புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
44 Posts - 41%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
5 Posts - 5%
prajai
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
3 Posts - 3%
Raji@123
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
2 Posts - 2%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
21 Posts - 5%
prajai
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 24 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 24 of 81 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 52 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 24 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 6:39 pm

ஈராக்கில் மேலும் மேற்கு எல்லை பகுதியை தீவிரவாதிகள் முற்றிலும் கைப்பற்றினர்

ஈராக்கில் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் தலைமையிலான ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் சன்னி பிரிவு தீவிரவாதிகளும், அல் கொய்தா ஆதரவு தீவிரவாதிகளும் கூட்டாக போர்க்கொடி உயர்த்தி சண்டையிட்டு வருகின்றனர். ஈராக்கின் வடக்கு நகரங்களை கைப்பற்றிய நிலையில், இப்போது அவர்கள் மேற்கு ஈராக்கை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். மேற்கு பகுதியில் உள்ள முக்கிய அணை தீவிர வாதிகளின் கைக்கு போய் விட்டால், அதன் பிறகு தீவிரவாதிகளின் கை மிக வும் ஓங்கி விடும். இந்த நிலையில் அன்பார் மாகாணத்தில் ருத்பா உள்பட 2 முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் நேற்று கைப் பற்றினார்கள். சன்னி பிரிவு தீவிரவாதிகளுடன் அல்- கொய்தா தீவிரவாதிகளும் சேர்ந்துள்ளதால் அவர்களை ஒடுக்க முடியாமல் ஈராக் அரசு திணறியபடி உள் ளது.

இதற்கிடையே ஈராக்குக்கு ராணுவத்தை அனுப்ப மறுத்துள்ள அமெரிக்கா 300 ராணுவ ஆலோசகர்களை அனுப்பியுள்ளது. மேலும் ஈராக் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தனது திறமை வாய்ந்த ராணுவ அதிகாரிகளை அனுப்ப இருப்பதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மேலும், ஈராக்கில் தீவிரவாதிகளை ஒடுக்க ஈரானின் உதவியையும் அவர் நாடி உள்ளார். ஆனால் ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு ஈரான்தலைவர் அயதுல்லா அலி காமெனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நூரி மலிகியை நீக்கிவிட்டு புதிய அரசு அமைக்க ஒபாமா அரசு நிர்வாகம் தெரிவித்துள்ள யோசனையையும் அவர் நிராகரித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் ஈராக் விவ காரத்தில் தலையிட கூடாது. அதன் மூலம் ஈராக்கில் மீண்டும் அமெரிக்காவின் கை ஓங்கும். ஈராக் சுதந்திரமாக செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார்.




உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 1:39 am

சோமாலியா அல்-ஷபாப் தளங்களை கென்யா விமானங்கள் தாக்கியதில் 80 பேர் பலி

சோமாலிய அரசை எதிர்த்துப் போரிட்டு வரும் அல்-ஷபாப் தீவிரவாத இயக்கத்தினை ஒடுக்க கென்யா அரசு உதவி புரிந்துவருகின்றது. இதற்குப் பதிலடியாக அல்-ஷபாப் போராளிகள் கென்யாவில் தாக்குதல் வேட்டைகளை நடத்தியபோதும் கென்யா அதிபர் உரு கென்யாட்டா தொடர்ந்து சோமாலியாவிற்கு உதவி வருகின்றார்.

சோமாலியாவில் செயல்பட்டுவரும் ஆப்பிரிக்க ஒன்றிய மிஷன் அல்-ஷபாப் இயக்கத்தினர் மீதான இந்த வருடத் தாக்குதலைத் தொடர்ந்ததாகக் கூறிய அமைதிப்படை வீரர்கள் இதில் 80 பேர் பலியானதாக இன்று தெரிவித்தனர்.

தெற்கு லோயர் ஜூபா பகுதியில் உள்ள அனோல் மற்றும் குடே பகுதிகளில் கென்யா விமானங்கள் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர்கள் இந்தத் தாக்குதல் எப்போது நடைபெற்றது என்பதைத் தெரிவிக்கவில்லை. அனோலில் நடந்த விமானத் தாக்குதலில் 30 போராளிகள் இறந்தனர். மூன்று தொழில்நுட்ப வாகனங்களும், ஆயுதங்கள் நிரம்பிய கப்பல் ஒன்றும் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டது. குடேயில் நடைபெற்ற தாக்குதலில் 50 போராளிகள் மடிந்தனர் என்று ஆப்பிரிக்க ஒன்றிய மிஷன் தெரிவித்தது.

மேலும் உகாண்டா, ஜிபவுட்டி, எத்தியோப்பியா, புருண்டி மற்றும் சியரா லியோன் வீரர்கள் இணைந்த ஆப்பிரிக்க துருப்புகளின் தாக்குதலால் அல்-ஷபாப் இயக்கம் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களின் மீதான கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தொடரும் அழுத்தமான நடவடிக்கைகளில் இன்னும் பல பகுதிகளையும் விடுவிக்கும் விதத்தில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் செயல்பாடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 1:40 am

பாகிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 25 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் உள்ள வடமேற்கு பழங்குடியின பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான் வழி தாக்குதலில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அப்பகுதிகளில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பகுதிகளில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறி வருகின்றனர். அதே சமயம் பொதுமக்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். கடந்த ஞாயிரன்று ஆபரேஷன் ஜர்ப்-இ-அஸ்ப் என்று பெயரிடப்பட்ட தாக்குதலை தொடங்கிய ராணுவம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றி வருகிறது.

அங்குள்ள மிராலி பகுதியில் எட்டு பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அசிம் சலீம் பஜ்வா கூறியுள்ளார். இத்தாக்குதலில் 15 தீவிரவாதிகள் பலியானதாக கூறப்பட்டுள்ளது. மற்ற பத்து தீவிரவாதிகள் மிராலி மற்றும் ஸ்பின்வாம் பகுதியை கடக்க முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இரு வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பஜ்வா அப்போது தெரிவித்தார்.

தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இப்பகுதிகளில் கடந்த பத்து வருடங்களில் 50000 பொதுமக்களை அவர்கள் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தான் தீவிரவாதிகளின் கடைசி புகலிடமாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 25, 2014 4:32 am

ஷியா, சன்னி, குர்திஷ் என அனைவரும் பங்கேற்கும் வகையில் ஈராக்கில் புதிய அரசு அமையுமா?

ஈராக்கில் அனைத்து தரப்பினரையும் கொண்ட புதிய அரசு அமைப்பது தொடர்பாக குர்திஷ்தான் தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பேசுகிறார்.

தீவிரவாதிகள் கை ஓங்கியது

ஈராக்கில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை கடந்த 9–ந் தேதி கைப்பற்றியதைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கை நாளுக்கு நாள் ஓங்கி வருகிறது. அவர்கள் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தையும் தங்கள் பிடிக்குள் வந்து விட்டனர். பாய்ஜியில் உள்ள நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பெரும்பகுதியையும் அவர்கள் கைப்பற்றி விட்டனர்.

தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து அவர்கள் முன்னேறி வருகின்றனர். இது தொடரும் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

குர்திஷ்தான் வசம் கிர்குக்

ஈராக்கின் எண்ணெய் வளமிக்க நகரமான கிர்குக்கை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பது, ஈராக்கின் தன்னாட்சி பிரதேசமான குர்திஷ்தானின் நெடுங்காலக்கனவு ஆகும்.

இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் சண்டையை பயன்படுத்தி இந்த கிர்குக் நகரை குர்திஷ்தான் கடந்த 12–ந் தேதி கைப்பற்றி விட்டது.

ஈராக்கில் அமெரிக்க மந்திரி

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றார். அங்கு அவர் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈராக் படைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார். மேலும், தீவிரவாதிகளின் கை ஓங்கி வரும் நிலையில், ஷியா, சன்னி, குர்திஷ் என அனைத்துத் தரப்பினரையும் கொண்ட ஒன்றுபட்ட அரசை ஈராக்கில் நிறுவ வேண்டியதின் அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் முன்னேறி வருகிற நிலையில், இதில் துரிதகதியில் செயல்பட வேண்டும் என்று நூரி அல் மாலிக்கியிடம் ஜான் கெர்ரி வலியுறுத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஈராக்கில் வரும் 1–ந் தேதிக்குள் அனைத்துத் தரப்பினரையும் கொண்ட அரசை அமைக்க ஜான் கெர்ரியிடம் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் உறுதி அளித்தார்.

குர்திஷ்தான் சென்றார்

அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, நேற்று குர்திஷ்தானின் தலைநகரமாக விளங்குகிற இர்பில் நகருக்கு சென்றார். அங்கு அவர் குர்திஷ்தான் அதிபர் மசூது பர்ஜானி, பிரதமர் நேச்சிர்வன் பர்ஜானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஈராக்கின் புதிய அரசில் குர்திஷ்தான் பங்கு பெறவேண்டும் என அவர் வலியுறுத்துவார் என தகவல்கள் கூறுகின்றன.

இது பற்றி அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ஈராக் நிலவரம் பற்றியும், அங்கு அனைத்து ஈராக் மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு அமையவுள்ள புதிய அரசில் குர்திஷ்தான் முக்கிய பங்கு வகிப்பதின் அவசியம் குறித்தும் குர்திஷ்தான் தலைவர்களுடன் ஜான் கெர்ரி பேசுவார்’’ என கூறினார்.

சுதந்திரத்தை நாடும் குர்திஷ்தான்

ஆனால் குர்திஷ்தான் அதிபர் மசூது பர்ஜானி, ஈராக்கிடமிருந்து குர்திஷ்தானுக்கு முறைப்படி சுதந்திரம் வேண்டும் என்று விரும்புகிறார். இதுபற்றி அவர் சி.என்.என். டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஈராக் வீழ்ச்சி அடைந்து வருவது வெளிப்படையான ஒன்று. குர்திஷ்தான் மக்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது’’ என கூறினார்.

எனவே அவர் ஈராக்கின் ஒன்றுபட்ட அரசில் இடம் பெற சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 2:15 am

ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் உடன்பாடு வரலாற்று சிறப்பு மிக்கது என்கிறார் அதிபர்

சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த உக்ரைன், ஜார்ஜியா, மால்டோவா ஆகியவை ஐரோக்கிய யூனியனுடன் கூட்டாண்மை உடன்பாடு செய்துகொண்டுள்ளன. ரஷியாவின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த உடன்பாடு, பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் இந்த நாடுகள் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மேற்கத்திய நாடுகளை சார்ந்திருக்கவும், கட்டுப்படவும் நேரும்.

இந்த உடன்பாட்டை உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ வரவேற்றுள்ளார்.

இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள் ஆகும். குறிப்பாக 1991–ம் ஆண்டு ரஷியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் காரணமாக அரசியல் ஸ்திரமற்ற நிலையில் இருந்து உக்ரைன் மீண்டு, புதிய தொடக்கத்தை சந்திக்கும். நவீனமயமாகும். இந்த உடன்பாடு ஐரோப்பிய யூனியனின் ஒருமித்த மனநிலையின் வெளிப்பாடு ஆகும்’’ என கூறினார்.



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 2:16 am

உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்த 4 வெளிநாட்டு பார்வையாளர்கள் விடுதலை

உக்ரைனின் கிழக்கு பகுதியான டன்ட்ஸ்க்கை சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும், அல்லது அப்பகுதியை ரஷியாவுடன் இணைக்க வேண்டும் என்று கூறி, கடந்த சில மாதங்களாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடி வருகிறார்கள். இவர்களை ஒடுக்கும் விதத்தில் உக்ரைனும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே வியன்னாவை மையமாக கொண்டு இயங்கி வரும் ஐரோப்பிய மனித உரிமை அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் 8 பேரை, ஒரு மாதத்துக்கு முன் கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்தனர். இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மனித உரிமை அமைப்பு தீவிரப்படுத்தி வந்தது.

இந்தநிலையில் சிறைபிடிக்கப்பட்ட 8 பேரில், 4 பேரை கிளர்ச்சியாளர்கள் நேற்று விடுவித்தனர். இது குறித்து, டன்ட்ஸ்க் பகுதியின் பிரதமர் என கூறிக்கொள்ளும் அலெக்சாண்டர் பொரொடாய் கூறுகையில், ‘நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரின் விடுதலையும் எளிதாகும் என நம்புகிறேன்’ என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 2:16 am

ஆட்சியாளர் கிம் ஜாங் யுன் முன்னிலையில் வடகொரியா அதிநவீன ஏவுகணை சோதனை தென்கொரியா, ஜப்பானுக்கு அச்சுறுத்தல்

ஆட்சியாளர் கிம் ஜாங் யுன் முன்னிலையில் வடகொரியா துல்லிய ஏவுகணைகளை சோதித்து பார்த்தது. இது தென்கொரியா, ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

வடகொரியா அணு ஆயுத திட்டங்கள்

வடகொரியா பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கி இருந்தாலும், இருக்கின்ற நிதி ஆதாரங்களைக் கொண்டு தொடர்ந்து ஏவுகணை, அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

ஏற்கனவே தொடர்ந்து 3 முறை அணு குண்டு சோதனை நடத்தி, பொருளாதார தடைகளை சந்தித்துள்ள வடகொரியா, கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி அதிநவீன ‘ரோடாங்’ ரக ஏவுகணைகள் இரண்டினை சோதித்தது. இந்த ஏவுகணைகள் 650 கி.மீ. தொலைவுக்கு சென்று கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடலோர பகுதியில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த ஏவுகணைகள் ஜப்பான், ரஷியா, சீனா ஆகிய நாடுகளை தாக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

துல்லிய ஏவுகணைகள்

இந்த நிலையில் அதிரடியாக அதிநவீன துல்லிய ஏவுகணை சோதனைகளை வட கொரியா நேற்று முன்தினம் (25–ந் தேதி) நடத்தி உலகுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது குறித்த தகவல்கள் நேற்றுதான் வெளியாயின.

வடகொரியாவின் கிழக்கு துறைமுக நகரில், 3 துல்லிய ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டன. அந்த நாட்டின் ஆட்சியாளர் கிம் ஜாங் யுன் முன்னிலையில் இந்த ஏவுகணை சோதனைகள் நடைபெற்றன. இவை 190 கி.மீ. தொலைவில் கிழக்கு கடலோர பகுதியில் சென்று விழுந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஆட்சியாளர் திருப்தி

இந்த ஏவுகணைகள் மிகச்சரியாக எந்த வகையை சேர்ந்தவை, இவை என்ன நோக்கத்தில் ஏவி சோதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து வட கொரியா எந்த தகவலும் வெளியிடவில்லை.

இது குறித்து வடகொரியா அரசு மீடியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மிக துல்லியமான ஏவுகணை சோதனைகள் நடைபெற்றன. இந்த சோதனைகளை கிம் ஜாங் யுன், தனது சகாக்களுடன் பார்வையிட்டார். ஏவுகணைகளின் முடிவில் அவர் திருப்தி அடைந்தார்’’ என கூறப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்

வடகொரியா இந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பது வழக்கம்போல தென் கொரியா, ஜப்பான் மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களை அச்சுறுத்துவதற்காகத்தான் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியாவின் பகை நாடான தென்கொரியாவின் ராணுவ செய்தி தொடர்பாளர் கிம் மின் சியோக் கூறும்போது, ‘‘சமீப ஆண்டுகளாகவே வடகொரியா தனது நெடுந்தொலைவு ராக்கெட் அமைப்புகளை மேம்படுத்த முயன்று வருகிறது. ஒவ்வொரு சோதனையின் போதும் சிறிதளவாகினும் மேம்படுத்தப்பட்டு வந்திருக்கிறது’’ என கூறினார்.

தென்கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு தங்களை தனிமைப்படுத்தவும், ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை கட்டவிழ்க்கவும் முயன்றுகொண்டிருக்கும் தருணத்தில் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று வடகொரியா கூறி உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 2:17 am

சீன மீன்பிடி படகு மூழ்கியது; மீனவர்களை மீட்க நடவடிக்கை

ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே, கடலில் உள்ள சில சிறிய தீவுகள் யாருக்கு சொந்தமானவை என்பதில் உரிமை பிரச்சினை உள்ளது.

இந்த நிலையில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு பகுதியில் சீன மீன்பிடி படகு ஒன்று நேற்று நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

இருப்பினும் சம்பவ இடத்துக்கு மீட்பு பணிக்காக சீனா 2 மீட்பு கப்பல்களை அனுப்பி உள்ளது. ஜப்பானும் ஒரு விமானத்தையும், ரோந்து படகையும் அனுப்பி உள்ளது.

படகில் இருந்த சிப்பந்திகள் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். 5 மீனவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:16 am

நைஜீரியாவில் குண்டுவெடிப்பு : 10 பேர் பலி

கானோ : நைஜீரியா நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள பாவுச்சி நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 10 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதன் பின்னணியில், பொக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நாட்டின் வடக்கு பகுதியில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக,



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:16 am

இந்தியர்களை மீட்க ஈராக் சென்றது இந்திய போர்க்கப்பல்

பாக்தாத் : ஈராக் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரினால் அங்கு பரிதவித்து வரும் இந்தியர்களை காப்பாற்ற, மத்திய அரசு அனுப்பியுள்ள ஐ.என்.எஸ். மைசூர் போர்க்கப்பல், ஈராக்கை சென்றடைந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 24 of 81 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 52 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக