புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_m10ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax ) -- நோய்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 6:47 am

ஆந்த்ராக்ஸ் மிகப் பழங்காலத்திலேயே அறியப்பட்ட நோய்களில் ஒன்று. ஒரு காலத்தில் 'பிளேக்' போன்று பேரழிவை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.
பாக்டீரியாக்களால் உண்டாகும் நோய்களில் ஆந்த்ராக்ஸ் உண்டாகும் பாக்டீரியா தான் முதன் முதலில் பிரித்து கண்டரியப்பட்டது.

1850ம் ஆண்டு ஆந்த்ராக்ஸால் பாதிக்கப்பட்ட ஆட்டின் இரத்தத்தை மைக்ரோஸ்கோப் மூலம் ஆராயும் போது 'சி.ஜெ. டவைன்' (C.J. Davaine) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி உருட்டுக் கம்பி வடிவிலான இந்த பாக்டீரியாக்களைக் கண்டு பிடித்தார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் லூயிஸ் பாஸ்டர் இந்தக் கிருமிகளால் தான் ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்படுகிறது என்பதை நிரூபித்ததோடு 1881ம் ஆண்டில் இந்த நோய்க்காக விலங்குகளுக்கு போடப்படும் தடுப்பூசியையும் உருவாக்கினார். இதற்கு சில வருடங்கள் முன்பாக 187ல் ராபர்ட் கோச் எனும் ஜெர்மானிய விஞ்ஞானியும் எலிகளுக்கு இந்தக் கிருமிகளை ஊசி மூலம் செலுத்தினால் ஆந்த்ராக்ஸ் ஏற்படுவதை உறுதிப்படுத்தினார்.

1979ம் ஆண்டு ரஷ்யாவில் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் (தற்போதைய யெகாடெரின்பர்க் Yekaterinburg) என்னுமிடத்தில் 'உயிரியல் ஆயுதத் தொழிற்சாலை' என்று கருதப்படும் கட்டிடத்திலிருந்து விபத்து மூலம் காற்றில் இந்தக் கிருமிகள் பரவியதால் சுமார் 66 பேர் இறந்தார்களென்று கூறப்படுகிறது. இங்கு வெளிப்பட்ட கிருமிகள் சுமார் நான்கு புதிய ரகங்கள் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் 1998ல் அறிவித்தனர். இதனால் தடுப்பூசிகளால் தடுக்கப்படாத புதிய ரகங்கள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

1991ம் ஆண்டு நடந்த வளைகுடா போரில், ஈராக் நாடு உயிரியல் ஆயுதங்களால் தாக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டதால் சுமார் 150,000 வீரர்களுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது. 2001ல் WTC மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை கடிதம் மூலம் அனுப்பினார்களா என்றும் ஆராயப்படுகிறது.

ஆந்த்ராக்ஸ்:

கிருமிகள் பரவும் முறை. விலங்குகள், மனிதர்களால் பாதிப்புகள்

'தபால் மூலம் ஆந் த்ராக்ஸ்' - பாதுகாப்பு முறைகள்:

பயங்கரவாதிகளால் அனுப்பப்படும் கடிதத்தைப் பெற நேர்ந்தால் கையாள வேண்டிய அணுகு முறைகள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 6:48 am

ஆந்த்ராக்ஸ் (Anthrax )

 ஆந்த்ராக்ஸ் என்றால் என்ன?


ஆந்த்ராக்ஸ் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோய். இது 'பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ்' எனும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இது கால்நடைகளுக்கும், தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டிகளுக்கும் மட்டுமே ஏற்படக்கூடியது.

நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புண்டு. இது ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப் படும்.

ஆனால் இது எளிதில் பரவக்கூடிய நோய் அல்ல. காற்றின் மூலம் தானாக பரவுவது இல்லை. மேலும் ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதும் இல்லை. தடுப்பூசி மூலம் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். நோய் ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் மருந்துகள் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

தற்போது 'பயலாஜிகல் போர்முறை' எனும் நோய்க் கிருமிகளை ஏவி எதிரி நாடுகளைத் தாக்கும் முறையில் இந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் பயன்பாட்டைப் பற்றி பல நாடுகளும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

ஆந்த்ராக்ஸ் கிருமிகள் வாழும் விதம்:

இது மண்ணில் பல நூற்றாண்டுகளாகக் கூட அழியாமல் நுண்ணிய பூஞ்சை கூடு கட்டி வாழக் கூடியது. இந்த கூடுகளை ஒரு வித திரவ முலாம் பூசுவதால் மிக அதிக வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும்.

விலங்குகளில் ஆந்த்ராக்ஸ்:

ஆந்த்ராக்ஸ் பூஞ்சைக் கூடுகள் உள்ள மண்ணில் வடிந்து வந்த நீரைக் குடிக்கும் விலங்குகளுக்கு இந்த நோய் பரவுகிறது. நோயுற்று இறந்த விலங்கை உண்ணுவதாலும், இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடியாலும் இது மற்ற விலங்குகளுக்கும் பரவுகிறது.

நோயுற்ற விலங்குகளுக்கு தடுமாற்றம், இரத்தப் போக்கு, வலிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டு உடனடியாக இறக்கவும் வாய்ப்புண்டு. தடுப்பூசி மூலமும், நோய் ஏற்பட்டவுடன் மருந்துகள் மூலமாகவும் விலங்குகளைக் காப்பாற்ற முடியும்.

மனிதர்களில் ஆந்த்ராக்ஸ்:

மனிதர்களில் இந்த நோய் மூன்று விதங்களில் தோன்றக் கூடியது. தோல் வியாதி, நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு.


இதில் தோல் வியாதி, உடலில் காயங்கள், வெடிப்புகளில் நேரடியாக கிருமிகள் பட்டால் மட்டுமே ஏற்படக் கூடியது.

பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல்கள், உரோமங்கள் (wool), மாமிசத்தைக் கையாளுபவர்களுக்கு வரக்கூடியது. தோலில் கருமையான கொப்புளங்கள் ஏற்பட்டு, முற்றிய நிலையில் வெடித்து நடுவில் கருநிறம் கொண்டதாக இருக்கும்.


இவைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவப் பராமரிப்பில் இல்லாதவர்களில் சுமார் 20 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது.

சுவாசம் மூலமாக கிருமிகள் நுரையீரலை அடைந்தால் ஏற்படும் பாதிப்பு தான் சற்று அபாயகரமானது. இவ்வகை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகள் சளி அல்லது ப்ளு பாதிப்பை போன்று - உடல் வலி, காய்ச்சல், அசதி, இருமல் அல்லது இலேசான நெஞ்சுவலி ஆகியவை தென்படும்.

பாதிக்கப்பட்டவருக்கு தடுப்பூசி அல்லது மருந்துகள் உடனடியாக அளிக்கப்படாவிட்டால் இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்கு தேவைப்படும் 'Ciproflaxacian', 'Pencillin' போன்ற மருந்துகள் நாம் பொது மருத்துவத்திலேயே அதிகம் பயன்படுத்துவதால் எளிதில் கிடைக்கக் கூடியது.

பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்பதால் குடல் பாதிப்பு ஏற்படும். இவ்வகையில் வாந்தி, தலைசுற்றல், வயிற்று வலி, கடுமையான பேதி ஆகியவை ஏற்படலாம். இவ்வகை பாதிப்பில் சுமார் 20 முதல் 60 சதம் வரை இறப்பில் முடிகிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 6:50 am

'தபால் மூலம் ஆந்த்ராக்ஸ்' - பாதுகாப்பு முறைகள் ( Safeguarding from Anthrax)

 பயங்கரவாதிகளால் பொது மக்களிடையே ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை பரப்ப, இந்த கிருமிகள் அடங்கிய பூஞ்சைக் கூடுகள் (spores) பவுடர் வடிவில் தபால் கவரில் வைத்து அனுப்புவதாக நம்பப்படுகிறது.


கவரைப் பிரிக்கும் போது பொடி சிதறுவதால் காற்றில் கலந்து அருகிலிருப்போருக்கு சுவாசம் மூலம் பரவும் வாய்ப்பு ஓரளவுக்கு உண்டு.

இது போன்ற கந்த்தைப் பெற நேர்ந்தால் கையாள வேண்டிய அணுகுமுறைகள்:

* கடிதத்தை பாலிதீன் கவரில் பத்திரமாக மூடி வைக்கவும்
* கைகளை நீர் மற்றும் சோப்பு உபயோகித்து கழுவவும்.

* உங்கள் உயர் அதிகாரிகள் அல்லது காவல் துறையை நாடவும்.

பவுடர் வெளிப்புறமாக படிந்திருந்தால் அல்லது சிந்தியிருந்தால்:

* பவுடரை சுத்தப்படுத்த முயற்சிக்காதீர்கள். மற்றவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்

* ஆடைகள் முதலியவற்றை தட்டாதீர்கள்.

* கைகளை நீர் மற்றும் சோப்பு உபயோகித்து கழுவவும்.

* உடனடியாக உயர் அதிகாரிகள் அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

* ஆடைகள் முதலியவற்றை உதறாமல் அகற்றி பாலிதீன் கவரில் மூடி வைக்கவும்.

நீர் மற்றும் சோப்பு உபயோகித்து குளித்து விடுவது நல்லது.

ப்ளீச்சிங், கிருமி நாசினி முதலியவற்றை உபயோகிக்காதீர்கள்.

பவுடர் படக் கூடிய அளவில் யார் யாரெல்லாம் நின்றிருந்தார்கள் என்று பட்டியலிட்டு சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்குள் காய்ச்சல் முதலியவை ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட வேண்டும்.
சாதாரணமாக இந்தக் கிருமிகள் காற்றில் பரவுவதில்லை. இந்த பவுடர் காற்றில் வேகமாக உதறப்பட்டாலோ அல்லது ஸ்பிரே செய்யப் பட்டாலோ சுற்றியிருப்போரை நோய் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

ஆகவே மிகச் சிறிய குண்டு வெடிப்பின் மூலம் இந்தக் கிருமிகள் காற்றில் ஸ்பிரே செய்யப்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்த இயலும். இவ்வகை குண்டுகளை தயாரிக்க பயங்கரவாதிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.


ஆக்கம்: viggie -- நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக