புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
63 Posts - 40%
heezulia
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
314 Posts - 50%
heezulia
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சபதம்! Poll_c10சபதம்! Poll_m10சபதம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபதம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 3:11 pm

சபதம்! E_1383813256

சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள்.

அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர்.

அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கதவு தாழிடப்படாமல் இருந்ததால், வேகமாக வீசிய காற்றினால், கதவு திறந்து கொண்டது. கதவை யார் மூடுவது என்ற பிரச்னை அவர்களிடையே எழுந்தது.

""நீதான் போய் கதவை மூட வேண்டும்!'' என்று மனைவியிடம் கூறினான் கணவன்.

""இல்லை! நீங்கள் போய் மூடினால் கதவு மூடாதா என்ன?'' என்று கேட்டாள் மனைவி.

இப்படியே, நீயா, நானா? என்ற வாக்குவாதம் அவர்களிடையே முற்றிக் கொண்டே போனது.

நீண்டு கொண்டுபோன அந்த வாக்கு வாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கணவன் மனைவியிடம், ஒரு யோசனை கூறினான்.

""சரி... நீயும் போக வேண்டாம். நானும் போகப் போவதில்லை. நம்மில் யார் முதலில் பேசுகிறார்களோ, அவங்கதான் எழுந்து போய்க் கதவை மூட வேண்டும்,'' என்பதே கணவன் சொன்ன யோசனை ஆகும்.

கணவன் கூறிய யோசனையை மனைவி ஆமோதித்தாள்.

அன்று இரவு அவர்கள் எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்று விட்டனர்.

கதவு மூடப்படாமல் திறந்தே இருந்தது!

நடு இரவு...! யார் முதலில் பேசப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்ததால், தூங்காமல் ஒருவர் வாயை ஒருவர் பார்த்துக் கண் விழித்துக்கொண்டிருந்தனர்!

அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு காட்டு நாய் அந்த வழியே வந்து வீட்டின் முன் நின்று, திறந்த கதவை நெருங்கி எட்டிப் பார்த்தது. ஆள் அரவம் ஏதும் கேட்கவில்லை. அதனால், வீட்டுக்குள் நுழைந்து மிச்சம் மீதி இருந்த உணவை ருசிபார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைக் கணவனும், மனைவியும் பார்த்து ரசித்துக் கொண்டுதான் படுத்திருந்தனர். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அவர்கள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட சபதத்தால், காட்டு நாய்க்குத்தான் நல்ல உணவு வேட்டை! அந்த நாயோ, தன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொண்டு ஆர அமர உட்கார்ந்து, இருந்த உணவு முழுவதையும் தின்றுவிட்டு, ஏப்பமிட்டபடி வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றுவிட்டது!

அடுத்தநாள்...!

விவசாயியின் மனைவி தானியம் அரைப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்று விட்டாள். விவசாயி மட்டும் மவுன விரதம் பூண்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தான்.

அப்போது...!

அந்த வீட்டு வழியே முடிதிருத்தும் கலைஞன் ஒருவன் போய்க் கொண்டிருந்தான். வீட்டுக் கதவு திறந்து கிடப்பதையும், உள்ளே ஒருவர் அமர்ந்து இருப்பதையும் கண்டு, வீட்டினுள் நுழைந்தான்.

விவசாயிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால், விவசாயி எதுவும் பேசவில்லை. ""ஏன் பேசாமல் இருக்கிறாய்?'' என்று கேள்வி கேட்டுச் சலித்துப் போனான்.

"இவனை எப்படியாவது பேசவைத்து, மவுன விரதத்தின் காரணத்தைக் கண்டறிய வேண்டும்' என்று தனக்குள் எண்ணினான் முடி திருத்தும் கலைஞன். உடனே கத்தியை எடுத்து, விவசாயியின் தலையைப் பிடித்து மொட்டை அடித்தான்!

விவசாயி அப்போதும் மவுனமாக இருந்தான். மூடிய வாயைத் திறக்கவில்லை!

பிறகு, ஒரு பக்கத்தில் இருந்த தாடியையும் மீசையையும் வெட்டி எறிந்தான். அப்போதும் விவசாயி தன் கடும் மவுன விரதத்தைக் கலைக்காமல் இருந்தான்.

எப்படி முயற்சித்தும் விவசாயியைப் பேச வைக்க முடியவில்லை. "இவன் ஒரு சரியான பைத்தியம் போல் தெரிகிறது!' என்று சொல்லியபடியே, அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

அவன் போய் ஒருசில நிமிடங்கள் ஆகியிருக்கும்! அப்போது, விவசாயியின் மனைவி, மாவு அரைத்து எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்த்தாள்.

வீட்டில் நுழைந்தபோது அவள் கண்ட காட்சி...!

தன் கணவன் மொட்டைத் தலையுடன் ஒரு பக்கத்தாடியும், மீசையும் இல்லாமல் அலங்கோலமாக இருந்ததைக் கண்ட அவள், ""அய்யோ! உங்களுக்கு என்ன ஆச்சு?'' என்று அலறினாள்.

""ஆ! நீதான் முதலில் பேசினாய். போய்க் கதவைச் சாத்திவிட்டு வா...!'' என்று வெற்றிக் களிப்புடன் கூறினான் விவசாயி.

***
சிறுவர் மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 11, 2013 5:13 pm

ந......ல் ல சபதம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 13, 2013 6:01 pm

சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள்.
அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர்.
அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கதவு தாழிடப்படாமல் இருந்ததால், வேகமாக வீசிய காற்றினால்,

கதவு திறந்து கொண்டது. கதவை யார் மூடுவது என்ற பிரச்னை அவர்களிடையே எழுந்தது.""நீதான் போய் கதவை மூட வேண்டும்!'' என்று மனைவியிடம் கூறினான் கணவன்.""இல்லை! நீங்கள் போய் மூடினால் கதவு மூடாதா என்ன?'' என்று கேட்டாள் மனைவி.இப்படியே, நீயா, நானா? என்ற வாக்குவாதம் அவர்களிடையே முற்றிக் கொண்டே போனது.நீண்டு கொண்டுபோன அந்த வாக்கு வாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கணவன் மனைவியிடம், ஒரு யோசனை கூறினான்.

""சரி... நீயும் போக வேண்டாம். நானும் போகப் போவதில்லை. நம்மில் யார் முதலில் பேசுகிறார்களோ, அவங்கதான் எழுந்து போய்க் கதவை மூட வேண்டும்,'' என்பதே கணவன் சொன்ன யோசனை ஆகும்.கணவன் கூறிய யோசனையை மனைவி ஆமோதித்தாள்.அன்று இரவு அவர்கள் எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்று விட்டனர்.கதவு மூடப்படாமல் திறந்தே இருந்தது!
நடு இரவு...! யார் முதலில் பேசப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்ததால், தூங்காமல் ஒருவர் வாயை ஒருவர் பார்த்துக் கண் விழித்துக்கொண்டிருந்தனர்!

அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு காட்டு நாய் அந்த வழியே வந்து வீட்டின் முன் நின்று, திறந்த கதவை நெருங்கி எட்டிப் பார்த்தது. ஆள் அரவம் ஏதும் கேட்கவில்லை. அதனால், வீட்டுக்குள் நுழைந்து மிச்சம் மீதி இருந்த உணவை ருசிபார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைக் கணவனும், மனைவியும் பார்த்து ரசித்துக் கொண்டுதான் படுத்திருந்தனர். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அவர்கள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட சபதத்தால், காட்டு நாய்க்குத்தான் நல்ல உணவு வேட்டை! அந்த நாயோ, தன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொண்டு ஆர அமர உட்கார்ந்து, இருந்த உணவு முழுவதையும் தின்றுவிட்டு, ஏப்பமிட்டபடி வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றுவிட்டது!அடுத்தநாள்...விவசாயியின் மனைவி தானியம் அரைப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்று விட்டாள். விவசாயி மட்டும் மவுன விரதம் பூண்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தான்.அப்போது...!

அந்த வீட்டு வழியே முடிதிருத்தும் கலைஞன் ஒருவன் போய்க் கொண்டிருந்தான். வீட்டுக் கதவு திறந்து கிடப்பதையும், உள்ளே ஒருவர் அமர்ந்து இருப்பதையும் கண்டு, வீட்டினுள் நுழைந்தான்.விவசாயிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால், விவசாயி எதுவும் பேசவில்லை. ""ஏன் பேசாமல் இருக்கிறாய்?'' என்று கேள்வி கேட்டுச் சலித்துப் போனான்.

"இவனை எப்படியாவது பேசவைத்து, மவுன விரதத்தின் காரணத்தைக் கண்டறிய வேண்டும்' என்று தனக்குள் எண்ணினான் முடி திருத்தும் கலைஞன். உடனே கத்தியை எடுத்து, விவசாயியின் தலையைப் பிடித்து மொட்டை அடித்தான்!விவசாயி அப்போதும் மவுனமாக இருந்தான். மூடிய வாயைத் திறக்கவில்லை!பிறகு, ஒரு பக்கத்தில் இருந்த தாடியையும் மீசையையும் வெட்டி எறிந்தான். அப்போதும் விவசாயி தன் கடும் மவுன விரதத்தைக் கலைக்காமல் இருந்தான்.

எப்படி முயற்சித்தும் விவசாயியைப் பேச வைக்க முடியவில்லை. "இவன் ஒரு சரியான பைத்தியம் போல் தெரிகிறது!' என்று சொல்லியபடியே, அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.அவன் போய் ஒருசில நிமிடங்கள் ஆகியிருக்கும்! அப்போது, விவசாயியின் மனைவி, மாவு அரைத்து எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்த்தாள்.

வீட்டில் நுழைந்தபோது அவள் கண்ட காட்சி...!தன் கணவன் மொட்டைத் தலையுடன் ஒரு பக்கத்தாடியும், மீசையும் இல்லாமல் அலங்கோலமாக இருந்ததைக் கண்ட அவள், ""அய்யோ! உங்களுக்கு என்ன ஆச்சு?'' என்று அலறினாள்.""ஆ! நீதான் முதலில் பேசினாய். போய்க் கதவைச் சாத்திவிட்டு வா...!'' என்று வெற்றிக் களிப்புடன் கூறினான் விவசாயி.

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 13, 2013 6:09 pm

ஈகரையில் இது படித்த மாதிரி உள்ளது .... சிவா இந்த பதிவை போட்டுள்ளார் என்று நினைக்கின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 13, 2013 6:13 pm

இணைத்துவிட்டேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 1:52 pm

நன்றி பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக