புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
59 Posts - 55%
heezulia
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_m10நாடு சந்திக்கும் நெருக்கடி  நாம் எப்படி உதவ முடியும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு சந்திக்கும் நெருக்கடி நாம் எப்படி உதவ முடியும்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:18 pm

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத சரிவு. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிலவரப்படி 68.80 ரூபாயாக ஆக வீழ்ந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பார்த்தால் சரிவு விகிதம் 21.12.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோருகின்றன. அதற்குப் பின் அரசியல் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் பதவி விலகுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. இன்னும் சொல்லப் போனால் பிரச்சினை தீவிரமாகும். அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் அதிலிருந்து மீள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

அதற்கு முதலில் இந்த நெருக்கடிக்கான காரணங்கள் என்னவென்று தெரிய வேண்டும்.

அந்நிய முதலீடுகள் வெளியேறுகின்றன. டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு, ரயில் சரக்குக் கட்டணம் உயர்வு ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாவதற்கான அறிகுறிகள். இவற்றுடன் 25,000 கோடி ரூபாய் அளவு அதிக செலவு பிடிக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

முக்கியமாக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்போடு ஒப்பீடு செய்துதான் இந்திய ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. எனினும் அமெரிக்க டாலரை சர்வதேச நாடுகள் பொது கரன்சியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால்தான் அமெரிக்க டாலர் இந்த நாணய ஒப்பீடுகளில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் ஒரு டாலரை வாங்கவேண்டுமானால் எவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதை வைத்து, ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. டாலரை வாங்குவதற்கு கூடுதல் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தால், ரூபாய் மதிப்பு குறைந்தது என்று சொல்கிறோம். குறைவான ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்க முடிந்தால், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்கிறோம்.

2012 ஜனவரியில் 45 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை நாம் வாங்கினோம். 2013 ஏப்ரல் மாதம் 55 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்கினோம்.

நடப்புக் கணக்கில் பற்றாக்குறை அதிகரிப்பு

நாம் பிற நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் டாலர்களின் தொகை குறைவாகவும் இறக்குமதி செய்வதற்கு நாம் செலவிடும் டாலர்கள் அதிகமாகவும் இருக்கின்றன. அதாவது அந்நியச் செலாவணியில் வரவை விட செலவு அதிகமாக இருக்கிறது. இதனால் நடப்புக் கணக்கில் துண்டு விழுகிறது (Current Account Deficit). இது மேலும் மேலும் அதிகரித்தபடி உள்ளது.

நாம் அதிகபட்சமாக இறக்குமதி செய்வது கச்சா எண்ணெய். அதற்கு அடுத்தபடியாக தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதிகளுக்கு டாலர்களை அதிக அளவில் செலவிடுகிறோம். நமது ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளாக குறைந்துள்ளது. சென்ற ஜூலை மாதம்தான் 11 சதவிகிதம் அதிகரித்தது. பொதுவாக சர்வதேச மந்தநிலையின் காரணமாக நமது ஏற்றுமதி குறைந்து, அதனால் டாலர் வரத்து குறைந்துவிட்டது. டாலர் வரத்து குறைந்தது, ரூபாய் மதிப்பு சரிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

ஃபெடரல் ரிசர்வின் அறிவிப்பு

இரண்டாவதாக அமெரிக்க ரிசர்வ் வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அந்நாட்டுப் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் முன்னதாக டாலரை அதிக அளவில் புழக்கத்தில் விட்டிருந்தது. அங்கு பொருளாதாரம் மீட்சி அடைந்துவிடும் நிலையில், புழக்கத்தில் விட்டிருந்த டாலரை படிப்படியாகக் குறைத்துக்கொள்ள உத்தேசித்திருப்பதாக (Quantitative Easing) அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. டாலர் புழக்கம் குறையுமானால், அதன் மதிப்பு சந்தையில் உயரும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உலகின் பல நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரிந்தது. அவற்றில் இந்தியாவும் ஒன்று.

வெளியேறும் அந்நிய முதலீடுகள்

அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்கு புதிய முதலீடுகளின் வரத்தும் குறைந்துவிட்டது.

ஊக பேர வணிகர்களின் கைவரிசை

மேற்கூறிய காரணங்கள் தவிர, ஊக பேர வணிகர்கள் அந்நியச் செலாவணியில் புகுந்து விளையாடியதும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கடந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது பணச் சந்தையில் கணிசமான அளவு டாலர்களை பாய்ச்சிய பிறகும் நிலைமை சீரடையாமல் போனதற்கு ஊக பேர வணிகமும் ஒரு காரணம்.

‘மருந்தே நோய் முற்றிட காரணமானது’

ரிசர்வ் வங்கி பணப் புழக்கத்தைக் குறைத்து ஊக பேர வணிகத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. இதனால் வட்டி விகிதம் உயர்ந்தது. இது ஆரோக்கியமான தொழில் மற்றும் வர்த்தகத்தைப் பாதித்தது. அவர்களது வட்டிச் செலவினங்கள் அதிகரித்தன. இதனால் தொழில் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி 14.8.2013-இல் 2 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய கம்பெனிகள் தமது சொந்த மூலதனத்தைப் போல் 4 மடங்குவரை மூலதனத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்று முன்பு இருந்தது. இனி சொந்த மூலதனத்துக்குச் சமமான தொகையை மட்டுமே முதலீடு செய்யலாம் என அறிவித்தது.

இரண்டு, ஒரு குடிமகன் வெளிநாடுகளுக்கு ஒரு வருடத்தில் 2 லட்சம் டாலர் வரை அனுப்பலாம் என்று இருந்ததை, 75,000 டாலர் வரை மட்டுமே அனுப்பலாம் என மாற்றியது.

இவை, டாலர்கள் வெளிநாடுகளுக்குப் போவதைக் குறைக்கவும் ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட முறையான முடிவுகளே. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானவுடன் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்ததுதான் விநோதம். காரணம், அறிவிப்புகள் ஒரு தவறான சமிக்ஞையைக் கொடுத்தது. வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும் பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

இச்சட்டத்தை செயல்படுத்துவதற்குக் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் செலவாகும். இதனால் நடப்புக் கணக்கு இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சத்தினால் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்தது. திட்டம் நல்ல திட்டம் என்றாலும் அதை அறிமுகம் செய்வதற்கு இது சரியான தருணம் அல்ல என்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.

சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்

அண்மையில் புதிதாக ஒரு காரணமும் சேர்ந்து கொண்டது. சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் பற்றிய செய்தியும் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சமும் ரூபாய் மதிப்பு சரியக் காரணமாய் இருந்தது.

விளைவுகள் என்ன? யாருக்குப் பாதிப்பு?
பொதுவாக ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை; இறக்குமதியாளர்களுக்கு இழப்பு எற்படும். பணவீக்கமும் விலைவாசியும் உயரும்
இந்தியாவின் கச்சா எண்ணெ இறக்குமதிச் செலவு 2 லட்சம் கோடி ரூபாய் அளவு அதிகரிக்கும்.
வெளிநாடு சென்று உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம். உதாரணமாக, அமெரிக்காவில் 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு 45,000 டாலர் செலவு என்று வைத்துக் கொள்வோம். மார்ச் மாதத்துக்கு முந்திய நிலவரப்படி அவருக்கு செலவு 25 லட்சம் ரூபாய் ஆகும். வங்கிக் கடன் இதனை அனுமதிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 31 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
வியாபார நிமித்தம் வெளிநாடுகள் செல்லும் பயணிகளுக்கும் அதே போல் செலவு அதிகமாகும்.
பணப் புழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளின் விளைவாக கடனுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் ஆகியவற்றிற்கு வட்டி உயரும்.
இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலை உயரும்.
யாருக்கு நன்மை?
வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும் தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பும் டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வீடு கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பினால், குறைந்த டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு லாபம்.
தீர்வு என்ன?

அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது 277 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலராக உள்ளது. இதை தக்கவைத்துக் கொள்வது அவசியம்தான். எனினும் அவசியம் ஏற்படும்போது, பணச் சந்தையில் தேவையான டாலர்களைப் பாய்ச்சி டாலர் மதிப்பைக் குறைத்து, ரூபாயின் மதிப்பைத் தாங்கிப்பிடிக்க வேண்டும்.

அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீடுகள் வரும்போது டாலர்கள் வரத்து அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு உயரும். அண்மையில் நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு பல துறைகளில் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான பலன் நம்மை வந்து அடைய கால அவகாசம் தேவை. எனவே, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களை விரைந்து பரிசீலித்து, அரசின் முடிவுகளை வெளியிடவேண்டும். இது தொடர்பான அரசின் நடைமுறைகள் வெளிப்படையானவையாக இருத்தல் வேண்டும். இதுதொடர்பான விதிமுறைகளை அரசு முன்தேதியிட்டு மாற்றம் செய்யாது என்கிற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

ஏற்றுமதிக்குத் தேவை கூடுதல் சலுகைகள்

2009-இல் செய்ததுபோல், ஏற்றுமதியைப் பெருக்குவதற்கு சிறப்பு ஊக்குவிப்புகளை அறிவிக்க வேண்டும். ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள சிறு தொழில்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கிடவேண்டும். மொத்த ஏற்றுமதியில் 40 சதவிகிதம் சிறுதொழில்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதிக்கு அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளை மட்டும் நம்பி இராமல், லத்தீன் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் கஜகஸ்தான் போன்ற புதிய வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கும் ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும்.

ஈரான் எண்ணெயை ரூபாய் கொடுத்து வாங்கலாம்

டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஓரளவு குறைத்திட ஈரானிடமிருந்து ரூபாய் கொடுத்து எண்ணெய் வாங்கலாம்.

பிரிக் நாடுகளுடன் ரூபாய் வர்த்தகம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் வர்த்தகத்தை அந்தந்த நாட்டு நாணயத்தில் மேற்கொள்வது என்று கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ள விஷயத்தை நடைமுறைக்கு கொண்டுவர முனைப்பு காட்டவேண்டும்.

சாவரின் பாண்டுகள்

கடந்த காலத்தில் செய்ததுபோல், வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்பையும் முதலீடுகளையும் டாலரில் திரட்டுவதற்கு ஏதுவாக சாவரின் பாண்டுகளை வெளியிட வேண்டும். இதனால் தேச பக்தி நிறைந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பெற முடியும்.

நாம் எப்படி உதவ முடியும்?

இறக்குமதியைக் குறைப்பதற்கு நாம் உதவ முடியும். உதாரணமாக, மக்கள் வாரத்தில் ஒருநாள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். பல அலுவலகங்களில் வீட்டிலிருந்து கணினி மூலம் வேலை செய்வதை அனுமதிக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடிந்தவரை பொதுப் போக்குவரத்து, சைக்கிள் ஆகியவற்றின் மூலம் பெட்ரோல் பயன்பாட்டை, அதன் இறக்குமதியைக் குறைக்க உதவலாம்.

1. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள், ஓ.எம்.ஆர். போன்ற ஒரே பகுதியில் வசிக்கக் கூடும். அவர்கள் 4 பேர் இணைந்து ஒரே காரைப் பயன்படுத்தலாம். தலா ஒரு நாள் வாகனத்தை எடுப்பதன் மூலம் பெட்ரோல் மட்டும் அல்லாமல் போக்குவரத்துச் செலவையும் மிச்சப்படுத்தலாம். போக்குவரத்து நெருக்கடியையும் இதனால் குறைக்க முடியும். சுற்றுச் சூழலுக்கும் நல்லது.

2. தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது. இப்போது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறி இறங்குகிறது. முதலீடு நோக்கில் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் விலை ஸ்திரம் அடையும் வரை சில மாதங்களுக்காவது தள்ளிப் போடலாம். சமீபத்தில் தங்கம் விலை 1,000 ரூபாய் குறைந்தபோது, அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு, நகைக் கடைக்கு வந்ததாக ஒரு பெண், தொலைக்காட்சியில் சொன்னதைக் கேட்டிருப்பீர்கள்.

3. அயல்நாட்டில் இருக்கும் உறவினர்களை இந்தியாவில் முதலீடு செய்யச் சொல்லலாம். பல நாடுகளில் கிடைப்பதைவிட இந்தியாவில் கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதை எடுத்துச் சொல்லலாம்.

இப்படியாக அவரவர் சக்திக்கு ஏற்ப உதவலாம். நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்கிற உந்துதலே முக்கியம்!

நன்றி - எஸ். கோபால கிருஷ்ணன் - புதிய தலைமுறை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 11:06 pm

அலுவலகம் பக்கத்தில் நம்ம பூவன் போல தங்கிட்டா வண்டியும் தேவையில்லை பெட்ரோலும் தேவையில்லை.

ஓஎம்ஆரில் வேலை செய்கின்றவர் திருவெற்றியூரில் இருந்து வருகிறார். திருவெற்றியூரில் வேலை செய்கிறவர் ஓஎம்ஆரில் இருந்து வருகிறார். இது போன்ற செயல்பாடுகளை அரசாங்கம் இனம்கண்டு கட்டுப்படுத்தினால் எவ்வளவோ மிச்சம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 9:25 am

அதெப்படு முடியும் டெக்லஸ் - இன்றைய நிலையில் வீட்ல ரெண்டு பெரும் வேலை செய்ய வேண்டி இருக்கு, அதோடு எந்த வேலையும் நிரந்தரம் என்று சொல்ல இயலாது - அப்படி பார்த்தா டெண்ட் போட்டு இருந்துக்க வேண்டியதுதான் ஒவ்வொரு அலுவலகம் பக்கத்திலும் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 10:41 am

இல்லா தல இப்ப கிண்டியில் வேலை செய்பவர் இராயபேட்டையில் இருந்து தினமும் கிண்டி வந்து போவதற்கு பதில் கிண்டியில் வீடு எடுத்து (வாடகையாளர்கள்) தங்கினால் எவ்வளவு மிச்சம் அதை தான் சொன்னேன் புன்னகை

அலைச்சல் இல்லை
சாலையில் நெரிசல் குறையும்
பெட்ரோல் செலவு மிச்சம்
உடம்புவலி இல்லை
வீட்டில் ஏதேனும் அவசர தேவைகளை உடனே பார்க்கலாம்

இவருக்குப் மிச்சம்
நாட்டுக்கும் மிச்சம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 10:49 am

ஒண்டுக் குடித்தனத்தில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கயை ஓட்டும் நிலை தானே பலருக்கு டெக்லஸ்!!!!

கண்டிப்பா வேறு வழிகளை ஆய்ந்து நல்ல தீர்வு வந்தா சரி.




செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 7:06 am

பொறுத்திருந்து பார்ப்போம்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 12:59 pm

முதல்ல பிளாக் மனி கண்ட்ரோல் பண்ணுங்க எல்லாம் சரி ஆயிடும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 1:19 pm

mbalasaravanan wrote:முதல்ல பிளாக் மனி கண்ட்ரோல் பண்ணுங்க எல்லாம் சரி ஆயிடும்
அதெல்லாம் ஒண்ணும் கண்ட்ரோல் பண்ண முடியாது , நம்மலால முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் சேர்த்துக்கணும் அவ்வளவு தான் ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 16, 2013 1:37 pm

ராஜு சரவணன் wrote:இல்லா தல இப்ப கிண்டியில் வேலை செய்பவர் இராயபேட்டையில் இருந்து தினமும் கிண்டி வந்து போவதற்கு பதில் கிண்டியில் வீடு எடுத்து (வாடகையாளர்கள்) தங்கினால் எவ்வளவு மிச்சம் அதை தான் சொன்னேன் புன்னகை

அலைச்சல் இல்லை
சாலையில் நெரிசல் குறையும்
பெட்ரோல் செலவு மிச்சம்
உடம்புவலி இல்லை
வீட்டில் ஏதேனும் அவசர தேவைகளை உடனே பார்க்கலாம்

இவருக்குப் மிச்சம்
நாட்டுக்கும் மிச்சம்
கிண்டி மெற்றும் இராயபேட்டையில் நிச்சயம் வாடகை வித்தியாசம் இருக்கும் . கிண்டியில் வீடு வாடகை அதிகமாக இருக்கும் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக