புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
75 Posts - 55%
heezulia
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
70 Posts - 55%
heezulia
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரு ரத்தினங்கள்! Poll_c10இரு ரத்தினங்கள்! Poll_m10இரு ரத்தினங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு ரத்தினங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:57 am

வீரத்தின் விளைநிலம் ராஜஸ்தானம். சாகஸங்கள் புரிவதில் சமர்த்தர்கள் ராஜபுத்திரர்கள். தன்மானங்காக்கத் தன்னுயிரையே தரக்கூடிய ஒப்பற்ற வீரர்கள். மாவீரன் ராணா சாங்காவின் மகன் உதய சிம்மன், உதவாக்கரையாக விளங்கினான். கேளிக்கைப் பிரியனாக வாழ்ந்தான். ராஜ புத்திர குலத்துக்கே ஓர் இழுக்காக வந்தவன் உதயசிம்மன்.உதயசிம்மனின் ஆட்சியிலே மேவாரின் பல பகுதிகள் அக்பரின் ஆதிக்கத்துக்குள்ளாயின. "வீரமற்ற மன்னன் வீணன்' என்று மக்கள் அவனை வெறுத்தனர்.

ஒருசமயம், அக்பரின் முற்றுகையி லிருந்து சித்தூரைக் காக்க முடியாமல், தன் மனைவி, பிள்ளைகளுடன் பத்திரமான இடத் துக்குத் தப்பியோடி விட்டான் உதயசிம்மன். நாட்டைக் காக்கும் பொறுப்பை, இரண்டு சின்னஞ்சிறுவர்களிடம் ஒப்படைத்து விட்டான். அவ்விருவருக்கும் அப்போது வயது என்ன தெரியுமா? பதினாறும், பதினேழும்தான். அவர்களில் ஒருவன் பெயர் ஜெய்மல்; மற்றவன் பெயர் புட்டா என்பதாகும்.

ராஜபுத்திரர்களின் போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரிய சித்தூரைக் காக்கும் கடமை இந்த இரு சிறுவர்களுக்கும் கிடைத்தது. இத்தனை சின்னப் பையன்களிடம் ஒரு நகரைக் காக்கும் பொறுப்பை ஒப்புவிப்பார்களா...? என்று நீங்கள் கேட்கலாம். ராஜபுத்திரர்களின் புனிதமான தலைநகரைக் காக்கும் உரிமை, ராஜ குலத்தில் உதித்தவர்களுக்குத் தான் உண்டு.
மேவாரில் பதினாறு இனத்தவர்கள் மிக உயர்ந்த குடிப்பிறப்புடையோராக கருதுவர். அத்தகைய உயர் குடியில் வந்தவர்கள்தான் ஜெய்மல்லும், புட்டாவும்.

குடிமக்களைப் பேணிக் காக்காத, தாய் நாட்டின் பெருமையைக் காக்க அந்நியனோடு போராட சக்தியற்ற மன்னன், ஊரை விட்டு ஓடியதற்காக மக்கள் மகிழ்ச்சியே அடைந்தனர். "தாய் நாட்டை அந்நியனுக்கு அடிமையாக விடமாட்டோம். எப்படியும் எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாகிலும் அதைக் காப்போம்!' என்று சபதம் மேற்கொண்டனர் வீர ராஜபுத்திரர்கள்.

புட்டாவின் தாய், தன் மகனுக்குக் காவியுடை அணிவித்துப் போர்களத்துக்கு அனுப்பி வைத்தாள். துறவிகள் அணியும் காவியுடை அல்ல இது. ராஜ புத்திர வீரர்கள் உடுத்தும் ஆரஞ்சு வண்ண ஆடை இது. இந்த ஆடை அணிந்தால், ஒன்று வெற்றி அல்லது வீர மரணம். தம் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிய அந்தத் தாய், சித்தூரின் வீர ராஜபுத்திர மங்கையர்களை ஒன்று சேர்த்தாள்.
""மன்னன் நகரின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை நம்மிடம் விட்டுவிட்டு ஓடிவிட்டான்.

வீர ராஜபுத்திரர்கள் நகரைக் காக்க உறுதி பூண்டு போர்க்களம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு உதவுவது நமது கடமை; தலைநகர் மாற்றான் வசப்பட்டால், கவுரவமான முறையில் தீக்குளித்து உயிர் துறப்பதற்கு தீ மூட்டக் கூட நமக்கு நேரம் இருக்காது. அந்நியனின் அடிமைகளாகி விடுவோம்.""அந்த இழிநிலைக்கு இலக்காக விருப்பமில்லாதவர்கள், என்னுடன் போர்க்களத்துக்குக் கிளம்புங்கள். உயிரின் மீது ஆசை உள்ளோர் இங்கேயே இருக்கலாம்,'' என்றாள்.

ராஜபுத்திர பெண்கள் அத்தனை பேரும் கையில் ஆயுதமேந்தி, புட்டாவுடைய அன்னையின் ஆணையை ஏற்று, அவளைப் பின்தொடர்ந்தனர். அன்றையப் போரில் பல வீரர்களின் தாய்மாரும், மனைவிமாரும், தங்கள் வீரம் காட்டி, விண்ணுலகம் எய்தினர். மாதர்களின் வீரம் கண்ட கோழையும், வாள் எடுத்துக் கிளம்பினான் போர்களத்துக்கு. இதுவரையில், காணாத வகையில் சித்தூர் ரத்தினங்கள் போரிட்டன.

"ராஜபுத்திரர்கள் மரணத்தை விரும்புகிறவர்கள்' என்று அந்நியர்கள் வியந்து போற்றும் வகையில் இருந்தது அந்தப் போர்.
புட்டாவின் அன்னை கையில் வாளேந்தி விரோதியை வீழ்த்த முற்பட்டு வீழ்ந்தபின், புட்டாவின் வீரம் பன்மடங்காயிற்று. வாளைச் சுழற்றினான். பல தலைகள் உருண்டு வீழ்ந்தன. வெற்றிமுகம் காணும் போது விரோதிகள் அவனை வீழ்த்தி விட்டனர்.

புட்டாவின் இடத்தில் உடனே ஓடிவந்து நின்றான் ஜெய்மல். ராஜபுத்திர வீரர்கள் புதிய வேகம் கொண்டு போரிட்டனர். அன்றையப் போர் ஜெய்மல்லுக்கு வெற்றியாகவே முடிந்திருக்க வேண்டும். ஆனால், பாரதத்தின் விதி வேறு விதமாக இருக்கும்போது, வெற்றி எப்படிக் கிட்டும்? அக்பரின் பக்கமே, அதிர்ஷ்ட லட்சுமி இருந்தாள். அக்பரின் துப்பாக்கியிலிருந்து கிளம்பிய ஒரு குண்டு ஜெய்மல்லின் உயிரைக் குடித்துப் பசி அடங்கியது.

ஜெய்மல்லின் இடத்தை ஏற்றுப் போரை நடத்த வேறு யாரும் இல்லை. இரு கண்கள் போன்ற இரு ராஜபுத்திர ரத்தினங்களை இழந்த சித்தூர் வீரர்கள், நிலைகுலைந்து போயினர். இறந்த வீரர்களின் சிவப்பு உடைகள் நடை பாதையாக அமைய, அதன் மீது நடந்து சித்தூரினுள் புகுந்தார் அக்பர்.
ஆனால், அக்பரும் ஒரு மாவீரன் அல்லவா? அந்தப் போரிலே, ஜெய்மல்லும், புட்டாவும் காட்டிய வீரத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.

"பதினாறே வயதான இளைஞர்களான அவர்கள் எத்தகைய சாகசம் புரிந்தனர்? இத்தகைய இளைஞர்களைக் கொண்ட பாரதத்தை என்றைக்கு, நாம் வசப்படுத்திக் கொள்ளப் போகிறோம்?' என்று மலைக்கலானார்.
ஜெய்மல், புட்டா என்ற இளஞ்சிங்கங்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் படி செய்ய நினைத்தார். டில்லியில் உள்ள தன் அரண்மனை வாசலின் இரு பக்கங்களிலும் இரண்டு யானைகள் மீது அவ்விரு வீர வாலிபர்களும் அமர்ந்திருப்பது போன்ற சிலை வடித்து கவுரவித்தார் அக்பர்.

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக