புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
9 Posts - 4%
Jenila
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்? - ஸ்டாலின் !


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:17 pm

First topic message reminder :

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 F4ZWrFDyTYO0zRpOvjco+E_1382591501

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.

இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.

nandri - siruvarmalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 21, 2013 11:46 am

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 103459460 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 9:44 pm

M.M.SENTHIL wrote:யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 103459460 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 3838410834 

 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 1571444738 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 1571444738 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 1571444738 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:38 am

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 OdedACHVQeeSrZfZggBv+E_1388046467

கல்கத்தாவில் ஓர் ஆங்கிலப் பள்ளிக் கூடம். அந்தப் பள்ளிக்கூடத்திலே ஒரு மாணவன் படித்து வந்தான். அவன் அப்பா கிராமத்திலிருந்து மாதா மாதம் செலவுக்குப் பணம் அனுப்புவார். பள்ளிக்கூடத்துச் சம்பளத்தை அவன் ஒழுங்காகக் கட்டி விடுவான். சாப்பாட்டுக்காக உள்ள பணத் தில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து அந்தப் பணத்தில் நாய், முயல், புறா முதலியவற்றை வாங்குவான். பிரியமாக அவற்றை வளர்ப்பான். அவை எப்படி வசிக்கின்றன? என்னென்ன சாப்பிடு கின்றன? என்றெல்லாம் கவனமாகப் பார்ப்பான்.

அவன் வசித்துவந்த இடத்தில் திறந்தவெளி கொஞ்சம் இருந்தது. அதில் அவன் பலவகைச் செடி கொடிகளையும் வளர்த்து வந்தான். அவற்றிற்கு நீர் பாய்ச்ச அவனே சொந்தமாகச் சில குழாய்களை அமைத்தான். நடு நடுவே சில பாலங்களையும் கட்டி வைத்தான். படிக்கும் நேரம் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் அவன் தோட்டத்திலே இருப்பான். செடி கொடிகளெல்லாம் எப்படி வளர்ந்து வருகின்றன என்று தினமும் வேடிக்கை பார்ப்பான்.

அவனுடைய பள்ளித் தோழர்கள் அவனை விளையாடக் கூப்பிடுவர். அவன் போகமாட்டான். தான் வளர்க்கும் நாய், முயல், புறா முதலியவற்றுடனே விளையாடிக் கொண்டிருப்பான். மீன் பிடிப்பதிலும் அவனுக்கு ஆசை அதிகம். மீன் பிடிக்கும் வலை ஒன்றை எடுத்துக் கொள்வான். பக்கத்திலுள்ள குளம் குட்டை களுக்குச் சென்று மீன் பிடிப்பான். அப்போது துள்ளிக் குதிக்குமல்லவா?
""ஏன் இவை துள்ளிக் குதிக்கின்றன? தண்ணீருக்கும், இவற்றிற்கும் என்ன சம்பந்தம்? வெளியே இருந்தால் வாழ முடியாதா?'' என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வான்.

விடுமுறைக் காலங் களில் கிராமத்துக்குச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது, தான் வளர்க் கும் நாய், முயல் முதலிய வற்றை ஊருக்குக் கொண்டு செல்வான். ஆனால், செடி கொடிகளையும் கொண்டு செல்ல முடியுமா?
"ஐயோ, கொண்டு செல்ல முடிய வில்லையே! இவை தண்ணீரில்லாமல் வாடி விடும்' என்று வருந்துவான்.
செடி கொடிகளிடத்திலே அப்போது அவன் கொண்டிருந்த அன்புதான், பிற் காலத்தில் அவனை ஒரு பெரிய விஞ்ஞானி ஆக்கியது. ஆம், நம்மைப் போலவே செடி கொடிகளுக்கும் உயிருண்டு, உணர்ச்சி யுண்டு என்ற உண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவனே அந்தச் சிறுவன்தான்.

இப்போது அந்தச் சிறுவன் யாரென்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமே!

விடை: அந்த இளம் விஞ்ஞானி இவர்தான் ஜகதீஸ் சந்திர போஸ்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 03, 2014 1:58 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 ZnlGzppRT1GxwscEDsa3+E_1388654435

அவனோடு கூடப் பிறந்தவர்கள் பதினோரு பேர். அவன் ஆறாவது பிள்ளை. அவனுடைய தந்தை ஒரு மத குருவாக இருந்தார். அவருடைய வருமானம் மிகக் குறைவு. அதனால் குழந்தைகளை நன்றாக வளர்க்க அவரால் முடியவில்லை. எல்லோரும் எலும்பும் தோலுமாகவே இருந்தனர். அந்த ஆறாவது பிள்ளையும் அப்படித்தான் இருந்தான். உடம்பு உறுதியாக இல்லாது போனாலும், அவனுடைய உள்ளம் உறுதியாக இருந்தது. "பயம்' என்றால் என்ன என்றே அவனுக்குத் தெரியாது! எந்தக் காரியத்தையும் துணிவோடு செய்வான்!

ஒருநாள் அவனும், அவனுடைய அண்ணனும் பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டனர். பள்ளிக் கூடம் அருகிலே இல்லை. வெகு தூரத்தில் இருந்தது. அதற்குப் போகும் பாதையும் மிக மோசமாக இருந்தது. அந்தக் காலத்தில் அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் நல்ல பாதையைக் காண்பதே அபூர்வம். அதிலும், அது மிகவும் கடுமையான பனிக்காலம், வழி நெடுக பனி பெய்து கொண்டிருந்தது.
வீட்டை விட்டுக் கிளம்பும்போது அவர்களுடைய அப்பா, ""பனி மிகவும் அதிகமாகப் பெய்கிறது. ஆகையால் வழியில் ஆபத்து ஏற்படும் போல் தோன்றினால், உடனே திரும்பி வந்து விடுங்கள், ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதீர் கள்!'' என்று எச்சரித்து அனுப்பினார்.

அண்ணனும், தம்பியும் பள்ளியை நோக்கிப் பனிப் பாதையில் நடந்து சென்றனர். வழியில் ஓரிடத்தில் பாதை மிகவும் குறுகலாக இருந்தது. அத்துடன் சதுப்பு நிலமாகவும் இருந்தது.""இங்கே காலை வைத்தால் நிச்சயம் உள்ளே அழுந்திடுவோம்!'' என்று நினைத்து எவருமே பயப்படுவர். அந்த அண்ணனும் அப்படி நினைத்துத் தான் பயந்தான். அங்கேயே நின்று விட்டான். ஆனால், தம்பியோ சிறிதும் அஞ்சவில்லை. அதன் மேலே காலை எடுத்து வைத்தான்.

அப்போது அண்ணன், ""தம்பி, வழியிலே ஆபத்து ஏற்படும் போல் தோன்றினால், உடனே திரும்பி வந்துவிடுங்கள் என்று அப்பா சொன்னாரல்லவா? வா, திரும்பி விடுவோம். இதில் காலை வைத்தால் ஆபத்துத்தான்!'' என்றான்.

""அண்ணா, ஆபத்து ஏற்படும்போல் தோன்றினால் தானே அப்பா திரும்பிவரச் சொன்னார்? எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீ வேண்டுமானால் திரும்பிப் போ,'' என்று கூறி விட்டுத் தைரியமாகத் தம்பி முன்னோக்கிச் சென்றான்.

ஆபத்துக்களையெல்லாம் சாமர்த்திய மாகக் கடந்து பள்ளிக்குப் பத்திரமாகப் போய் சேர்ந்துவிட்டான்.
அவனுடைய அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு அவனுடைய அண்ணன் ஆச்சரியப் பட்டான். அப்பாவும் ஆச்சரியப்பட்டார். ஒரு காலத்தில், இந்த உலகமே ஆச்சரியப் பட்டது! அது எப்போது?
மாபெரும் வீரன் நெப்போலியனையே அவன் தோற்கடித்த சமயத்தில்தான்!
அவர் யார் என்று தெரிந்ததா?

விடை: அவர்தான் நெல்சன். அவர் பெயரைச் சொன்னாலே நெஞ்சை நிமிர்த்தி நிற்பார்கள் ஆங்கிலேயர்கள். இங்கிலாந்தில் எத்தனையோ வீரர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும், "வீரருக்கெல்லாம் வீரர்' என்று போற்றப்படுபவர் இந்த நெல்சன் ஒருவர்தான்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 10, 2014 12:37 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 OP4dTUEgRJKSIDxEITHi+E_1389250083

காலை நேரம் சூரிய ஒளி எங்கும் பரவியிருந்தது. அப்போது சுருட்டை முடி பெண் ஒருத்தி சாலை வழியாக ஓடிக் கொண்டிருந்தாள். சிறிது தூரத்தில் அவளுடைய தோழிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து விளையாடவே அவள் ஓடினாள்.
அப்போது குறி சொல்லும் கிழவி ஒருத்தி எதிரே வந்தாள். அவள் அந்தப் பெண்ணிடம், ""பாப்பா, எங்கே உன் கையைக் காட்டு பார்க்கலாம்,'' என்றாள்.""இதோ என் கை,'' என்று கூறி தன்னுடைய கையை விரித்துக் காட்டினாள்.

இதைச் சிறிது தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி பார்த்து விட்டாள். உடனே அவள் மற்றவர்களிடம், ""ஏய், நமது மர்ஜாவைப் பாருங்கள், அந்தக் குறிகாரியிடம் கையை நீட்டிக் கொண்டு நிற்கிறாள்!'' என்றாள்.உடனே எல்லாரும் அந்த சுருட்டைப் பெண் நிற்கும் பக்கம் பார்த்தனர். ""அடியே மர்ஜா, அந்தக் கிழடு ஏதாவது உளறும், அதைக் கேட்டுக் கொண்டு நிற்காதே! ஓடிவா, சீக்கிரம்,'' என்று கத்தினர்.சுருட்டை முடி பெண் அவர்களது பேச்சைக் கேட்கவில்லை. கையைக் காட்டிக் கொண்டே நின்றாள்.

கிழவி அவளது கை ரேகைகளைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ""எவ்வளவு அருமையான ரேகைகள், நீ பெரியவளானதும் உனக்குப் பேரும், புகழும் பெருகி வரப் போகின்றன. நிச்சயமாகச் சொல்கிறேன்,'' என்றாள்.இப்படி அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எல்லாரும் அவள் அருகில் வந்துவிட்டனர். தோழிகள் வந்து சும்மா நிற்கவில்லை. சுருட்டை முடி பெண்ணைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

""ஏண்டியம்மா, உனக்குப் பேர் வரப் போகிறதாம். புகழ் வரப்போகிறதாம். அப்படியானால், நீ பெரிய சீமாட்டியாகி விடுவாயோ?'' என்று கேலியாகக் கேட்டாள் ஒரு பெண்.""இல்லையடி இல்லை. இவள் பட்டத்து ராணியாகப் போகிறாள். பார்த்துக்கொண்டே இரு,'' என்று இன்னொருத்தி கிண்டலாகக் கூறினாள்.

இதே போல் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாகக் கூறிக் கேலி செய்தனர். ஆனால், எவளுமே, இவள் பெரிய விஞ்ஞானியாகப் போகிறாள் என்று சொல்லிக் கேலி செய்யவில்லை. அப்படி எவளாவது சொல்லியிருந்தால், அவள் வாய்க்குச் சர்க்கரை வாங்கிப் போட்டிருக்கலாம். ஏன் தெரியுமா?

அந்தச் சுருட்டை முடி பெண் பெரியவளானதும் ஒரு பெரிய விஞ்ஞானியாகவே விளங்கினாள். ஆமாம், இப்போது புற்று நோயைக் குணப்படுத்தவும், வாந்தி பேதி, எலும்புருக்கிக் காய்ச்சல் முதலியவற்றிற்குக் காரணமான கிருமிகளைக் கொல்லவும் உபயோகப்படுத்துகிறார்களே ரேடியம், அதைக் கண்டுபிடித்தவளே அந்த சுருட்டை பெண்தான். இவளுக்கு ஒருமுறை அல்ல... இருமுறை நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. வேறு எவருக்கும் இப்படி கிடைத்ததில்லை. இப்போது தெரிந்திருக்குமே இவர் யார் என்று?

விடை: மேடம் கியூரிதான் அந்த பெண்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2014 3:46 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 11, 2014 1:56 pm

ayyasamy ram wrote:யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 103459460 

 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 1571444738 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 1571444738 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 1571444738 அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 7:39 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 F7R2LiJXTsyR5jhO9gS4+E_1390468889

இப்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இருக்கிறது; நல்ல காற்றோட்டம் இருக்கிறது. நோயாளிகளைக் கவனிக்க நர்ஸுகள் இருக்கின்றனர். அங்கேயே உணவு கொடுக்கின்றனர். இன்னும் பல வசதி களை செய்து கொடுக்கின்றனர். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த மாதிரி வசதி களையெல்லாம் மருத்துவமனையில் காண முடியாது. இருட்டு அறைகளில் நோயாளிகளைப் போட்டு வைப்பர். சரியாகக் கவனிக்க மாட்டார்கள். மருத்துவமனைக்கு போனாலே, சுடு காட்டுக்குப் போனது போலத்தான்.

அந்தக் காலத்து நர்ஸுகளுக்குப் படிப்பு வாசனை கிடையாது. அவர்களில் அநேகர் மிகவும் கேவலமாக நடந்து கொள்வர். நோயாளிகளிடம் உள்ள பொருள்களைத் திருடிக் கொள்வர். நோயாளிகளைக் கொடுமைப்படுத்துவர். மது அருந்துவர். இப்படிப்பட்ட காலத்தில் யாராவது நர்ஸுகளைக் கண்டாலே, சிலர் நையாண்டி செய்வர். சிலர் தலையில் அடித்துக் கொள்வர்.

நர்ஸுகள் என்றாலே மிகவும் மோசமானவர்கள் என்று நினைக்கும் அந்தக் காலத்தில், ஒரு சிறுமி நர்ஸாக வேண்டுமென்று நினைத்தாள். நினைத்ததோடல்ல... நர்ஸ் போலவே நடித்தும் வந்தாள். அவள் சாதாரணச் சிறுமியல்ல; பணக்காரச் சிறுமி! கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி!

அவள் விளையாட்டுப் பொம்மைகளை வைத்து விளையாடுவதே வேடிக்கையாக இருக்கும். மாப்பிள்ளை, பெண் விளை யாட்டோ, சாமி விளையாட்டோ விளையாட மாட்டாள். அந்தப் பொம்மைகளை நோயாளிகளாக வைத்து விளையாடுவாள். படுக்கைகள் தயாரித்து, அந்தப் பொம்மைகளை அவற்றில் படுக்க வைப்பாள். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த நோயாளிகளைக் கவனிப்பாள்.

இந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம் அவளுடைய அக்காளுக்குப் கோபம், கோபமாக வரும். கோபத்தில் அவள் அந்த நோயாளிப் பொம்மைகளைத் தூக்கி வீசி எறிந்து விடுவாள். பாவம், அந்தச் சிறுமி அலறிக் கொண்டே ஓடிப்போய் அந்தப் பொம்மைகளை எடுத்துக்கொண்டு வருவாள்.

"ஐயோ, உனக்கு இந்தக் கையில் அடிபட்டு விட்டதா? அந்தக் காலில் அடிபட்டு விட்டதா?' என்று கேட்டுக் கோண்டே அந்தப் பொம்மைகளுக்குக் கட்டுக் கட்டுவாள்.இப்படிச் சிறுவயதிலேயே நர்ஸாக நினைத்த அந்தச் சிறுமிதான் பெரியவளானதும் மருத்துவமனைகளும், நர்ஸுகளும் முன்னேறப் பெரும்பாடுபட்டாள். அவள் இல்லாவிட்டால், இப்போது இருக்கும் நிலையில் மருத்துவமனைகளையோ, நர்ஸுகளையோ காண முடியாது.

விடை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த அம்மையார்தான் அந்த சிறுமி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 9:21 pm

இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி!
இளம் விஞ்ஞானிஜகதீஸ் சந்திர போஸ்!
நெல்சன்.
மேடம் கியூரி
பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 103459460



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 11:26 am

SenthilMookan wrote:இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி!
இளம் விஞ்ஞானிஜகதீஸ் சந்திர போஸ்!
நெல்சன்.
மேடம் கியூரி
பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 4 103459460

நன்றி செந்தில் மூக்கன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக