புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலிவு வேண்டாம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 9:33 pm

தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் தன் மகன் யுவராஜ் ஆசையோடு கேட்டபடி கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி வந்த கணேசன், யுவராஜை அழைத்து கைக்கடிகாரத்தைக் கொடுத்தார்.

கைக்கடிகாரத்தை வாங்கி பார்த்த யுவராஜ், ""அப்பா! இந்த விலை மலிவான கைக்கடிகாரம் எனக்கு வேண்டாம்! நான் இதைக் கட்டிக் கொள்ள மாட்டேன்!'' என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டான்.
யுவராஜ் சொன்னதைக் கேட்ட அவனது தந்தையின் முகமே வாடிவிட்டது. இருப்பினும், அவர் மகன் மீதுள்ள பாசத்தால், சிறிதும் கோபம் கொள்ளவில்லை.

""யுவராஜ் உனக்கு சீக்கிரமே விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி தருகிறேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
நடந்தவற்றையெல்லாம் யுவராஜின் தாத்தா கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் பேரனின் போக்கு மனவருத்தத்தை அளித்தது.

மாலையில் யுவராஜ் பள்ளிவிட்டு வந்தான்.
""யுவராஜ்! கோயிலுக்குச் சென்று வரலாம்... வர்றியா?'' என்று கேட்டார் அவனது தாத்தா.
கோவிலுக்குச் சென்று விட்டு வரும் போதெல்லாம் தாத்தா தனக்கு ஏதேனும் தின்பண்டம் வாங்கித் தருவார் என்று யுவராஜுக்கு தெரியும். எனவே அவன், ""சரி!'' என்று தாத்தாவுடன் உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.
யுவராஜும், அவனது தாத்தாவும் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். கோவில் வாசலில் இரண்டு சாதுக்கள் அமர்ந்திருந்தனர்.

தாத்தா இரண்டு, ஐந்து, ரூபாய் நாணயங்களை எடுத்து தன் பேரனின் பார்வையில் படும்படி அந்த சாதுக்களிடம் கொடுத்தார். அவர்கள் தாத்தாவைப் பார்த்து, ""நீங்க நல்லாயிருக்கணும் ஐயா!'' என்று வாழ்த்தியபடி காசைப் பெற்றுக் கொண்டனர்.
பிறகு அவர் பேரனிடம், இரண்டு ஐம்பது காசு நாணயங்களைக் கொடுத்து, இரண்டு சாதுக்களிடமும் கொடுக்கச் சொன்னார். தாத்தா சொன்னபடியே, சாதுக்களிடம் நாணயங்களைக் கொடுத்தான்.

அவர்கள் அவனை பார்த்து, ""தம்பி! நீ நல்லாயிருக்கணும்!'' என்று வாயார வாழ்த்தினர். பிறகு இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
அப்போது தாத்தா, ""யுவராஜ்! நான் ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்த போதும், அந்த சாதுக்கள் என்னை வாழ்த்தினர். நீ ஐம்பது காசு கொடுத்தபோதும் உன்னை வாழ்த்தினர். கவனித்தாயா?'' என்று கேட்டார்.
""ஆமாம் தாத்தா! இதை எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்று புரியாமல் தாத்தாவைப் பார்த்தான் யுவராஜ்.

""யுவராஜ்! நாம் தானம் செய்வது எவ்வளவு பணம் என்று கணக்குப் பார்த்து அவர்கள் நம்மை வாழ்த்தவில்லை. எவ்வளவு தானம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை. அன்போடு தானம் செய்பவர்கள் அனைவரையுமே அவர்கள் வாழ்த்துகின்றனர். நமக்கு யார் எந்தப் பொருளை அன்பளிப்பாகத் தந்தாலும், அதன் விலையைப் பார்க்கக்கூடாது. அவர்கள் நம் மீது வைத்துள்ள அன்பையே பார்க்க வேண்டும்... அப்போதுதான் அந்தப் பொருளின் உண்மையான மதிப்பை உணரமுடியும்!'' என்று சொல்லிவிட்டு, பேரனின் முகத்தைப் பார்த்தார்.

யுவராஜ் மனதில் காலையில் தந்தை தனக்காக வாங்கித் தந்த கைக்கடிகாரம் நினைவில் வந்தது. தன் மீதுள்ள அன்பால் அப்பா வாங்கித் தந்த கைக்கடிகாரத்தைப் பிடிக்கவில்லை என்று நிராகரித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. சற்று நேரத்தில் அவனது மனதில் பெரிய மாற்றம் உண்டானது.

""தாத்தா! அப்பா மிகுந்த சிரமத்திலும் எனக்காக வாங்கித் தந்த கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொள்ள மாட்டேன் என்று சொன்னேன். அப்பா என் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொள்ளாமல் அப்பாவின் மனதை வருந்தச் செய்துவிட்டேன். இப்போது நான் என் தவறைப் புரிந்து கொண்டேன்.

வீட்டிற்குச் சென்றவுடனே அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, நாளையிலிருந்து அப்பா வாங்கி தந்த கைக்கடிகாரத்தையே பள்ளிக்குக் கட்டிக் கொண்டு செல்வேன்! இனி அப்பா வாங்கி தரும் எளிய பொருளுக்கும் நன்றியோடு நடந்து கொள்வேன்,'' என்று சொன்னான் யுவராஜ்.

அதைக்கேட்ட தாத்தா, ""யுவராஜ்! உன்னுடைய நல்ல மனமாற்றத்திற்காக, இன்று உனக்கு இரண்டு சாக்லெட்டுகள் வாங்கித் தருகிறேன்,'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.


நன்றி : சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 9:40 pm

குழந்தைகளுக்கு இப்படித்தான் நல்ல புத்தி சொல்லி வளர்க்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக