புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
30 Posts - 81%
heezulia
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
1 Post - 3%
viyasan
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
207 Posts - 41%
heezulia
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
21 Posts - 4%
prajai
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_m10மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 10:54 am

தேனி: தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் அபூர்வ வகை சாம்பல் நிற அணில்கள் காணப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கர்நாடக மாநிலம் காவிரி வனஉயிரின சரணாலயத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வன உயிரின சரணாலயத்திலும் மட்டும் அபூர்வ வகை சாம்பல் நிற அணிகள் உள்ளதாக கருதப்பட்டது.
அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழனி மலைப் பகுதியிலும், சின்னாறு, அமராவதி மலைப்பகுதியிலும் இந்த வகை அணில்கள் கண்டறிப்பட்டன. தற்போது, தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் கண்டறியப்பட்டுள்ளன. தேனி மாவட்ட வனக்குழுவினர் இந்த பகுதியை ஆய்வு செய்து அணில்கள் உள்ளதை உறுதி செய்துள்ளனர். சிறிதளவு மட்டுமே சாம்பல் நிற அணில்கள் காணப்பட்டாலும், வனத்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர். காரணம் சாம்பல் நிற அணில்கள்
இருந்தால், அந்த வனம் ஆரோக்கியமான வனம், என கருதப்படுகிறது.

தேனி மாவட்ட வனக் குழுவினர் கூறியதாவது: மேகமலை வனப்பகுதியில், மஞ்சனூத்து சோதனை சாவடியை கடந்து இந்திரா நகரில் இருந்து வெள்ளிமலை செல்லும் வழியில், உடங்கலாறு என்ற இடத்தில் சாம்பல் நிற அணில்கள் உள்ளன. இந்த வகை அணில்கள் முதன் முறையாக இப்பகுதியில் கண்டறிப்
பட்டுள்ளன. பழுப்பு நிற அணில்களும் ஓரளவு காணப்படுகின்றன. மலபார் அணில்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த அணில்கள் வன உயிரின சட்டம் பகுதி 1ல் புலிகளுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டியவை. இவற்றை வேட்டையாடினால் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். எனவே இந்த அணில்களை பாதுகாப்பது குறித்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த அணில்கள் வாழ்வதற்கு மிகவும் அடர்ந்த பாதுகாப்பான வனப் பகுதிகள் தேவை. எனவே, வனப்பகுதியில் குற்றங்களை தடுக்கவும், வன வளத்தை பெருக்கவும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்றனர்.



நன்றி தினமலர்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 28, 2013 4:06 pm

Grizzled Giant Squirrel
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 6111122433_4747a39cb4_z



மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 28, 2013 4:09 pm

செண்பகத்தோப்பு சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்

செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடம் வரலாம். காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்)மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் 'பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்' மற்றும் வடமேற்குப் பகுதியில் 'மேகமலை காப்புக்காடுகள்' அமைந்துள்ளன.

இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora) புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும்.

இந்த சரணாலயம் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் முதலிய உயிரினங்களுக்கு இருப்பிடம். யானைகளும் இங்கே இருப்பதுண்டு. சில சமயங்களில் இடம்பெயர்ந்து வரும் யானைகள் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான 'இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்' இங்கே காணப்படுகிறது.

சரணாலயம் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டில் உள்ள பழங்கள் மற்றும் காட்டில் உள்ள பிற சிறிய இயற்கை உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்குக் கொடுத்து வந்த ஆண்டு குத்தகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமரங்கள் மற்றும் மற்ற வகை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அவ்விலங்குகளின் உணவு மூலங்களை அதிகரிக்கும், அதே போல் காடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும். இவ்வுயிரினங்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படுவதற்காக மண் பாதுகாப்பு மற்றும் மழைநீர் அறுவடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரிய மருத்துவகுணமுள்ள தாவரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.

மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது. விடுமுறை தினங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் இருந்து பல மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருவர். செண்பகத்தோப்பு அடிவாரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும், பல பழங்குடி சமூகங்கள் வழிவழியாக வாழ்ந்து வருகின்றனர்.



மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 4:39 pm

அம்மாடியோ மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 3838410834 



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 28, 2013 4:44 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மாடியோ மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 3838410834 
இதுபோன்ற பின்னூட்டங்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறது! மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 3838410834 



மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 28, 2013 5:21 pm

பேராண்மை படத்தில் வரும் காடு தானே மேகமலை தல. அருமையான அடர்ந்த காட்டுப்பகுதி.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 5:27 pm

அசுரன் wrote:பேராண்மை படத்தில் வரும் காடு தானே மேகமலை தல. அருமையான அடர்ந்த காட்டுப்பகுதி.
அதே தான் சின்ன பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து அப்படியே பழகி விட்டது ஐய்யா உங்களுக்கு புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 5:31 pm

எங்க ஊருதான் நான் வரும்போதுசொல்கிறேன் நீங்களும் வாங்களேன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 29, 2013 11:13 am

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மாடியோ மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 3838410834 
இதுபோன்ற பின்னூட்டங்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறது! மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 3838410834 
மன்னிக்கவும் அண்ணா.
எனது Note II-வில் தட்டச்சுவது கடினமாக இருக்கிறது
நேற்று 6:30 க்கு வேலை(?)முடிந்து சென்றபின் சிறிதளவே தட்டச்ச முடிந்தது.
தட்டச்சுக் குறி எங்கெங்கோ பதிகிறது (இது எனக்கு மட்டுமா இல்லை எல்லோருக்குமா?) அதனாலேயே தங்களின் பெரிய விளக்கமான பதிவுக்கு குறியீடுகளை பயன்படுத்த நேர்ந்தது .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 29, 2013 11:29 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மாடியோ மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 3838410834 
இதுபோன்ற பின்னூட்டங்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறது! மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 3838410834 
மன்னிக்கவும் அண்ணா.
எனது Note II-வில் தட்டச்சுவது கடினமாக இருக்கிறது
நேற்று 6:30 க்கு வேலை(?)முடிந்து சென்றபின் சிறிதளவே தட்டச்ச முடிந்தது.
தட்டச்சுக் குறி எங்கெங்கோ பதிகிறது (இது எனக்கு மட்டுமா இல்லை எல்லோருக்குமா?) அதனாலேயே தங்களின் பெரிய விளக்கமான பதிவுக்கு குறியீடுகளை பயன்படுத்த நேர்ந்தது .
அம்மாடியோமேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை 3838410834 




(சும்மா கிண்டலுக்கு தான் ) அய்யோ, நான் இல்லை 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக