புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_vote_lcapஇறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_voting_barஇறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_vote_lcapஇறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_voting_barஇறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_vote_lcapஇறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_voting_barஇறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jul 31, 2013 12:57 pm

இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி Karagattakkaran-kanga30

சென்னை :

‘‘நான் இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள். உயிரோடுதான் இருக்கிறேன்’’ என்று நடிகை கனகா கூறினார்.

வதந்தி

ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், கனகா. அதிசயப்பிறவி, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர், மறைந்த நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.தேவிகா மரணம் அடைந்த பின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சொந்த வீட்டில் கனகா தனிமையில் வசித்து வந்தார். படங்களில் நடிக்காமல், சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

கேரள ஆஸ்பத்திரியில்...

இந்த நிலையில், கனகா கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் புற்று நோய்க்காக சிகிச்சை பெறுவதாக கேரளாவில் இருந்து தகவல் வெளியானது. நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபற்றி விசாரிப்பதற்காக கனகாவின் செல்போனுடன் தொடர்பு கொண்டபோது, நீண்ட ‘ரிங்’ போய் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.அதைத் தொடர்ந்து கனகாவின் தந்தை தேவதாசுடன் தொடர்பு கொண்டபோது, ‘‘கனகா பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திதான். அவர் சென்னையில் உள்ள வீட்டில்தான் இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.

பூட்டிய வீடு

உடனே நிருபர்கள், புகைப்படக்காரர்கள், டி.வி. கேமராமேன்கள் அனைவரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கனகா வீட்டுக்கு விரைந்தார்கள். அப்போது வீட்டின் ‘கேட்’ இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உள்பக்க கதவும் பூட்டப்பட்டு இருந்தது.கதவில் முருகன், ஆஞ்சநேயர், சாயிபாபா படங்களுடன் முகம் பார்க்கும் கண்ணாடிகள் மற்றும் மந்திரித்த கயிறுகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன.ஹாலில் பச்சைக்கிளிகள் மற்றும் சிட்டுக்குருவிகளுடன் கூடிய பெரிய கூண்டு இருந்தது. அதைத்தாண்டி இரட்டை கதவுகளில் ஒரே ஒரு கதவு மட்டும் லேசாக திறந்து இருந்தது. வீட்டுக்குள் ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.உள்ளே 2 பெண்கள் இங்கும் அங்குமாக போய்க் கொண்டிருந்தார்கள். ‘‘மேடம், நாங்கள் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறோம். வெளியே வாங்க’’ என்று பலமுறை சத்தம் போட்டு அழைத்தும், பதில் இல்லை.அதற்குள் கனகா பற்றிய தகவல் பரவி, அவர் வீட்டு முன்பு கூட்டம் கூடியது. போலீஸ் வந்தது.

பரபரப்பு பேட்டி

சுமார் 30 நிமிடங்களுக்குப்பின், கனகா சிரித்தபடி வீட்டுக்குள் இருந்து வந்தார். உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறந்தார். அவர் வெள்ளை நிறத்தில் கறுப்பு டிசைனுடன் கூடிய புடவை கட்டியிருந்தார். கண்ணாடி அணிந்திருந்தார்.‘‘கனகா, உங்களை பற்றிய பரபரப்பான செய்திகளுக்கு பதில் சொல்கிறீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டபின், கனகா பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:–‘‘நான் இத்தனை நாட்களாக நடிக்காமல் இருந்த பிறகும் என்னைப் பற்றிய ஒரு தகவல் பரவியதும், என் வீடு தேடி வந்ததற்காக சந்தோஷம். நன்றி. ஒவ்வொரு மனிதருக்கும் இறப்பும், பிறப்பும் பொதுவானது. அம்மா வயிற்றுக்குள் இருந்து வந்தவர்கள் அனைவரும் ஒருநாள் மண்ணுக்குள் போய்த்தான் ஆகவேண்டும்.

உயிரோடுதான் இருக்கிறேன்

எனக்கு ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் ஆகியவை இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கவில்லை. இனிமேல்தான் சோதித்துப் பார்க்க வேண்டும். நான் கேரளாவில் உள்ள ஆலப்புழைக்கு சென்றது உண்மை. அங்கிருக்கும் என் நண்பரை பார்ப்பதற்காக சென்றேன். அதற்குள் கனகாவுக்கு புற்றுநோய் என்று வதந்தி பரவிவிட்டது.நான் உயிரோடுதான் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாகவே இருக்கிறேன். என்னைப் பற்றிய வதந்திகளை பரப்பியவர், என் தந்தை என்று சொல்லிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான். என்னை சந்தித்துப் பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப்பார்க்கிறார். என் அம்மாவுக்கு ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்து கொண்டதில்லை. எனக்கு நல்ல தந்தையாக இருந்ததில்லை. அவரால்தான் ஆண்களைப் பார்த்தால் எனக்கு பிடிக்கவில்லை.

பூனை–நாய்கள்

எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்க்கிறேன். நாய், கோழிகளுடன்தான் வசிக்கிறேன். மனிதர்களை விட, இவைகள் எவ்வளவோ மேல். என் வீட்டு வாசலில் வந்து நின்ற தேவதாசை துரத்தி விட்டேன். அவருடைய முகத்தைப் பார்க்க விரும்பவில்லை.’’இவ்வாறு கனகா கூறினார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கனகா அளித்த பதில்களும் வருமாறு:–

திருமணம்

கேள்வி:– உங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறப்படுகிறதே... அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்:– நான் உயிரோடு இருக்கிறேனா, இல்லையா? என்பதை பற்றி மட்டுமே பேச வேண்டும். மற்றவை பற்றி பேசக்கூடாது என்று என் வக்கீல் கூறியிருக்கிறார். திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் யாரும் வாழவில்லையா?

கேள்வி:– இவ்வளவு பெரிய வீட்டில் தனிமையில் வசிப்பதற்கு பயமாக இல்லையா?

பதில்:– எதற்கு பயப்பட வேண்டும்? திருடனுக்கா, பேய்–பிசாசுகளுக்கா? எத்தனையோ பேர் நகரை விட்டு ஒதுக்குப்புறமான ஈஞ்சம்பாக்கத்திலும், ஈ.சி.ஆர். ரோட்டிலும் வசிக்கிறார்கள். நான் பணக்காரி. சென்னையின் இதய பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். மனிதர்களைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?

மறுபடியும் நடிப்பு

கேள்வி:– மீண்டும் நடிப்பீர்களா?

பதில்:– நல்ல கதையும், வேடமும் வந்தால் மறுபடியும் நடிக்க தயாராக இருக்கிறேன்.’’இவ்வாறு கனகா கூறினார்.

கனகாவின் தந்தை தேவதாஸ் கூறியதாவது:–

‘‘கனகாவுக்கு புற்று நோய் என்று கேள்விப்பட்டதும், அவளை பார்க்க சென்றேன். ஆனால், கனகா என்னை பெற்ற தந்தை என்றும் பாராமல் வேலைக்காரியை விட்டு துரத்தி விட்டாள்.என்னை துரத்தினாலும், அவள் என் மகள்தான். அவள் மீதான பாசம் எனக்கு குறையாது. கனகாவின் தனிமைதான் அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.’’மேற்கண்டவாறு தேவதாஸ் கூறினார்.

-- தினத்தந்தி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 31, 2013 1:15 pm

தமாத்துண்டு நடிகை இறந்துவிட்டதாக கூறியவுடன், வேல வெட்டியில்லாமல் அவளின் வாசலில் போய் நாய்போல் நிற்க்கும் தமிழனே.... உண்மையில் நீ சாப்பிடுவது உணவா அல்லது வேறு ஏதாவதா.

நடிகர் என்றால் பால் அபிஷேகம் செய்வதும், மொட்டைபோட்டுக்கொள்வதும், தேர் இலுப்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் ஏதோ கடவுள் போல் அவனை வணங்குவதும் இந்த நாட்டில் மட்டும் தான், உலகில் இதுபோன்று எங்கும் பார்க்கமுடியாது.

அவன் காசுக்குக்காக நடிக்கிறான் அவ்வளவு தான் உனக்கு ஒரு வேலை சோறு இல்லை என்றால் அவன் கொடுப்பானா?, இல்ல உன் பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரி இல்லையென்றால் மருத்துவ செலவு செய்வானா? . அவன் வேலையை அவன் சரியா செய்கிறான், நீ உன் வேலையை சரியா செஞ்சு குடும்பத்தை காப்பாத்து. படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார் , அதுவே உண்மையான வாழ்க்கை என ஏமாறாதே.

நீ கெட்டால் உன் உறவுக்கு தான் வலிக்கும் அவனுக்கு இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 31, 2013 1:41 pm

நல்லா கெளப்புறங்கய்யா பீதியை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 31, 2013 1:56 pm

அப்ப கூடிய சீக்கிரம் சின்னத்திரையில் வலம் வருவிங்க..!

ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Postansaralis Wed Jul 31, 2013 6:07 pm

ராஜு சரவணன் wrote:தமாத்துண்டு நடிகை இறந்துவிட்டதாக கூறியவுடன், வேல வெட்டியில்லாமல் அவளின் வாசலில் போய் நாய்போல் நிற்க்கும் தமிழனே....  உண்மையில் நீ சாப்பிடுவது உணவா அல்லது வேறு ஏதாவதா.

நடிகர் என்றால் பால் அபிஷேகம் செய்வதும், மொட்டைபோட்டுக்கொள்வதும், தேர் இலுப்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் ஏதோ கடவுள் போல் அவனை வணங்குவதும் இந்த நாட்டில் மட்டும் தான், உலகில் இதுபோன்று எங்கும் பார்க்கமுடியாது.

அவன் காசுக்குக்காக நடிக்கிறான் அவ்வளவு தான் உனக்கு ஒரு வேலை சோறு இல்லை என்றால் அவன் கொடுப்பானா?, இல்ல உன் பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரி இல்லையென்றால் மருத்துவ செலவு செய்வானா? . அவன் வேலையை அவன் சரியா செய்கிறான், நீ உன் வேலையை சரியா செஞ்சு குடும்பத்தை காப்பாத்து. படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார் , அதுவே உண்மையான வாழ்க்கை என ஏமாறாதே.
நீ கெட்டால் உன் உறவுக்கு தான் வலிக்கும் அவனுக்கு இல்லை
அவஅவனுங்க பக்கத்த நெறப்பரதுக்கு அலையா அலையறாங்க.



Ansar Ali
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக