புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைக்கவே பகீரென்கிறதே!
Page 1 of 1 •
நாள் முழுவதும் மின்வெட்டு; அதைத் தாங்க முடியாத ஒருவன் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிடம் சொன்னானாம்: ""ஐயா, ஏழெட்டு மணி நேரமா "பவர்' இல்லை; இருக்க முடியலை''.
மன்மோகன் சிங் சொன்னாராம்: ""எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாகவே "பவர்' இல்லை; இருக்க முடியாமலா போயிருச்சு?''
தலைமையமைச்சரின் நிலைக்கு இன்று இந்திய ரூபாயும் வந்துவிட்டது. அதற்கும் "பவர்' குறைந்துவிட்டது.
அரசின் நிதி தொடர்பான பொருளாதாரத்தை பேரளவுப் பொருளாதாரம் என்று கூறுவார்கள். அது கடந்த இரு வாரங்களுக்குள்ளாக பேரழிவுப் பொருளாதாரமாக காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால் மாறிக் கொண்டிருப்பது இந்தியாவைப் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைமையமைச்சரும் நிதியமைச்சரும் விழுந்து விட்ட ரூபாய்க்கு முட்டுக் கொடுக்க நாள் ஒன்றுக்கு மூன்று தடவை ஆலோசனை நடத்துகிறார்களாம்.
வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கலாம் என்றிருந்தது ஒரு தூரத்துக் கனவு. விடுதலை அடைந்து 65 ஆண்டுகளுக்குள் ரூபாய் 65 மடங்கு விழுந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் எழுபதைத் தொடும் என்று வேறு எதிர்பார்ப்பு!
தங்க இறக்குமதியைத் தடுத்து விட்டால் ரூபாய் கீழ்நோக்கி பாய்வதைத் தடுத்து விடலாம் என்பது ப. சிதம்பரத்தின் கையிலிருக்கும் ஒரே தீர்வு!
தங்க இறக்குமதிக்கு நான்கு விழுக்காடு வரி விதித்தார்; அடுத்த இரண்டு நாட்களில் ஆறு விழுக்காடாக்கினார்; எட்டாக்கினார்; பத்தாக்கி விட்டார்; பதிற்றுப் பத்தாக்கினாலும், சரிக்குச் சரி வரி விதித்தாலும், காதலியை "என் தங்கமே' என்று கொஞ்சுகிற ஒரு நாட்டில் தங்கத்தின் மீதுள்ள பற்று குறைய முடியுமா?
ஒரு பவுன் ரூ.19,000லிருந்து 24,000 ஆகியதுதான் கண்ட பயன். கெடுபிடிகளுக்குத் தக அது ரூ.30,000ஐத் தொட்டுத் தன் எல்லையை ரூ.35,000 ஆக வரையறுத்துக் கொள்ளும் என்கிறார்கள்!
இனி அடுத்த கட்டமாக வரிவிதிப்பைத் தாண்டி தங்க இறக்குமதியையே தடை செய்து விடலாம் நம்முடைய நிதியமைச்சர். அது ஒன்றும் பிழையில்லை; தங்கம் ஒன்றும் இன்றியமையாப் பொருளில்லை.
நம்முடைய அன்னியச் செலாவணியை தின்பவை தங்கமும், கச்சா எண்ணெயும்தான். கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்க முடியாது. உற்பத்தியிலிருந்து போக்குவரத்து வரை அனைத்திற்கும் அதுவே உந்து விசை.
இதுவரை கச்சா எண்ணெய் 170 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தாற்போல் தங்கம் 60 கோடி டாலருக்கு இறக்குமதி ஆனது.
ஒரு நாடு நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும்போது தங்கத்தின் இறக்குமதிக்கு டாலர் ஒதுக்கீடு என்பது பேதைமையிலெல்லாம் பேதைமை என்பதால் தங்கத்திற்கு நிதியமைச்சர் கொடுத்த நெருக்கடி நேரியதே!
ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று, பொன்னின் மீது கொண்டுள்ள மோகத்தைத் தீய்த்துவிடுங்கள் என்று முத்தம்மாளுக்கு ஞானோபதேசம் செய்யப் புறப்பட்டாரே சிதம்பரம், அது தபோவனத்திலிருந்து கொண்டு தாயுமானவர் பேச வேண்டிய பேச்சு; நிதியமைச்சர் சிதம்பரம் பேசக் கூடாது!
""தங்கம் என்பது தாமிரம், இரும்பு, வெண்கலம், அலுமினியம் போல ஒரு உலோகந்தானே'' என்று மூன்றாங் கிளாஸ் வரையே படித்த முத்தம்மாளுக்கு ஆர்ட்வர்டில் படித்த பெருமிதத்தில் பாடம் எடுத்திருக்கிறார் சிதம்பரம்!
அவள் திரும்ப நிதியமைச்சரிடம், "தங்கம் என்பது உலோகந்தான்; ஆனால் ரூபாய் என்பதும் வெறும் தாள்தானே' என்று கேட்டு விட்டதாகச் சொல்லுகிறார்கள். அதற்கு நிதியமைச்சர் என்ன சொன்னார் என்பது பதிவாகவில்லை!
தலைகுப்புற வீழ்ந்து கொண்டிருந்த திரிசங்குவுக்கு "நில்' என்று விசுவாமித்திரர் கட்டளை இட்டது போல, தலைகுப்புற வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய்க்கு "நில்' என்று நிதியமைச்சர் கட்டளை இட்டுத்தான் பார்க்கிறார். அது கேட்டால்தானே!
ஆகவே ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க சிதம்பரம் பன்னாட்டு நிதியத்திடம் இருநூறு டன் தங்கத்தை அடமானம் வைக்கப் போகிறாராம்!
இதைக் கேட்டு விட்டு முத்தியாலுப்பேட்டை முத்தம்மாள் சிரியாய் சிரிக்கிறாள்!
ஒரு அவசரம் ஆத்திரம் என்பது நிதியமைச்சருக்கு மட்டும்தானா? முத்தம்மாளுக்கும் இருக்காதா? முத்தம்மாளுக்கு ஒரு வட்டிக் கடை; நிதியமைச்சருக்கு உலக வங்கி! இவ்வளவுதானே வேறுபாடு!
தாமிரம் போன்றதுதான் தங்கம் என்றாரே நிதியமைச்சர்; தாமிரத்திற்கு உலக வங்கியில் கடன் கொடுக்கிறானா என்று வேறு கேட்டுவிட்டாளாம் அந்த முத்தம்மாள்!
உண்மையான செல்வம் என்பது உற்பத்திப் பொருள்கள்தாம்! அதைப் பிரதிநிதித்துவப் படுத்த வந்தவையே ரூபாய்த் தாளும் தங்கமும்!
தங்கமும் தாமிரமும் ஒன்று என்பது குதிரையும் கழுதையும் ஒன்று என்பது போன்றது!
தங்கத்திற்கு பன்னாட்டு ஏற்புடைமை உண்டு. அதற்குள்ள பல சிறப்புகளும், அதனுடைய கிடைப்பருமையுமே அதற்குக் காரணம்!
லண்டனிலுள்ள மார்கரெட் அதைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக் கொள்கிறாள்; முத்தியால்பேட்டை முத்தம்மாள் அதைக் கழுத்திலும் காதிலும் தொங்க விட்டுக் கொள்கிறாள். அவ்வளவுதான்!
இந்த ரூபாய்த் தாளை எவன் நம்புவான்? நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என்று எல்லாரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஒரு நெருக்கடியை ஈடுகட்ட வக்கு வகை தெரியாதபோது, அச்சகம்தான் கையிலிருக்கிறதே என்று விருப்பத்திற்கு அச்சடித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்; சோமாலியா நாட்டு ரூபாய்த் தாளைப் போல் நம்முடைய நாட்டு ரூபாய்த் தாளும் ஆகி விடாதா? சோமாலியாவில் சோம்பு வாங்கப் போனால் பலசரக்குக் கடைக்காரன் அமெரிக்க டாலர் வைத்திருக்கிறாயா என்று கேட்கிறானே! அந்த நிலை இந்தியாவுக்கு வந்து விடக் கூடாது என்றாலும், எதற்கும் முத்தம்மாள் எச்சரிக்கையாக இருக்க நினைப்பது குற்றமா?
எப்படியோ, சிதம்பரத்திற்கும் சிக்கல் தீர்ந்தது. கையிருப்பு இல்லாத நிலையில் தங்கம் வாங்குவதற்கு இனி 60 கோடி டாலர் செலவழிக்க வேண்டியதில்லை. ஆகவே முத்தம்மாளின் தங்க மோகத்தால்தான் நாடு முழுகிவிட்டது என்று சிதம்பரம் இனிமேல் சொல்ல முடியாது. புதிய காரணம் கண்டுபிடித்தாக வேண்டும்; இல்லையென்றால் நம்பத்தக்க விதமாகப் புதியதொன்றைப் படைத்து மொழிய வேண்டும்!
முத்தம்மாளுக்கும் பெரிதாக ஒன்றும் பிரச்னை இல்லை; அவள் மகள் கலியாணத்திற்குத் தேவையான கொஞ்சம் போல தங்கம், இனி வங்களாகுடா கடல் வழியாக வந்துவிடும்!
பொதுவாக நம்முடைய நாட்டின் பொருளாதாரம் கவலை அளிப்பதாகவே உள்ளது. நடப்புக் கணக்கில் பற்றாக்குறை என்பது அதிலுள்ள மிகப்பெரிய ஓட்டை. மீண்டும் நாடு 1991 நிலையை நோக்கி விரைகிறதோ எனறு அஞ்சுபவர்களும் இருக்கிறார்கள்!
பணவீக்கம் மோசமான நோய்; இப்போதையப் பணவீக்கம் பத்து விழுக்காடு; தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க மன்மோகன் அரசால் முடியவில்லை.
பணவீக்கம் முலாயம் சிங் மாதிரி; பயமுறுத்தி முலாயமைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது போல, கடுமையான நடவடிக்கைகளால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மட்டுமீறிய பணவீக்கத்தில் நாட்டில் எந்தப் பொருளும் கிடைக்காது; ஆனால் எல்லோரிடமும் பணம் இருக்கும்! மக்கள் படிப்படியாகப் பண்டமாற்று முறைக்கே போய் விடுவார்கள்!
பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டிலிருந்து குறைந்து இப்போது 4.5 விழுக்காடு ஆகிவிட்டது. இது பத்தாண்டுகளாக இல்லாத நிலை.
தொழில் உற்பத்தி குறைந்து குறைந்து வெறும் "ஒரு' விழுக்காடு ஆகி விட்டது. உற்பத்தியே இந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால் எதை ஏற்றுமதி செய்வது? ஏற்றுவதற்கு இனி மனிதர்களைத் தவிர வேறொன்றும் இருக்காதோ என்பது குறைந்த கவலை அல்லவே!
கார் உற்பத்தி கூட 12 விழுக்காடு விழுந்து விட்டது. இப்போதைய அளவு உற்பத்தி கூட, ஊராட்சித் தலைவர்கள், நகராட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் என்று இவர்களிடமுள்ள "வற்றாத பணப்புழக்கத்தை' நம்பியே நடக்கிறது. இந்தியாவில் "சனநாயகம் தழைத்தோங்குவதன்' பக்கவிளைவு இது!
சுருங்கச் சொன்னால் ஏற்றுமதி குறைந்து விட்டதால் அயல்நாட்டுப் பணத்தின் வரத்துக் குறைந்துவிட்டது; இறக்குமதி குறையாததால் டாலரின் தேவை கூடுதலாகி நெருக்கடி உண்டாகிவிட்டது!
பத்து இருபது நாள்களுக்கு முன்னர் அமெரிக்க நாட்டு "பெடரல் ரிசர்வில்' சில வர்த்தக சமிக்ஞைகள் வெளியாயின! பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலைகிற பண முதலைகளை ஈர்க்கும் வண்ணம் அந்தச் சமிக்ஞைகள் அமைந்திருந்தன.
அமெரிக்கப் பொருளாதாரம் தன்னுடைய சோர்வை அகற்றிக் கொண்டு விட்டது. ஆகவே வளரும் நாடுகளிலுள்ள முதலீடுகள் உறிஞ்சப்படுவதும் தொடங்கிவிட்டது.
2003க்கும் 2008க்குமிடையே, வற்றி வறண்டு போயிருந்த இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் சதை போட்டு மினுமினுக்கத் தொடங்கியதற்கு இந்த முதலீடுகளே காரணம்! இந்த காலகட்டத்தில் பொருளாதார அதிசயம் இந்தியாவில் நிகழ்ந்து விட்டதாக தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு அதிசயித்துப் போனார் மன்மோகன் சிங்.
ஆகஸ்ட் 14 ஆம் நாளில் முதலீடுகளை இறுக்கிப் பிடிக்கிற முயற்சியில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குப் பெரும்பணம் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தும் வண்ணம் நிதித்துறை அதிகாரிகள் சில கட்டளைகள் பிறப்பித்தனர்.
வாத்தியார் ஒரு பிள்ளையை உதைத்தால், அடுத்த பிள்ளையும் அஞ்சுவது போல, இந்திய நிறுவனங்களுக்கு நேர்ந்தது நமக்கும் நேர்ந்து விடுமோ, நம்முடைய கணக்குகளும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடுமோ என்றஞ்சிய வெளிநாட்டு முதலீடுகள் ஓட்டம் பிடிக்கத் தலைப்பட்டன. 1998ல் மலேசியா நிதி நெருக்கடியில் சிக்கியபோது அன்னிய முதலீடுகளை வெளியேறிவிட முடியாதபடி மூடி வைத்து விட்டனர். ஆசியாக்காரனெல்லாம் ஒரே மாதிரிதான் என்பது வெளிநாட்டுக்காரனின் எண்ணம்!
இந்த உத்தரவுக் குழப்பத்திற்குப் பிறகு இன்றுவரை ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் இந்தியப் பொருளாதாரத்தின் முன்பற்களில் மூன்று காணாமல் போய்விட்டது.
சிதம்பரத்தின் வளர்ப்புப் பிள்ளையான பங்குச் சந்தை அடுத்தடுத்த நாள்களில் 1,630 புள்ளிகளை இழந்துவிட்டது. வங்கிப் பங்குகள் வாயைப் பிளந்தது வியப்பல்லவே!
பதறிப்போன ரிசர்வ் வங்கி, கையிருப்பிலுள்ள டாலரை விற்று, அதற்குப் புழக்கத்தை ஏற்படுத்தி ரூபாயைச் சரிவிலிருந்து மீட்டு விடலாமா என்று முயல்கிறது.
இது ஒரு சிறு கால ஏற்பாடாகவே இருக்க முடியும்! தொடர்ந்து செய்தால் டாலர் கையிருப்பு குறைந்து இந்திய ரூபாய் மீண்டும் குட்டிக்கரணத்தைத் தொடங்கிவிடும்!
ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஏற்படுத்திய தொடர் விளைவுகளில் ஒன்றுதான் சிதம்பரம் முத்தம்மாளுக்குத் தங்கம் குறித்து ஞானோபதேசம் செய்ததும், அதற்கு அடுக்கடுக்காக வரி விதித்ததும்!
ஆனால் ஆகஸ்ட் 14-இல் நிதித்துறை பிறப்பித்த உத்தரவைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்திய ரூபாயின் பல்டிகளுக்குக் காரணம் என்பது மிகவும் மேம்போக்காகச் சொல்லப்படுவது!
பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் கிடையாது; தேசபக்தியும் கிடையாது. பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலையும் நாடோடிகள் அவர்கள்! நாம் ஒரு விடுதியில் தங்கி விட்டு ஒட்டுபற்று இல்லாமல் காலி செய்து விட்டு வந்து விடுவது போன்றதுதான் அவர்கள் முதலீடு செய்கிற நாடுகளோடு அவர்களுக்குள்ள உறவும்! எது இலாபகரமானது என்று பார்த்து வருவார்கள்; இங்கே மேய்ந்து முடிந்த பிறகு பச்சை தெரிகிற இன்னொரு நாட்டுக்குப் போய் விடுவார்கள்!
அமெரிக்கா சுணக்கமாக இருந்தபோது இங்கே வந்தார்கள்; சுணக்கம் நீங்கி நிமிர்ந்து விட்டது என்றவுடன் புறப்பட்டு விட்டார்கள்! வளரும் நாடுகளைவிட வளர்ந்த நாடுகள் சிறந்தவைதானே!
இந்தியா இயந்திரவியலில், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடு. மேலைநாட்டாரிடம் போய்ச் சப்பான் கற்றுக் கொண்டதுபோல, டெங் ஜியாபிங்கின் சீனாவும் கற்றுக் கொண்டதுபோல, நாமும் அவர்களை அவர்களுடைய முதலீட்டோடும் தொழில்நுட்பத்தோடும் பிடித்துக் கொண்டு வந்து, கன்னத்தில் அரகரா போட்டுக் கொண்டுகூட கற்றுக் கொள்ளலாம்! அந்த முதலீடும் ஓரளவு நிலையானதாக இருக்கும்!
வர்த்தக முதலீடுகளுக்கு அவர்களின்மீது சாய்ந்திருந்து விட்டு முட்டை உருவி விட்டானே என்று சொல்வதில் பயனில்லை!
அமெரிக்க பெடரல் ரிசர்வின் ஒரு சிறு சமிக்ஞை இந்தியாவை மட்டுமா ஆட்டியது? பிரேசிலில் இருந்து இந்தோனேசியா வரை பல நாடுகள் படபடத்துப் போய் விட்டனவே!
ஆனால் இவ்வளவு குறுகிய நாள்களில் மிகவும் பாதிப்படைந்தது இந்தியாதான்! பிடி என்ன நம்முடைய நிதியமைச்சர் சிதம்பரத்திடமா இருக்கிறது?
இந்திய ரூபாய் முழுக்கால் அளவுக்கு வேட்டி கட்டியிருந்தது; அது இப்போது முழங்கால் அளவுக்குக் குறைந்து துண்டாகிவிட்டது! இதுவும் குறைந்து கோவணமாகி விடுமோ என்னவோ!
நினைக்கவே பகீரென்கிறதே!
பழ. கருப்பையா - கட்டுரையாளர்: சட்டப்பேரவை உறுப்பினர். நன்றி-தினமணி
மன்மோகன் சிங் சொன்னாராம்: ""எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாகவே "பவர்' இல்லை; இருக்க முடியாமலா போயிருச்சு?''
தலைமையமைச்சரின் நிலைக்கு இன்று இந்திய ரூபாயும் வந்துவிட்டது. அதற்கும் "பவர்' குறைந்துவிட்டது.
அரசின் நிதி தொடர்பான பொருளாதாரத்தை பேரளவுப் பொருளாதாரம் என்று கூறுவார்கள். அது கடந்த இரு வாரங்களுக்குள்ளாக பேரழிவுப் பொருளாதாரமாக காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால் மாறிக் கொண்டிருப்பது இந்தியாவைப் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைமையமைச்சரும் நிதியமைச்சரும் விழுந்து விட்ட ரூபாய்க்கு முட்டுக் கொடுக்க நாள் ஒன்றுக்கு மூன்று தடவை ஆலோசனை நடத்துகிறார்களாம்.
வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கலாம் என்றிருந்தது ஒரு தூரத்துக் கனவு. விடுதலை அடைந்து 65 ஆண்டுகளுக்குள் ரூபாய் 65 மடங்கு விழுந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் எழுபதைத் தொடும் என்று வேறு எதிர்பார்ப்பு!
தங்க இறக்குமதியைத் தடுத்து விட்டால் ரூபாய் கீழ்நோக்கி பாய்வதைத் தடுத்து விடலாம் என்பது ப. சிதம்பரத்தின் கையிலிருக்கும் ஒரே தீர்வு!
தங்க இறக்குமதிக்கு நான்கு விழுக்காடு வரி விதித்தார்; அடுத்த இரண்டு நாட்களில் ஆறு விழுக்காடாக்கினார்; எட்டாக்கினார்; பத்தாக்கி விட்டார்; பதிற்றுப் பத்தாக்கினாலும், சரிக்குச் சரி வரி விதித்தாலும், காதலியை "என் தங்கமே' என்று கொஞ்சுகிற ஒரு நாட்டில் தங்கத்தின் மீதுள்ள பற்று குறைய முடியுமா?
ஒரு பவுன் ரூ.19,000லிருந்து 24,000 ஆகியதுதான் கண்ட பயன். கெடுபிடிகளுக்குத் தக அது ரூ.30,000ஐத் தொட்டுத் தன் எல்லையை ரூ.35,000 ஆக வரையறுத்துக் கொள்ளும் என்கிறார்கள்!
இனி அடுத்த கட்டமாக வரிவிதிப்பைத் தாண்டி தங்க இறக்குமதியையே தடை செய்து விடலாம் நம்முடைய நிதியமைச்சர். அது ஒன்றும் பிழையில்லை; தங்கம் ஒன்றும் இன்றியமையாப் பொருளில்லை.
நம்முடைய அன்னியச் செலாவணியை தின்பவை தங்கமும், கச்சா எண்ணெயும்தான். கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்க முடியாது. உற்பத்தியிலிருந்து போக்குவரத்து வரை அனைத்திற்கும் அதுவே உந்து விசை.
இதுவரை கச்சா எண்ணெய் 170 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தாற்போல் தங்கம் 60 கோடி டாலருக்கு இறக்குமதி ஆனது.
ஒரு நாடு நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும்போது தங்கத்தின் இறக்குமதிக்கு டாலர் ஒதுக்கீடு என்பது பேதைமையிலெல்லாம் பேதைமை என்பதால் தங்கத்திற்கு நிதியமைச்சர் கொடுத்த நெருக்கடி நேரியதே!
ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று, பொன்னின் மீது கொண்டுள்ள மோகத்தைத் தீய்த்துவிடுங்கள் என்று முத்தம்மாளுக்கு ஞானோபதேசம் செய்யப் புறப்பட்டாரே சிதம்பரம், அது தபோவனத்திலிருந்து கொண்டு தாயுமானவர் பேச வேண்டிய பேச்சு; நிதியமைச்சர் சிதம்பரம் பேசக் கூடாது!
""தங்கம் என்பது தாமிரம், இரும்பு, வெண்கலம், அலுமினியம் போல ஒரு உலோகந்தானே'' என்று மூன்றாங் கிளாஸ் வரையே படித்த முத்தம்மாளுக்கு ஆர்ட்வர்டில் படித்த பெருமிதத்தில் பாடம் எடுத்திருக்கிறார் சிதம்பரம்!
அவள் திரும்ப நிதியமைச்சரிடம், "தங்கம் என்பது உலோகந்தான்; ஆனால் ரூபாய் என்பதும் வெறும் தாள்தானே' என்று கேட்டு விட்டதாகச் சொல்லுகிறார்கள். அதற்கு நிதியமைச்சர் என்ன சொன்னார் என்பது பதிவாகவில்லை!
தலைகுப்புற வீழ்ந்து கொண்டிருந்த திரிசங்குவுக்கு "நில்' என்று விசுவாமித்திரர் கட்டளை இட்டது போல, தலைகுப்புற வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய்க்கு "நில்' என்று நிதியமைச்சர் கட்டளை இட்டுத்தான் பார்க்கிறார். அது கேட்டால்தானே!
ஆகவே ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க சிதம்பரம் பன்னாட்டு நிதியத்திடம் இருநூறு டன் தங்கத்தை அடமானம் வைக்கப் போகிறாராம்!
இதைக் கேட்டு விட்டு முத்தியாலுப்பேட்டை முத்தம்மாள் சிரியாய் சிரிக்கிறாள்!
ஒரு அவசரம் ஆத்திரம் என்பது நிதியமைச்சருக்கு மட்டும்தானா? முத்தம்மாளுக்கும் இருக்காதா? முத்தம்மாளுக்கு ஒரு வட்டிக் கடை; நிதியமைச்சருக்கு உலக வங்கி! இவ்வளவுதானே வேறுபாடு!
தாமிரம் போன்றதுதான் தங்கம் என்றாரே நிதியமைச்சர்; தாமிரத்திற்கு உலக வங்கியில் கடன் கொடுக்கிறானா என்று வேறு கேட்டுவிட்டாளாம் அந்த முத்தம்மாள்!
உண்மையான செல்வம் என்பது உற்பத்திப் பொருள்கள்தாம்! அதைப் பிரதிநிதித்துவப் படுத்த வந்தவையே ரூபாய்த் தாளும் தங்கமும்!
தங்கமும் தாமிரமும் ஒன்று என்பது குதிரையும் கழுதையும் ஒன்று என்பது போன்றது!
தங்கத்திற்கு பன்னாட்டு ஏற்புடைமை உண்டு. அதற்குள்ள பல சிறப்புகளும், அதனுடைய கிடைப்பருமையுமே அதற்குக் காரணம்!
லண்டனிலுள்ள மார்கரெட் அதைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக் கொள்கிறாள்; முத்தியால்பேட்டை முத்தம்மாள் அதைக் கழுத்திலும் காதிலும் தொங்க விட்டுக் கொள்கிறாள். அவ்வளவுதான்!
இந்த ரூபாய்த் தாளை எவன் நம்புவான்? நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என்று எல்லாரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஒரு நெருக்கடியை ஈடுகட்ட வக்கு வகை தெரியாதபோது, அச்சகம்தான் கையிலிருக்கிறதே என்று விருப்பத்திற்கு அச்சடித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்; சோமாலியா நாட்டு ரூபாய்த் தாளைப் போல் நம்முடைய நாட்டு ரூபாய்த் தாளும் ஆகி விடாதா? சோமாலியாவில் சோம்பு வாங்கப் போனால் பலசரக்குக் கடைக்காரன் அமெரிக்க டாலர் வைத்திருக்கிறாயா என்று கேட்கிறானே! அந்த நிலை இந்தியாவுக்கு வந்து விடக் கூடாது என்றாலும், எதற்கும் முத்தம்மாள் எச்சரிக்கையாக இருக்க நினைப்பது குற்றமா?
எப்படியோ, சிதம்பரத்திற்கும் சிக்கல் தீர்ந்தது. கையிருப்பு இல்லாத நிலையில் தங்கம் வாங்குவதற்கு இனி 60 கோடி டாலர் செலவழிக்க வேண்டியதில்லை. ஆகவே முத்தம்மாளின் தங்க மோகத்தால்தான் நாடு முழுகிவிட்டது என்று சிதம்பரம் இனிமேல் சொல்ல முடியாது. புதிய காரணம் கண்டுபிடித்தாக வேண்டும்; இல்லையென்றால் நம்பத்தக்க விதமாகப் புதியதொன்றைப் படைத்து மொழிய வேண்டும்!
முத்தம்மாளுக்கும் பெரிதாக ஒன்றும் பிரச்னை இல்லை; அவள் மகள் கலியாணத்திற்குத் தேவையான கொஞ்சம் போல தங்கம், இனி வங்களாகுடா கடல் வழியாக வந்துவிடும்!
பொதுவாக நம்முடைய நாட்டின் பொருளாதாரம் கவலை அளிப்பதாகவே உள்ளது. நடப்புக் கணக்கில் பற்றாக்குறை என்பது அதிலுள்ள மிகப்பெரிய ஓட்டை. மீண்டும் நாடு 1991 நிலையை நோக்கி விரைகிறதோ எனறு அஞ்சுபவர்களும் இருக்கிறார்கள்!
பணவீக்கம் மோசமான நோய்; இப்போதையப் பணவீக்கம் பத்து விழுக்காடு; தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க மன்மோகன் அரசால் முடியவில்லை.
பணவீக்கம் முலாயம் சிங் மாதிரி; பயமுறுத்தி முலாயமைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது போல, கடுமையான நடவடிக்கைகளால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மட்டுமீறிய பணவீக்கத்தில் நாட்டில் எந்தப் பொருளும் கிடைக்காது; ஆனால் எல்லோரிடமும் பணம் இருக்கும்! மக்கள் படிப்படியாகப் பண்டமாற்று முறைக்கே போய் விடுவார்கள்!
பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டிலிருந்து குறைந்து இப்போது 4.5 விழுக்காடு ஆகிவிட்டது. இது பத்தாண்டுகளாக இல்லாத நிலை.
தொழில் உற்பத்தி குறைந்து குறைந்து வெறும் "ஒரு' விழுக்காடு ஆகி விட்டது. உற்பத்தியே இந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால் எதை ஏற்றுமதி செய்வது? ஏற்றுவதற்கு இனி மனிதர்களைத் தவிர வேறொன்றும் இருக்காதோ என்பது குறைந்த கவலை அல்லவே!
கார் உற்பத்தி கூட 12 விழுக்காடு விழுந்து விட்டது. இப்போதைய அளவு உற்பத்தி கூட, ஊராட்சித் தலைவர்கள், நகராட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் என்று இவர்களிடமுள்ள "வற்றாத பணப்புழக்கத்தை' நம்பியே நடக்கிறது. இந்தியாவில் "சனநாயகம் தழைத்தோங்குவதன்' பக்கவிளைவு இது!
சுருங்கச் சொன்னால் ஏற்றுமதி குறைந்து விட்டதால் அயல்நாட்டுப் பணத்தின் வரத்துக் குறைந்துவிட்டது; இறக்குமதி குறையாததால் டாலரின் தேவை கூடுதலாகி நெருக்கடி உண்டாகிவிட்டது!
பத்து இருபது நாள்களுக்கு முன்னர் அமெரிக்க நாட்டு "பெடரல் ரிசர்வில்' சில வர்த்தக சமிக்ஞைகள் வெளியாயின! பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலைகிற பண முதலைகளை ஈர்க்கும் வண்ணம் அந்தச் சமிக்ஞைகள் அமைந்திருந்தன.
அமெரிக்கப் பொருளாதாரம் தன்னுடைய சோர்வை அகற்றிக் கொண்டு விட்டது. ஆகவே வளரும் நாடுகளிலுள்ள முதலீடுகள் உறிஞ்சப்படுவதும் தொடங்கிவிட்டது.
2003க்கும் 2008க்குமிடையே, வற்றி வறண்டு போயிருந்த இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் சதை போட்டு மினுமினுக்கத் தொடங்கியதற்கு இந்த முதலீடுகளே காரணம்! இந்த காலகட்டத்தில் பொருளாதார அதிசயம் இந்தியாவில் நிகழ்ந்து விட்டதாக தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு அதிசயித்துப் போனார் மன்மோகன் சிங்.
ஆகஸ்ட் 14 ஆம் நாளில் முதலீடுகளை இறுக்கிப் பிடிக்கிற முயற்சியில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குப் பெரும்பணம் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தும் வண்ணம் நிதித்துறை அதிகாரிகள் சில கட்டளைகள் பிறப்பித்தனர்.
வாத்தியார் ஒரு பிள்ளையை உதைத்தால், அடுத்த பிள்ளையும் அஞ்சுவது போல, இந்திய நிறுவனங்களுக்கு நேர்ந்தது நமக்கும் நேர்ந்து விடுமோ, நம்முடைய கணக்குகளும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடுமோ என்றஞ்சிய வெளிநாட்டு முதலீடுகள் ஓட்டம் பிடிக்கத் தலைப்பட்டன. 1998ல் மலேசியா நிதி நெருக்கடியில் சிக்கியபோது அன்னிய முதலீடுகளை வெளியேறிவிட முடியாதபடி மூடி வைத்து விட்டனர். ஆசியாக்காரனெல்லாம் ஒரே மாதிரிதான் என்பது வெளிநாட்டுக்காரனின் எண்ணம்!
இந்த உத்தரவுக் குழப்பத்திற்குப் பிறகு இன்றுவரை ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் இந்தியப் பொருளாதாரத்தின் முன்பற்களில் மூன்று காணாமல் போய்விட்டது.
சிதம்பரத்தின் வளர்ப்புப் பிள்ளையான பங்குச் சந்தை அடுத்தடுத்த நாள்களில் 1,630 புள்ளிகளை இழந்துவிட்டது. வங்கிப் பங்குகள் வாயைப் பிளந்தது வியப்பல்லவே!
பதறிப்போன ரிசர்வ் வங்கி, கையிருப்பிலுள்ள டாலரை விற்று, அதற்குப் புழக்கத்தை ஏற்படுத்தி ரூபாயைச் சரிவிலிருந்து மீட்டு விடலாமா என்று முயல்கிறது.
இது ஒரு சிறு கால ஏற்பாடாகவே இருக்க முடியும்! தொடர்ந்து செய்தால் டாலர் கையிருப்பு குறைந்து இந்திய ரூபாய் மீண்டும் குட்டிக்கரணத்தைத் தொடங்கிவிடும்!
ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஏற்படுத்திய தொடர் விளைவுகளில் ஒன்றுதான் சிதம்பரம் முத்தம்மாளுக்குத் தங்கம் குறித்து ஞானோபதேசம் செய்ததும், அதற்கு அடுக்கடுக்காக வரி விதித்ததும்!
ஆனால் ஆகஸ்ட் 14-இல் நிதித்துறை பிறப்பித்த உத்தரவைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்திய ரூபாயின் பல்டிகளுக்குக் காரணம் என்பது மிகவும் மேம்போக்காகச் சொல்லப்படுவது!
பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் கிடையாது; தேசபக்தியும் கிடையாது. பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலையும் நாடோடிகள் அவர்கள்! நாம் ஒரு விடுதியில் தங்கி விட்டு ஒட்டுபற்று இல்லாமல் காலி செய்து விட்டு வந்து விடுவது போன்றதுதான் அவர்கள் முதலீடு செய்கிற நாடுகளோடு அவர்களுக்குள்ள உறவும்! எது இலாபகரமானது என்று பார்த்து வருவார்கள்; இங்கே மேய்ந்து முடிந்த பிறகு பச்சை தெரிகிற இன்னொரு நாட்டுக்குப் போய் விடுவார்கள்!
அமெரிக்கா சுணக்கமாக இருந்தபோது இங்கே வந்தார்கள்; சுணக்கம் நீங்கி நிமிர்ந்து விட்டது என்றவுடன் புறப்பட்டு விட்டார்கள்! வளரும் நாடுகளைவிட வளர்ந்த நாடுகள் சிறந்தவைதானே!
இந்தியா இயந்திரவியலில், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடு. மேலைநாட்டாரிடம் போய்ச் சப்பான் கற்றுக் கொண்டதுபோல, டெங் ஜியாபிங்கின் சீனாவும் கற்றுக் கொண்டதுபோல, நாமும் அவர்களை அவர்களுடைய முதலீட்டோடும் தொழில்நுட்பத்தோடும் பிடித்துக் கொண்டு வந்து, கன்னத்தில் அரகரா போட்டுக் கொண்டுகூட கற்றுக் கொள்ளலாம்! அந்த முதலீடும் ஓரளவு நிலையானதாக இருக்கும்!
வர்த்தக முதலீடுகளுக்கு அவர்களின்மீது சாய்ந்திருந்து விட்டு முட்டை உருவி விட்டானே என்று சொல்வதில் பயனில்லை!
அமெரிக்க பெடரல் ரிசர்வின் ஒரு சிறு சமிக்ஞை இந்தியாவை மட்டுமா ஆட்டியது? பிரேசிலில் இருந்து இந்தோனேசியா வரை பல நாடுகள் படபடத்துப் போய் விட்டனவே!
ஆனால் இவ்வளவு குறுகிய நாள்களில் மிகவும் பாதிப்படைந்தது இந்தியாதான்! பிடி என்ன நம்முடைய நிதியமைச்சர் சிதம்பரத்திடமா இருக்கிறது?
இந்திய ரூபாய் முழுக்கால் அளவுக்கு வேட்டி கட்டியிருந்தது; அது இப்போது முழங்கால் அளவுக்குக் குறைந்து துண்டாகிவிட்டது! இதுவும் குறைந்து கோவணமாகி விடுமோ என்னவோ!
நினைக்கவே பகீரென்கிறதே!
பழ. கருப்பையா - கட்டுரையாளர்: சட்டப்பேரவை உறுப்பினர். நன்றி-தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னமோ நடக்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|