்லை கட்சியை அழித்துவிட்டாரா?''
'' 'சோ’வுக்கு உங்கள் குடும்பத்தின் மீது அப்படி என்ன கோபம்?''
'' 'ஜெயலலிதாவைச் சுற்றி சசிகலா நடராஜன் குடும்பத்தினர் மட்டும்தான் இருக்கிறார்கள். நம்மால் நெருங்க முடியவில்லை’ என்ற காழ்ப்பு உணர்ச்சிதான். ஆனால், எங்களுக்கு எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் நாங்கள் ஒரு நாளும் அ.தி.மு.க-வுக்கோ அதன் தலைமைக்கோ எதிராகச் செயல்பட மாட்டோம். ஆனால், சோ என்ன அப்படியா?
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பக்கம் அத்வானியையும் மறுபக்கம் நரேந்திர மோடியையும் வைத்துக்கொண்டு ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்று பேசினார். அவருடைய அந்தப் பேச்சுதான், ஜெயலலிதாவிடம் பிரதமர் கனவை விதைத்தது. 'ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் உள்ளன’ என்று தொடர்ந்து பேசி ஆசையை வளர்த்தவர், அதன் மூலம் பல ஆதாயங்களை அடைந்தார். ஆனால், திடீரென கடந்த வாரம், 'ஜெயலலிதா பிரதமராக வர முடியாது’ என்று பேட்டி அளிக்கிறார். ஜெயலலிதாவின் பிரதமர் கனவை காலி பண்ணும் எண்ணம் இது. இவரை எப்படி நம்பிக்கைக்குரிய மனிதராக சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை!''
''அண்மையில் ஒரு விழாவில், 'என் காலுக்குப் போடப்பட்டிருந்த தடைகள் நீங்கிவிட்டன. நாம் நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதத்தையும் ஊழலையும் எதிர்த்து வேலை செய்வோம்’ என்று பேசினீர்கள். அ.தி.மு.க. முகாமில் இருந்து மீண்டும் அழைப்பு வந்திருக்கிறதா?''
''எங்கு இருந்தும் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. உடைந்தது உடைந்ததாகவே இருக்கிறது. அவர்கள் என் மீது போட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 'நாம் பாடுபட்டு வளர்த்த கட்சி. பல இன்னல்களை அனுபவித்து அந்த அம்மாவை முன்னுக்குக் கொண்டுவந்தோம். எனவே, அங்கு நமக்கு இன்னும் ஒட்டுறவு இருக்கிறது’ என்ற நினைப்பு எனக்குள் இருந்தது. அவைதான் தடைகள் என்று சொன்னேன். அந்தத் தடைகள்தான் தற்போது உடைந்துவிட்டன. இப்போது நான் சுதந்திர மனிதனாக இருக்கிறேன். அந்தச் சுதந்திரத்தைக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சில காரியங்களை நிகழ்த்துவேன்!''
விகடன்
''பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், சர்வதேச வாழ்வியல் சமூகத்தின் மாநாடு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும். இந்த வருடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்தது. 52 நாடுகளைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்களுடன் இந்தியா சார்பில் நான் கலந்துகொண்டு மனித உரிமைகள் பற்றி பேசினேன். வட அமெரிக்காவில் உள்ள டொரொன்டோ நகரில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற கரும்புலிகள் தினத்தில் பங்கெடுத்து, ஈழத்துக்காக உயிரைத் தியாகம் செய்த கரும்புலிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினோம். அப்படியே வரும் வழியில் இருக்கும் பல நாடுகளில் அலுவல்ரீதியாகவும் மன மகிழ்ச்சிக்காகவும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தேன். தமிழக அரசியலில் இனி நடராசனின் அடுத்த கட்டப் பாய்ச்சலைப் பார்க்கலாம்!'' என்கிறார் கலகலப்பாக.
''அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு எப்படி அமையும்?''
'' 'கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டுசென்ற காங்கிரஸ், மதவாதக் கொள்கைகளைக்கொண்ட பி.ஜே.பி. இரண்டு கட்சிகளுடனும் இனி கூட்டணி இல்லை’ என்று அ.தி.மு.க. எப்போதோ அறிவித்துவிட்டது. இடதுசாரிகளின் மூன்றாவது அணி முயற்சியும் கலைந்துபோகும் மேகம் போலத்தான். தி.மு.க. தலைவர் கருணாநிதி, வழக்கமான தனது ராஜதந்திரத்துடன் பி.ஜே.பி-க்கு வாலையும், காங்கிரஸுக்குத் தலையையும் காட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இரண்டு கட்சிகளில் எதற்கு அதிக இடங்கள் கிடைக்கிறதோ, அவர்களுடன் ஒட்டிக்கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவருடைய திட்டம்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பக்கம் சாய்வது போலத் தெரிகிறது. அது அவரது உரிமையாக இருக்கலாம். ஆனால், அண்ணா வழியில் வந்தவர்கள், திராவிடக் கொள்கையின் மேல் உண்மையான பற்றுக் கொண்டவர்கள் யாரும் பி.ஜே.பி-யோடு கூட்டு வைக்க மாட்டார்கள். அப்படியே கூட்டணி சேர்ந்தாலும் அவர் களால் அங்கு காலம் தள்ள முடியாது. அதனால்தான் ஜெயலலிதாவே 13 மாதங்களுக்கு மேல் அவர்களுடன் கூட்டணியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், கருணாநிதியால் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது என்றால், அதற்கு அவர் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு குடும்ப நலனை மட்டும் மனதில்கொண்டதுதான் காரணம்.
விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பர். ஆனால், அவர் கட்சிக்குப் பெயர் வைத்ததில் தொடங்கி, இன்று வரை அவருடைய எல்லா நடவடிக்கைகளிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்று அவர் கட்சிக்கு பெயர் வைத்ததே பெரிய குழப்பம். தேசியமும் திராவிடமும் எப்போதும் ஒன்றிணைய முடியாது. அதேபோல் தன்னை 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அவர் அழைத்துக் கொள்வதையும் முதல் ஆளாக நான்தான் விமர்சனம் செய்தேன். 'அண்ணா என்றால் ஒருவர்தான். பெரியார் என்றால் ஒருவர்தான். அதேபோல் எம்.ஜி.ஆர். என்றாலும் ஒருவர்தான். அப்படி நீங்கள் சுயமாக ஓர் அடையாளத்தைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்றேன். இப்படிப்பட்ட குழப்பங்களால், அவருடைய செல்வாக்கு ஒவ்வொரு நாளும் சரிந்துகொண்டுதான் இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அவருடைய கட்சிக்கு அக்னிப் பரீட்சை. அதில் அவர் தவறான கட்சியுடன் கூட்டணி வைத்தால், அவருடைய ஓட்டு வங்கி நான்கு சதவிகிதத்துக்குச் சரிந்துவிடும்!''
''மத்தியில் காங்கிரஸ், பி.ஜே.பி. என்ற இரண்டு கட்சிகளைத் தவிர்த்து தேசிய அளவில் செல்வாக்கான கட்சி எதுவுமே இல்லையே? மூன்றாவது அணி என்பது இன்றும் கானல் நீர்தான். இந்த நிலையில் வேறு யார்தான் மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்?''
''தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி அமைத்த காலம் நேரு, இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியோடு முடிந்துவிட்டது. இனி மாநிலக் கட்சிகளின் தயவுடன் கூட்டணி மந்திரி சபைதான் அமைக்க முடியும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டுக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்காது. மூன்றாவது அணி அமைவது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட திரிசங்கு நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பும் யாராலும் அல்லது எந்தத் தேசியக் கட்சியானாலும், மாநிலக் கட்சிகளின் ஆதரவைத்தான் நம்ப வேண்டும். அப்போது அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட ஓர் ஆட்சிதான் மத்தியில் அமைய முடியும். ஆக, எந்த மாநிலக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுகிறதோ, அதன் பிரதிநிதிதான் பிரதமரை ஆட்டுவிப்பார். அல்லது அவரேகூட பிரதமராக வருவார். அந்தப் பிரதிநிதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவாகக்கூட இருக்கலாம்!''
''அது ஏன் ஜெயலலிதா? வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அந்தத் தகுதி இல்லையா?''
''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கக்கூடியவர். தன்னுடைய நோக்கத்தில் தடுமாற்றம் இல்லாதவர். எந்த நிலையிலும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர். அவர் நாட்டின் பிரதமராக வரும்போது, தமிழகத்தின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார். இந்தியாவின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார். அதனால் பிரதமர் பதவிக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார்!
மன்மோகன் சிங்கே பிரதமராக பணியாற்றும்போது, இந்த நாட்டில் உள்ள யாராலும் பிரதமராகப் பணியாற்ற முடியும் என்றுதானே அர்த்தம். அப்போது ஜெயலலிதாவால் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட முடியும்!''
''நீங்கள் அ.தி.மு.க-வில் அதிகாரம் செலுத்தியதாகச் சொல்லிதானே உங்கள் குடும்பத்தினரை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார்கள்... ஆனால், இப்போதும் அதே உரிமையுடன் ஜெயலலிதாவின் பிரதமர் லாபி பற்றி பேசுகிறீர்களே!''
''நாங்கள் எங்கே அதிகாரம் செலுத்தினோம்? ஊடகங்களும் முதலமைச்சரின் அரசியல் ஆலோசகர் என்று சொல்லிக்கொண்டு ஆதாயம் அடைந்துவரும் 'சோ’வும் சேர்ந்துதான் அப்படி ஒரு பிம்பத்தைச் சித்திரித்தார்கள். எந்தக் கட்சியை நாங்கள் உயிர் மூச்சாக நினைத்தோமோ, அந்தக் கட்சியில் யாரை முன்னணிக்குக் கொண்டுவரப் பாடுபட்டோமோ... அவராலேயே வெளியேற்றப் பட்டோம். எங்கள் குடும்பத்தினர் மீது வரிசையாக வழக்குகள் போடப்பட்டன. ஆனால், எதையாவது நிரூபிக்க முடிந்ததா? முடியவில்லையே!
'சசிகலாவும் நாங்களும் இருந்தால், ஜெயலலிதாவை இல்லாமல் ஒழித்துவிடுவோம். கட்சியை அழித்துவிடுவோம்’ என்றார்கள். ஆனால், பெங்களூரு வழக்கில் என்ன நடந்தது? 'நடந்த அனைத்துக்கும் நான்தான் பொறுப்பு’ என்று எல்லாப் பழியையும் சசிகலா ஏற்றுக்கொண்டார். 'எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று ஒதுங்கியாகொண்டார்? இல்லை கட்சியை அழித்துவிட்டாரா?''
'' 'சோ’வுக்கு உங்கள் குடும்பத்தின் மீது அப்படி என்ன கோபம்?''
'' 'ஜெயலலிதாவைச் சுற்றி சசிகலா நடராஜன் குடும்பத்தினர் மட்டும்தான் இருக்கிறார்கள். நம்மால் நெருங்க முடியவில்லை’ என்ற காழ்ப்பு உணர்ச்சிதான். ஆனால், எங்களுக்கு எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் நாங்கள் ஒரு நாளும் அ.தி.மு.க-வுக்கோ அதன் தலைமைக்கோ எதிராகச் செயல்பட மாட்டோம். ஆனால், சோ என்ன அப்படியா?
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பக்கம் அத்வானியையும் மறுபக்கம் நரேந்திர மோடியையும் வைத்துக்கொண்டு ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்று பேசினார். அவருடைய அந்தப் பேச்சுதான், ஜெயலலிதாவிடம் பிரதமர் கனவை விதைத்தது. 'ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் உள்ளன’ என்று தொடர்ந்து பேசி ஆசையை வளர்த்தவர், அதன் மூலம் பல ஆதாயங்களை அடைந்தார். ஆனால், திடீரென கடந்த வாரம், 'ஜெயலலிதா பிரதமராக வர முடியாது’ என்று பேட்டி அளிக்கிறார். ஜெயலலிதாவின் பிரதமர் கனவை காலி பண்ணும் எண்ணம் இது. இவரை எப்படி நம்பிக்கைக்குரிய மனிதராக சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை!''
''அண்மையில் ஒரு விழாவில், 'என் காலுக்குப் போடப்பட்டிருந்த தடைகள் நீங்கிவிட்டன. நாம் நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதத்தையும் ஊழலையும் எதிர்த்து வேலை செய்வோம்’ என்று பேசினீர்கள். அ.தி.மு.க. முகாமில் இருந்து மீண்டும் அழைப்பு வந்திருக்கிறதா?''
''எங்கு இருந்தும் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. உடைந்தது உடைந்ததாகவே இருக்கிறது. அவர்கள் என் மீது போட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 'நாம் பாடுபட்டு வளர்த்த கட்சி. பல இன்னல்களை அனுபவித்து அந்த அம்மாவை முன்னுக்குக் கொண்டுவந்தோம். எனவே, அங்கு நமக்கு இன்னும் ஒட்டுறவு இருக்கிறது’ என்ற நினைப்பு எனக்குள் இருந்தது. அவைதான் தடைகள் என்று சொன்னேன். அந்தத் தடைகள்தான் தற்போது உடைந்துவிட்டன. இப்போது நான் சுதந்திர மனிதனாக இருக்கிறேன். அந்தச் சுதந்திரத்தைக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சில காரியங்களை நிகழ்த்துவேன்!''
விகடன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அட விடுங்கப்பா, நம்ம மோடி பிரதமராகட்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
திமுகவுல மட்டும்தான் கோஷ்டியா இங்கேயும்தான் சோ, சசிகலா
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
அம்மா முதலமைச்சராகி தமிழ்நாட்டை பாடுபடுத்துவது பத்தாதுன்னு பிரதமர் ஆகி இந்தியா மக்களை ஒரு "வலி" ஆக்கனுமா? J பிரதமர் ஆனால் ஒன்னு தான் மாறும்... அம்மான்னு கூப்பிடுறது 'மா'ன்னு மாறிடும்... அப்புறம் அடிக்கடி பாராளுமன்றத்தில அமைச்சரவை மாற்றம் இருக்கும்... அவளோ தான்.. அங்க அங்க பறக்கும் குதிரை, பசுமை காட்சின்னு நாடு முழுவதும் இம்சைக்கு பஞ்சம் இருக்காது,....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|