புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10 
30 Posts - 83%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 62 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 62 of 81 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 71 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 62 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:34 pm

கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 16 போலீஸ் அதிகாரிகள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வேட்டைக்காக தலைநகர் பகோட்டாவில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள ஆன்டியோகுவாவிற்கு போலீஸ் படையினர் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சென்றனர். இந்த ஹெலிகாப்டர் அங்குள்ள மலைப்பகுதியின் மீது பறந்தபோது, எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 16 போலீஸ் அதிகாரிகளும் பலியாகினர்.

இந்த விபத்துக்கு மோசமான வானிலை அல்லது என்ஜின் கோளாறு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அமெரிக்காவின் ‘யுஎச்-60 பிளாக் ஹாக்’ ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 11 ராணுவ வீரர்கள் பலியான நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்து நடந்திருப்பது, கொலம்பியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 12:44 am

சிவா wrote:14 பேரை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி தின்ற கொடூர பாட்டி

ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்தவர் தமரா சம்சனோவா ( வயது 68) அங்குள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். கடந்த வாரம் இவரது நண்பர் வாலண்டினா உளனோவா ( வயது79) என்பவரை கொலை செய்ததாக ரஷ்ய போலீசார் இவரை கைது செய்தனர்.

போலீசார் அங்கிருந்த சிசி டிவியை ஆய்வு செய்ததில் வாலண்டினாவின் உடல் பாகங்களை சம்சனோவா ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்து இருந்தது உறுதியானது.

இதை தொடர்ந்து போலீசார் பாட்டி சம்சனோவா வின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து போலீசார் ஒரு டைரியை கைபற்ற அதன் மூலம் இந்த 69 வயதான பாட்டி 14 பேரை கொலை செய்து இருக்கும் பயங்கர தகவல் வெளியாகி உள்ளது.இந்த கொலைகார கொடூர பாட்டி தான் கொலை செய்தவர்களின் தலை மற்றும், நுரையீரல் , கை கால்களை வெட்டி எடுத்து இருப்பார் என போலீசார் சந்தேகபடுகின்றனர்.

ஓய்வூதியம் பெற்று வரும் இந்த பாட்டி நர மாமிசம் சாப்பிடும் காட்டு மிராண்டிகளோடு ஒப்பீடுகின்றனர் போலீசார்.

12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒரு வியாபாரியின் அடையாள அட்டை பாட்டியின் வீட்டில் கண்டெடுக்கபட்டு உள்ளது. அவரது தலை , கால் மற்றும் கைகளை பாட்டி வெட்டி எடுத்து உள்ளார்.

அங்கு இருந்த டைரியில் ”எனது வீட்டில் வாடகைக்கு இருந்த வாலண்டினாவை அவரது உடல் பாகங்களை பாத்ரூமில் வைத்து கத்தியால் வெட்டினேன். பின்னர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பேக்கில் போட்டு தூக்கி எறிந்து விட்டதாக” கைப்பட எழுதி உள்ளார்.

கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்ட போது பாட்டி சம்சனோவா இந்த நீதி மன்றம் கொடுக்கும் எததனை வருட சிறை தண்டனையையும் ஏற்று கொள்ள தயாராக் இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1155972

ஐயோ............... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி செய்வதையும் செய்துவிட்டு எப்படி கூல் ஆக பதில் சொல்கிறார் அந்த பாட்டி?........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 07, 2015 11:56 pm

அமெரிக்காவிற்கான தலைமைத்துவத்தை என்னால் கொடுக்க முடியும் – போபி ஜிண்டால்


உலகச் செய்திகள்!  - Page 62 11145163_901170589955253_3239924403534813287_n

அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே அங்கு ஆரம்பித்துவிட்டது. பாக்ஸ் நியூஸ் நிறுவனம், அதிபர் வேட்பாளர்களுக்கு வழக்கமாக நடத்தும் விவாத மேடை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதிபர் வேட்பாளர்களில் முன்னிலை வகிக்கும் முதல் 10 வேட்பாளர்களுக்கான பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய-அமெரிக்கரான போபி ஜிண்டாலுக்கு 13-வது இடமே கிடைத்தது.

இந்த பட்டியல் பாக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் அறிவிப்பு தான் என்றாலும், சமீபத்தில் நடைபெற்ற தேசிய கருத்துக்கணிப்பின் படி தான் இந்த பட்டியல் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்த்தபடி, டொனால்டு டிரம்ப் மற்றும் ஜெப் புஷ் முன்னிலை வகிக்கின்ன்றனர். இதற்கிடையே, குறைந்த வாக்குகள் பெற்றவர்களுக்கான விவாதம் நேற்று மதியம் தொடங்கியது. 13-வது நபராக பேசிய ஜிண்டாலின் பேச்சு அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் தனது வாதத்தில், அதிபர் ஒபாமாவை மட்டுமல்லாமல் தற்போது முன்னிலை வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “அமெரிக்காவிற்கு தற்போது நல்ல செயல்திறன் மிக்கவர்கள் தான் தேவை. வெறும் பேச்சாளர்கள் அல்ல. அமெரிக்காவிற்கு தற்போது தேவைப்படும் உண்மையான தலைமைத்துவத்தை என்னால் கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜிண்டாலின் பேச்சு ஈர்ப்புடையதாக இருந்தாலும், முன்னிலை வேட்பாளர்களின் விவாதங்களுக்கு ஈடாக பிரகாசிக்க முடியவில்லை என்றும் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:55 pm

சீனாவில் 70 வயது வரை பிறந்த நாள் விழா கொண்டாட தடை

பிறந்த நாள் விழா அனைவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய கொண்டாட்டமாகி விட்டது. சிலர் மிக ஆடம்பரமாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் சீனாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சிசுவான் மாகாணத்தில் தோங்ஜி யாங் பகுதி உள்ளது. இங்கு தான் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பிறந்த நாள் கொண்டாடுவதன் மூலம் அப்பகுதி மக்களின் நிதி ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. விழாவுக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் விருந்து செலவு அதிகரிப்பு மற்றும் விழாவுக்கு வருபவர்கள் வழங்கும் பரிசு பொருளுக்கான செலவு போன்றவற்றால் இரு தரப்பினருக்கும் கஷ்டமான சூழ்நிலை உருவாகிறது. இதை கருத்தில் கொண்டே பிறந்த நாள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 70 வயதுக்கு பிறகு பிறந்த நாள் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. பிறந்த நாள் கொண்டாடுவது அவரவர்களின் உரிமை. அதை தடுக்க கூடாது என பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2015 9:45 pm


“நான் அதிபரானால்..” – போபி ஜிண்டாலின் பேச்சால் பரபரப்பு!

“நான் அதிபரானால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒன்பது பேரில் ஆறு பேரை நீக்கி விடுவேன்” என அமெரிக்க அதிபர் வேட்பாளர் போபி ஜிண்டால் கூறியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போபி ஜிண்டால், ஏற்கனவே ஒருமுறை தன்னை இந்திய-அமெரிக்கர் என்று அழைப்பதை விரும்பவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்குக்கான வேட்பாளர்களின் விவாத மேடையில், “ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கும், ஒபாமா கேர் சுகாதார காப்பீட்டு மானியத்திற்கும், உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் உச்ச நீதிமன்றத்தை மூடுவதை விட, அதில் உள்ள ஒன்பது நீதிபதிகளில், ஆறு பேரை நீக்கி விடலாம்.”

“குறிப்பாக, முன்னாள் அதிபர்கள் ரொனால்டு ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் நியமித்து, தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருக்கும் ஜான் ராபர்ட்ஸ் ஜூனியர் மற்றும் அந்தோணி கென்னடி ஆகியோர் உள்ளிட்ட ஆறு நீதிபதிகளை நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கும், ஒபாமா கேர் திட்டத்திற்கும் ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்த ஜிண்டால், இதற்காக ஒபாமாவையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2015 9:46 pm


சிங்கப்பூரின் 50-வது ஆண்டு சுதந்திர தினம் – லீ சியான் லூங் நெகிழ்ச்சி!

1965-ம் ஆண்டு, ஆகஸ்ட் 9-ம் தேதி, மலேசியாவிலிருந்து பிரிந்த சிங்கப்பூர், இன்று தனது 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.

பன்மொழி மக்கள், அவர்கள் கடைபிடிக்கும் பன்முகக் கலாச்சாரம் என்று பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றில் ஒற்றுமையைக் கண்டு, நாட்டின் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு பாடுபடும் முன்னோடியான கலாச்சாரத்தை அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

அவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங், விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “சரியாக, 50 வருடங்களுக்கு முன்பு தான், வானொலி அறிவிப்பாளர் ஒருவர் நமது நாட்டின் சுதந்திரத்தை அறிவித்தார். நாம் 50 வருடங்களை வெற்றிகரமாக கடந்து விட்டோம். செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை கொண்டாடும் இந்த வேளையில், நாம் இந்த நிலைக்கு வருவதற்காக எவ்வளவு உழைத்தோம் என்பதை மறந்து விட வேண்டாம்.”

“நமது இந்த நிலை, சுய முன்னேற்றத்தால் வந்தது. எங்கிருந்தும் பெறப்பட்டதல்ல. மொழி, மதம், இன வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையுடன் பாடுபட்டதால் கிடைத்த வெற்றி தான் நமது முன்னேற்றம். அதனை மேலும் மேலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2015 9:46 pm


பிரதமரை கவிழ்க்க சதியா?: மொகிதின் மறுப்பு

கோலாலம்பூர்- பிரதமர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப்பைக் கவிழ்க்க சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குடன் சேர்ந்து தாம் சதித்திட்டம் தீட்டியதாக வெளியான செய்தியை முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதன் காரணமாகவே தமது துணைப் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது என்பதையும் அவர் நிராகரித்துள்ளார்.

“சம்பந்தப்பட்ட மற்ற இருவரும் (அஸ்மின், லிம்) இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இப்படிப்பபட்ட செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனினும் நான் அவ்வாறு செயல்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடும், கட்சியும் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து எனது கருத்துக்களை தெரிவித்த காரணத்தால் எனது பதவி பறிக்கப்பட்டிருக்கலாம்,” என்றார் மொகிதின்.

முன்னதாக நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக அஸ்மின் அலி மற்றும் லிங் குவான் எங்கைச் சந்தித்துப் பேசியதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:30 pm

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட விமானம் திடீர் மாயம்

இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது. இதனால் விமானத்தின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் இது தொடர்பாக விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். விமானத்தின் நிலை என்ன ஆனது என்று குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது விமானம் மாயமாகி விட்டதா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:31 pm

பாகிஸ்தானில் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரி அலுவலகத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் சுஜா கான்ஜாதா. இவரது அரசியல் அலுவலகம், அட்டோக் அருகில் உள்ள ஷாதிகான் என்ற இடத்தில் உள்ளது. அலுவலகத்தில் சுஜா கான்ஜாதா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அபபோது பலத்த சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே குலுங்கியது. கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அலறினர்.

யாராலும், எங்கும் ஓட முடியாத படிக்கு இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். 7 பேர் உயிரிழந்ததாகவும், மந்திரி சுஜாகான் ஜாதா உள்பட சுமார் 25 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகிஉள்ளது.

குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் அறிந்தது, மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். போலீஸ் படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்த ஒருவர், மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. கிடைத்துள்ள ஆதாரங்களில் இருந்து இந்த தாக்குதல் தற்கொலைப்படைதாக்குதல் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளது.

காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் உத்தரவிட்டுள்ளார். கான்ஜாதா, பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலுக்கு பக்கபலமாக நின்றவர் என்றும், உதவிகளையும், உத்தரவுகளையும் வழங்கியவர் என்று கூறப்படுகிறது.




உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:47 pm

கள்ள ஓட்டு போட்டால் தலையில் சுடப்படும் – இலங்கை தேர்தல் ஆணையம் அதிரடி!

“இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் யாரேனும் கள்ள ஓட்டு போட முயன்றால் தலையில் சுடுங்கள்” என இலங்கை தேர்தல் ஆணையம் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விட சமூக விரோத கும்பல் முயற்சித்திருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இருந்தும் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்நிலையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று காவலர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், கள்ள ஓட்டு போட முயல்பவர்களை தலையில் சுடுங்கள் என்று தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 62 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 62 of 81 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 71 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக