புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:
Page 1 of 1 •
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:
#1002271ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும்
முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள்தான்.
மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும்
சித்திரைத் திருவிழாவும் இவ்விழாவும்
ஒரே சமயத்தில் நடக்கின்றன.
திருமலை நாயக்கர்
காலத்திற்கு முன்பு இந்தா இரண்டு உற்சவங்களும்
வெவ்வேறு மாதங்களில் நடந்தன.
அப்போது அழகரின் சைத்ரோற்சவம்
சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம்
மாசி மாதத்திலும் நடந்தன.
இதனால் தான்
மாசி மாதத்தில் நடக்கும் இத்திருவிழாவில்
மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும்
வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர்
ஏற்பட்டது.
திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர்
சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர்
முதலிய ஊர்கள் வழியாக வந்து வைகை ஆற்றில்
இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து, மீண்டும்
அழகர் மலையையைடைவது வழக்கம்.
திருமலை நாயக்கர், இந்த இரண்டு விழாக்களையும்
ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக
இருக்கும் என்று கருதி அப்படியே செய்தார்.
அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும்
நடந்து வருகிறது .
இப்பொழுது கள்ளழகர் வைகையாற்றில்
இறங்கி வண்டியூர் சென்று, தன் மலைக்குத்திரும்
பி வருவதை பற்றி ஒரு கதை வழங்குகிறது.
இக்கதைக்கு சாஸ்திர, புராண ஆதாரம் ஒன்றும்
இல்லை ஆகையால் பொதுவாக சைவ, வைஷ்ணவ
மதங்களை ஐக்கியப்படுத்தும்
ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ள வேண்டும்
தன் தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ
சுந்தரேசுவரருக்கும் கல்யாணம் நடக்கும்
போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீ அழகர்,
கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப்
பார்க்க 24 கி.மீ தூரத்திலுள்ள தன்
இருப்பிடத்தை விட்டுச்சகல கோலாகலகங்களுடன்
மதுரையை நோக்கி வருகிறார்
என்பது இக்கதை
பல்லக்கில் கள்ளர்
திருக்கோலத்துடன் வழியில் பல மண்டபங்களில்
தங்கி, இந்தச்சேவையைப் பார்பதற்கும்
அழகரை எதிர் கொள்வதற்கும் மதுரை மக்கள்
திரண்டு வரும் காட்சிகள் ஸ்ரீ கள்ளழகர் எதிர்
சேவை என்று சொல்லப்படும்
இரவில்
அம்பலத்துக்காரர் மண்டபத்தில் பிரம்மாண்டமான
வாண வேடிக்கைகள் கூத்துக்கள்,
கொட்டு மேளங்கள் முதலியவை நடக்கும்.
மறுநாள் விடியற்காலை தல்லாகுளம் பெருமாள்
கோயிலிருந்து ( சித்ரா பௌர்ணமியன்று ) அழகர்
குதிரை வாகனத்தில்
புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார்.
புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூர
ிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ
ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார்.
இது தவறாமல் நடந்து வரும் விஷேசம்.
ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச்செல்லும் பொழுது முதலில்
வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர்
மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும்
எழுந்து அருளும் காட்சியே கண்
கொள்ளா காட்சியாகும்.
ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர்
கொண்டு அழைக்கிறார். இந்த வைபவம் அழகர்
ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும்
இதனைக்காண இலட்சக்கணக்கான மக்கள்
திரண்டு வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும்.
மதுரையில் இவ்விழாவே மிகப்பெரிய திருவிழா.
வெயில், மழை என்று பாராமல் ஜனங்கள் பகலும்
இரவும் ஒரு சிறிய இடத்தையும் விடாமல்
நிறைத்துக் கொண்டு ஆற்றிலும் அதன்
கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள்.
பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக
வண்டியூர் போகிறார்.
அங்கு அன்றிரவு தங்கி இளைப்பாறிச்
சைத்யோபசாரம் செய்து கொண்டு, மறுநாள்
காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர்
மண்டபத்தை அடைகிறார் . அங்கு தங்க கருட
வாகனத்தில் காட்சி நல்கி மண்டுக
மகரிஷிக்கு மோஷ மளிக்கிறார்.
பிறகு அன்றிரவு ராமராயர்
மண்டபத்திற்கு எழுந்தருளி தசாவதார
சேவை சாதிக்கிறார். மறுநாள் காலை அழகர்
மோகனாவதார சேவையருளி ஆனந்தராயர்
பல்லக்கில் ராஜாங்க சேவையுடன்
புறப்பட்டு மைசூர் மண்டபத்தில் கள்ளழகர்
திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கு
சேவை நடக்கும்.
மறுநாள் காலையில் ஸ்ரீ அழகர்
அப்பன் திருப்பதிக்குச்
சென்று திருமலையை அடைவார். மறுநாள்
அவருக்கு அங்கு சாத்து முறை நடக்கும்
இந்த அழகர் திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள்
நடக்கும் அழகர் மதுரைக்குப் புறப்படும்
முன்பே திருமலையில் அவருக்குத் திருவிழாக்கள்
தொடங்கி விடும் அந்தத் திருவிழாவின் 4 - ஆம் நாள்
மதுரைக்குப் புறப்படும் ஒன்பதாம் நாள் மீண்டும்
தம் மலைக்குத் திரும்பி விடுவார்.
அழகர்
வைகையாற்றில் தங்கியிருக்கும் படியான
மூன்று நாட்களில் இரவும் பகலும் அங்கு சேரும்
ஜனக்கூட்டம் கணக்கிட முடியாதது.
அங்கே அழகர்
அருளுகின்ற பலவிதமான சேவைகளைக்
கண்டு களிக்கவே மக்கள் கூட்டம் திரண்டிருக்கும்.
அப்போது இரவில் வாண வேடிக்கைகளும்,
விளையாட்டுக்களும், ஆரவாரங்களும்
அளவற்று நடக்கும்.
இவற்றியெல்லாம் காண, பல
மைல் தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள்
மாட்டு வண்டிகளில் வந்து மூன்று ,
நான்கு நாட்கள் குடும்பத்துடன்
தங்கியிருந்து போவார்கள்.
அழகருக்கு நடக்கும் மற்ற திருவிழாக்களில்
முக்கியமானவை வைகாசி வசந்த உற்சவ திருநாள்
( இது வசந்த மண்டபத்தில் 10 நாள் நடக்கும் )
ஆடி பிரமோற்சவம் ( 10 நாள் )
ஐப்பசி தலையருவி உற்சவம்
அல்லது தொட்டி உற்சவம் ( 3
நாள் )கார்த்திகை கைசிகம் மார்கழித் திருநாள்,
திரு அத்தியயன உற்சவம் இது பகற் பத்து,
இராப்பத்து என்று இரண்டு பிரிவுகளாக மொத்தம்
20 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில்
நாலாயிர திவ்விய பிரபந்தம் முழுவதும்
அத்யா பகர்களால் சேவிக்கப் படுகிறது பகற்பத்தில்
இங்கு பெரியாழ்வார் அழகரின் திருவடி சேர்வதாக
விழா நடை பெறுவது தனிச்சிறப்பு வாய்ந்தது மற்ற
திவ்விய தேசங்களில் திருமங்கையாழ்வார் திருவடிச்
சேருவதாக விழா நடைபெறும். இங்கு பெரியாழ்வார்
இறுதிக் காலத்தில் வாழ்ந்து அழகர்
திருவடி சேர்ந்ததால்
இவ்வாறு விழா அமைக்கப்பட்டிருக்கிறது.
மாசி தெப்பம், பங்குனி திருக் கல்யாணம் முதலியன
நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவிற்கு அடுத்தப்படி பெரிய
திருவிழா ஆடிப் பிரமோற்சவமே. இந்த ஒன்பதாம்
நாள் பௌர்ணமியன்று திருத்தேர் நடக்கும். இந்தப்
பிரமோற்சவதிற்குக் கிருஷ்ண தேவராயர்
இரண்டு கிராமங்களை மானியமாகக் கொடுத்தார்.
ஸ்ரீ ஆண்டாள் இங்கு கள்ளழகரைக் கல்யாணம்
செய்து கொண்டதாக ஐதீகம் உண்டு. ஆகையால்
இந்தவிழா இங்கு மிகச்சிறப்பாக நடைபெறும் .
இத்திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில்நடைபெறும்.
திருமாலிருஞ் சோலை ஸ்ரீ கள்ளழகர் உற்சவங்கள்:
மாதம் பூஜை
சித்திரை மாதம் கொட்டகை உற்சவம்
கோடை சைத்திர உற்சவம் ( 9 நாள் உற்சவம் )
( 1 நாள் )
வைகாசி மாதம் வஸந்த உற்சவம் ( 10 நாட்கள் )
ஆனி மாதம் முப்பழ உற்சவம் ( 1 நாள் )
ஆடி மாதம் கருட சேவை ( ஆடி அமாவாசை )
திருவாடிப் பூரம் ( 1 நாள் )
பிரமோற்சவம் ( 10 நாட்கள் )
ஆவணி மாதம் திருப்பவித்திர உற்சவம் ( 5 நாட்கள் )
உறியடி உற்சவம்
புரட்டாசி மாதம் விநாயகர் சதூர்த்தி ( 1 நாள் )
கருட சேவை ( 1 நாள் )
நவராத்திரி உற்சவம் ( 9 நாட்கள் )
விஜய தசமி - அம்பு போடுதல் ( 1 நாள் )
ஐப்பசி மாதம் தீபாவளி உற்சவம் ( 1 நாள் )
தொட்டி உற்சவம் ( 3 நாட்கள் )
மார்கழி மாதம் திருவத்யயனம் பகல் பத்து உற்சவம் (10 நாட்கள் )
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உற்சவம் (10 நாட்கள் )
தை மாதம் கனு உற்சவம் ( 1 நாள் )
தைலப் பிரதிஷ்டை ( 3 நாட்கள்)
சப்ர முகூர்த்தம் ( 1 நாள் )
மாசி மாதம் கஜேந்திர மோஷம் ( 1 நாள் )
தெப்ப உற்சவம் ( 1 நாள் )
பங்குனி மாதம் திருக்கல்யாண உற்சவம் ( 5 நாட்கள் )
நன்றி முகநூல்
முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள்தான்.
மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும்
சித்திரைத் திருவிழாவும் இவ்விழாவும்
ஒரே சமயத்தில் நடக்கின்றன.
திருமலை நாயக்கர்
காலத்திற்கு முன்பு இந்தா இரண்டு உற்சவங்களும்
வெவ்வேறு மாதங்களில் நடந்தன.
அப்போது அழகரின் சைத்ரோற்சவம்
சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம்
மாசி மாதத்திலும் நடந்தன.
இதனால் தான்
மாசி மாதத்தில் நடக்கும் இத்திருவிழாவில்
மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும்
வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர்
ஏற்பட்டது.
திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர்
சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர்
முதலிய ஊர்கள் வழியாக வந்து வைகை ஆற்றில்
இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து, மீண்டும்
அழகர் மலையையைடைவது வழக்கம்.
திருமலை நாயக்கர், இந்த இரண்டு விழாக்களையும்
ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக
இருக்கும் என்று கருதி அப்படியே செய்தார்.
அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும்
நடந்து வருகிறது .
இப்பொழுது கள்ளழகர் வைகையாற்றில்
இறங்கி வண்டியூர் சென்று, தன் மலைக்குத்திரும்
பி வருவதை பற்றி ஒரு கதை வழங்குகிறது.
இக்கதைக்கு சாஸ்திர, புராண ஆதாரம் ஒன்றும்
இல்லை ஆகையால் பொதுவாக சைவ, வைஷ்ணவ
மதங்களை ஐக்கியப்படுத்தும்
ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ள வேண்டும்
தன் தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ
சுந்தரேசுவரருக்கும் கல்யாணம் நடக்கும்
போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீ அழகர்,
கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப்
பார்க்க 24 கி.மீ தூரத்திலுள்ள தன்
இருப்பிடத்தை விட்டுச்சகல கோலாகலகங்களுடன்
மதுரையை நோக்கி வருகிறார்
என்பது இக்கதை
பல்லக்கில் கள்ளர்
திருக்கோலத்துடன் வழியில் பல மண்டபங்களில்
தங்கி, இந்தச்சேவையைப் பார்பதற்கும்
அழகரை எதிர் கொள்வதற்கும் மதுரை மக்கள்
திரண்டு வரும் காட்சிகள் ஸ்ரீ கள்ளழகர் எதிர்
சேவை என்று சொல்லப்படும்
இரவில்
அம்பலத்துக்காரர் மண்டபத்தில் பிரம்மாண்டமான
வாண வேடிக்கைகள் கூத்துக்கள்,
கொட்டு மேளங்கள் முதலியவை நடக்கும்.
மறுநாள் விடியற்காலை தல்லாகுளம் பெருமாள்
கோயிலிருந்து ( சித்ரா பௌர்ணமியன்று ) அழகர்
குதிரை வாகனத்தில்
புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார்.
புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூர
ிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ
ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார்.
இது தவறாமல் நடந்து வரும் விஷேசம்.
ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச்செல்லும் பொழுது முதலில்
வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர்
மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும்
எழுந்து அருளும் காட்சியே கண்
கொள்ளா காட்சியாகும்.
ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர்
கொண்டு அழைக்கிறார். இந்த வைபவம் அழகர்
ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும்
இதனைக்காண இலட்சக்கணக்கான மக்கள்
திரண்டு வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும்.
மதுரையில் இவ்விழாவே மிகப்பெரிய திருவிழா.
வெயில், மழை என்று பாராமல் ஜனங்கள் பகலும்
இரவும் ஒரு சிறிய இடத்தையும் விடாமல்
நிறைத்துக் கொண்டு ஆற்றிலும் அதன்
கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள்.
பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக
வண்டியூர் போகிறார்.
அங்கு அன்றிரவு தங்கி இளைப்பாறிச்
சைத்யோபசாரம் செய்து கொண்டு, மறுநாள்
காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர்
மண்டபத்தை அடைகிறார் . அங்கு தங்க கருட
வாகனத்தில் காட்சி நல்கி மண்டுக
மகரிஷிக்கு மோஷ மளிக்கிறார்.
பிறகு அன்றிரவு ராமராயர்
மண்டபத்திற்கு எழுந்தருளி தசாவதார
சேவை சாதிக்கிறார். மறுநாள் காலை அழகர்
மோகனாவதார சேவையருளி ஆனந்தராயர்
பல்லக்கில் ராஜாங்க சேவையுடன்
புறப்பட்டு மைசூர் மண்டபத்தில் கள்ளழகர்
திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கு
சேவை நடக்கும்.
மறுநாள் காலையில் ஸ்ரீ அழகர்
அப்பன் திருப்பதிக்குச்
சென்று திருமலையை அடைவார். மறுநாள்
அவருக்கு அங்கு சாத்து முறை நடக்கும்
இந்த அழகர் திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள்
நடக்கும் அழகர் மதுரைக்குப் புறப்படும்
முன்பே திருமலையில் அவருக்குத் திருவிழாக்கள்
தொடங்கி விடும் அந்தத் திருவிழாவின் 4 - ஆம் நாள்
மதுரைக்குப் புறப்படும் ஒன்பதாம் நாள் மீண்டும்
தம் மலைக்குத் திரும்பி விடுவார்.
அழகர்
வைகையாற்றில் தங்கியிருக்கும் படியான
மூன்று நாட்களில் இரவும் பகலும் அங்கு சேரும்
ஜனக்கூட்டம் கணக்கிட முடியாதது.
அங்கே அழகர்
அருளுகின்ற பலவிதமான சேவைகளைக்
கண்டு களிக்கவே மக்கள் கூட்டம் திரண்டிருக்கும்.
அப்போது இரவில் வாண வேடிக்கைகளும்,
விளையாட்டுக்களும், ஆரவாரங்களும்
அளவற்று நடக்கும்.
இவற்றியெல்லாம் காண, பல
மைல் தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள்
மாட்டு வண்டிகளில் வந்து மூன்று ,
நான்கு நாட்கள் குடும்பத்துடன்
தங்கியிருந்து போவார்கள்.
அழகருக்கு நடக்கும் மற்ற திருவிழாக்களில்
முக்கியமானவை வைகாசி வசந்த உற்சவ திருநாள்
( இது வசந்த மண்டபத்தில் 10 நாள் நடக்கும் )
ஆடி பிரமோற்சவம் ( 10 நாள் )
ஐப்பசி தலையருவி உற்சவம்
அல்லது தொட்டி உற்சவம் ( 3
நாள் )கார்த்திகை கைசிகம் மார்கழித் திருநாள்,
திரு அத்தியயன உற்சவம் இது பகற் பத்து,
இராப்பத்து என்று இரண்டு பிரிவுகளாக மொத்தம்
20 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில்
நாலாயிர திவ்விய பிரபந்தம் முழுவதும்
அத்யா பகர்களால் சேவிக்கப் படுகிறது பகற்பத்தில்
இங்கு பெரியாழ்வார் அழகரின் திருவடி சேர்வதாக
விழா நடை பெறுவது தனிச்சிறப்பு வாய்ந்தது மற்ற
திவ்விய தேசங்களில் திருமங்கையாழ்வார் திருவடிச்
சேருவதாக விழா நடைபெறும். இங்கு பெரியாழ்வார்
இறுதிக் காலத்தில் வாழ்ந்து அழகர்
திருவடி சேர்ந்ததால்
இவ்வாறு விழா அமைக்கப்பட்டிருக்கிறது.
மாசி தெப்பம், பங்குனி திருக் கல்யாணம் முதலியன
நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவிற்கு அடுத்தப்படி பெரிய
திருவிழா ஆடிப் பிரமோற்சவமே. இந்த ஒன்பதாம்
நாள் பௌர்ணமியன்று திருத்தேர் நடக்கும். இந்தப்
பிரமோற்சவதிற்குக் கிருஷ்ண தேவராயர்
இரண்டு கிராமங்களை மானியமாகக் கொடுத்தார்.
ஸ்ரீ ஆண்டாள் இங்கு கள்ளழகரைக் கல்யாணம்
செய்து கொண்டதாக ஐதீகம் உண்டு. ஆகையால்
இந்தவிழா இங்கு மிகச்சிறப்பாக நடைபெறும் .
இத்திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில்நடைபெறும்.
திருமாலிருஞ் சோலை ஸ்ரீ கள்ளழகர் உற்சவங்கள்:
மாதம் பூஜை
சித்திரை மாதம் கொட்டகை உற்சவம்
கோடை சைத்திர உற்சவம் ( 9 நாள் உற்சவம் )
( 1 நாள் )
வைகாசி மாதம் வஸந்த உற்சவம் ( 10 நாட்கள் )
ஆனி மாதம் முப்பழ உற்சவம் ( 1 நாள் )
ஆடி மாதம் கருட சேவை ( ஆடி அமாவாசை )
திருவாடிப் பூரம் ( 1 நாள் )
பிரமோற்சவம் ( 10 நாட்கள் )
ஆவணி மாதம் திருப்பவித்திர உற்சவம் ( 5 நாட்கள் )
உறியடி உற்சவம்
புரட்டாசி மாதம் விநாயகர் சதூர்த்தி ( 1 நாள் )
கருட சேவை ( 1 நாள் )
நவராத்திரி உற்சவம் ( 9 நாட்கள் )
விஜய தசமி - அம்பு போடுதல் ( 1 நாள் )
ஐப்பசி மாதம் தீபாவளி உற்சவம் ( 1 நாள் )
தொட்டி உற்சவம் ( 3 நாட்கள் )
மார்கழி மாதம் திருவத்யயனம் பகல் பத்து உற்சவம் (10 நாட்கள் )
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உற்சவம் (10 நாட்கள் )
தை மாதம் கனு உற்சவம் ( 1 நாள் )
தைலப் பிரதிஷ்டை ( 3 நாட்கள்)
சப்ர முகூர்த்தம் ( 1 நாள் )
மாசி மாதம் கஜேந்திர மோஷம் ( 1 நாள் )
தெப்ப உற்சவம் ( 1 நாள் )
பங்குனி மாதம் திருக்கல்யாண உற்சவம் ( 5 நாட்கள் )
நன்றி முகநூல்
Re: திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:
#1002433- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
விளக்கமான வரலாற்று பதிவிற்கு நன்றி மது..!!
Re: திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:
#1002636- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
மிக அருமை
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Re: திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:
#1077286மதுமிதா நல்ல வரலாற்றைத் தந்துளார்கள் !
இவ் வரலாறுகள் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை !
இவற்றில் ஆழமான வரலாறுகள் பொதிந்துகிடக்கின்றன !
எனது புராண ஆய்வுகளில் பல ஆழங்களை விளக்கியுள்ளேன் !
இவ் வரலாறுகள் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை !
இவற்றில் ஆழமான வரலாறுகள் பொதிந்துகிடக்கின்றன !
எனது புராண ஆய்வுகளில் பல ஆழங்களை விளக்கியுள்ளேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|