புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006523சென்னை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது.
கடந்த சில நாட்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வந்தாலும், நேற்று டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு, ரூ.68.8 என்று சரிந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி சுமை மேலும் அதிகரிக்கும் நிலை உட்பட பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க, மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்த போதும், மத்திய அரசின் முக்கிய திட்டமான, உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், ஏழை மக்களின் பசியை முற்றிலும் ஒழிக்கும் என வாதங்கள் வைத்தாலும், அதை அமல்படுத்த தேவைப்படும், 90 ஆயிரம் கோடி ரூபாய் சுமையாகும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இது, தற்போதைய பொருளாதார பலவீனத்தை வெளிச்சமிட்டு காட்டி இருக்கிறது."ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஒரேயடியாக சீராகாவிட்டாலும், அது அன்னியச் செலாவணி சந்தையில் அதற்குரிய இடத்தை பெறும்' என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், பங்குச் சந்தை வீழ்ச்சி, தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை, இனி அடுத்த தேர்தலில் புதிய ஆட்சி தான், தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் என்ற நிலையை இப்போது உருவாக்கிவிட்டது.
ஏற்கனவே ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஏற்பட்டுள்ள அதிக இடைவெளியை சந்திக்க , அரசு முயன்று வருகிறது.இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதார பாதிப்பு நேரடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல், நுகர்பொருள், வாகனம், பிரிட்ஜ், மொபைல் போன், "டிவி' உள்ளிட்ட அன்றாட உபயோக சாதனங்கள்
விலையை உயர்த்தும். இறக்குமதி மூலம் தயாரிக்கப்படும், உற்பத்தி பொருட்கள் அனைத்தும் விலை உயரும்.தவிரவும் கச்சா எண்ணெய் இறக்குமதி விலையும், டாலர் மதிப்பு உயர்வால் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்படும். சமையல் எண்ணெய் இறக்குமதி விலையும் இனி அதிகமாகும்.மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் அமலாகி செயல்படும் போது, இதன் பாதிப்பு எந்த அளவுக்குஇருக்கும் என்பதை, நேரடியாக உணர முடியும். ஏனெனில், அதிக மானியம் தரப்படும் போது, அத்திட்ட அமலாக்கத்தில் குளறுபடி மற்றும் கசிவு காரணமாக ஏற்படும் பாதிப்பு, பெருமளவில் இருக்கும் என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நாள்தோறும் புதிய வீழ்ச்சி வரம்பை சந்தித்து வருவது, அச்சத்தை ஏற்படுத்துகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 66ஐ தாண்டி, 66.19 ஆக இருந்தது.இந்நிலையில், நேற்று அன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 68 ரூபாயைத் தாண்டியது. வர்த்தகத்தின் இடையே, 68.85 ஆக, மிகப் பெரிய சரிவை சந்தித்தது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி, அதிக அளவில் டாலரை விற்பனை செய்யுமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, டாலர் புழக்கம் அதிகரித்து, ரூபாய் மதிப்பின் சரிவு, ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், நேற்று, வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 2.58 ரூபாய் குறைந்து, 68.83 ஆக சரிவடைந்தது. கடந்த, 1995ம் ஆண்டிற்குப் பின், நேற்று தான், ரூபாய் மதிப்பு, ஒரே நாளில் இந்த அளவிற்கு குறைந்துள்ளது.கடந்த மூன்று வர்த்தக தினங்களில், ரூபாய் மதிப்பு, 8.6 சதவீதமும், நடப்பு ஆகஸ்ட் மாதத்தில், 12 சதவீதமும் வீழ்ச்சிகண்டுள்ளது. மொத்தத்தில், நடப்பாண்டு ஜனவரி முதல், தற்போது வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 19.50 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், "ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி குறித்து பீதி அடையத் தேவையில்லை; அது தானாகவே ஒரு நிலைக்கு வரும்' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், அர்விந்த் மாயாராம் தெரிவித்துள்ளார்.சென்ற நிதியாண்டில், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக குறைந்துள்ளது. இது 5.5 சதவீதமாக உயரும் என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அண்மையில் தெரிவித்திருந்தார்.ஆனால், தற்போதைய ‹ழலில், இந்த இலக்கை எட்டுவதற்கான சாத்தியமில்லை என, முன்னணி நிதி ஆய்வு அமைப்புகள் தெரிவித்தன.
இந்த நிலையை பொருளாதார அவசர நிலை என, எதிர்க்கட்சிகள் வர்ணிப்பதுடன், இனி இதற்கான தீர்வைக் காண, புதிய திட்டங்களைக் கொண்ட ஆட்சி, தேர்தலுக்கு பின் அமைவதே தீர்வாகும் என்று கருத்து தெரிவித்துள்ளன.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006628- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயோ ஏற்கனவே எல்லா விலையும் விண்ணை தொடுகிறதே !
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006630- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஐயோ, எங்களுக்கு ரொம்ப வசதியா போச்சு, கொஞ்சம் பணம் எடுத்து வந்த போதும், ஊரு முழுவதும் நல்ல சுத்திட்டு திரும்ப மலேசியா வந்திடலாம்.
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006662இது தான் முக்கிய காரணம்ஏற்கனவே ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஏற்பட்டுள்ள அதிக இடைவெளியை சந்திக்க , அரசு முயன்று வருகிறது
நம்மிடம் இல்லாததால் அதிக விலை கொடுத்து அடுத்த நாட்டிடம் இருந்து வாங்குகிறோம்
மேலும் சிரியா போர் பதற்றத்தாலும் Supply and Demand பெருமளவில் பாதிக்கப்படும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006666- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
70 - 75 போனாலும் ஆச்சரியம் இல்லை
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006669- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏன் 100 தொடாதா? என்கிட்ட கொஞ்சம் டாலர்ஸ் இருக்குயினியவன் wrote:70 - 75 போனாலும் ஆச்சரியம் இல்லை
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006670- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாவி மனுஷா - கொஞ்சம் சில்லரயை மாற்ற மக்கள் கஷ்டப் படணுமாஅசுரன் wrote:ஏன் 100 தொடாதா? என்கிட்ட கொஞ்சம் டாலர்ஸ் இருக்கு
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006671- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:பாவி மனுஷா - கொஞ்சம் சில்லரயை மாற்ற மக்கள் கஷ்டப் படணுமாஅசுரன் wrote:ஏன் 100 தொடாதா? என்கிட்ட கொஞ்சம் டாலர்ஸ் இருக்கு
மன்னுமோகன் கிட்ட நிறைய இருக்காம் அவர திட்டமாட்டேங்கிறீங்களே
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006672ரூபாயின் மதிப்பு !!!
புதைகுழியில் வீழ்ந்துகொண்டு இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு. நீங்கள் ஒரு அமெரிக்க டாலரை வாங்க வேண்டுமானால், 69 இந்திய ரூபாய்களைக் கொடுத்தாக வேண்டும். இந்தியப் பொருளாதாரம், இத்தனை மோசமான நிலையில் இதற்கு முன்பு இருந்ததே இல்லை. சீட்டுக்கட்டு மாளிகையைப் போல சரிந்துவரும் இந்திய ரூபாயின் மதிப்புக் காரணமாக, பங்குச் சந்தை முதல் காய்கறிச் சந்தை வரையிலும் எங்கும் எதிலும் தடுமாற்றம்.
சரி... ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்தது?
இந்தக் கேள்விக்கான பதில், மொத்த இந்தியப் பொருளாதாரத்துடனும், அரசின் கொள்கைகளுடனும் பின்னிப்பிணைந்த ஒன்று. சமீபகாலமாக இந்தியப் பிரதமரும், நிதி அமைச்சரும் 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகவும் அபாயகரமான எல்லைக்குச் சென்றுகொண்டிருக்கிறது’ என்று கவலை தெரிவித்துவருவதைப் பார்த்திருக்கலாம். அது என்ன 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை?’
'ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடைப்பட்ட இடைவெளி’ என்று இதை எளிமையாக புரிந்துகொள்ளலாம். இறக்குமதி அதிகம்; ஏற்றுமதி குறைவு. அதாவது செலவு அதிகம், வரவு குறைவு. இரண்டுக்கும் இடைப்பட்டப் பற்றாக்குறைதான் நடப்புக் கணக்குப் பற்றாக் குறை.
இந்திய ரிசர்வ் வங்கியின் வரையறைப்படி, நடப்புக்கணக்குப் பற்றாக்குறை என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகி தத்துக்கு அதிகமாகக் கூடாது. ஆனால், இப்போ தைய நிலவரம் 5 சதவிகிதத்தைத் தொட்டு விட்டது. 2012-13 நிதியாண்டு நிலவரப்படி, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் மதிப்பு 9,420 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில், 5,65,200 கோடி ரூபாய். 'இப்படி அதிகரித்துக்கொண்டேபோனால், இந்தியா வுக்கான கடன் பெறும் தகுதியைக் குறைத்து விடுவோம்’ என்று ஸ்டாண்டர்டு அண்ட் புவர்
என்ற சர்வதேசத் தர நிர்ணய நிறுவனம் எச்ச ரித்துள்ளது.
இதைச் சரிசெய்ய என்ன செய்வது?
ஏற்றுமதியை அதிகரிப்பது ஒரு நீண்ட காலத் தீர்வு. உடனடித் தீர்வு என்றால், தற்போது இந்தியாவிடம் அந்நியச் செலாவணியாக கையிருப்பில் உள்ள 29,000 கோடி டாலரில் இருந்து எடுத்து சமாளிக்கலாம். ஆனால், 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அடைத்தே ஆக வேண்டிய வெளிநாட்டுக் கடன் மட்டுமே 17,200 கோடி அமெரிக்க டாலர், மலைபோல் மிரட்டுகிறது. இந்தப் பணத்தையும் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் இருந்து எடுத்து அடைத்துவிட்டால், இந்தியாவிடம் வெறும் 2,500 கோடி டாலர் மட்டுமே அந்நியச் செலாவணியாக மிச்சம் இருக்கும். அப்புறம் உலகில் எந்த நாடும் இந்தியாவை மதிக்காது. இந்திய ரூபாயின் மதிப்பு என்பது, எவ்வளவு அதிகமான அமெரிக்க டாலர்களை அந்நியச் செலாவணியாக வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஆகவே, அந்நியச் செலாவணியில் அதிகம் கைவைக்க முடியாது.
வேறு என்னதான் செய்வது?
'இந்த நிலைமையைச் சமாளிக்க அந்நிய முதலீடுகளை நாட்டுக்குள் மேலும் கொண்டுவர வேண்டும். அதிகமான முதலீடுகள் உள்ளே வரும்போது இந்த நிலைமை சரியாகும்’ என்கிறார் சிதம்பரம். ஆனால், யதார்த்தம் அவ்வாறு இல்லை. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 500 கோடி டாலர் மதிப்புள்ள அந்நிய முதலீடுகள், இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
ஏன் அவர்கள் வெளியேறினார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள். அவர்களுக்கு இந்திய சந்தையில் கிடைக்கும் லாபம் போதுமானதாக இல்லை. மன்மோகன் மேற்கொள்ளும் 'சீர்திருத்தத்தின்’ வேகம் போதவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். இரண்டாவது, இந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தண்ணீர் உள்ள இடத்தை நோக்கிப் பறக்கும் கொக்குகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதாரத் தள்ளாட்டம் ஏற்பட்டபோது, அங்கிருந்த தங்கள் முதலீடுகளை உருவிக்கொண்டுவந்து இந்திய சந்தைகளில் கொட்டினார்கள். இப்போது அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் சீரடைந்துள்ளது. உடனே இங்குள்ள முதலீடுகளை பெயர்த்து எடுத்துக்கொண்டு அங்கு கிளம்பிவிட்டார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தி முதலீட்டாளர்களால்தான் இந்தியப் பொருளாதாரம் எதிர்பாராத பெரும் சரிவுகளை சந்திக்கிறது. ஆனால், பிரதமரும் நிதி அமைச்சரும் 'அதே முதலீட்டாளர்களை மேலும் ஈர்க்க வேண்டும், அதுதான் தீர்வு’ என்கிறார்கள்.
இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2009-ம் ஆண்டு 13,53,000 கோடி ரூபாயாக இருந்த வெளிநாட்டுக் கடன், 2012 மார்ச் மாதத்தில் 43,43,400 கோடியாக உயர்ந்தது. இந்தக் கடன்களில் 44 சதவிகிதத்தை வாங்கியிருப்பது, ரத்தன் டாடா மற்றும் அம்பானி குழும நிறுவனங்களே. இவை தனிப்பட்ட நிறுவனங்கள் என்றபோதிலும், இவர்கள் வாங்கிஇருக்கும் வெளிநாட்டுக் கடன்களுக்கும் இந்திய அரசுதான் பொறுப்பு. இந்த நிறுவனங்கள் வாங்கியிருக்கும் பல லட்சம் கோடிக் கடன்களை திருப்பிச் செலுத்தாததும், ரூபாய் மதிப்பு சரிவடைய இன்னொரு முக்கியக் காரணம்.
மறுபக்கம் அந்நியச் செலாவணி, டாலர் கையிருப்பு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை... இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் இந்தியப் பொருளாதாரத்தின் தடுமாற்றத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாகத் தற்கொலை செய்துகொள்வதும், அத்தியாவசியப் பொருட்கள் மேலும் மேலும் விலை உயர்ந்து கொண்டே செல்வதும்தான் பொருளாதாரத் தள்ளாட்டத்துக்கான உண்மையான அறிகுறிகள். அவற்றைச் சரிசெய்ய, சிதம்பரமும் பேசுவது இல்லை; மன்மோகனும் பேசுவது இல்லை. மாறாக, விவசாயம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களை தொடர்ந்து துண்டித்துக்கொண்டே வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் தொலைக்காட்சிகளுக்கு, 35 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளார் சிதம்பரம். நான்கைந்து வருடங்கள் சிங்கப்பூரில் உழைத்துவிட்டு, ஊருக்கு வரும்போது ஒரு டி.வி. வாங்கி வந்தவர்கள் இனி அதைக்கூட செய்ய முடியாது. இதைவிட அதிர்ச்சி என்னவெனில், இதுபோன்ற 'சீர்திருத்தங்கள்’ மேலும் தொடருமாம்.
அய்யய்யோ!
- ஆனந்தவிகடன்.
புதைகுழியில் வீழ்ந்துகொண்டு இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு. நீங்கள் ஒரு அமெரிக்க டாலரை வாங்க வேண்டுமானால், 69 இந்திய ரூபாய்களைக் கொடுத்தாக வேண்டும். இந்தியப் பொருளாதாரம், இத்தனை மோசமான நிலையில் இதற்கு முன்பு இருந்ததே இல்லை. சீட்டுக்கட்டு மாளிகையைப் போல சரிந்துவரும் இந்திய ரூபாயின் மதிப்புக் காரணமாக, பங்குச் சந்தை முதல் காய்கறிச் சந்தை வரையிலும் எங்கும் எதிலும் தடுமாற்றம்.
சரி... ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்தது?
இந்தக் கேள்விக்கான பதில், மொத்த இந்தியப் பொருளாதாரத்துடனும், அரசின் கொள்கைகளுடனும் பின்னிப்பிணைந்த ஒன்று. சமீபகாலமாக இந்தியப் பிரதமரும், நிதி அமைச்சரும் 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகவும் அபாயகரமான எல்லைக்குச் சென்றுகொண்டிருக்கிறது’ என்று கவலை தெரிவித்துவருவதைப் பார்த்திருக்கலாம். அது என்ன 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை?’
'ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடைப்பட்ட இடைவெளி’ என்று இதை எளிமையாக புரிந்துகொள்ளலாம். இறக்குமதி அதிகம்; ஏற்றுமதி குறைவு. அதாவது செலவு அதிகம், வரவு குறைவு. இரண்டுக்கும் இடைப்பட்டப் பற்றாக்குறைதான் நடப்புக் கணக்குப் பற்றாக் குறை.
இந்திய ரிசர்வ் வங்கியின் வரையறைப்படி, நடப்புக்கணக்குப் பற்றாக்குறை என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகி தத்துக்கு அதிகமாகக் கூடாது. ஆனால், இப்போ தைய நிலவரம் 5 சதவிகிதத்தைத் தொட்டு விட்டது. 2012-13 நிதியாண்டு நிலவரப்படி, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் மதிப்பு 9,420 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில், 5,65,200 கோடி ரூபாய். 'இப்படி அதிகரித்துக்கொண்டேபோனால், இந்தியா வுக்கான கடன் பெறும் தகுதியைக் குறைத்து விடுவோம்’ என்று ஸ்டாண்டர்டு அண்ட் புவர்
என்ற சர்வதேசத் தர நிர்ணய நிறுவனம் எச்ச ரித்துள்ளது.
இதைச் சரிசெய்ய என்ன செய்வது?
ஏற்றுமதியை அதிகரிப்பது ஒரு நீண்ட காலத் தீர்வு. உடனடித் தீர்வு என்றால், தற்போது இந்தியாவிடம் அந்நியச் செலாவணியாக கையிருப்பில் உள்ள 29,000 கோடி டாலரில் இருந்து எடுத்து சமாளிக்கலாம். ஆனால், 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அடைத்தே ஆக வேண்டிய வெளிநாட்டுக் கடன் மட்டுமே 17,200 கோடி அமெரிக்க டாலர், மலைபோல் மிரட்டுகிறது. இந்தப் பணத்தையும் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் இருந்து எடுத்து அடைத்துவிட்டால், இந்தியாவிடம் வெறும் 2,500 கோடி டாலர் மட்டுமே அந்நியச் செலாவணியாக மிச்சம் இருக்கும். அப்புறம் உலகில் எந்த நாடும் இந்தியாவை மதிக்காது. இந்திய ரூபாயின் மதிப்பு என்பது, எவ்வளவு அதிகமான அமெரிக்க டாலர்களை அந்நியச் செலாவணியாக வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஆகவே, அந்நியச் செலாவணியில் அதிகம் கைவைக்க முடியாது.
வேறு என்னதான் செய்வது?
'இந்த நிலைமையைச் சமாளிக்க அந்நிய முதலீடுகளை நாட்டுக்குள் மேலும் கொண்டுவர வேண்டும். அதிகமான முதலீடுகள் உள்ளே வரும்போது இந்த நிலைமை சரியாகும்’ என்கிறார் சிதம்பரம். ஆனால், யதார்த்தம் அவ்வாறு இல்லை. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 500 கோடி டாலர் மதிப்புள்ள அந்நிய முதலீடுகள், இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
ஏன் அவர்கள் வெளியேறினார்கள்? அதற்கு இரண்டு காரணங்கள். அவர்களுக்கு இந்திய சந்தையில் கிடைக்கும் லாபம் போதுமானதாக இல்லை. மன்மோகன் மேற்கொள்ளும் 'சீர்திருத்தத்தின்’ வேகம் போதவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். இரண்டாவது, இந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தண்ணீர் உள்ள இடத்தை நோக்கிப் பறக்கும் கொக்குகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதாரத் தள்ளாட்டம் ஏற்பட்டபோது, அங்கிருந்த தங்கள் முதலீடுகளை உருவிக்கொண்டுவந்து இந்திய சந்தைகளில் கொட்டினார்கள். இப்போது அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் சீரடைந்துள்ளது. உடனே இங்குள்ள முதலீடுகளை பெயர்த்து எடுத்துக்கொண்டு அங்கு கிளம்பிவிட்டார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தி முதலீட்டாளர்களால்தான் இந்தியப் பொருளாதாரம் எதிர்பாராத பெரும் சரிவுகளை சந்திக்கிறது. ஆனால், பிரதமரும் நிதி அமைச்சரும் 'அதே முதலீட்டாளர்களை மேலும் ஈர்க்க வேண்டும், அதுதான் தீர்வு’ என்கிறார்கள்.
இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2009-ம் ஆண்டு 13,53,000 கோடி ரூபாயாக இருந்த வெளிநாட்டுக் கடன், 2012 மார்ச் மாதத்தில் 43,43,400 கோடியாக உயர்ந்தது. இந்தக் கடன்களில் 44 சதவிகிதத்தை வாங்கியிருப்பது, ரத்தன் டாடா மற்றும் அம்பானி குழும நிறுவனங்களே. இவை தனிப்பட்ட நிறுவனங்கள் என்றபோதிலும், இவர்கள் வாங்கிஇருக்கும் வெளிநாட்டுக் கடன்களுக்கும் இந்திய அரசுதான் பொறுப்பு. இந்த நிறுவனங்கள் வாங்கியிருக்கும் பல லட்சம் கோடிக் கடன்களை திருப்பிச் செலுத்தாததும், ரூபாய் மதிப்பு சரிவடைய இன்னொரு முக்கியக் காரணம்.
மறுபக்கம் அந்நியச் செலாவணி, டாலர் கையிருப்பு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை... இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் இந்தியப் பொருளாதாரத்தின் தடுமாற்றத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாகத் தற்கொலை செய்துகொள்வதும், அத்தியாவசியப் பொருட்கள் மேலும் மேலும் விலை உயர்ந்து கொண்டே செல்வதும்தான் பொருளாதாரத் தள்ளாட்டத்துக்கான உண்மையான அறிகுறிகள். அவற்றைச் சரிசெய்ய, சிதம்பரமும் பேசுவது இல்லை; மன்மோகனும் பேசுவது இல்லை. மாறாக, விவசாயம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களை தொடர்ந்து துண்டித்துக்கொண்டே வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் தொலைக்காட்சிகளுக்கு, 35 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளார் சிதம்பரம். நான்கைந்து வருடங்கள் சிங்கப்பூரில் உழைத்துவிட்டு, ஊருக்கு வரும்போது ஒரு டி.வி. வாங்கி வந்தவர்கள் இனி அதைக்கூட செய்ய முடியாது. இதைவிட அதிர்ச்சி என்னவெனில், இதுபோன்ற 'சீர்திருத்தங்கள்’ மேலும் தொடருமாம்.
அய்யய்யோ!
- ஆனந்தவிகடன்.
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#1006702- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேவை வரி உயர்வு : அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது!
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» பாரிஸ் ஒப்பந்த மாநாடு; கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» பாரிஸ் ஒப்பந்த மாநாடு; கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|