புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பழமொழிகள்...!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:32 pm

First topic message reminder :

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம்.

அற்ப அறிவு அல்லற் கிடம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.



[You must be registered and logged in to see this link.]

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:38 pm

கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.

கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.

கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்.

கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்.

கையிலே காசு வாயிலே தோசை.

கையூன்றிக் கரணம் போடவேண்டும்.

கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?

கொடிக்கு காய் கனமா?

கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.

கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.

கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?

கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.

கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.

கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

கோபம் சண்டாளம்.

கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?

கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.

சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?

சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:38 pm

சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா.

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.

சாண் ஏற முழம் சறுக்கிறது.

சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சுக துக்கம் சுழல் சக்கரம்.

சுட்ட சட்டி அறியுமா சுவை.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.

சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்?

செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?

செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?

செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

செயவன திருந்தச் செய்.

செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:38 pm

செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

சேற்றிலே செந்தாமரை போல.

சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

சொல் அம்போ வில் அம்போ?

சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.

சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.

சொல்வல்லவனை வெல்லல் அரிது.

சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.

தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

தடி எடுத்தவன் தண்டல்காரனா?

தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.

தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

தணிந்த வில்லுத்தான் தைக்கும்.

தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

தருமம் தலைகாக்கும்.

தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

தலை இருக்க வால் ஆடலாமா?

தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?

தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன?



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:39 pm

தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.

தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

தவளை தன் வாயாற் கெடும்.

தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.

நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.

நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!

நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.

நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.

நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.

நயத்திலாகிறது பயத்திலாகாது.

நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.

நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.

நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.

நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.

நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது

நல்லது செய்து நடுவழியே போனால்,

நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.

நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

நா அசைய நாடு அசையும்.

நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா?

நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.

நாய் இருக்கிற சண்டை உண்டு.

நாய் விற்ற காசு குரைக்குமா?

நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.

நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

நாலாறு கூடினால் பாலாறு.

நாள் செய்வது நல்லார் செய்யார்.

நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:39 pm

நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

நித்திய கண்டம் பூரண ஆயிசு.

நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?

நித்திரை சுகம் அறியாது.

நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.

நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.

நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.

நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

நீர் மேல் எழுத்து போல்.

நீலிக்குக் கண்ணீர் இமையிலே.

நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

நூல் கற்றவனே மேலவன்.

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.

நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.

நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெய் முந்தியோ திரி முந்தியோ.

நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?

நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?

நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

நேற்று உள்ளார் இன்று இல்லை.

நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

நொறுங்கத் தின்றால் நூறு வயது.

நோய் கொண்டார் பேய் கொண்டார்.

நோய்க்கு இடம் கொடேல்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

பக்கச் சொல் பதினாயிரம்.

பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.

பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

பகைவர் உறவு புகை எழு நெருப்பு.



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:39 pm

பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?

பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.

பசியுள்ளவன் ருசி அறியான்.

பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.

பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.

பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.

படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

படையிருந்தால் அரணில்லை.

பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.

பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?

பணம் உண்டானால் மணம் உண்டு.

பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.

பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.

பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.

பதறாத காரியம் சிதறாது.

பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.

பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.

பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:39 pm

பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.

பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.

புத்திமான் பலவான்.

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது.

பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

பூவிற்றகாசு மணக்குமா?

பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

பெண் என்றால் பேயும் இரங்கும்.

பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.

பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

பேசப் பேச மாசு அறும்.

பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.

பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.

பேராசை பெருநட்டம்.

பொங்கும் காலம் புளி, மங்குங் காலம் மாங்காய்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

பொல்லாதது போகிற வழியே போகிறது.

பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

பொறி வென்றவனே அறிவின் குருவாம்.

பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

பொறுமை கடலினும் பெரிது.

பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?

போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:40 pm

மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.

மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.

மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண்டையுள்ள வரை சளி போகாது.

மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.

மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.

மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.

மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

மவுனம் கலக நாசம்.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

மனம் உண்டானால் இடம் உண்டு. (மனமிருந்தால் மார்க்கம் உண்டு)

மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

மனம் போல வாழ்வு.

மனமுரண்டிற்கு மருந்தில்லை.

மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.

மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

மாடம் இடிந்தால் கூடம்.

மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?

மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.

மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.

மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

மாரடித்த கூலி மடி மேலே.



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:40 pm

மாரி யல்லது காரியம் இல்லை.

மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.

மாவுக்குத் தக்க பணியாரம்.

மாற்றானுக்கு இடங் கொடேல்.

மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?

மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.

மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.

மீ தூண் விரும்பேல்.

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

முகத்துக்கு முகம் கண்ணாடி.

முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.

முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.

முதல் கோணல் முற்றுங் கோணல்.

முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

முருங்கை பருத்தால் தூணாகுமா?

முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?

முன் ஏர் போன வழிப் பின் ஏர்.

முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?

முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.

மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.

மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

மெளனம் மலையைச் சாதிக்கும்.

மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:40 pm

மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.

மொழி தப்பினவன் வழி தப்பினவன்.

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.

வடக்கே கருத்தால் மழை வரும்.

வட்டி ஆசை முதலுக்கு கேடு.

வணங்கின முள் பிழைக்கும்.

வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

வருந்தினால் வாராதது இல்லை.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

வளவனாயினும் அளவறிந் தளித்துண்.

வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.

வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.

வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

வாழ்வும் தாழ்வும் சில காலம்.

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

விதி எப்படியோ மதி அப்படி.

வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?

விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.

விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக