புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
26 Posts - 39%
prajai
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
2 Posts - 3%
Jenila
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
6 Posts - 5%
prajai
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
5 Posts - 4%
Rutu
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
3 Posts - 2%
Jenila
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_m10சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:53 am



கையறுநிலை

அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா எனும் பாடல் ஒரு திரைப்படத்தில் சோகமயமான சூழலிலும் பாடப்படும் இந்தப்பாடல் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் பிரதிபலிப்பு.

“அற்றைத்திங்கள் அவ்வெண்ணி லவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும்
பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம்
எந்தையும் இலமே” (112)

இந்தப்பாடல் பாரி மகளிர் பாடியது. இது கையறுநிலை எனும் துறையைச் சேர்ந்தது.

கடையேழு வள்ளல்களில் ஒருவனாம் பாரியை மூவேந்தர்களும் சேர்ந்து போர் செய்து வீழ்த்தினர்.(!) அவனது புதல்விகள் இருவரும் புலவர் கபிலரின் பாதுகாப்பில் இருந்தனர். அவர் தந்தையைப் போல் சிந்தித்தார் செயல்பட்டார். அவர்களுக்கு மணம் செய்து வைக்க முயற்சித்தார். அதை தமது கடமையாக எண்ணினார் கபிலர். அவரது பாடல்கள் பல கையறு நிலைப்பாடல்தான்.

பொதுவாக புலவர்கள் மன்னர்களைப் பாடி பரிசில்கள் பெற்று வாழ்க்கையை நடத்துபவர்கள். கைகொடுக்கும் வள்ளல்கள். புரவலர்கள். அவர்கள் இல்லை எனில் அதாவது இறந்துபடின் புலவர்கள் நிலை என்னாகும்? நமது வாழ்வுக்கு என்ன செய்வது என்று கையைப்பிசைந்து கொண்டு நிற்கும் ஆதரவற்ற நிலைதான் கையறுநிலை.

புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் ‘பாராமலே’ கொண்டிருந்த நட்பு பார் போற்றும் தன்மையது. சோழன் வடக்குநோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்க நினைத்தபோது பிசிராந்தையாரும் வருவார். அவருக்கும் இடம் போட்டு வையுங்கள் என்று கூறினானாம். அவ்வாறே பிசிராந்தையாரும் எவ்விதப் பிசிறுமின்றி நடந்து கொண்டார் என்பதை படிக்கும் போதே நம் கண்கள் பனிக்கும். அவரைப் போல் இன்னொரு உயிர் நண்பரான உறையூர்ப் பொத்தியார் என்பவரும் வடக்கிருந்தாராம். அவர் பாடியதும் கையறு நிலை பாடல்தான் (புறநானூறு217)” அன்னோனை இழந்த இவ்வுலகம் என்னாவது கொல்? அளியதுதானே!” அத்த கையவனை இழந்த சோழ தேசம் எவ்வாறு துன்பங்களுக்கு இரையாகுமோ? அதுவே இரக்கத்தைத் தருகின்றது என்பது பாடலின் பொருள்.

சோழன், பிசிராந்தையார் இருவரும் வடக்கிருந்ததை கண்ட கண்ணகனார் பாடிய பாடலும் (218) கையறு நிலையை சேர்ந்ததுதான். இதுபோல நிறைய உண்டு.

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவனை குடவாயில் நல்லாதனார் பாடிய பாடல் பின்வருமாறு கூறுகிறது. ஒல்லையூர் நாட்டிலே இளைய வீரர்கள் கண்ணிசூடாராயினர். வளையணியும் மங்கல மகளிரும் மலர் கொய்யாராயினர். பாணனும் மலர் சூடானாயினன். பாடினியும் மலர் அணியாளாயினள். வலிய வேலோனான சாத்தன் இறந்ததனால், இவ்வாறு யாவரும் நல்லணி துறந்திருக்கும் வேளையிலே முல்லையே நீமட்டும் பூக்கின்றாயோ?

“முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?’’ (புறம் 242)

இவையெல்லாம் மன்னர்கள், வள்ளல்கள், புரவலர்கள் இறந்ததையொட்டிப் பாடியவை. ஆனால் ஒரு மன்னன் தன் மனைவி இறந்ததற்கு இரங்கிப் பாடிய பாடல் படித்திருக்கும் வாய்ப்பு அபூர்வம்.

சேரமான் கோட்டம்பலத்திலே துஞ்சிய மாக்கோதை, அவன் மனைவி பெருங்கோப்பெண்டு அதாவது பட்டத்தரசி இறந்துவிட்டாள்.

யாங்குப் பெரிதுஆயினும், நோய்
அளவு எனைத்தே
உயிர் செகுக் கல்லா மதுகைத்து
அன்மையின்
கள்ளிபோகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளை
விறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல்; என் இதன்
பண்பே (புறம் 245)

கள்ளி வளர்ந்த புறங்காட்டிலே, விறகு அடுக்கிய ஈமத்தின் கண், அழற் பாயலிலே அவளைக் கிடத்தினேன். அம்மடவாள் போய்விட்டாள். என் துயரம் எவ்வளவு பெரிதாயினும் என் உயிரையும் போக்கி அவளுடன் சேர்க்கும் வலியற்றதாயிற்றே. அவள் இறந்தும் யான் வாழ்கின்றேனே? இதன் பண்பு தான் என்னே? என்று அவளோடு தானும் இணைந்து உயிர்விடவில்லையே எனக் காதலால் வாடுகிறான் சேரமன்னன்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கண்ணகி வழக்கிலே குற்றமுடையவன் தான்தான் எனத் தெரிந்ததும் அரியணையிலிருந்து நிலத்தில் வீழ்ந்து உயிர் விட்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அவன் இறந்ததுமே ‘கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்று கூறி அவனது மனைவி கோப்பெருந்தேவி அப்போதே உயிர்விட்டாள் என்றும் அது மேலும் கூறுவதை நாம் அறிந்து இருக்கிறோம் அல்லவா? அந்தக் காட்சிக்கு மாறுதலானது அல்லவா இது.

நன்றி - தீக்கதிர்


செந்தில் முருகன்
செந்தில் முருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011

Postசெந்தில் முருகன் Fri Mar 07, 2014 7:18 pm

அருமை




மெய் பொருள் காண்பது அறிவு.............

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக