புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 50 of 81 •
Page 50 of 81 • 1 ... 26 ... 49, 50, 51 ... 65 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நைஜீரியாவில் மீண்டும் 500-க்கும் மேற்பட்ட பெண்களை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள்!
நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டமாஸ்க் நகருக்குள் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 50 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் உள்பட 506 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் கடந்த மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டவர்களை தான், மீண்டும் தீவிரவாதிகள் கடத்திச்சென்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவம் ஈடுபட்டுள்ளது. போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திய 506 பேரில் 50 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர் என நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அட கடவுளே!!!!!!!!!!!!
ஏன் இப்படி செய்கிறார்கள்....
ஏன் இப்படி செய்கிறார்கள்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
நைஜீரியாவில் அதிபர் தேர்தலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 39 பேர் பலி
நைஜீரியாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 14–ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக அங்கு அட்டூழியம் செய்து வரும் போகோ ஹாரம் தீவிரவாதிகளின் மிரட்டலால் தேர்தல் 6 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாதன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் சர்வாதிகாரி ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் முகமது புகாரி களம் இறங்கியுள்ளார். இவர் 1980–ம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்தவர். இவர்களுடன் மேலும் 12 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடக்கூடாது மீறினால் சுட்டுக்கொல்வோம் என மிரட்டல் விடுத்து இருந்தனர். அதையும் மீறி பொது மக்கள் துணிச்சலுடன் வந்து ஓட்டு போட்டனர். வாக்குச் சாவடிகளில் நீண்ட (கியூ) வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இவர்களுக்கு ஹெலிகாப்டரில் பறந்து ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். இருந்தும் போகோஹாரம் தீவிரவாதிகள் தங்களின் ஆதிக்கம் மிகுந்த வடகிழக்கு மாகாணங்களில் தாக்குதல் நடத்தினார்கள்.
கோம்பே மாகாணத்தில் பிரி மற்றும் டுக்கு நகரங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் எம்.பி.– உமரு அலி உள்பட 14 பேர் பலியாகினர். மிரிங்கா, புரானட உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்தனர். தப்பி வெளியே வந்த பொது மக்களை சுட்டுக்கொன்றனர்.
மேலும் பலரை பிடித்து தலையை துண்டித்து கொன்றனர். மொத்தம் 25 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் 39 பேர் பலியாகியுள்ளனர்.
இருந்தும் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அங்கு ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. எனவே, இன்றும் ஓருநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கும் வாக்கு பெற்றவர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யாரும் அந்த அளவு வாக்குகள் பெறாத நிலையில் 7 நாட்கள் கழித்து மீண்டும் தேர்தல் நடைபெறும். இதற்கிடையே நேற்று பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி, நடைபெற்று வருகிறது.
நைஜீரியாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 14–ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக அங்கு அட்டூழியம் செய்து வரும் போகோ ஹாரம் தீவிரவாதிகளின் மிரட்டலால் தேர்தல் 6 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாதன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் சர்வாதிகாரி ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் முகமது புகாரி களம் இறங்கியுள்ளார். இவர் 1980–ம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்தவர். இவர்களுடன் மேலும் 12 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடக்கூடாது மீறினால் சுட்டுக்கொல்வோம் என மிரட்டல் விடுத்து இருந்தனர். அதையும் மீறி பொது மக்கள் துணிச்சலுடன் வந்து ஓட்டு போட்டனர். வாக்குச் சாவடிகளில் நீண்ட (கியூ) வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இவர்களுக்கு ஹெலிகாப்டரில் பறந்து ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். இருந்தும் போகோஹாரம் தீவிரவாதிகள் தங்களின் ஆதிக்கம் மிகுந்த வடகிழக்கு மாகாணங்களில் தாக்குதல் நடத்தினார்கள்.
கோம்பே மாகாணத்தில் பிரி மற்றும் டுக்கு நகரங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் எம்.பி.– உமரு அலி உள்பட 14 பேர் பலியாகினர். மிரிங்கா, புரானட உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்தனர். தப்பி வெளியே வந்த பொது மக்களை சுட்டுக்கொன்றனர்.
மேலும் பலரை பிடித்து தலையை துண்டித்து கொன்றனர். மொத்தம் 25 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் 39 பேர் பலியாகியுள்ளனர்.
இருந்தும் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அங்கு ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. எனவே, இன்றும் ஓருநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கும் வாக்கு பெற்றவர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யாரும் அந்த அளவு வாக்குகள் பெறாத நிலையில் 7 நாட்கள் கழித்து மீண்டும் தேர்தல் நடைபெறும். இதற்கிடையே நேற்று பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி, நடைபெற்று வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரதமர் மகள் திருமண விருந்தை நோக்கி பேரணி – காவல் துறை தடுத்தனர்!
கோலாலம்பூர், மார்ச் 28 – அன்வார் இப்ராகிமின் விடுதலையைக் கோரி, இன்று நடைபெற்ற ‘கித்தா லாவான்’ (நாங்கள் போராடுவோம்) என்ற பெயரில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, இன்று நடைபெற்ற பிரதமர் மகள் திருமண விருந்து மண்டபத்தை நோக்கியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முற்பட்டனர்.
இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
Kita Lawan Logoஇதற்கிடையில் பல முக்கியத் தலைவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கித்தா லாவான் பேரணியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஃபாரிஸ் மூசா பேரணி நடைபெற்று முடிந்த அரை மணி நேரத்தில் தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இன்றிரவு 7.45 மணியளவில் ஃபாரிஸ் கைது செய்யப்பட்டதாக பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் ஃபாமி பாட்சில் தெரிவித்துள்ளார். ஃபாரிஸ் தற்போது டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
இன்று நடைபெற்ற பிரதமரின் மகள் நஜ்வாவின் திருமண விருந்தை நோக்கி பேரணியினர் முன்னேறிச் சென்றனர். இருப்பினும் திருமண விருந்து நடைபெற்ற கேஎல்சிசி கண்காட்சி மண்டபத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தியதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்த காவல் முனையங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவர்கள் கலைந்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர்.
டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு எதிரில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி நின்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கூக்குரலிட்டனர்.
ஏற்கனவே, பிகேஆர் தலைவர்கள் ரபிசி ரம்லியும், தியான் சுவாவும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நஜிப் ராஜினாமா செய்ய வேண்டுமென கூக்குரலிட்டதோடு, நஜிப் ராஜினாமா செய்ய வேண்டுமென்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
கோலாலம்பூர், மார்ச் 28 – அன்வார் இப்ராகிமின் விடுதலையைக் கோரி, இன்று நடைபெற்ற ‘கித்தா லாவான்’ (நாங்கள் போராடுவோம்) என்ற பெயரில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, இன்று நடைபெற்ற பிரதமர் மகள் திருமண விருந்து மண்டபத்தை நோக்கியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முற்பட்டனர்.
இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
Kita Lawan Logoஇதற்கிடையில் பல முக்கியத் தலைவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கித்தா லாவான் பேரணியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஃபாரிஸ் மூசா பேரணி நடைபெற்று முடிந்த அரை மணி நேரத்தில் தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இன்றிரவு 7.45 மணியளவில் ஃபாரிஸ் கைது செய்யப்பட்டதாக பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் ஃபாமி பாட்சில் தெரிவித்துள்ளார். ஃபாரிஸ் தற்போது டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
இன்று நடைபெற்ற பிரதமரின் மகள் நஜ்வாவின் திருமண விருந்தை நோக்கி பேரணியினர் முன்னேறிச் சென்றனர். இருப்பினும் திருமண விருந்து நடைபெற்ற கேஎல்சிசி கண்காட்சி மண்டபத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தியதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்த காவல் முனையங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவர்கள் கலைந்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர்.
டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு எதிரில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி நின்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கூக்குரலிட்டனர்.
ஏற்கனவே, பிகேஆர் தலைவர்கள் ரபிசி ரம்லியும், தியான் சுவாவும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நஜிப் ராஜினாமா செய்ய வேண்டுமென கூக்குரலிட்டதோடு, நஜிப் ராஜினாமா செய்ய வேண்டுமென்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கவிருக்கும் அதிவேகப் புயல்!
மணிலா, ஏப்ரல் 1 – வட பசிபிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த அதிவேக புயல் ஒன்று அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளை தாக்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், பிலிப்பைன்ஸ் அரசு, மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை தயார்படுத்தி வருகின்றது.
‘சூப்பர் தைப்பான் மேசக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்புயல் கடந்த மார்ச் 27-ம் தேதி, வெப்பமண்டல அழுத்தம் காரணமாக உருவானது என்றும், அடுத்த சில நாட்களில் 5 வது பிரிவில் வகைப்படுத்தும் அளவில் அப்புயல் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தை அடைந்து வலுப்பெற்றுள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
வரும் சனிக்கிழமை, அப்புயல் பிலிப்பைன்ஸ் தீவுகளில் கரையைக் கடக்கும் போது அதன் பலம் சற்று குறையலாம் என்றும், எனினும் இந்த தாக்குதலில் சில சேதாரங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறுக்கிழமை பிலிப்பைன்ஸ் மக்கள் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவதால், அவர்களை எச்சரித்து தயார்படுத்துவதில் அந்நாட்டு அரசு சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றது.
மணிலா, ஏப்ரல் 1 – வட பசிபிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த அதிவேக புயல் ஒன்று அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளை தாக்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், பிலிப்பைன்ஸ் அரசு, மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை தயார்படுத்தி வருகின்றது.
‘சூப்பர் தைப்பான் மேசக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்புயல் கடந்த மார்ச் 27-ம் தேதி, வெப்பமண்டல அழுத்தம் காரணமாக உருவானது என்றும், அடுத்த சில நாட்களில் 5 வது பிரிவில் வகைப்படுத்தும் அளவில் அப்புயல் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தை அடைந்து வலுப்பெற்றுள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
வரும் சனிக்கிழமை, அப்புயல் பிலிப்பைன்ஸ் தீவுகளில் கரையைக் கடக்கும் போது அதன் பலம் சற்று குறையலாம் என்றும், எனினும் இந்த தாக்குதலில் சில சேதாரங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறுக்கிழமை பிலிப்பைன்ஸ் மக்கள் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவதால், அவர்களை எச்சரித்து தயார்படுத்துவதில் அந்நாட்டு அரசு சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நைஜீரியாவின் புதிய அதிபராக முகம்மது புகாரி தேர்வு!
நைஜீரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகம்மது புகாரி முதன் முறையாக அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது தோல்வியை ஒப்புக்கொண்ட தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாதன், தன்னை வீழ்த்திய எதிர்க்கட்சி வேட்பாளரான முகம்மது புகாரிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குட்லக் ஜோனாதனை விட முகம்மது புகாரி 27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. அங்குள்ள பல மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்ட போதிலும், தேர்தல் பார்வையாளர்கள், நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றதாக கூறியுள்ளனர். தேர்தல் அமைதியாகவும், நியாயமான வகையிலும், சுதந்திரமான முறையிலும் நடைபெறும் என வாக்குறுதி அளித்தேன்.
அந்த வாக்குறுதிகள் உண்மை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என குட்லக் ஜோனாதன் அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளார். புகாரிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் ஜோனாதன் குறிப்பிட்டுள்ளார்.
புகாரியின் அனைத்து முற்போக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவரும் ஜோனாதனை பாராட்டியுள்ளார். தனது செயல்பாடுகளின் மூலம் நாயகனாக என்றும் மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பார் ஜோனாதன். இனி பதட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும் என்றும் அந்த செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.
போகோஹாரம் தீவிரவாதிகளின் தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட போர்னோ மாகாணத்தில் மட்டும் புகாரிக்கு 94 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிறிஸ்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளது அல் ஷபாப்; தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு
கென்யாவில் பல்கலைக்கழக கல்லூரிக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், சோமாலியா எல்லையில் காரிசா பல்கலைக்கழக கல்லூரி உள்ளது. அந்த கல்லூரிக்குள் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் காலையில் நுழைந்து குண்டுகளை வெடித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருடன் அவர்கள் துப்பாக்கி சண்டையும் போட்டனர். இந்த மோதலில் 2 பாதுகாவலர்கள் பலியாகினர். தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையிட்டு கொண்டே கல்லூரிக்குள் சென்றுள்ளனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். கென்ய ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர். கல்லூரியை ராணுவம் சுற்றி வளைத்தது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே தீவிரவாதிகள் கல்லூரியில் உள்ள விடுதிக்கு சென்றனர். சிலரை முகமூடி அணிந்து இருந்த தீவிரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்தனர் என்று முதலில் தகவல் வெளியாகியது. இந்த தாக்குதலுக்கு கென்யாவில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வரும் அல் ஷபாப் தீவிரவாதிகளே (அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடைய தீவிரவாத இயக்கம்) இந்த தாக்குதலையும் நடத்தியுள்ளது தெளிவாகி உள்ளது. காரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அல் கொய்தாவுடன் தொடர்பு உடைய அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர், ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எங்களுடைய வீரர்கள் அங்கு சென்றார்களோ அப்போது இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டனர். நாங்கள் மற்றவர்களை பணயக்கைதியாக பிடித்து வைத்து உள்ளோம். எங்களுடைய வீரர்கள் அங்கேயே உள்ளனர். தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருகிறது. ஷபாப்பிற்கு எதிரானவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம் என்று தெரிவித்து உள்ளான். தீவிரவாதிகள் கல்லூரியில் உள்ள விடுதியிலே உள்ளனர் என்று கென்யா தரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கென்யாவில் பல்கலைக்கழக கல்லூரிக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், சோமாலியா எல்லையில் காரிசா பல்கலைக்கழக கல்லூரி உள்ளது. அந்த கல்லூரிக்குள் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் காலையில் நுழைந்து குண்டுகளை வெடித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருடன் அவர்கள் துப்பாக்கி சண்டையும் போட்டனர். இந்த மோதலில் 2 பாதுகாவலர்கள் பலியாகினர். தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையிட்டு கொண்டே கல்லூரிக்குள் சென்றுள்ளனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். கென்ய ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர். கல்லூரியை ராணுவம் சுற்றி வளைத்தது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே தீவிரவாதிகள் கல்லூரியில் உள்ள விடுதிக்கு சென்றனர். சிலரை முகமூடி அணிந்து இருந்த தீவிரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்தனர் என்று முதலில் தகவல் வெளியாகியது. இந்த தாக்குதலுக்கு கென்யாவில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வரும் அல் ஷபாப் தீவிரவாதிகளே (அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடைய தீவிரவாத இயக்கம்) இந்த தாக்குதலையும் நடத்தியுள்ளது தெளிவாகி உள்ளது. காரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அல் கொய்தாவுடன் தொடர்பு உடைய அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர், ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எங்களுடைய வீரர்கள் அங்கு சென்றார்களோ அப்போது இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டனர். நாங்கள் மற்றவர்களை பணயக்கைதியாக பிடித்து வைத்து உள்ளோம். எங்களுடைய வீரர்கள் அங்கேயே உள்ளனர். தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருகிறது. ஷபாப்பிற்கு எதிரானவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம் என்று தெரிவித்து உள்ளான். தீவிரவாதிகள் கல்லூரியில் உள்ள விடுதியிலே உள்ளனர் என்று கென்யா தரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகின் 8-வது மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான், முதல் 2 இடங்களை ஈராக், சிரியா பிடித்தது
இன்டெல்சென்டர் நிறுவனம் வெளியிட்டு உள்ள உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 8-வது இடத்தை பிடித்து உள்ளது.
தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் உலகின் பல நாடுகளிலும் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்டு உள்ள இந்த நாடுகளில் அப்பாவி மக்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. அந்தவகையில் தீவிரவாதம் மற்றும் கிளர்ச்சியாளர் தாக்குதல் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக அளவில் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியலை ஆய்வு நிறுவனம் ஒன்று கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் நாடு 8-வது இடத்தை பிடித்து உள்ளது.
பாகிஸ்தானில் ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு கடுமையான இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தும் நோக்கில், தெக்ரிக்–இ–தலீபான் (பாகிஸ்தான் தலீபான்) அமைப்பு போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலீபான் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதியான வஜிரிஸ்தான் உள்ளிட்ட மண்டலங்களில் தளங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் கைபர் மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
மார்ச்-2015 இந்த பட்டியலில் மத்திய கிழக்கு நாடுகளே முதலிடம் பிடித்து உள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் ஈராக் மற்றும் சிரியா நாடுகள் முறையே முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்து உள்ளன. நைஜீரியா (3-வது), சோமாலியா (4-வது) ஆப்கானிஸ்தான் (5-வது) போன்ற நாடுகளுடன் லிபியா (6), ஏமன் (7), உக்ரைன் (9), எகிப்து (10) போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்து அதிர்ச்சி அளிக்கின்றன.
இன்டெல்சென்டர் நிறுவனம் வெளியிட்டு உள்ள உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 8-வது இடத்தை பிடித்து உள்ளது.
தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் உலகின் பல நாடுகளிலும் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்டு உள்ள இந்த நாடுகளில் அப்பாவி மக்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. அந்தவகையில் தீவிரவாதம் மற்றும் கிளர்ச்சியாளர் தாக்குதல் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக அளவில் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியலை ஆய்வு நிறுவனம் ஒன்று கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் நாடு 8-வது இடத்தை பிடித்து உள்ளது.
பாகிஸ்தானில் ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு கடுமையான இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தும் நோக்கில், தெக்ரிக்–இ–தலீபான் (பாகிஸ்தான் தலீபான்) அமைப்பு போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலீபான் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதியான வஜிரிஸ்தான் உள்ளிட்ட மண்டலங்களில் தளங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் கைபர் மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
மார்ச்-2015 இந்த பட்டியலில் மத்திய கிழக்கு நாடுகளே முதலிடம் பிடித்து உள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் ஈராக் மற்றும் சிரியா நாடுகள் முறையே முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்து உள்ளன. நைஜீரியா (3-வது), சோமாலியா (4-வது) ஆப்கானிஸ்தான் (5-வது) போன்ற நாடுகளுடன் லிபியா (6), ஏமன் (7), உக்ரைன் (9), எகிப்து (10) போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்து அதிர்ச்சி அளிக்கின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கானிஸ்தானில் ஊழலுக்கு எதிரான போராட்டக் களத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 17 பேர் பலி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஊழலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டக் களத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் ராணுவத்திற்கு ஆதரவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான வெளிநாட்டு படையினர் கடந்த ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டபிறகு அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய கோஸ்ட் மாகாணத்தில் இன்று ஊழலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது, கூட்டத்திற்குள் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் ஹூமாயூனும் பலத்த காயமடைந்ததாக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. தலிபான் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஊழலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டக் களத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் ராணுவத்திற்கு ஆதரவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான வெளிநாட்டு படையினர் கடந்த ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டபிறகு அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய கோஸ்ட் மாகாணத்தில் இன்று ஊழலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது, கூட்டத்திற்குள் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் ஹூமாயூனும் பலத்த காயமடைந்ததாக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. தலிபான் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 50 of 81 • 1 ... 26 ... 49, 50, 51 ... 65 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 50 of 81
|
|