புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
77 Posts - 36%
i6appar
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
2 Posts - 1%
prajai
பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_m10பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 20, 2013 1:52 am

பாம்பென்றால் படையும் நடுங்கும்" என்பது பழமொழி. பண்டைக் காலத்தில் படைகள் தங்குவதற்குக் கோயில்கள் பயன்பட்டன. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூல் ஒரு பாம்புப் படையே குடிகொண்டுள்ள செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. குழந்தைப்பேறு கிட்டாதவர்களும், நாகதோசம் உடையவர்களும் இங்குவந்து வழிபட்டு தமது குறைகள் நிறைவேறுதலின் பயனாகக் கல்லால் ஆன நாகங்களை இக்கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வருவதால் இக்கோயிலின் மதிற்சுவரெங்கும் நாகச்சிலைகள் காணப்படுகின்றன. நாகதோசத்தால் ஏற்படும் திருமணத் தடைகளை நிவர்த்தி செய்வதில் திருக்காளத்தியை (காளகஸ்தி) அடுத்து பேரையூர் நாகநாதர் திருக்கோயில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.

அமைவிடம்:

நகரத்தார்கள் வசிக்கும் 96 ஊர்களில் ஒன்றான பேரையூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து நமண சமுத்திரம் வழியாகப் பொன்னமராவதி செல்லும் பிரதான சாலையில் சுமார் பத்து கி.மீ. தொலைவில் நச்சாந்துப்பட்டி என்னும் ஊர் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருத்தலத்திற்கு நமணசமுத்திரத்திலிருந்து சிற்றுந்து (Mini Bus) இயக்கப்படுகிறது. இப்போது பேரையூர் எனப் பெயர்பெற்று விளங்கும் இத்திருத்தலம் பண்டைக் காலத்தில் வேறு பெயர்களாலும் வழங்கி வந்துள்ளது. நாகீசுவரம், திருப்பேரையூர், திருப்பேரை, பேரை என்ற பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

இறைவன் - இறைவி பெயர்க்காரணம்:

இங்குள்ள இறைவன் "நாகீசுவரமுடையார்' எனக் கல்வெட்டுக்களில் வழங்கப்பெறுகிறார். தமிழில் "நாகநாதர்' எனப்பெயர் கொண்டு விளங்குகிறார். ஆதிசேடன், நாககன்னிகள் உள்ளிட்ட நாகர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இறைவன் நாகநாதர் எனப் பெயர் பெறுகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க பேரையூர் சோழர், பாண்டியர், விசய நகர மன்னர்கள், பல்லவராயர், தொண்டைமான் போன்ற சிற்றரசர்கள் வரலாற்றுடனும் தொடர்புடையதை இங்குள்ள கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. இப்போது பெரியநாயகி, பிரகதாம்பாள் எனப் பெயர்பெற்று விளங்கும் அம்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளில் "திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்' என்றே குறிக்கப்பெறுகிறாள். சிவனுடன் அமர்ந்த அம்மையைப் "பெரியநாயகி' என்றும், புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இட்ட தெய்வமாக "பிரகதாம்பாள்' விளங்கியதாலும் அம்மைக்கு இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கவேண்டும்.

தலபுராண வரலாறு:

பேரையூர் நாகநாதர் திருக்கோயில் முன்பு ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தென்கோடியின் வழியாக நாகலோகத்திலிருந்து நாக கன்னிகள் நாகநாதரை வழிபடுவது வழக்கம். குமுதன் என்ற நாக அரசன் நாகநாதரை வழிபட விரும்பி, "சூலினி' என்ற நாகலோகப் பணிப்பெண்ணை அழைக்க, அப்பெண் தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று மறுத்துவிடுகிறாள். ஆதிசேடனின் உதவியுடன் நாகலோக அரசன் நாகநாதரை வழிபட்டு, "தான் மீண்டும் நாகலோகம் சென்று சிவபூசை செய்யும்போது ஈசன் அங்கு நடனம் ஆட, தேவர்கள் வந்து துந்துபியுடன் முழக்கம் செய்யவேண்டும்'' என்ற வரத்தை வேண்டினான். சிவனும் அவ்வரத்தை வழங்கியதாகப் பேரையூர் புராணம் பகர்கிறது. இவ்வாறு சிவன் நாகலோகத்தில் நடனம் புரிகையில் தேவர்கள் துந்துபியுடன் மங்கள வாத்தியங்களை முழங்கினர். இன்றளவும், இந்த இசை முழக்க ஒலி இங்குள்ள சுனையில், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தின் குறிப்பிட்ட நாளில் ஒலிப்பதாகக் கூறப்படுகிறது. நீர்மட்டம் ஒரு சூலக்குறியின் குறிப்பிட்ட அளவை எட்டும் பொழுது இவ்வொலி இசைப்பதாகக் கூறப்படுகிறது.

திருக்கோயில் அமைப்பு:

நாகநாதர் திருக்கோயில் கிழக்குநோக்கிய சன்னதியை உடையது. கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். கருவறையை அடுத்த முகமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நடராசர் சன்னதி உள்ளது. கருவறையின் தேவகோட்டங்களில் தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கருவறையின் வலது புறத்தில் விநாயகர் சன்னதியும், காட்சி கொடுத்த நாதர் சன்னதியும் அமைந்துள்ளன. இதன் முன்னே கோயில் தலத்தீர்த்தமான "பொன்முக' சுனை உள்ளது. நாகநாதர் கருவறையின் இடது புறத்தில் அம்மன் கருவறை உள்ளது. அம்மன் கருவறையை அடுத்த அர்த்த மண்டபத்தில் பள்ளியறையும், மகா மண்டபத்தில் நவக்கிரகமும் உள்ளது. இறைவன், இறைவி கருவறைகளுக்கு இடையே சண்முகநாதன் சன்னதி அமைந்துள்ளது. இதுபோன்ற அமைப்பு வேறெங்கும் காண இயலாது. இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் திருவுருவ அமைதியை நினைவுபடுத்துவதாக உள்ளது. நாகநாதர் திருக்கோயிலின் பரிவார தெய்வங்களாக விநாயகர், காசிவிசுவநாதர் விசாலாட்சி, தண்டாயுதபாணி, கெசலட்சுமி ஆகியோர் திகழ்கின்றனர்.

வழிபாடும், விழாவும்:

பேரையூர் அருள்மிகு நாகநாதர் திருக்கோயிலில் நாள்தோறும் நான்கு காலப் பூசைகள் நிகழ்கின்றன. இது தவிர பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் பிரதோச வழிபாடு சிறப்பிற்குயது. அன்று இறைவனுக்கு சிறப்பு அபிடேக ஆராதனை நிகழ்த்தப்பெறுகிறது. இந்தப் பிரதோச வழிபாட்டின்போது காளை வாகனத்தில் காட்சிதரும் காட்சி கொடுத்த நாதரை வழிபட்டால் காரியம் வெற்றிபெறும்; இடையூறுகள் நீங்கும்; செல்வச் செழிப்பு, ஞானம் போன்ற நற்பலன்கள் கிட்டும். பங்குனி மாதம் பத்துநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது. பத்தாம் நாளன்று திருத்தேரில் இறைவன் திருவீதியுலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தேர்த்திருவிழாவில் தேக்காட்டூர், பிலிவலம், இலன்பக்குடி, கோட்டூர், விராச்சிலை ஆகிய ஐந்து ஊர் நாட்டார்களும், நகரத்தார்களும் சேர்ந்து தேர் வடம் பிடிப்பது தனிச்சிறப்பாகும்.

நாகவழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும்:

நாகம் என்ற சொல்லுக்கு நல்ல பாம்பு, ஆகாயம், யானை, நாகலோகம், மலை, குரங்கு, புன்னை, நாவல் மரம் போன்ற பல பொருட்ளை அகராதிகள் தருகின்றன. எனினும் நாகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது பாம்பு மட்டுமே. இன்று மக்களிடையே பரவியுள்ள விலங்கு வழிபாட்டில் (Animal worship) நாக வழிபாடு சிறப்பிடம் பெற்றுள்ளது. நாக வழிபாடு இனக்குழுக்குறி வழிபாட்டினின்று தோன்றியது என்றும், இயற்கை வழிபாட்டினின்றும் தோன்றியது என்றும் அச்சத்தால் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன.

நாகர்களுடைய ஒழுக்கமே பிற்காலத்தில் நாகரீகம் (நாகர் + இகம்) என்று வழங்கப்பட்டது என்றும், அவர்களுடைய எழுத்து முறையே "நாகரி' என வழங்கப்பட்டது என்றும் கூறுவர். மருதமர நிழலிலுள்ள பாம்புக்குப் பலி கொடுத்தமையைப் பெரும்பாணாற்றுப்படை (232-33) குறிப்பிடுகிறது. மரத்தை வழிபட்ட மக்கள் அதன் அடியில் உறையும் பாம்பையும் வழிபட்டிருக்கவேண்டும்.

திராவிட மக்களிடம் சிறப்பிடம் பெற்றிருந்த நாக வழிபாடு ஆரியர்களின் வருகைக்குப் பின் அனைத்து மதங்களுடனும் தொடர்புபடுத்தப்படுவதைப் பாம்பாட்டிச் சித்தர் பாடல் வழி அறியமுடிகிறது. தத்துவ நிலையிலும் குண்டலினி சக்தியை சுருண்ட பாம்பைப் போல் உள்ளதாக விளக்குவர். நாக வழிபாடு தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா, பீகார், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஒசா போன்ற பிறமாநிலங்களிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் புனிதமாகக்கருதி வழிபடும் பாம்பைக் கிறித்தவர்கள் வெறுக்கிறார்கள். இறைவனிடமிருந்து சாபம் பெற்ற முதல் உயிர் பாம்பு என்று விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளில் பாம்பு வந்தால் தீய சகுனமாகப் பழம்பாடல் என்று குறிப்பிடுகிறது. வீடுகளில் பாம்பு வராமல் இருக்கத் திருவாடாணை அருகில் உள்ள திருவெற்றியூர் பாகம்பியாள் திருக்கோவிலுக்குச் சென்று வருவது இன்றும் வழக்கமாக உள்ளது.

நாகதோசம் - வழிபாட்டு நெறிமுறைகள்:

நாகத்தின் (ராகு) பார்வையால் மனிதர்களுக்கு ஏற்படும் தோசத்தை நாகதோசம் என்பர். நாகத்தின் பார்வையால் திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை போன்ற தடைகள் ஏற்படுகின்றன. இதனால் நாகதோசம் உடையவர்கள் சோதிடர்களின் அறிவுரைப்படி நாகநாதர் திருக்கோயிலில் நாகதோச நிவர்த்தி அடைய சிறப்புப் பூசைகள் செய்கின்றனர். நாகதோசம் உடையவர்கள் நாகநாதர் திருக்கோயில் முன்புள்ள திருக்குளத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குச் சென்று ராகுகாலத்தில் சிறப்புப் பூசைகள் நிகழ்த்த வேண்டும். பக்தர்கள் காணிக்கையாகக் கொண்டு வரும் நாகம், உளுந்து, எள் முதலிய பொருட்களைக் கொண்டு கருவறையின் முன் உள்ள மகாமண்டபத்தில் சிறப்புக் கிரியைகள் நடைபெறுகிறது. பிறகு காட்சி கொடுத்த நாதருக்கும், விநாயகருக்கும் இடையே உள்ள நாகலிங்கத்திற்கு, சிறப்பு அபிடேக ஆராதனை நிகழ்த்தப்பெறுகிறது. பக்தர்களின் வசதிக்கேற்ப (கல், வெள்ளி, தங்கம்) ஐந்து தலையுடன் கூடிய நாகத்தைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவ்வாறு காணிக்கை செலுத்திய நாகங்கள் இக்கோயில் முழுவதும் காணக்கிடக்கின்றன.



பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 12:26 pm

நல்ல பதிவு ..

வேறு ஒரு திரியில் புகைப்படங்கள் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 20, 2013 12:33 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு ..

வேறு ஒரு திரியில் புகைப்படங்கள் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது
மிகச் சக்திவாய்ந்த கோவில் தல!

ராமச்சந்திர தொண்டைமான் (1834-1886) கட்டிய கோவில்.

ஆனால் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. மூலஸ்தானத்தைத் தவிர சுற்றுபிரகாரங்களில் உள்ள சிலைகள் கவனிக்கப்படாமல் பழுதடைந்து உள்ளது.

அங்குள்ள அய்யர்களின் ஒரே நோக்கம் பணம் பணம் பணம் என்பதுதான்!

நாம் வாங்கிய மாலைகள், பழங்கள், பூக்கள் என அனைத்தும் மறுசுழற்சி முறையில் விற்பனைக்குச் செல்கிறது.



பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 12:38 pm

சிவா wrote:
பாலாஜி wrote:நல்ல பதிவு ..

வேறு ஒரு திரியில் புகைப்படங்கள் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது
மிகச் சக்திவாய்ந்த கோவில் தல!

ராமச்சந்திர தொண்டைமான் (1834-1886) கட்டிய கோவில்.

ஆனால் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. மூலஸ்தானத்தைத் தவிர சுற்றுபிரகாரங்களில் உள்ள சிலைகள் கவனிக்கப்படாமல் பழுதடைந்து உள்ளது.

அங்குள்ள அய்யர்களின் ஒரே நோக்கம் பணம் பணம் பணம் என்பதுதான்!

நாம் வாங்கிய மாலைகள், பழங்கள், பூக்கள் என அனைத்தும் மறுசுழற்சி முறையில் விற்பனைக்குச் செல்கிறது.
அநேக கோவில்களின் நிலைமை இதுதான் தல ...

அதுமட்டும் இல்லை , வெளியே உள்ளவர்கள் சாமிக்கு இரண்டு மாலை போடனும், துண்டு வைக்கணும் என்று சொல்லி ஏமாற்றுவர்கள் .

கோவில் மிக அருகில் உள்ள கடைகளில்தான் வாங்க வேண்டும் ...ஆனால் மறுசுழற்சி முறையில் விற்பனை எங்கும் உள்ளது தல .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 3:28 pm

சிவா wrote:
மிகச் சக்திவாய்ந்த கோவில் தல!

ராமச்சந்திர தொண்டைமான் (1834-1886) கட்டிய கோவில்.

ஆனால் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. மூலஸ்தானத்தைத் தவிர சுற்றுபிரகாரங்களில் உள்ள சிலைகள் கவனிக்கப்படாமல் பழுதடைந்து உள்ளது.

அங்குள்ள அய்யர்களின் ஒரே நோக்கம் பணம் பணம் பணம் என்பதுதான்!

நாம் வாங்கிய மாலைகள், பழங்கள், பூக்கள் என அனைத்தும் மறுசுழற்சி முறையில் விற்பனைக்குச் செல்கிறது.
ரொம்ப அநியாயமாய் இருக்கே! நாம் வாங்கிய மலைகளை ஸ்வாமிக்கு சார்த்த மாட்டாளா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 3:51 pm

krishnaamma wrote:
சிவா wrote:
மிகச் சக்திவாய்ந்த கோவில் தல!

ராமச்சந்திர தொண்டைமான் (1834-1886) கட்டிய கோவில்.

ஆனால் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. மூலஸ்தானத்தைத் தவிர சுற்றுபிரகாரங்களில் உள்ள சிலைகள் கவனிக்கப்படாமல் பழுதடைந்து உள்ளது.

அங்குள்ள அய்யர்களின் ஒரே நோக்கம் பணம் பணம் பணம் என்பதுதான்!

நாம் வாங்கிய மாலைகள், பழங்கள், பூக்கள் என அனைத்தும் மறுசுழற்சி முறையில் விற்பனைக்குச் செல்கிறது.
ரொம்ப அநியாயமாய் இருக்கே! நாம் வாங்கிய மலைகளை ஸ்வாமிக்கு சார்த்த மாட்டாளா? சோகம்
கவலை வேண்டம் சார்த்த மாட்டாதவர்களை சாத்திவிடுவோம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 5:11 pm

நல்ல பகிர்வு


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக