புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_c10ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_m10ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_c10 
5 Posts - 63%
heezulia
ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_c10ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_m10ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_c10ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_m10ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:33 am

ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Rohinga_2422955f

ஆயிரக்கணக்கான வங்கதேசிகளும் ரோஹின்ஜா அகதிகளும் மிகப் பெரிய சரக்குக் கப்பல்களில் அந்தமான் கடல் பகுதியில், ஆள்கடத்தும் இடைத் தரகர்களால் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கப்பல்களில் பயணம் செய்து பிறகு தப்பி வந்தவர்களிடம் நேரடியாகப் பேசியதில் இந்தக் கொடூரம் தெரியவந்துள்ளது. இந்தத் தரகர்களுக்கு மிகப் பெரிய மாஃபியா கும்பல் பின்புலமாக இருந்து செயல்படுகிறது.

தாய்லாந்து, மலேசிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆள்கடத்தும் தரகர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க முற்பட்டதை அடுத்து, அவர்களை எந்த நாட்டிலும் இறக்கி விடாமல் கடலிலேயே பிணையாகப் பிடித்து வைத்துள்ளனர். அகதிகளை விட்டு அவர் களுடைய உறவினர்களுக்கு கைபேசி மூலம் பேசச் செய்து அதிகத் தொகையைக் கேட்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கும்போதே அகதிகளைக் கடுமையாக அடித்து அவர்கள் அலறுவதை உறவினர்கள் கேட்கச் செய்கிறார்கள். பணம் கிடைத்தால் அவர்களைக் கரைக்குக் கொண்டுபோய் விடுகிறார்கள். நோயாலோ, சாப்பாடு பற்றாமலோ, அடிப்பதாலோ அகதிகள் இறந்தால் அவர்களைக் கப்பலிலிருந்து தூக்கிக் கடலில் வீசிவிடுகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்துடன் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்குகிறார்கள்.

கரையிலும் பல முகாம்களை அதிகாரிகளுக்குத் தெரியாமல் ரகசியமாக இடைத்தரகர்கள் நடத்துகிறார்கள். அவற்றில் இறப்பவர்களைப் பெரிய குழி தோண்டிப் புதைத்துவிடுகிறார்கள். தெற்கு தாய்லாந்திலும் மலேசியாவிலும் இப்படி அகதிகள் புதைக்கப்பட்ட ரகசியக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒரே குழியில் ஏராளமான மேற்பட்ட சடலங்கள்கூடப் புதைக்கப்பட்டிருக்கின்றன.

வேலை தேடியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள், அதற்கு உதவுவதாகக் கூறும் இடைத் தரகர்களை நம்புகிறார்கள். அவர்கள் முதலில் 200 டாலர்கள் கொடுத்தால் போதும் என்கிறார்கள். பிறகு, கப்பலில் செல்லும்போது வேறு இடைத் தரகர்கள் அங்கு அடியாட்களுடன் வருகிறார்கள். அவர்கள் அதிகத் தொகை கேட்டு அகதிகளைத் துன்புறுத்துகிறார்கள்.

அகதிகள் மீது அக்கறை கொண்டு அவர்களை அரவணைக்கும் ‘ஆங்கன்’ என்ற அமைப்பைச் சேர்ந்த கிறிஸ் லிவா சொல்லும் தகவல்கள் நம்மை அதிரவைக்கின்றன. “இடைத்தரகர்களால் இந்தத் தொழிலை விட முடியாது. எனவே, கப்பல்களில் உள்ளவர்களைக் கரைக்கு அழைத்துவராமல் கடலிலேயே சிறைவைத்து மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். பிப்ரவரிக்குப் பிறகு, மேலும் சில ஆயிரம் அகதிகள் கப்பல்களில் சேர்ந்துள்ளனர். தாய்லாந்து முகாமில் இறந்தவர்களின் எண்ணிக் கையைப் போல பல மடங்கு கடலில் இறந்திருக் கிறார்கள்” என்கிறார்.

ரோஹின்ஜா இளைஞர் ஒருவர் சொல்கிறார்: “கால்நடைகளை ஏற்றிச்செல்லும் மியான்மர் படகில் ஏறி வெளிநாட்டில் அடைக்கலம் கேட்கச் சென்றேன். கடலில் 9 நாட்கள் இருந்ததற்குப் பிறகு தாய்லாந்து கடற்கரைக்கு அருகில் மிகப் பெரிய சரக்குக் கப்பலில் ஏற்றப்பட்டோம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அதில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள். அதில் 14 நாட்கள் இருந்தோம். நாங்கள் அந்தக் கப்பலில் ஏற்றப்பட்ட உடனேயே ஆட்களைக் கடத்தும் 3 பேர் கையில் கைபேசியுடன் அந்தக் கப்பலில் ஏறினார்கள். யாருக்கெல்லாம் உறவினர்களின் தொலைபேசி எண்கள் தெரியும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு வராக அழைத்து, உறவினரிடம் பேசி ஆயிரக் கணக்கில் பணத்தைக் கொடுத்தால்தான் விடுவிப் போம் என்று சொல்லச் சொன்னார்கள். அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதே அடித்து அலற வைத்தார்கள். யாருடைய எண்ணும் தெரியாது, நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறியவர்களைக் கடுமையாக அடித்தார்கள். கப்பல் இன்ஜினின் சங்கிலியை பிளாஸ்டிக்கால் மூடி, அதைக் கொண்டு அடித்தார்கள். அவர்கள் அடித்த பிளாஸ்டிக் தடிக்குள்ளும் இரும்பு போன்ற கனமான எதையோ மறைத்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு அடியும் எலும்பு உடையும் அளவுக்கு இருந்தது. நான் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால் இப்படி அடித்ததிலேயே 3 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்கள். ஒருவர் செத்து விழுந்தார். அவருடைய சடலத்தை உடனே கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலுக்குள் தூக்கி வீசிவிட்டார்கள்.”

தாய்லாந்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தொலைபேசி மூலம் பேசியபோது இதே போன்ற சம்பவங்களை விவரித்தார். “நான் அந்தப் படகில் பிப்ரவரி முதல் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். அவர்களால் அழைத்துவரப்பட்ட அகதிகளைத் தினமும் அழைத்து அடிப்பார்கள். சிலரை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறைகூட அடித்திருக்கிறார்கள். அந்தப் படகில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்” என்றார்.

“எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பலை, அகதிகளைத் தங்க வைக்கும் கடல் முகாமாக இடைத்தரகர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் 2,000 பேர் இருந்தனர். சுமார் 2 மாதங்களுக்குக் கடலிலேயே அது இங்கும் அங்கும் போய்க் கொண்டிருந்தது. கப்பலை வாடகைக்கு எடுத்து, அகதிகளை மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் அளவுக்கு இடைத்தரகர்களுக்கு அதில் ஆதாயம் கிடைத்து வந்தது” என்கிறார் தாய்லாந்து போலீஸ் படையின் ஆலோசகர் அப்துல் கலாம். சேனல்-4 நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி யளித்தார்.

இந்தக் கதைகள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

© 'தி கார்டியன்', சுருக்கமாகத் தமிழில்: சாரி




ரோஹின்ஜா முஸ்லிம்கள்: நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 8:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக