புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்பாவில் விடுகதைகள் Poll_c10குறட்பாவில் விடுகதைகள் Poll_m10குறட்பாவில் விடுகதைகள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
குறட்பாவில் விடுகதைகள் Poll_c10குறட்பாவில் விடுகதைகள் Poll_m10குறட்பாவில் விடுகதைகள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
குறட்பாவில் விடுகதைகள் Poll_c10குறட்பாவில் விடுகதைகள் Poll_m10குறட்பாவில் விடுகதைகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குறட்பாவில் விடுகதைகள் Poll_c10குறட்பாவில் விடுகதைகள் Poll_m10குறட்பாவில் விடுகதைகள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
குறட்பாவில் விடுகதைகள் Poll_c10குறட்பாவில் விடுகதைகள் Poll_m10குறட்பாவில் விடுகதைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்பாவில் விடுகதைகள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 30, 2013 4:25 pm

குறட்பாவில் விடுகதைகள்

தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம்.

விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

1. வெண்பாவின் ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய வேண்டும்.

2. விடைச்சொல் சிதைவோ புணர்ச்சியோ உறாது அதுவாகவே அமைய வேண்டும். புணர்ச்சி தவிர்க்க முடியாத போது புணரும் எழுத்தை அடைப்புக் குறிகள் மூலமோ வேறு விதத்திலோ காட்டுதல் நலம்.

3. விடைச்சொல் மறமொழி யாவதால் அது மற்ற சீர்களுடன் இலக்கணத்தில் பொருந்தி நின்றாலும் பொருளில் பொருந்தாது நிற்குமாதலால் அதை இனங்கண்டு கொள்வது எளிதாகுமாறு அமைக்க வேண்டும்.

4. விடைச்சொல்லைப் பலவிதமான மறைமொழிகளில் (encryption) கூறலாம். எவ்வித மறைமொழி உத்தியாயினும் விடை எளிதில் காண முடிவதாக இருக்கவேண்டும்.

5. மறைமொழியும் பொருளுடன் அமைந்தால் விடை காணுவது சுவையான சிக்கலாக இருக்கும். பொருளில்லாதோ வேற்று மொழிச் சொல்லாகவோ அமைந்தாலும் தனித்து நின்று கண்பட்டு விடை காண வைக்கும்.

6. சில மறைமொழி உத்திகள்:
6.1. அதிக பட்சம் இரண்டு எழுத்துகளை மறையாக்கலாம், ஒற்றுகள் தவிர்த்து.

6.2. மறையாகும் எழுத்து விடையின் எழுத்தைச் சேர்ந்த இனமாக--குறிலெனில் குறிலாக, நெடிலெனில் நெடிலாக--இருக்கவேண்டும். அவ்வாறு வரும் குறில்/நெடில் தகுந்த முந்தைய அல்லது பின்வரும் எழுத்தாக அமைந்தால் விடைகாண எளிதாக இருக்கும். தள்ளியுள்ள எழுத்துகளாகவும் அமையலாம்.

உதாரணமாக, ’பட்டு’ என்னும் விடைச்சொல்லை முன்பின் அடுத்துள்ள எழுத்துகள் மூலம் ’நட்டு, மட்டு, மிட்டு’ என்று அமைக்கலாம். தள்ளி வரும் எழுத்துகள் மூலம் ’கட்டு, முட்டு, மொட்டு’ என்று அமைக்கலாம்.

6.3. விடைச்சொல்லின் எழுத்துகள் இடம் மாறியோ, ஒலி மாறியோ வரலாம். சான்று: ’சிவா’ என்பது ’வாசி’ அல்லது ’விசா’ என வரலாம்.

6.4. இரண்டு எழுத்துகளை மறைக்கும் போது ஒன்றின் மறை அருகில் வருவதாகவும் மற்றது தள்ளி வருவதாகவும் அமைக்கலாம். சான்று: ’பெண்மணி’ என்பதைத் ’தண்பணி’ எனலாம்.

6.5. வேறுவித உத்திகளைக் கையாளுவோர் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 30, 2013 4:29 pm

மேலுள்ள விதிகளின் படி அமைக்கப்பட்ட குறட்பா விடுகதைகளை இரண்டிரண்டாக இந்த இழையில் அஞ்சலிடுகிறேன். அன்பர்கள் ஆர்வமுடன் பங்குகொண்டு விடையைக் கண்டுபிடித்து இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் இரண்டு உதாரண விடுகதைகள்:

மேனியெலாம் கண்ணெழிலாள் சிக்கியோர் சீரழிப்பாள்
வீன்மலை யென்று விடை. ... 1

விடை: மீன்வலை; மறைமொழி: வீன்மலை (எழுத்துகளின் ஒலி மாறி வந்தது).

பசுவினம் ஒன்பது தாண்டினால் வந்து
இசித்திடும் ஈமத்து நின்று. ... 2

விடை: ஆபத்து; மறைமொழி: ஈமத்து (ஆ-வெழுத்தின் அடுத்த நெடில் ஈ; ப-வுக்கு ம. ஆ என்றால் பசு)


*****

இனி நீங்கள் விடைகளைப் பதியலாம்.

பார்க்கும் இரத்தினம் வண்ணம் கருமையாம்
பேரது பெண்பணி யென்று. ... 3

உறுகண்*ஓர் விந்தை உளம்சேர் அழகி
குறையும் வளரும் நிலை. ... 4
[உறுகண்=நோய்]


*****


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 30, 2013 4:44 pm

ரமணி wrote:
பார்க்கும் இரத்தினம் வண்ணம் கருமையாம்
பேரது பெண்பணி யென்று. ... 3

உறுகண்*ஓர் விந்தை உளம்சேர் அழகி
குறையும் வளரும் நிலை. ... 4
[உறுகண்=நோய்]


* கண்மணி (கருவிழி)
* நிலவு

விடை சரியா எனத் தெரியவில்லை! ஆனால் தங்களின் விடுகதைகளுக்கு விடையளிக்க முயச்சிக்கிறேன் அண்ணா!



குறட்பாவில் விடுகதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 30, 2013 5:05 pm

வணக்கம் சிவா அவர்களே.

இரண்டும் சரியான விடைகள். உடனே பதிந்தது எனக்கு மகிழ்ச்சி.

விடுகதைகள் மிகவும் எளிமையாக உள்ளனவோ? வலைதளம் பார்த்துக் கற்பனை சேர்த்துப் புனைய ஆரம்பித்தேன். ஜாம்பவான்கள் பங்களிப்பில் இந்த இழையில் என் பணி அதிகமாவது எனக்கு மகிழ்சியே. குறள் வெண்பா எழுத வல்ல மற்ற அன்பர்களும் விடுகதை முயலலாம். இதற்காகத்தான் விதிகளை முதலில் கொடுத்தேன். நாம் எல்லோரும் சேர்ந்து நிறைய விடுகதைகள் சேர்ப்போம், கவி வடிவில்.

இன்னும் இரண்டு குறள் விடுகதைகள் (விடை தெரிந்தால் சிவா மற்றவர்களுக்காகக் கொஞ்சம் தாமதித்து இடலாம்):

மூன்றெழுத்து ஆடையில் மோகினியாய்த் தோன்றுவர்க்கு
ஈன்றெடுக்கும் பல்லுயிர் விட்டு. ... 5

அள்ளலாம் கொள்ளலாம் தள்ளலாம் விள்ளினாலும்
கிள்ளினாலும் கூடுவாள் யார்? ... 6


*****

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 30, 2013 5:32 pm

ஆஹா சரியான விடைதானா? மகிழ்ந்தேன்!
அடுத்த தங்களின் கேள்விகளுக்கும் முயற்சிக்கிறேன், தங்களின் ஆலோசனைப்படி சற்று தாமதமாக! அன்பு மலர் 



குறட்பாவில் விடுகதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 30, 2013 5:59 pm

அள்ளலாம் கொள்ளலாம் தள்ளலாம் விள்ளினாலும்
கிள்ளினாலும் கூடுவாள் யார்? ... 6

தண்ணீர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 30, 2013 6:29 pm

தண்ணீர் என்பதும் சரியே. குறளில் மறைவிடை நீர் (கடைசிச் சொல்).


ஜாஹீதாபானு wrote:அள்ளலாம் கொள்ளலாம் தள்ளலாம் விள்ளினாலும்
கிள்ளினாலும் கூடுவாள் யார்? ... 6

தண்ணீர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 30, 2013 6:32 pm

ஜாஹீதாபானு wrote:அள்ளலாம் கொள்ளலாம் தள்ளலாம் விள்ளினாலும்
கிள்ளினாலும் கூடுவாள் யார்? ... 6

தண்ணீர்
சரியான பதில் எனக் கூறியுள்ளார்கள் ரமணி அண்ணா! பாராட்டுக்கள் ஜாஹிதாபானு!



குறட்பாவில் விடுகதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 30, 2013 6:33 pm

பாடியது ராகம் பறந்தது தூக்கமே
நாடினால் கிட்டாப் பசு. ... 7

காயாகும் முன்னர் கனியான வானவன்
சேயாம் களனி யிது. ... 8

காவியுடை யில்லாத் தவம்செய் துறவியாம்
வாவியுள் பக்கி யென. ... 9

தான்மட்டும் ஒட்டிக்கொள் வான்பிற வெட்டுவான்
யான்தரிக்கக் கோலாவான் யார்? ... 10


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 6:45 pm

ரமணி wrote:பாடியது ராகம் பறந்தது தூக்கமே
நாடினால் கிட்டாப் பசு. ... 7

கொசு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக