புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
1 Post - 25%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
21 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 80 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 80 of 81 Previous  1 ... 41 ... 79, 80, 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 80 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 09, 2023 7:54 pm

பாகிஸ்தானில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தேடப்பட்டு வந்த 6 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பழங்குடியினர் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் தத்தா கொல் பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் மீது பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்காக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவார். இவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 13, 2023 3:02 am

மாணவியருக்கு விஷம்; ஈரானில் 100 பேர் கைது


ஈரானில் சமீபத்தில் பள்ளி மாணவியருக்கு விஷம் கொடுத்த வழக்கில், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்காசிய நாடான ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 22 வயது இளம் பெண் ஒருவர் 'ஹிஜாப்' சரியாக அணியவில்லை என்ற காரணத்திற்காக போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இதற்கு, ஈரான் மட்டுமின்றி உலகளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இச்சம்பவம் நடந்து இரு மாதங்களுக்குப் பின், நவம்பரில் பள்ளி மாணவியர் அடுத்தடுத்து உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவியரை மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்களின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாணவியர் படித்த 200க்கும் அதிகமான பள்ளிகளில் நடத்தப்பட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியர் பள்ளி சென்று படிப்பதை தடுக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பெற்றோரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் மாணவர்களிடமும், மக்களிடமும் பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் இச்செயலில் ஈடுபட்டதுடன், பள்ளிகளை மூடும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஈரானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் ஈடுபட்டவர்கள், மக்கள் முஜாஹிதீன் அல்லது முஜாஹிதீன் - இ - கல்க் என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என ஈரான் அரசு சந்தேகிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:17 pm

தென்கிழக்கு ஆப்பிரிக்காவை தாக்கிய புயல் - 500 பேர் பலி



தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் பிரேடி புயல் உருவானது. பல நாட்களாக நீடித்து வரும் இந்த புயல் வரலாற்றில் அதிக காலம் நீடித்த புயலாக கருத்தப்படுகிறது.

பிரேடி புயல் காரணமாக தென் கிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிகியூ, மடகாஸ்கர், மலாவி ஆகிய நாடுகளில் கனமழையும், புயல் தாக்கிவருகிறது. கனமழை புயல் காரணமாக இந்த நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு உள்பட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் மலாவி நாடு மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேடி புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 438 உயிரிழப்புகள் மலாவி நாட்டில் பதிவாகியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கனமழையுடன் புயல் நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதேவேளை, புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:18 pm

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 14 பேர் பலி!



ஈகுவடார் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 14 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் குயாயாஸ் நகரத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பஹிவான இந்த நிலநடுக்கம் 66 கி.மீ புவி ஆழத்தில் உருவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஈகுவடாரில் பல குடியிருப்புகள் சரிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதை தொடர்ந்து தற்போது பல்வேறு நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:18 pm

அமெரிக்க பள்ளிகளிலும் 'இலவச உணவு' திட்டம்! காலை, மாலை இருவேளைகளில் உணவு..!



தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிகளில் இலவச உணவு வழங்கும் திட்டம் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தில் உள்ள பள்ளியிலும் இலவச உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதிய உணவு திட்டம் என்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தோற்றுவித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது என்பதும் அதன் பிறகு ஜெயலலிதா கருணாநிதி எடப்பாடி பழனிச்சாமி மு க ஸ்டாலின் ஆட்சியிலும் அது தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடப்பட்டது. சமீபத்தில் தமிழகம் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா என்ற மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் காலை மதியம் என இரண்டு வேலைகளிலும் மாணவர்களுக்கு இலவச வழங்கும் உணவு வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பை அம்மாகாண மேயர் டிம் வால்ஸ் என்பவர் அறிவித்துள்ளார்.

ஏழ்மை மற்றும் சிறு வயது மாணவர்களின் பசியை போக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 26, 2023 9:28 pm

செயற்கை சுனாமி உருவாக்கிய வடகொரியா! – அதிர்ச்சியில் உலக நாடுகள்

சமீப காலமாக ஏவுகணை சோதனை மூலம் பீதியை கிளப்பி வந்த வடகொரியா தற்போது வெற்றிகரமாக செயற்கை சுனாமியை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த பல காலமாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா அதிகப்படுத்தியுள்ளது. அவ்வாறாக சோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் சில தென்கொரியா, ஜப்பான் கடல் பகுதிகளில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் ஆயுதம் ஒன்றை ட்ரோன் மூலமாக செலுத்தி செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தி வெற்றிக் கண்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. கடலுக்கடியில் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அணு ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செயற்கை சுனாமி சோதனை பீதியை ஏற்படுத்தியுள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 27, 2023 9:57 pm

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

காபூர்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பலர் பலியாகி வருகின்றனர். இந்நாட்டு தலைநகர் காபூலில் உள்ள கார்டா பர்வான் பகுதியில் அதிகளவில் இந்துக்களும், சீக்கியர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்; மாலிக் அசார் சதுர்க்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி இன்று உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார். அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்பு படையினர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 3:30 am

''12 மணி நேரம் மின்வெட்டு''...பாகிஸ்தானில் மக்கள் போராட்டம்


பாகிஸ்தான் நாட்டில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், புதிய பிரதமராக ஷபாஷ் ஷெரீப் நியமிக்கப்பட்டார்.

இந்த நாட்டில் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அண்டை நாடுகள் மற்றும் ஐஎம்.எஃப். ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் சவூதி அரேபியாவிடம் அந்த நாட்டு உதவ கேட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கவி நிலவுவதால், வாழைப்பழம் டஜன் ரூ.250, முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அப்பாவி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 3:31 am

ஒரு கிலோ அரிசி ரூ.335: பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு


பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் ஒரு கிலோ அரிசி ரூபாய் 335 என விற்பனை ஆகி வருவதாக வெளி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் மின்சாரம், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ்,பெட்ரோல் டீசல் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதும் அந்த வகையில் ரம்ஜான் மாதத்தை பொதுமக்கள் கொண்டாடிவரும் நிலையில் அரிசி ஒரு கிலோ 335 என விற்பனையாகி வருவதால் ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஒரு டஜன் ஆரஞ்சு ரூ.440 என்றும் வாழைப்பழம் ஒரு டஜன் 300 ரூபாய் என்றும் விற்பனையாகி வருவதாகவும் இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, பண வீக்கம் காரணமாக பாகிஸ்தான் மக்கள் கடும் துயரங்களை சந்தித்து வருவதாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 30, 2023 8:53 pm

40 அரசியல் கட்சிகளும் கலைப்பு; தேர்தலில் போட்டியிடுவது யார்? – மியான்மரில் அதிர்ச்சி!


மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் கடந்த 2020ம் ஆண்டில் ஆங் சான் சூகியின் தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டிய ராணுவம் 2021ம் ஆண்டில் ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதனால் மியான்மர் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்திற்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது. ஆங் சான் சூகி உள்ளிட்ட பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மக்களாட்சி அமைப்பதற்கான பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் அறிவித்தது. ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆங் சான் சூகியின் தேசிய லீக் கட்சி உள்ளிட்ட மியான்மரில் இருந்த 40 அரசியல் கட்சிகளை கலைப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக அந்த கட்சிகள் பதிவு செய்து கொள்ளவில்லை என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் ராணுவத்தின் ஆதரவை பெற்ற தொழிற்சங்க வளர்ச்சி கட்சி ஆட்சியை எளிதில் கைப்பற்றவே இந்த கட்சி கலைப்பை ராணுவம் நடத்தியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.


Sponsored content

PostSponsored content



Page 80 of 81 Previous  1 ... 41 ... 79, 80, 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக