புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
1 Post - 50%
heezulia
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
20 Posts - 3%
prajai
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_m10தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sun Oct 06, 2013 7:43 pm

எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் இருக்கிறது. யாரையும் அச்சுறுத்துவது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.

சந்தேகத்துக்கான விதை:

அடிப்படை சுகாதார பாதுகாப்புக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம்பாட்டு தேவையிலும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச  அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய்த் தடுப்புக்கு பல்வேறு வகைகளை  சுட்டிக்காட்டினாலும் குழந்தை பருவத்திலிருந்து தடுப்பூசிகள் போடுவது அடிப்படையானது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப இதன் தன்மை  மாறுபடும். எழுநூறு கோடிக்கும் மேல் இன்று உலக மக்கள் தொகை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா இரண்டாவது இடத்தில்  இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் தடுப்பூசி சந்தையின் மதிப்பு 275 மில்லியன் டாலர். சந்தேகம் இங்கேதான் எழுகிறது.

இந்திய மருத்துவத்துறை - 1990க்கு முன்:

மக்களின் அத்தியாவசிய தேவையான மருந்துகள் உற்பத்தியில் உலகிலேயே இன்று இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட சுமார்  200 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. ஏழை மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவின் மருந்துகளை நம்பித்தான் இருக்கின்றன.  (இன்னொரு பக்கம் இதே இந்தியாவில்தான் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் எந்தவிதமான மருந்துகளையும் வாங்க முடியாதவர்களாக ஏழ்மையில்  இருக்கின்றனர். எவ்வளவு பெரிய முரண்!) இதற்கு காரணங்கள் மூன்று. 1. இந்திய காப்புரிமை சட்டம், 1970. 2. பொதுத்துறை நிறுவனங்கள். 3.  1978ல் உருவாக்கப்பட்ட மருத்துவ கொள்கை. ஆங்கிலேயர் ஆட்சியில்1911ல்  உருவாக்கப்பட்ட தயாரிப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டு பன்னாட்டு  நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க அனுமதிக்கப்பட்டன.

அதுநாள் வரை இருந்த மருந்துக்கான காப்புரிமை (றிக்ஷீஷீபீuநீt  றிணீtமீஸீt) செய்முறைக்கான காப்புரிமையாக (றிக்ஷீஷீநீமீss  றிணீtமீஸீt)  மாற்றப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில்  வெவ்வேறு வழிமுறைகளில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனையில்  சரிவு ஏற்பட்டது.  சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான ஐ.டி.பி.எல்., எச்.ஏ.எல். ஆகியவை மருந்துகளை  உடனுக்குடன் கிடைக்க வழிசெய்தன.

ஸோ... வேறுவழியின்றி பன்னாட்டு மற்றும் இந்திய தனியார் நிறுவனங்களும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்தனர். 1978ல்  உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கை இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் சாதகமான பல அம்சங்களை கொண்டு  வந்தது. அன்றைய தினம் பயன்பாட்டில் இருந்த 374 மருந்துகளும் விலைக் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்  குறைந்து 25 சதவிகிதத்துக்கு வந்து நின்றது.

இந்திய மருத்துவத்துறை - 1990க்குப் பின்:

இந்திய மருத்துவத்துறையின் அபார வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த மூன்று காரணங்களும் 1990க்குப் பின் மெல்ல மெல்ல தேய்ந்துவிட்டன.  பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட நீர்த்து போய்விட்டது. ஐ.டி.பி.எல். நிறுவனத்தில் உற்பத்தி இல்லை. ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில்  மிகக் குறைந்த அளவில் உற்பத்தி தொடர்ந்தது. 1978ல் உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கைகளில், 1986, 1994, 2001ல் திருத்தங்கள்  செய்யப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டன. உலக வர்த்தக நிறுவனத்தில் கையெழுத்திட்டு வர்த்தகம் சார்ந்த அறிவுசார்  சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாலும், 1970ம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தில் ஒரு மாற்றத்தை 2005ல் கொண்டு வந்ததாலும்  வெளிநாட்டில் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க முடியாமல் போனது.

இதனால்தான் இன்று மருந்துகள் சராசரி இந்திய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டன. மருந்துகளின் மீதான கட்டுப்பாடு மெல்ல மெல்ல தளர்ந்து  வருவதால், அனைவருக்கும் மருந்து என்பது இப்போது சாத்தியமில்லை. தவிர, மனித ஆரோக்கியத்துக்கான பராமரிப்பில் சுமார் 80 சதவிகிதம்  மருந்துகளுக்காகவே செலவிடப்படுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற அடித்தட்டு மக்களே. சுகாதாரம்  இல்லாத சுற்றுச்சூழல், மறுக்கப்படும் அடிப்படை வசதிகள், சுத்தமில்லாத குடிநீர் என அன்றாட பிரச்னைகளுடன் மருந்து விலையும் மக்களை  அதளபாதாளத்துக்கு தள்ளியிருக்கிறது.

மருந்துத் துறையில் தாராளமயம் புகுந்துவிட்டதால், அத்தியாவசியமான மருந்துகளின் உற்பத்தி குறைந்து விட்டது. பதிலாக தேவையற்ற  மருந்துகளின் உற்பத்தி அதிகரித்துவிட்டது. இதனால் தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை விண்ணைத் தொட்டிருக்கிறது.சுருக்கமாக சொல்வதெனில் இந்திய மருத்துவத்துறை இப்போது உற்பத்தியிலிருந்து விலகி வர்த்தகத்துக்கு மாறிவிட்டது. ஏற்றுமதிக்காக பெரும்  சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 50  சதவிகித இந்திய மக்களுக்கு தேவைக்கேற்ப மருந்து கிடைக்கவில்லை.

காணாமல் போகும் இந்திய நிறுவனங்கள்:

பெரும் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களை அடுத்தடுத்து இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. சில உதாரணங்கள்.  மேட்ரிக்ஸ் லாப்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மைலன் வாங்கியிருக்கிறது. போலவே டாபர் பார்மா நிறுவனத்தை  சிங்கப்பூரை சேர்ந்த பெரசீனியஸ் கேபியும், ரான்பாக்சியை ஜப்பானை சேர்ந்த டாய்ச்சி சான்க்கியோவும், சாந்தா பையோடெக் நிறுவனத்தை பிரான்சை  சேர்ந்த சனோபி அவெண்டிஸ்ஸும், ஆர்க்சிட் கெமிக்கல்சை அமெரிக்காவை சேர்ந்த ஹாஸ்பிராவும், பிரமல் ஹெல்த் கேரை அமெரிக்காவை சேர்ந்த  அப்பாட்டும் வாங்கியிருக்கின்றன.

இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளின் உற்பத்தி:

சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் மருத்துவத்துறை வளர்ச்சியில் தடுப்பூசி நிறுவனங்களின் பங்கு மகத்தானது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை இறப்பில் அபாயகரமான நிலையில் இருந்த நம் நாட்டை காப்பாற்றியது சுயேட்சையான, சுயசார்பான மருந்து  கொள்கைகள்தான். உதாரணமாக 1967 - 1977ம் ஆண்டுகளில் கடும் முயற்சியால் போலியோ சொட்டு மருந்து குன்னூரில் உள்ள பாஸ்டர் இந்தியா  நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால், பின்னாட்களில் இந்திய அரசு தயாரிப்பை ஏதேதோ காரணங்கள் சொல்லி முடக்கி வைத்தது. அதற்கு பின்னர்  1987ல் மும்பையில் உள்ள ஹாப்கின்ஸ் நிறுவனம் போலியோ சொட்டு மருந்தை தயாரித்தது. இதையும் ஒரு கட்டத்தில் இந்திய அரசு நிறுத்தச்  சொன்னது.

இதன் பின்னர் 1988ல் மத்திய அரசு ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியது. அந்நிறுவனத்தால் முழு உற்பத்தியும் செய்ய முடியவில்லை.  தேவைக்கேற்ப கொடுக்க முடியவில்லை. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. என்றாலும் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்த ஆர்டர்கள்  குறையவில்லை. பதிலாக அதிகரித்தன. 1989ல் குர்கானில் தொடங்கப்பட்ட மிக்ஷிசிளிலி நிறுவனம் (பிரெஞ்சு தொழில்நுட்ப உதவி) தட்டம்மை  தடுப்பூசி தயாரிப்புக்கான வேலையில் இறங்கின. ஆனால், பிரான்ஸ் அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாமல்  போனதால், போடப்பட்ட மூலதனம் மொத்தமும் விரயமாகி, ஒரு கட்டத்தில் இந்த நிறுவனமும் மூடப்பட்டது.

இதனால் நம் நாட்டில் இருந்த தட்டம்மை தடுப்பு மருந்து தேவையை தனியார் நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காக பயன்படுத்த ஆரம்பித்தன.  மொத்தத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளபடி உலக தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் தாராளமாக கிடைப்பதில்லை.  ஒரு தட்டுப்பாடு நிலவியபடியே இருக்கிறது. இது செயற்கையான தட்டுப்பாடு. இதுவும் 1990க்கு பிறகுதான் தொடங்கியது. தாராளமயம்  அறிமுகப்படுத்தப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான் என்பதை நினைவில் கொள்க. 1998 - 2001 காலத்துக்குள் மக்களின் அடிப்படை  தேவைகளுக்காக கொடுக்கப்படும் பாரம்பரியமிக்க தடுப்பூசிகளின் உற்பத்தியை குறைத்துவிட்டு, அதிக லாபம் தரக்கூடிய தடுப்பூசிகள் சந்தைக்கு வரத்  தொடங்கியது. இதற்காகவே 15க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு இந்தியாவில் மூடப்பட்டன. இந்திய மக்கள் சக்கையாக  பிழியப்பட்டார்கள். இது உலக நாடுகளிலும் எதிரொலித்தது.

காரணம், இந்திய உற்பத்தியாளர்களில் பெரும்பான்மையினர் - அதாவது, 9 நிறுவனங்கள் - உலக மக்களின் தேவைகளுக்காக தடுப்பூசி மருந்துகளை  உற்பத்தி செய்து வந்தவர்கள்தான். இதில் எட்டு பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் லாபகரமான தடுப்பூசிகள், இந்திய  நாட்டு அட்டவணையில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டன. வலுக்கட்டாயமாக மக்களும், குழந்தைகளும் இதை போட்டுக் கொள்ள வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டன, செய்யப்பட்டும் வருகின்றன.

ஆபத்தான தடுப்பூசிகள்:

உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களும் கொடூரமான ரசாயன விஷங்கள் கலக்கப்பட்ட தடுப்பூசிகளை யாருக்கும் போடக் கூடாது என்று  எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், லாபம் சம்பாதிப்பதற்காக அவைகள் இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளில் சர்வசாதாரணமாக புழங்குவதாக சொல்கிறார்கள். எனவே, நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் கீழ்க்கண்ட ரசாயன நச்சுகள் அதில்  இருக்கிறதா என்று ஒன்றுக்கு இருமுறை சரிபாருங்கள். குடும்ப மருத்துவர்களின் உதவியை நாடுங்கள்.

அமோனியம் சல்பேட் - வயிறு, குடல் கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்; பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்று  நோய்களை ஏற்படுத்தும்; லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பை உண்டாக்கும்;  எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை  உண்டாகும்; அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா உண்டாகும்; ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோயை  உண்டாக்கும்; டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்;

குளுதரால்டிஹைட் - பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும்; ஜெலடின், ஜெந்தாமைசின் சல்பேட் - ஒவ்வாமை; பாலிமைக்சின் பி பாதரசம் -  வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் கருதப்படுகிறது. மூளை, நரம்பு களில் பாதிப்பை ஏற்படுத்தும். தொப்புள் கொடி வழியாக கருவில் வளரும்  சிசுவை அடையும்; நியோமைசின் சல்பேட் - சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும். மூளை வளர்ச்சி குறைப்பாட்டை உண்டாக்கும்;  பினால் (கார்பாலிக் அமிலம் / எதிலின்கிளைகால் / பினோஜைதனால்) - செல்களை பாதிக்கும் விஷம்.

நன்றிகள்:தினகரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 8:10 pm

ஓ தினகரனில் வந்ததா! பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே நன்றி 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக