புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
89 Posts - 38%
heezulia
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
manikavi
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
340 Posts - 48%
heezulia
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
24 Posts - 3%
prajai
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
3 Posts - 0%
manikavi
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இராம காவியம் - Page 9 Poll_c10இராம காவியம் - Page 9 Poll_m10இராம காவியம் - Page 9 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்


   
   

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 7:02 am


கும்பகர்ணன்


கும்பகர்ணன் துயிலுகின்ற மாளிகைக்கு அநுமார் சென்றார். அவனுடைய நாசியிலிருந்து வரும் யுகாந்த காலத்து மாருதம் போன்ற மூச்சுக்காற்றும் இவரை ஈர்த்தது. நாசிவரை சென்று பெருமுயற்சி செய்து, காற்றிலிருந்து விலகிக் கொண்டார். அந்த மாளிகையிலுள்ள மேiஜகள், நாற்காலிகள், அண்டாக்கள், குண்டாக்கள் எல்லாம் அவன் மூச்சுக் காற்றினால் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தன. அவனுடைய மிகப் பெரிய உடம்பையும் வலிமையையும் பார்த்து, இவன் இராவணனோ என்ற ஐயுற்றார். பத்துத் தலைகள் இல்லாமையினால் இவன் இராவணன் இல்லன் எனத் தெளிந்தார். இவன் எழுந்து போருக்கு வந்தால் கதி என்னாகும்? நமது வாநர சேனைகளைப் பொரிக்கடலை உண்பது போல இவன் உண்பான். இவன் இராம சரத்தால் மாண்டொழிவான் என்ற பலப்பல சிந்தித்தார்.

அங்கிருந்து வேறு பக்கமாகச் சென்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 7:02 am

விபீஷணர்

பயம் இல்லாதவன் என்று பொருள். இது சிவபெருமானுடைய ஆயிரம் நாமங்களில் ஒன்று. ஓம் விபீஷணாய நம, சிவபெருமான் ஒருவர்தாம், அச்சம் இல்லாதவர். நமக்கெல்லாம் இயம் பயம் உண்டு. சிவபெருமான் இயமனை உதைத்த காலகாலன் ஆவார். நாமெல்லாம் நடுங்குகிற நஞ்சை அவர் உண்டார். நமக்கு அச்சத்தைத் தருகின்ற மயானத்தில் அவர் இருக்கின்றார். நாம் அச்சப்படுகின்ற அரவுகளை அணிகலனாகக் கொண்டவர். நாம் பயப்படுகின்ற பேய்களுடன் இருந்து ஆடுபவர். நம்மையெல்லாம் சுடுகின்ற நெருப்பை அவர் கையில் ஏந்தியவர். ஆதலால், சிவமூர்த்தி - விபீஷணா என்று பேர் பெற்றார்.

விச்சிரவசு என்ற முனிவர் தம் மகனாகிய இவனுக்கு விபீஷணன் என்று சிவ நாமத்தைச் சூட்டினார். இவர் நீதியில் நின்றவர், பொறிபுலன்களை வென்றவர், இவருடைய தவப் புதல்வி திரிசடை தேவிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றி வருபவள். அந்த விபூஷணர் வீட்டில் சென்று தேடினார். மற்ற வீடுகளில் மதுக்குடங்களைக் கண்டார். இங்கே பூiஜக்குரிய பன்னீர்ப் பாட்டில்களையும், பால், தேன் பஞ்சாமிர்தங்களையும் கண்டார். விபீஷணரது முகத்தில் கருணை குடிகொண்டிருப்பதைக் கண்டார். இவர் நல்லவர் என்று கருதினார். விபீஷணரது தோற்றம் தரும தேவதை கருநிறத்தோடு ஒளித்து வாழ்வது போல் இருந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 7:03 am

இந்திரசித்து

அநுமார் புகை நுழையாத சிறிய இடங்களிலும் நுழைந்து தேவியைத் தேடினார். பலப்பல இளம் பெண்கள் ஆடுவதும் பாடுவதுமாக அங்கு இருந்தனர். பலர் படுத்து உறங்கினார்கள். அவர்களையெல்லாம் பார்த்து ஒரு மாளிகைக்குள் நுழைந்தார். அங்கே ஆறுமுக கடவுள் ஒரு முகத்துடன் உறங்குவதுபோல் உறங்கிக் கொண்டிருந்த இந்திரசித்துவைக் கண்டார். அவன் முகத்தில் வீரமும், தோள்களில் கம்பீரமும் நிகழ்ந்தன. இவன் மிகச் சிறந்த வீரன். இவனுடன் இராம லட்சுமணர்கள் பலநாள் போர் செய்ய வேண்டிவரும் என்று கருதினார்.

அட்சகுமாரன், அதிகாயன், மகரதக் கண்ணன் முதலிய பலவீரர்களின் மாளிகையைக் கண்டு தேடிச் சென்றார்.

நடு அகழியையும் மதிலையும் கடந்து இராவணனுடைய பொன்மாளிகையை அடைந்தார்.
அதனருகில் வித்தியாதர மாதர் வீடுகளிலும் அரக்க மாதர் வீடுகளிலும், சித்த மாதர் வீடுகளிலும் தேடிவ மயன் மகளாகிய வண்டோதரியின் இல்லத்தையடைந்தார். அவள் அழகிய மஞ்சத்தில் கவலையின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். இவள்தான் சீதையே என ஐயங் கொண்டார் அநுமார். இராமபிரான் சொன்ன அடையாளங்களில் பல அவளிடம் இருந்தன. அவள் ஏதோ வாய் பிதற்றுவதைக் கேட்டார் * வடவாக்கினி போன்ற கற்புடைய எம்பிராட்டி இவள் அல்லன். தேவி இங்கே இருக்கமாட்டாள். இவள் இராவணன் மனைவியே என்று சந்தேகம் தெளிந்தார்.

தனிமையில் நின்று சிந்திக்கின்றார். "இறைவனே * ஏழு நூறு யோசனை பரப்புள்ள இலங்கை முழுவதும் அணுவணுவாகத் தேடினேன். ஏம்பிராட்டியைக் கண்டேனில்லை. கொடுந் தொழிலைச் செய்யும் இராவணன் எம்பிராட்டியைக் கொன்று விட்டானோ? இரக்கமில்லாத அரக்கன் தேவியைத் தின்று விட்டானோ? வேறு உலகத்தில் சிறை வைத்திருக்கிறானோ? ஒன்றும் எனக்குப் புரியவில்லை. நான்போய் எம்பெருமானுக்கு என்ன சொல்லுவேன்? நான் எப்படியும் சீதையைப் பார்ப்பேன் என்றெண்ணிக் கணையாழியை என்பால் கொடுத்தார். உலக மாதாவை நான் கண்டு வருவேன் என்ற காகுத்தன் நம்பியிருக்கின்றார். தேவியைக் கொண்டு வருவேன் என்று வாநர வேந்தனாகிய சுக்ரீவன் நம்யிருக்கின்றான். சீதையைக் காணவில்லையென்று ரகுவீரனிடம் கூறுவது முறையன்று. இராவணாதி அரக்கர்களைக் கொன்று அவர்களோடு நானும் மாண்டு ஓழிவேன்.

தேவியை எப்படிக் காண்பேன்? வலிமை மிகுந்த இராவணனைப் பிடித்து என் கரதலத்தால் அடித்து அவன் எலும்பை ஒடித்து தேவியை எங்கே ஒளித்து வைத்தாய்? காட்டுதி, எங்கே வைத்தாய் காட்டுதி? என்று அவன் மூலமாகவே அறிந்து கொள்ளட்டுமா? இந்த அழகிய நகரம் எரிய தீ வைத்து கொளுத்தட்டுமா? இலங்கையில் சீதை இருக்கின்றாள். நான் இங்கிருந்தே பார்க்கின்றேன் என்று சம்பாதி கூறினாரே. அவர் உரையும் பொய்யாகிவிட்டதே * இந்த இலங்கையை எடுத்துக் கடலிலே கரைந்து விடட்டுமா? இராவணனைக் கொன்று யானும் என் வாழ்நாளை முடித்துக் கொள்வேன் என்று எண்ணி மேல் திசையைப் பார்த்தார். அங்கு ஒரு சிறிய விளக்குடன் கூடிய அழகிய அசோகவனத்தைக் கண்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 7:03 am

அசோகவனம்

இங்கே எம்பிராட்டி ஒருகணமேதும் தூங்காமலும் கண்கள் இமைக்காமலும் துயரக்கடலில் மூழ்கி உள்ளம் வெந்து நொந்து இருந்தாள். தூக்கம் என்பது யாரையும் வாட்டி வதைக்கும்.

ஒரு நண்பன் ஓய்வு பெறக் கருதி தன் ஆருயிர்த் தோழனின் செல்வ மாளிகைக்குச் சென்றான். அவன் இவனை அன்போடு வரவேற்று நல்லுணவு நல்கி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு பெறுமாறு ஏற்பாடு செய்தான். அத் தனிமாளிகையில் உயர்ந்த பஞ்சனை, நறுமணம் வீசும் வத்திகள், அழகிய படங்கள், நட்சத்திரங்களைப் போன்ற சிறிய விளக்குகள், செய்தித்தாள்கள், சிற்றுண்டிகள், இனிய நூல்கள் எல்லாம் இருந்தன. வந்த நண்பன் சிற்றுண்டிகளை உண்டு செய்தித்தாள்களைப் படித்து அயர்ச்சி நீங்க, உயர்ச்சி பெற்ற படுக்கையில் படுக்க முயன்றான். அந்த வீட்டின் தலைவனான நண்பர் சன்னல் புறம் வந்து நண்பரே * சுகமாகத் தூங்குகள், உங்களுக்கு இங்கு ஒரு குறையும் இல்லை. தாய்ப்பாலைத் தவிர, மற்ற எல்லாம் இங்கு இருக்கின்றன. நான் அயலூர்போய் விடியற்காலை வந்துடுவேன். இது உங்கள் சொந்த இல்லம். இங்கு எந்த விதமான சத்ததும் வராது. அமைதி நிலவிய அழகிய அறை, ஒரு விஷயம், ஆறடி நீளம் ஒரு பெரிய கருநாகம் இந்தச் சன்னல் வழியாக வந்து அந்தச் சன்னல் வழியாகப் போகும். அது எந்த நேரத்தில் வரும் என்று சொல்ல இயலாது. நேற்று இங்குப் படுத்திருந்த மூன்று பேரை கடித்துக் கொன்றுவிட்டது. ஆதலால், தாங்கள் எச்சரிக்கையாகச் சுகமாகத் தூங்குகள். என்று கூறிவிட்டுச் சென்றார். வந்த நண்பனுக்கு உறக்கம் வருமா? எந்த நேரத்தில் கருநாகம் வருமோ எனற ஏக்கந்தானே வரும்? தூக்கம் வராது.

இராவணனாகிய கருநாகம் எந்த நேரத்தில் வருமோ? இது அவனுடைய இடம். எந்த நேரத்திலும் வரக்கூடும். அவனைத்தடுப்பார் இல்லை என்று எண்ணுகின்ற எம்பிராட்டிக்கு உறக்கம் வராதுதானே *

பிராட்டி தனக்குள் சிந்திக்கின்றாள். இந்தக் காவல் நிறைந்த இடத்தை விட்டு நான் வெளியேறுவது எளிதன்று. என்னை இந்தக் கொடிய அரக்கன் சிறை செய்திருப்பது ஆதித்தன் குலத்துக்கல்லவா இழுக்கு? வேதங்களின் நாயகனாகிய எம்பெருமான் வருவார், காட்சி தருவார் என்று எண்ணி நான்கு திசையும் நோக்குவாள். பவளத்தால் செய்தது போன்ற இராமருடைய கரங்களையும், கால்களையும் கொண்டு நீலமேகம் போல் விளங்கும் கருணையுருவை எண்ணுந்தோறும் நீண்ட கண்களில் இருந்து வழியும் கண்ணீரினால் தான் உடுத்தியிருந்த மெல்லிய புடைவை நனைந்துவிடும். புடைவை நனைந்தால் மாற்றிக் கட்டிக்கொள்ள வேறு புடைவை இல்லை. உடம்பிலுள்ள ஜாடராக்கினி வெப்பத்தால் நனைந்த புடைவை உலருகிறது. மீண்டும் நனைகிறது. மீண்டும் உலருகிறது. இப்படி நனைவதும் உலருவதுமாக இருந்தது. மெல்லிய புடைவையை மீண்டும் மீண்டும் உடுப்பதே அன்றி வேற ஒன்றையும் அறியாள். உடுத்தியிருக்கிற புடைவையை மீண்டும் மீண்டும் உடுப்பதற்குக் காரணம் என்ன? உணவு இல்லாமையினால் தேவியின் உடம்பு விநாடிக்கு விநாடி இளைகின்றது. அதனால், புடைவை அவிழ்ந்து விடுகிறது. அவிழ்ந்த புடைவையை மீண்டும் மீண்டும் உடுக்கின்றாள். தேவி நீராடுவதையும் துறந்து உணவையும் மறந்து., துன்பக் கடலில் வீழ்ந்து தவிக்கின்றாள். மன்மதன் அமிழ்தத்தில் வரைந்த ஓவியம் கற்பூரப் புகைபட்டு மங்கியிருப்பதுபோல் இருந்தாள்.

தமையனாரைத் தேடிச் சென்ற இலட்சுமணர் தம் தமையனாரைச் சந்திக்கவில்லையோ? இந்த இலங்கை கடலின் நடுவில் இருக்கின்றது என்ற என் கணவரும், மைத்துனரும் அறியவில்லை போலும். என்னை இந்தக் கொடிய அரக்கன் இங்குச் சிறை வைத்த தன்மை தெரியாமல் இருக்கின்றார்களோ? என்னை இராவணன் கவர்ந்த வந்ததைப் பறவை வேந்தரகிய ஜடாயு பகவான் ஒருவரே பார்த்தார். அவரை அரக்கன் சிவன் தந்த வாளல் சிறகுகளை வெட்டி விட்டான். அவர் என்னடைய நிலையை மைந்தர்களுக்குச் சொல்லாமல் இறந்து விட்டாரோ? அவர் சொல்லவில்லையானால் என் நிலைமையை யார் சொல்ல வல்லார்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:08 am

வள்ளல் வழங்கிய கணையாழி

அசோக வனத்திலிருந்தே அன்னை சீதா பிராட்டிக்குப் பழைய நினைவுகள் தொடர்ந்து வந்தன. மாரீசன் சீதா லட்சுமணா என்று புலம்பிய பொய்ம்மொழியை மெய்ம்மொழியாக எண்ணி, இலட்சுமணா அண்ணனுக்கு ஆபத்து நீ போய் துணை செய் என்று அவரை மனம் நோக வைத்தேன். நான் வைத கொடுஞ்சொற்களை இலட்சமணர் தமையனாருடன் கூற, என் அருமைத் தம்பியை வைத இந்தக் கொடியவள் என்று என்னைத் துறந்து விட்டாரோ? என்னை மறந்து விட்டாரோ? முற்பிறப்பில் ஒற்றுமையாக வாழ்ந்த தம்பதிகளை நான் பிரித்து வைக்க அந்த வினை இப்பொழுது வந்து மூண்டதோ? இப்படிப் புண்ணில் எரி நுழைந்தது போல் புழுங்கி வேதனைப்படுகின்றாள்.

மெல்லிய கீரைகளை நெருப்பில் வாட்டிப் பக்குவமாக என் கணவனாருக்கு வேளை தவறாமல் உணவு தருவேனே. நான் இல்லாதபோது அப்பரம தயாள மூர்த்திக்கு யார் தரப் போகிறார்கள்? அவரைத் தேடி விருந்தினர்கள் வந்தபோது, அவர் என்ன துன்பத்தை அடைவாரோ? விருந்தினரை உபசரிக்க முடியவில்லையே என்று வேதனைப்படுவாரோ என்றெல்லாம் எண்ணினாள். தான் இருந்த இடத்தில் செல்லரிக்கவும் எழாமல் துன்பக் கடலில் மூழ்கியிருந்தாள்.

கொடிய அரக்கர்கள் எல்லா உயிர்களையும் புடைத்துத் தின்கின்ற பாவிகள். இத்தனைக் காலம் சீதையை வைத்திருக்க மாட்டார்கள். கொன்று தின்றிருப்பார்கள் என்று எண்ணிச் சட்டி சுட்டது கை விட்டது என்று என்னை விட்டுவிட்டார்களோ? அல்லது தாயும் தம்பியரும் வந்து அழைக்கக் கானகத்தில் வாழும் காலமும் முடிகின்ற தருணம் ஆயிற்றே என்று அயோத்திக்குத் திரும்பிவிட்டார்களோ! ஆனால் தாங்கள் மேற்கொண்ட வனவாசம் பூர்த்தியாகாமல் நகருக்குப் போக மாட்டார்கள். என்ன நிகழ்ந்ததோ? யாதும் அறிகிலேன். என் கணவர் அருந்தவ சீலர், பெருங்குணக் குன்று. என்னுடைய துன்பத்துக்கு முடிவு எப்போது வருமோ? தவஞ்செய்ய வந்த கணவனாருக்குத் தொண்டு செய்ய வந்த நான், மானைப் பிடித்துக்கொடு என்று கேட்டதும் பிழையல்லவா? என் வினையை நான்தானே அநுபவிக்க வேண்டும்?

என் நாயகன் விருப்பும் வெறுப்பும் அற்றவர். தந்தையார் இந்த அரசு உனக்கு உரியது நாளை முடிசூட்டுவிழா என்று சொன்னபோதும், மாற்றாந்தாய் நீ சடைமுடியோடும் மரவுரியோடும் கானகம் போ என்று கட்டளையிட்டபோதும் இன்பமும் துன்பமும் இன்றிச் சித்திரத்தில் எழுதிய செந்தாமரை போல் இருந்த தன்மையை உடையவர். கரன் முதலிய வரபலம் உடைய பதினாலாயிரம் படைகளை மூன்று நாழிகைகளில் கொன்ற வில் திறத்தை எண்ணி வெதும்புவாள்.

கங்கா நதியில் ஓடம் விடுகின்றவனும் கல்வியறிவும் ஆசாரம் இல்லாதவனும் ஊனும் மீனும் உண்பவனுமாகிய ஏழை வேடனாகிய குகனை மார்புறத் தழுவி, நீ எனக்குத் தம்பி என்று சொன்ன கருணைத் திறத்தை எண்ணுவாள்.

திருமண சமயத்தில் இராமச்சந்திர மூர்த்தி தமது புனிதமான கரங்களால் தன் கரங்களைப் பற்றியதையும் அவருடைய மேலான கரங்களால் என் காலைப் பற்றி அம்மி மீது வைத்து வேதமந்திரங்களைச் சொல்லியதையும் நினைத்து நெஞ்சம் நெகிழ்கின்றாள்.

கணவனார் கானகத்துக்குப் புறப்படும்போது தனக்கே உரிய ஆடைகள் அணிகலகன்கள் பசுக்கள் முதலிய விலையுயர்ந்த பொருள்களை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்கின்றபொழுது, ஒரு வேதியனுக்கு ஆசை தணியாமல் மேலும் தரமாட்டாரா என்று ஆசையாய் விழுங்கப்பட்ட தன்மையைப் பார்த்துச் சிரித்த செய்கையை எண்ணுகின்றாள்.

சித்திரக்கூட மலையில் தங்கியிருந்த பொழுது, காலையுணவு தேடி இலட்சுமணர் வில்லையேந்திக் கொண்டு சென்றார். சீதையின் மடியில் பெருமான் தலைவைத்துச் சிறிது உறங்கி விட்டார். அப்போது இந்திரன் மகனாகிய ஜயந்தன் காகமாக வடிவெடுத்துப் பிராட்டியாரின் திருமார்பபைக் கொத்தினான். இராமர் வெகுண்டு அவர் கையில் ஆயுதம் இல்லாமையினால் படுத்திருந்த தர்ப்பைப் புல்லை உருவி மந்திரத்தைச் சொல்லி ஏவினார். அது இராம பாணமாகி அவனை விரட்டியது. அவன் எட்டுக் கோணங்களில் சென்றும், அவனுக்கு உய்வு கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ஙஇராகவா சரணம்ங என்று எம்பெருமான் திருவடியில் வீழ்ந்தான். பகவான் ஙமுடனே, பரதார கமனம் செய்யலாமா? உன் தந்தையாகிய இந்திரன் அகலிகையை விரும்பினான். அவன் மகனாகிய நீ பிறர் மனைவியைப் பேணுகின்ற பெரும் பாவத்தைச் செய்தனை. அடைக்கலம் என்று அடியில் வீழ்ந்த அற்பப் புறாவுக்கு உடல் தசையை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் பேரன் நான். அடைக்கலம் புகுந்தோரை ஆட்கொள்வது என் குலத்துக்கே உரிய பண்பு. நான் உன்னை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடுக்கின்றேன். ஆனால், இராமபாணம் வெறுமனே திரும்பாது. அதற்கு நீ ஒரு கண்ணைக் கொடுத்துவிடு என்று கூறிக் காககத்தின் ஒரு கண்ணைக் கவர்ந்தார். அன்று முதல் காகங்களுக்கெல்லாம் ஒரு கண்ணாக ஆயிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:08 am

இவ்வாறு, காதல் மனைவிக்குத் தீங்கு செய்த காகாசூரனுக்கும் கருணை பாலித்த இராமருடைய கருணா விலாசத்தை எண்ணியெண்ணிக் கண்ணீர் வடித்தாள்.

இவ்வாறு, புலம்புகின்ற சீதா தேவிக்கு விபீஷணருடைய புதல்வியாகிய நற்குண நங்கை திரிசடை, சீதைக்கு ஆறுதல் கூறி அன்புடைத் தோழியாக இருந்தாள். அவள் தாயினும் சிறந்த தயாவுடையவள். சீதாதேவி திரிசடையை நோக்கிக் கூறுகின்றாள்.

அன்புள்ள திரிசடையே! பெண்களுக்கு இடத்தோள், இடக்கண், இடப் புருவம் துடித்தால் நல்லது, வலப்பக்கம் துடிக்கக்கூடாது என்பர். ரகுநாயகன் விசுவாமித்திரருடன் மிதிலாபுரிக்கு வந்தபோது, எனக்கு இடப்பக்கம் துடித்தது. அம்மா, நான் கணவருடன் கானகம் வந்தபோது வலப்பக்கம் துடித்தது. இப்பொழுது இடந்துடிக்கின்றது. எனக்கு நன்மை வருமோ?

திரிசடை, அம்மா இப்பொழுது நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன. ஒரு பொன்வண்டு வந்து என் காதில் ஊதுகின்றது. இது இராமபிரானிடமிருந்து தூது வரும் என்பதை உணர்த்துகின்றது. அம்மா! என் பெரிய தந்தையாகிய இராவணன் தலையில் எண்ணெய் தடவிக் கொண்டு சிவப்பு ஆடையை உடுத்திக் கொண்டு பேய்களும், கழுதைகளும் பூட்டிய தேரில் ஏறிக்கொண்டு தென்திசை போகக் கனாக்கண்டேன். அசோகவனம் அழிவதாகவும், இலங்கை மாநகரம் பற்றி எரிவதாகவும் கனாக் கண்டேன். இராவணனுடைய அரண்மனையிலுள்ள பூரண கும்பங்கள் பொங்கிவரக் கனவு கண்டேன். வண்டோதரி முதலிய தாய்மார்களின் கழுத்திலிருந்து திருமாங்கலியங்கள் தானே அறுந்து விழுவதாகக் கனவு கண்டேன். இரண்டு சிறந்த சிங்கங்கள் வந்து இலங்கையை அழித்துவிட்டுச் செல்வதாகவும், இங்கிருந்த மயில் அச்சிங்களுடன் போவதாகவும் கனவு கண்டேன்.

சீதை இதனைக் கேட்டு மகிழ்ந்து, நல்ல கனவு கண்டனை, உன்னைப் பாதியில் எழுப்பி விட்டேனே மீண்டும் உறங்கி மற்ற கனவைக் காண்பாயாக என்று கூறினாள்.

அரக்கியர்- இராவணனுடைய கட்டளையின்படி சீதா தேவியைச் சூழ்ந்து பல அரக்கியர்கள் கொடுமைகள் செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரக்கிமார்கள் வயிற்றிலே வாயும், பருத்த வயிறும், அனப்பொறி பறக்கும் கண்களையும் உடையவர்கள். ஒரு தலையும் பத்துக் கையும் உடையவர்கள் சிலர், இருபது தலைகளையும் இரண்டு கைகளையும் உடையவர்கள் சிலர், சூலம், வாள், சக்கரம், அங்குசம், தோமரம், வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தியும் உள்ளவர் சிலர், யானை முகமும், புலி முகமும், கரடி முகமும், நாய் நரி முகங்களாகவும், கொடுமையே ஒரு வடிவமாக உடையவராகவும் ஆயிரம் அமாவாசைபோல் இருண்ட உடம்பும் திரண்ட தோள்களை உடையவராகவும் பலர் இருந்தனர்.

அவர்கள் சீதாப்பிராட்டியை நோக்கி, சீதை! உன் கண்ணைப் பிடுங்கிப் கழுகுகளுக்குப் போடுவோம், உன்னைத் துவையலாக அரைத்து விலங்குகளுக்கு விருந்து வைப்போம், ஏன் அழுகிறாய்? உன்னை யார் என்ன செய்தார்கள்? எங்கள் அரசராகிய இராவணனுக்கு அறிவே கிடையாது. விரும்பாத உன்னை அவர் விரும்புகிறாரே? என்ன மூடத்தனம்? முப்பது முழம் புடவை எங்களுக்கு ஒரு சுற்று வரும். எங்கள் பற்களின் இடையிடையே பேய்களும், நாய்களும் அபாயமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும். இத்தகைய எங்களை அவர் விரும்பினால் நாங்கள் மனைவிகளாக இருக்க மகிழ்ச்சியடைவோம். மின்னாம்பூச்சிபோல் இருக்கின்ற உன்னைக் கண்டு அவர் விரும்புகின்றாரே, அவருடைய அறிவின்மையை யாரிடம் சொல்வது? எங்கள் அரசர் வந்தால் வாருங்கள் இருங்கள் வணக்கம் என்று சொல்லு. ஒன்பது மாதங்களாக அழுது நீ என்ன அடைந்தாய்? எங்கள் மன்னவரை விரும்பினால் அரண்மனையில் சுகமாக வாழலாம் என்று கூறி, ஆயுதங்களால் இடிப்பது போலும் அடிப்பது போலும் கடிப்பது போலும் அச்சுறுத்தினார்கள். அப்போது தேவி அடைந்த துன்பத்திற்கு எல்லையே கிடையாது.

அந்த நடுநிசியில் அருளே வடிவாகிய ஆஞ்சநேயர் அங்கு வந்து சேர்ந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:08 am

பிராட்டியாரைக் கண் குளிரக் கண்டார். அரக்கியர்களுக்கு நடுவே கண்ணீர்க் குளத்தில் இருந்த அன்னம்போல் காட்சி தரும் தெய்வக் கற்புடைய பிராட்டியாரை நோக்கி, இவர்தான் சீதாதேவி என்று எண்ணி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

தேவியைத் தரிசித்தல்- அருந்தவத்துப் பெண் தெய்வத்தைக் கண்ட அநுமார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவர் தமக்குள் எண்ணுகின்றார்.

அறம் அழியவில்லை. நானும் சாகமாட்டேன் என்று எண்ணி ஆடினார். ராம் ராம் என்று பாடினார். அந்த மரத்தின் மீது அங்கும் இங்குமாக ஓடினார். உவகைத் தேனை உண்டார். எம்பெருமான் கூறிய அடையாளங்கள் அனைத்தும் இவரிடம் இருக்கின்றன. எரிகின்ற கொள்ளியைக் கூரை வீட்டில் ஒளித்து வைத்ததுபோல், தான் அழியும் பொருட்டு இராவணன் இவரை இங்குத் கொண்டு வைத்திருக்கின்றான். பரவாசுதேவானகிய நாராயணரே இராமபிரான். தாமரையில் வாழும் மகாலட்சுமியே சீதாதேவி. இதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்த அன்னை உண்ணாமலும், உறங்காமலும் நீராடாமலும், உள்ளம் வெந்து நொந்து மெலிந்திருக்கின்றார்கள். ஆ! ஆ! நான் இராகவனுடைய அழகிய புயத்தைப் புகழ்வேனா? பெண்களின் திலகமாக விளங்கும் இத்தேவியின் திருவுளத்தைப் புகழ்வேனா? அரசர்கட்கு இருக்க வேண்டிய தரும குணம் நிறைந்த ஜனக மன்னரின் குலத்தைப் புகழ்வேனா? நான் எதனைப் பாராட்டுவேன்?

பஞ்சாக்கினியில் நின்று உண்ணாதும் உறங்காதும் தவஞ்செய்வோரின் தவ ஆற்றலும், இம்மாதரசியின் கற்புக்கு இணையாகாது. இப்பெண்ணரசின் தவக்கோலத்தை இராமர் பார்க்கத் தவஞ்செய்தாரில்லை.

இந்த் தவப்பெருஞ் செல்வியைத் தருமமே காத்ததோ? ஜனகராஜாவினுடைய புண்ணியந்தான் இவரைக் காத்ததோ? கற்பு என்ற ஒன்று இவரைக் காத்ததோ? இது அருமையிலும் அருமை. இவருடைய பெருமையை உரைக்கலாகாது. ஏன்று எண்ணி ஓர் அசோக மரத்தின் கிளையின் மறைந்து நின்று கொண்டிருந்தார்.

இராவணன் வருகை- இராவணன் ஒளி வீசுகின்ற பற்பல மணிகளைப் பதித்த அணிகலன்கள் பூண்டு சீதையை நோக்கி வருகின்றான். ஊர்வசி உடைவாள் ஏந்தி உடன் சென்றாள். மேனகை வெற்றிலைப் பாக்கு கொடுத்துக் கொண்டு உடன் வந்தாள். திலோத்தனை அவனுடைய செருப்பைத் தூக்கிக் கொண்டு சென்றாள். ஏனைய தேவ மாதர்கள் அவனுடன் தொடர்ந்து சென்றார்கள்.

அவனது வருகையைக் கண்ட ஆஞ்சநேயர் திடுக்கிட்டார். அவனைக் கண்டு உயிர் உலைகின்ற தேவியையும், ஆசையால் வெதும்புகின்ற அரக்கனையும், அநுமார் கண்டார், தெய்வத்தை நினைத்துத் துதி செய்தார்.

இராவணன் சீதாதேவியின் அருகில் எய்தி, பெண்கள் நாயகமே! உனக்கு என்பால் கருணையில்லையா? என்னை நீ அடைந்தால் மூவுலக செல்வமும் உன்னை வந்தடையும். தேவரும் மற்று யாவரும் உன்னை வணங்குவார்கள். உன் கணவன் உயிர் விடும்பொழுது கூறிய ஒலியை நீ கேட்க வில்லையா? அடிமையாகிய என்னை நீ ஏற்றுக்கொள். என் ஆசையாகிய அனலை உன் அன்பினால் அணைத்து என்னைக் காப்பாற்று என்று முடிமேல் கரங்களைக் கூப்பிப் படிமேல் வீழ்ந்து பணிந்தான்.

சீதாதேவி எரிமலைபோல் சீறி, மூன்று உலகங்களையும் ஆளுகின்ற பேரரசனாகிய இராவணனைத் துரும்பாகக் கருதி கூறுகின்றாள்.

ஏ அற்பனே! என்னுடைய கணவரை என்னவென்று எண்ணுகின்றாய்? நீ வெள்ளி மலையை அள்ளியெடுத்த பொழுது சிறு கால் விரலால் அடர்த்த சிவபெருமானுடைய வில்லை என் கணவனார் ஒடித்தபோது உண்டாகிய ஓசையைப் பதினான்கு உலகங்களும் கேட்டன. நீ கேட்கவில்லையா? உண்மையில் நீ வீரனாக இருந்தால் போர் புரிந்து என்னைக் கவர்ந்திருக்க வேண்டும். என் கணவரும் இலட்சுமணரும் இல்லாத நேரம் பார்த்துச் சந்நியாசியாக வந்து, அன்னம் போட வந்த என்னைக் கன்னம் வைத்தனையே, இதுவா வீரம்?

என் கணவரை மனிதன் என்று நீ அலட்சியமாக நினைக்கின்றனையே! உன்னைச் சிறையில் வைத்த கார்த்தவீரியனை அழித்த பரசுராமனும் மனிதன்தானே? உனக்கும் உன் அசுர குலத்துக்கும் நாசகாலம் நண்ணியிருக்கின்றது. உன் தங்கையின் மூக்கை அறுத்து உன் தம்பியர்களாகிய கரதிரிசிர தூஷணாதியர்களைக் கொன்று அஞ்சா நெஞ்சுடன் விளங்குகின்ற இரகுவீரனுடைய ஆற்றலலை நீ உணரவில்லையா? ஆயிரங் கரங்களையுடைய கார்த்த வீரியன் உன் இருபது கரங்களைப் பற்றி உன் வாயில் உதிரம் ஒழுக உன்னைக் குத்திச் சிறையில் வைத்தான். அவனுடைய ஆயிரந் தோள்களையும் சிதைத்த பரசுராமனை என் கணவனார் கணப்பெழுதில் வென்றதை நீ அறியவில்லையா? இங்கே நின்று வீண் வார்த்தைகளைப் பேசாதே என்று கடுமையாக நிந்தித்தாள் சீதை.

இதைக் கேட்டு இராவணன் நாணமும் கோபமும் பொங்கி வரக் காதலால் மதியற்று நின்றான். மரத்தின் கிளையில் இருந்த அநுமார். எம்பிராட்டியை என் முன்னே இவ்வாறு பேசிய இக்கொடியவனுடைய தலைகளை உதிர்த்து, என் திறனை வெளிப்படுத்துவேன் என்று இரு கரங்களையும் பிசைந்து கொண்டிருந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:09 am

இராவணன் சீதையே! நீ அறிவில்லாத பேதையே. நான் இராம லட்சுமணரைக் கொன்று உன்னைச் சிறையில் வைத்தால் நீ மாண்டு போவாய். ஆதலால், இந்த மாயஞ் செய்தேன். நான் நினைத்தால் இராம லட்சுமணர்களை ஒரு கையால் தூக்கி வருவேன். அவ்விருவரையும் வாளினால் வெட்டுவேன். ஆனால், உன்னை எனக்குத் தந்த அந்த உதவியை எண்ணி அவர்களைக் கொல்லாமல் இருக்கின்றேன். நான் இராம லட்சுமணரைக் கொல்லுவதேயன்றி அயோத்தினை யடைந்து பரத சத்ருக்னர்களையும் கொன்று மீளுவேன். என்னை யாரென்று எண்ணினாய்? என்று கூறிவிட்டு, அங்குள்ள அரக்கிமார்களை நோக்கி, சீதை எனக்கு வசமாகும்படிச் செய்யுங்கள்! என்று கூறிவிட்டுச் சென்றான்.

அந்த அரக்கிமார்கள் ஆயுதங்களை நீட்டிச் சீதையை அதட்டி இடர்படுத்தினார்கள். அப்போது திரிசடை, தாயே, அழாதீர்கள்! விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் தீண்டினால் பத்துத் தலைகளும் ஆயிரந் துண்டாக வெடிக்கும் என்று வேதவதி சாபம் கொடுத்திருக்கின்றாள். ஆதனால், என் பெரிய தந்தை விருப்பமில்லாத உன்னைத் தீண்டமாட்டார். தாங்கள் அஞ்ச வேண்டாம். அழ வேண்டாம் என்று தேறுதலும், ஆறுதலும் கூறினாள்.

நான் இத்தனைக் காலமாக உயிர்விடாமல் இருந்தது எம்பெருமானைக் காணும் விருப்பத்தினால். எம்பெருமான் வருவார், காட்சி தருவார் என்று எண்ணினேன். ஒருக்கால் எம்பெருமான் வந்து இராவண சம்மாரம் செய்தபின் அரக்கன் இல்லத்தில் பலகாலம் தங்கியிருந்த உன்னை நான் தீண்டமாட்டேன் என்ற சொன்னால் என்ன செய்வேன்? என் ஆருயிர்க் கணவரை மான்பின் அனுப்பி, என்னைக் காவல் அறிவில்லாத பேதையாகிய யான் உயிருடன் வாழ்வதை உலகம் ஏற்குமா? அல்லது இராவண சம்மாரத்துக்குப் பின் நான் இறைவனுடன் அயோத்திக்குச் சென்றால் அங்குள்ள கற்புடைய மாதர்கள் என்னைப் பார்த்து, இவள் அரக்கன் இல்லத்தில் நெடுங்காலம் இருந்தவள் என்று ஏசவார்களாயின் நான் என் செய்வேன்? என் துன்பத்துக்கு விமோசனம் உயிரை விடுவது ஒன்றுதான்.. . என்றெல்லாம் எண்ணி மெல்ல எழுந்தாள்.

அநுமார் இருக்கின்ற சிம்சுபா மரத்தையடைந்து மாணையின் கொடியை முறுக்கிக் கழுத்தில் சுருக்கிட்டு உயிர்விடத் துணிந்தாள்.

கணையாழி தருதல்- கண்களை மூடி இராமநாமத்தைச் செபித்தாள். அவள் கண்களிலிருந்து துன்பநீர் ஆறாய்ப்பெருகி ஓடியது. இதைக் கண்ட அநுமார் துணுக்குற்றார். தேவி உயிர்விடத் துணிகின்றாளே இப்பொழுது தேவியைக் காக்கும் வழி யாது என்று ஒருகணம் சிந்தித்தார். இப்பொழுது எம்பிராட்டிக்கு உயிர்ப் பிச்சை தருவது இராமநாமம் ஒன்றுதான் என்று கருதி அழுத கண்ணும் தொழுத கையுமாகிய பிராட்டியார் திருமுன் இராம் இராம் இராம் என்று மென்மையான குரலில் கூறிக்கொண்டு வணங்கி நின்றார்.

கொடியவர்கள் வாழ்கின்ற இந்த இலங்கையில் இராம நாமத்தைக் கூறுகின்றவர்கள் யார் என்று கண்விழித்துப் பார்த்தார். கைகூப்பி உள்ளம் உருகக் கண்ணீர்ப் பெருக்கி நின்ற இராமதூதனைக் கண்டாள் சீதை. இவன் இராவணனால் அனுப்பப்பட்டு வந்த வஞ்சகனோ? நம்மை ஏமாற்ற வந்த எத்தனோ? இது எப்படியாயினும் இவன் கூறுவது இராம மந்திரம். பித்தளைப் பாத்திரத்தில் கொடுத்த தேனும் இனிக்கத்தானே செய்யும் ? இராம நாமத்தை யார் கூறினால் என்ன? இராமநாமத்தைக் கேட்டுப் பின்னர் உயிர் விடுவோம் என்று உயிர் விடுகின்ற முயற்சியைத் தாமதஞ் செய்தாள்.

அநுமார், உலகு ஈன்ற உத்தம அன்னையே! தங்கள் திருவடிக்கு ஒரு கோடி வணக்கம். நான் இராம தூதன். தங்களை எட்டுத் திசைகளிலும் தேடி, இங்கு வந்து கண்டேன். தேவரீர் இலங்கையில் இருப்பதை இராமர் அறிய முடியாமையால் தாமதிக்க நேர்ந்தது.

அம்மா! இராமருடைய தோழனாகிய சுக்ரீவ மாமன்னருடைய மந்திரி யான். தங்களைப் பிரிந்தபின் சுக்ரீவ மன்னனை அடைந்து. வாலியை வதைத்துச் சுக்ரீவனோடு உறவு கொண்டார். அந்தச் சுக்ரீவர் தம் சேனைகளையனுப்பி நாலாபக்கங்களிலும் தங்களைத் தேடினார். தென்திசை நோக்கி வந்தவர்களில் நானும் ஒருவன். சுக்ரீவ மன்னனுக்கு எழுபது வெள்ளம் வாநர சேனைகள் உண்டு. வாநர சேனைகளாகிய நாங்கள் தேடாத தேசமில்லை. நாடாத நகரில்லை, நான் செய்த மாதவத்தால் தங்களை இங்குக் கண்டேன்.

அம்மா! நீங்கள் வேண்டுமென்று திருமாங்கல்யத்தை வைத்துக்கொண்டு, வேண்டாமென்று எறிந்த அணிகலன்களைக் கண்டு இராமர் மாளாமல் உயிரோடு இருக்கின்றார். வேண்டாம் என்று எறிந்த அவ்வணிகலன்கள்தாம் வேண்டும் என்று வைத்திருந்த மாங்கல்யத்தைக் காப்பாற்றியது. இராமச்சந்திர மூர்த்தி மிதிலைக்கு வந்தபோது கன்னிமாடத்தில் தங்களைக் கண்டதும், தாங்கள் அவரைக் கண்டு மகிழ்ந்ததும் அடையாளமாகச் சொல்லச் சொன்னார். அப்பொழுது தாங்கள், இதோ இந்த வீதி வழியாகச் செல்லுகின்ற வீரகுமாரன் கையில் அறுபதினாயிரம் பேர் எடுக்கக்கூடிய சிவதனுசு, பூமாலையைப் போல் வளையுமாறு செய்தால், தேவர்களே உங்கள் பொருட்டுப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்வேன் என்ற பிரார்த்தனை செய்துகொண்டீர்களாமே, அந்த அடையாளத்தைச் சொல்லச் சொன்னார்.

தாங்கள் எம்பிரானுடன் கானகத்துக்குப் புறப்பட்டுப் போனபோது, நகர் வாயிலைக் கடவாமுன் கானகம் வந்து விட்டதா? என்று கேட்டீர்களாமே. அப்போது எம்பெருமான் புன்னகை பூத்தாராம். அந்த அடையாளத்தைச் சொல்லச் சொன்னார். சுமந்திரர் தங்களைப் பார்த்து அயோத்திக்குச் சொல்லும் செய்தி ஏதாவது உண்டா? என்று கேட்டபொழுது விலையுயர்ந்த ஆடையணிகலன்களைப் பற்றி எண்ணாமல், நான் வளர்த்த கிளிகள், வெள்ளை முயல்கள் முதலிய பிராணிகளுக்கு வேளை தவறாமல் உணவு தருமாறு என் தங்கையருக்குச் சொல்லும் என்று கூறினீராமே, அந்த அடையாளத்தைச் சொல்லச் சொன்னார்.

சித்திரக்கூட பர்வதத்தில் தங்கியிருந்தபொழுது ஒருநாள் இலட்சுமணர் இரை தேடி வெளியே சென்றிருந்தார். தங்கள் மடியில் படுத்து இராமர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்திரன் மகனாகிய சயந்தன் தங்களைக் கண்டு மோகமுற்றான். அவன் தந்தை இந்திரன் அகலிகையைக் கண்டு விரும்பிய மூடன். தந்தை புத்திதானே மைந்தனுக்கும் இருக்கும்? அவன் காக்கையின் வடிவத்தை எடுத்துத் தங்கள் திருமார்பைக் குத்திப் புண்ணாக்கினான். எம்பெருமான் ஒரு புல்லை இராம பாணமாக ஏவினார். அக்கணைக்கு அஞ்சி எட்டுத் திசைகளில் ஓடியும் உய்வு கிடைக்காமல் இராகவா அபயம் என்று சரணடைய, அவனுக்கு உயிர் கொடுத்து உதவிய கருணைத் திறத்தை அடையாளமாகச் சொல்லச் சொன்னார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:17 am

அநுமார் இவ்வாறு பல அடையாளங்களைச் சொல்லி முடிவில் கணையாழி - மோதிரத்தைக் கொடுத்தார். அப்பொழுது அம்மை, இந்தப் புனித மோதிரம் பாவம் நிறைந்த அரக்கரின் நகருக்கு வந்ததே என்று கண்ணீரால் அபிஷேகஞ் செய்தாள். அந்தக் கணையாழி, சனகர், திருமணத்தின்போது மருமகனுக்குத் தந்த பரிசு மோதிரம். சீதாதேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. நல்ல நாகம் மீண்டும் யாரையும் கடிக்காமல் நீண்ட நாள் வாழ்ந்தால், அதன் நஞ்சு நாகரத்தினமாக மாறும். அந்த நாக ரத்தினத்தை இழந்த நாகம் மீண்டும் அதை அடைந்தால் எத்துணை மகிழ்ச்சியடையுமோ அத்துணை மகிழ்ச்சியடைந்தாள். பழம்பொருளை இழந்தவர்கள் மீண்டும் பெற்றவர்போல் உவந்தாள். நீண்ட நாள் குழந்தையில்லா மலடி குழந்தையைப் பெற்றததுபோல் பெரிதும் மகிழ்ந்தாள். அநுமாரை நோக்கி, வாழ்த்துக் கூறுகின்றாள்.

அன்பின் வடிவாகிய ஆஞ்சநேயா! உலகத்தைத் தந்த பிரமதேவனைத் தந்த முதல்வனுக்குத் தூதாக வந்தாய், எனக்கு உயிர் தந்தாய், அம்மையும் அப்பனும் அத்தனும் ஆகி நின்றாய். சிறந்த தோள்களையுடையவனே! உயிரை கொடுத்து வள்ளலே! பதினான்கு உலகங்கள் அழிந்தாலும் நீ அழியாமல் நித்திய சிரஞ்சீவியாக இரு என்று வாழ்த்தினாள்.

சீதாதேவி, அநுமாரை நோக்கி, ஞமகனேஞ என்று அழைத்திருக்கலாம். அவ்வாறு அழைக்காமல் வள்ளலே என்று அழைக்கின்றாள். அநுமார் பொன்னும் பொருளுமா தந்தார்? அன்னமும் ஆடையுமா தந்தார்? அவர் அப்போது தந்தது எதனை? தேவிக்கு இன்னுயிரை ஈந்தார். சீதை உள்ளம் வெந்து நொந்து உயிர்விடத் துணிந்தபோது கணையாழியைத் தந்து ஆருயிரை வழங்கினார். சீதைக்கு மட்டுமா உயிரைத் தந்தார்?

அஞ்சனை குமாரனின் ஆற்றல்

அநுமாரைச், சீதாதேவி வள்ளலே என்று அழைத்த காரணம் என்ன?

சீதாதேவி மாண்டால் இராமரும் இலட்சுமணரும் மாள்வார்கள். அக்கணமே சுக்ரீவன் அங்கதன் முதலிய வாநர வீரர்கள் மாள்வார்கள். இந்தச் செய்தியை அறிந்தவுடன் பரதனும், சத்ருக்னனும் மாள்வார்கள். மூன்று தாய்மார்களும் மாள்வார்கள். அதனால், அயோத்தியில் உள்ள மாந்தர்கள் மாள்வார்கள். அதனால், பக்த உலகமே அழியும். அநுமார் சீதைக்கு உயிர் தந்து உலகத்துக்கே உயிர் தந்தார். அதனால் வள்ளலே என்று அழைக்கின்றார்.

சீதாதேவி அநுமாரை நோக்கி, நீ யார் ? எம்பெருமானுக்கும் உனக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது? இங்கு நீ எவ்வாறு வந்தாய்? என்று வினாவினார்.

அநுமார், தாயே! இராவணன் தங்களைக் கவர்ந்தபின் இராமலட்சுமணர் தங்களைத் தேடி வரும்பொழுது ஜடாயுவைக் கண்டார்கள். அவர் தங்கள் நிலைமையைக் கூறி இறந்துவிட்டார். பின்னர், தங்களைத் தேடிக் கொண்டு வந்து கிஷ்கிந்தையை அடைந்து சூரிய குமாரானாகிய சுக்ரீவனுடன் நட்பு கொண்டார். நீங்கள் அன்று எறிந்த அணிகலன்களைக் கண்டு உயிர் தளிர்த்தார். இராவணனை வென்ற மாவீரனாகிய வாலியை ஒரே அம்பினால் வதைத்தார். சுக்ரீவனுக்கு முடிசூட்டினார். சுக்ரீவனுக்கு எழுபது வெள்ளம் வாநர வீரர்கள் துணை செய்ய இருக்கின்றார்கள். அம்மா! என்னை எவ்வாறு கடல் கடந்து வந்தாய் என்று கேட்கின்றீரே. தங்கள் கணவனாருடைய திருவடியைத் தியானிக்கின்றவர்கள் பிறவிக்கடல் ஏழையும் கடப்பார்கள். நான் இந்த உவர்க்கடலைக் கடந்தது ஒரு சிறப்பா? தாயே, எம்பெருமானுடைய பணி செய்யும் வீரர்கள் கடலின் மணலைவிட அதிகமாகப் பலர் இருக்கின்றார்கள். அந்த இராம அடியார்களில் அடியேன் கடைப்பட்டவன். அங்கும் இங்கும் போகுமாறு சிறியவர்களுக்குத் தானே கட்டளையிடுவார்கள்? இராமன் அடியார்களில் ஒருவனாகிய யான் கடலைக் கடந்து வந்தேன்.

சீதை, அப்பா! அநுமானே! இங்கு அதிகம் நீ காலதாமதம் செய்யக்கூடாது. நான் இந்த இலங்கையில் கால் வைத்தபோது ஒரு கர்ப்பவாசம் (பத்துமாதம்) இருப்பதாகத் திட்டமிட்டேன். இன்றுடன் ஒன்பது மாதங்கள் பூர்த்தியாகி விட்டன. அதற்குள் எம்பெருமான் வந்து இராவண சம்மாரம் செய்து என்னைச் சிறை மீட்டுப் போகுமாறு வேண்டினேன். என்று சொல்வாயாக. ஒருக்கால் இந்த ஒரு மாதத்திற்குள் இங்கு வர இயலவில்லையானால் நான் இங்கு மாண்டு ஒழிவேன். எம்பெருமான் அப்படியே அயோத்தி சென்று கங்கைக் கரையில் எள்ளுந் தண்ணீரும் இறைக்கச் சொல்லுவாயாக. குழந்தை இல்லாத எனக்கு நீர்க்கடன் அவர்தானே செய்ய வேண்டும்? நான் இங்கு மாளுந் தன்மையை அடைந்திருக்கின்றேன். ஆதலால், என்னுடைய சிறந்த மாமியார் மூவருக்கு வணக்கஞ் செலுத்தினாள் என்று கூறுவாயாக. சுக்ரீவனுக்கு என்னுடைய ஆசியைக் கூறுவாயாக. எம்பெருமான் அயோத்திக்குச் செல்லும் பொழுது நீங்கள் உடன் சென்று அவருக்கு முடிசூட்டு விழா செய்யுங்கள். அந்தப் பட்டாபிஷேகக் கோலத்தைப் பாவியாகிய யான் பார்க்கத் தவஞ் செய்திலேன் என்று கூறினாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:17 am

அநுமார், சீதையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, அம்மா! நான் சென்று இராமரிடம் கூறி, அவர் வந்து போர் புரிந்து தங்களை மீட்கின்ற தன்மை வேண்டாம். அது கால தாமதம் ஆகும். அடியேனுடைய தோள் மீது அமருங்கள். அடுத்த விநாடியில் இராமருடைய திருவடியில் தங்களை ஒப்படைப்பேன் என்று கூறினார்.

சீதாதேவி, அநுமானே! உன் அன்புக்கு நன்றி. உன்னுடைய ஆலோசனை நன்றன்று. பாரத நாட்டின் பண்பின்படி வயதுக்கு வந்த மகனைத் தாய் தீண்டக்கூடாது. நீ எனக்குச் சேய், நான் உனக்குத் தாய். என்னைத் தீண்டிக் கொண்டு போவது சிறப்புடையதாகாது. இராவணனே என்னைத் தீண்டாமல் கொண்டு வந்திருக்கிறான் மகனே! நீ கூறியது சரியன்று என்று கூறினாள்.

அநுமார், அம்மா! நான் தங்களைத் தீண்டவில்லை. இந்த இலங்கையை வேருடன் பறித்து இராமர் முன்னே கொண்டு போய் வைப்பேன். அப்போது தாங்கள் எம்பெருமானை அடையலாம் என்றார்.

அநுமானே, நீ சிறிய குரங்காக இருக்கின்றனையே, நீ எவ்வாறு இலங்கையை எடுப்பாய்? என்று கேட்டாள் சீதை.

அநுமார், அம்மா அருந்ததியே! நானா சிறியவன்? என் வடிவத்தைப் பாருங்கள் என்று விசுவரூபத்தை எடுத்தார். அவருடைய திருவடி அதல பாதாலத்திலும், திருமுடி சந்திர மண்டலம், சூரிய மண்டலங்களையும் கடந்து நின்றது. சீதாதேவி தலைநமிர்ந்து எட்டியெட்டிப் பார்த்தாள். அநுமாருடைய முழுங்காலும் தெரியவில்லை. அதிசயம் அடைந்தாள். மகனே! இந்த வடிவத்தைக் காண அஞ்சுகின்றேன். அடங்குவாயாக என்றாள்.

நல்ல குடும்பத்தில் தாய் தந்தையர் அடக்கினால் பிள்ளைகள் அடங்கும். அல்லாத குடும்பத்தில் தாய் தந்தையரை அடக்கும். சீதாதேவி அநுமாரைப் பார்த்து அக மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கூறுகின்றாள்.

மகனே! எம்பெருமானுக்கு இலட்சுமணரைத் தவிர வேறு துணையில்லை என்று எண்ணினேன். நீ ஒருவன் துணையாக அமைந்திருப்பதால் பகவானுக்கு ஆகாத காரியம் ஒன்றும் இருக்காது. இலங்கை, கடல் கடந்து இருக்கின்றதே என்று எண்ணினேன். உன்னுடைய பேராற்றலைக் கண்ட பின், ஏழு கடல்களுக்கு அப்பால் இருந்தால் என்ன, என்று எண்ணுகின்றேன். இந்த இலங்கை உனக்குச் சுண்டு விரல் பாரம்.

ஆனால், என்னைக் கண்ணீர்விட்டு அழுகின்ற அபலை என்று எண்ணாதே. இந்த இலங்கையை அழிக்க எம்பெருமான் இளைய பெருமாளுடன் எழுபது வெள்ளம் வாநர சேனையுடன் வர வேண்டுமா? கோதண்டத்தை வளைக்க வேண்டுமா? அம்புகளைத் தொடுக்க வேண்டுமா? இந்த இலங்கையையும் ஏனைய உலகங்கள் எல்லாவற்றையும் அழிகஎன்று ஒரு சொல்லால் அழித்துவிடுவேன். அத்துணை ஆற்றல் என்பால் அமைந்துள்ளது. நான் இலங்கையையும் இராவணாதி அரக்கர்களையும் ஒரு கணத்தில் எரித்துவிடுவேன். அப்படி எரிந்தால் சீதாயணம் என்றுதானே பேர் வரும்? இராமாயணம் என்று பேர்வராதே. பெண்ணாகப் பிறந்தவர்கள் கணவனுக்குப் புகழ் தேடிக் கொடுக்க வேண்டும். அதனால், என் கற்புக்கனலை அடக்கிக் கொண்டிருக்கின்றேன். நீ உன் வாலை மடக்கிக் கொண்டு பெருமானிடம் போய் வா.

மகனே, விதியை வென்றவர்கள் யார்? விதிவழி மதி செல்லும் விலையுயர்ந்த ஆடையாபரணங்களையும் மாட மாளிகைகளையும் துறந்து வந்த யான், அற்பமான மானை விரும்பினேனே. இதற்குக் காரணம் விதியின் செயலாகும். ஒருகால் இலங்கையில் நான் மாண்டு போவேனானால் மறுபிறப்பில் எம்பெருமான் எனக்குச் கணவனாக வர வேண்டும் என்று வரம் கேட்டதாகப் பெருமானிடம் கூறுவாயாக.

ஆஞ்சநேயா! இராமச்சந்திர மூர்த்தி அயோத்தியிலிருந்து மதிலாபுரிக்கு வந்து என் கையைப் பற்றிய அன்று, இந்த இராமாவதாரத்தில் இரு மாதரைத் தொடேன்! என்று எனக்கு வரங் கொடுத்ததை அவருக்கு நிளைவூட்டுவாயாக. மிதிலாபுரிக்குச் சென்றால் என் தாய் தந்தையருக்கு என் அன்பு வணக்கத்தை அறிவிப்பாயாக.

தாயே! நீங்கள் சிந்தை நொந்து செப்புவதைக் கேட்டு உளம் நொந்து உரைக்கின்றேன். தாங்கள் அகால மரணம் அடைய வேண்டாம். நான் சென்று இராமரைப் பார்ப்பதுதான் தாமதம். நான் சென்று தெரிவித்தவுடன், என் தோள்களில் இராமரும் அங்கதன் தோள்களில் இலட்சுமணரும் வாநர சேனைகளுடன் இங்கு வருவார்கள. அரக்கர்கள் அழிய உதிர ஆறு ஓடும். ஆரக்கிமாரும் அறுத்து வீசிய வாலினாலும் கடக்க முடியாத தாலி மலை இங்குக் காணப்படும். புண்ணின் நீராகிய உதிரத்தில் குளித்த பறவைகள் அரக்க மாதர்களின் கண்ணீரில் குளிப்பதைக் காண்பீர்கள். தங்கள் திருமேனியை உற்றுப் பார்த்த இராவணனுடைய கண்களைக் காக்கைகள் கொத்தித் தின்பதைக் காணப் போகிறீர்கள்.

உலக மாதாவே! அரம்பையர் ஆடிய நடன சபைகளில் குரங்குகள் நடிப்பதைக் காண்பீர்கள். ஆகவே, அறம் வெல்லும் மறம் தோற்கும் என்று கூறினார் அநுமார்.

சீதாதேவி, நான் ஒரு கிளியை வளர்த்தேன். அது முட்டை யிட்டுக் குஞ்சு பொரித்தது. அதற்கு என்ன பெயர் சூட்டலாம் என்று கேட்டேன். அதற்கு எம்பெருமான் என் தாய் கைகேயின் பெயரைச் சூட்டு என்றார் இந்த அடையாளத்தைச் சொல் என்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக