புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 76 of 100 •
Page 76 of 100 • 1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வியாபார தந்திரம்!
சிதம்பரத்திலிருந்து, புதுச்சேரிக்கு பஸ்சில் பயணித்தேன். கடலூர் பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்ததும், வியாபாரிகள் பஸ்சில் ஏறி, அவரவர் பொருட்களை கூவி விற்றனர். அப்போது, 30 வயதுள்ள இளைஞர் ஒருவரின் கையில், சிறுவர் புத்தகங்கள், சமையல், யோகா மற்றும் பொது அறிவு என, பலவகையான புத்தகங்களை வைத்திருந்தார்.
அவர் தன் விற்பனையை ஆரம்பிக்கும் முன், பயணிகளை நோக்கி, 'எல்லாரும் கவனமா இருங்க... லக்கேஜ் மற்றும் குழந்தைகள் பத்திரம்; நகை போட்டுள்ள பெண்கள், ஜாக்கிரதையாக இருங்க. உங்க, 'லக்கேஜை' வேற யாராவது இறங்கும் போது எடுத்துட்டு போகாம, கவனமாக பாத்துக்கோங்க. தூக்க கலக்கத்துல எதையும் தொலைச்சுடாதீங்க...' என்று பயணிகளை எச்சரிக்கும் விதமாக பேசவும், அதுவரை ஏனோ தானோவென்று இருந்த பயணிகள், தம் லக்கேஜையும், குழந்தைகளையும் கவனிக்க துவங்கினர்.
அதன்பின், அந்த இளைஞர் புத்தகங்களை பற்றியும், பயணிகளின் பாதுகாப்பு விஷயங்களை பற்றியும் மாறி மாறி பேசினார். விற்பனை விஷயமாக பேசியதை விட, பயணிகள் கவனமாக இருக்க வேண்டியது பற்றி பேசியது தான் அதிகம்.
விளைவு, அவர் கொண்டு வந்த அத்தனை புத்தகங்களும் விற்று முடிந்தன. அவரது வியாபார தந்திரத்தை நினைத்து வியந்தேன்.
வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.
சிதம்பரத்திலிருந்து, புதுச்சேரிக்கு பஸ்சில் பயணித்தேன். கடலூர் பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்ததும், வியாபாரிகள் பஸ்சில் ஏறி, அவரவர் பொருட்களை கூவி விற்றனர். அப்போது, 30 வயதுள்ள இளைஞர் ஒருவரின் கையில், சிறுவர் புத்தகங்கள், சமையல், யோகா மற்றும் பொது அறிவு என, பலவகையான புத்தகங்களை வைத்திருந்தார்.
அவர் தன் விற்பனையை ஆரம்பிக்கும் முன், பயணிகளை நோக்கி, 'எல்லாரும் கவனமா இருங்க... லக்கேஜ் மற்றும் குழந்தைகள் பத்திரம்; நகை போட்டுள்ள பெண்கள், ஜாக்கிரதையாக இருங்க. உங்க, 'லக்கேஜை' வேற யாராவது இறங்கும் போது எடுத்துட்டு போகாம, கவனமாக பாத்துக்கோங்க. தூக்க கலக்கத்துல எதையும் தொலைச்சுடாதீங்க...' என்று பயணிகளை எச்சரிக்கும் விதமாக பேசவும், அதுவரை ஏனோ தானோவென்று இருந்த பயணிகள், தம் லக்கேஜையும், குழந்தைகளையும் கவனிக்க துவங்கினர்.
அதன்பின், அந்த இளைஞர் புத்தகங்களை பற்றியும், பயணிகளின் பாதுகாப்பு விஷயங்களை பற்றியும் மாறி மாறி பேசினார். விற்பனை விஷயமாக பேசியதை விட, பயணிகள் கவனமாக இருக்க வேண்டியது பற்றி பேசியது தான் அதிகம்.
விளைவு, அவர் கொண்டு வந்த அத்தனை புத்தகங்களும் விற்று முடிந்தன. அவரது வியாபார தந்திரத்தை நினைத்து வியந்தேன்.
வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மறுமணம் அவசியம்!
என் தோழியின் சகோதரி, இளவயதிலேயே கணவனை இழந்தவர். தற்போது, 34 வயதாகும் அவருக்கு, 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதை, தன் பெற்றோரிடம் ஜாடை, மாடையாய் கூறியுள்ளார்.
அதற்கு அவரது பெற்றோர், 'இத்தனை வருஷத்துக்குப் பின், உனக்கு இப்படி ஒரு கேவலமான எண்ணம் வந்திருக்க வேணாம். இன்னும் 10 வருஷத்துல, உன் மகனுக்கு கல்யாணம் செய்யணும். நீ இப்படி நினைக்கலாமா...' என்று திட்டியுள்ளனர். அப்பெண்ணும் வாய் திறக்கவில்லை.
சிறிது நாட்களில், பக்கத்து வீட்டில் வசித்த கல்லூரி மாணவனின் நட்பு கிடைத்திருக்கிறது. இருவரும் நெருங்கிப் பழகவே, பெற்றோரும் நேரில் பார்த்து விட, இரு குடும்பத்துக்கும் இடையே பெரிய சண்டை. விஷயம் வெளியில் தெரிந்து, பெற்றோருக்கு அவமானமாகி விட்டது. பெற்றோரின் கடுமையான திட்டுக்களால் அப்பெண், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின், காப்பாற்றப்பட்டார்.
அவமானம் தாங்க முடியாமல், தற்போது, வேறு இடத்திற்கு குடி பெயர்ந்துள்ளனர் தோழியின் குடும்பத்தார்.
சரியான நேரத்தில் அப்பெண்ணிற்கு மறுமணம் செய்து வைத்திருந்தால், இப்படி ஒரு அவமானம் அக்குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்காது.
கணவனை இழந்தோருக்கு மறுமணம் செய்து வைப்பதில், எந்த கேவலமும் இல்லை. அவர்களுக்கும் உணர்வுகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் பெற்றோரே!
சுஜாதா பாலகணேஷ், மதுரை.
என் தோழியின் சகோதரி, இளவயதிலேயே கணவனை இழந்தவர். தற்போது, 34 வயதாகும் அவருக்கு, 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதை, தன் பெற்றோரிடம் ஜாடை, மாடையாய் கூறியுள்ளார்.
அதற்கு அவரது பெற்றோர், 'இத்தனை வருஷத்துக்குப் பின், உனக்கு இப்படி ஒரு கேவலமான எண்ணம் வந்திருக்க வேணாம். இன்னும் 10 வருஷத்துல, உன் மகனுக்கு கல்யாணம் செய்யணும். நீ இப்படி நினைக்கலாமா...' என்று திட்டியுள்ளனர். அப்பெண்ணும் வாய் திறக்கவில்லை.
சிறிது நாட்களில், பக்கத்து வீட்டில் வசித்த கல்லூரி மாணவனின் நட்பு கிடைத்திருக்கிறது. இருவரும் நெருங்கிப் பழகவே, பெற்றோரும் நேரில் பார்த்து விட, இரு குடும்பத்துக்கும் இடையே பெரிய சண்டை. விஷயம் வெளியில் தெரிந்து, பெற்றோருக்கு அவமானமாகி விட்டது. பெற்றோரின் கடுமையான திட்டுக்களால் அப்பெண், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின், காப்பாற்றப்பட்டார்.
அவமானம் தாங்க முடியாமல், தற்போது, வேறு இடத்திற்கு குடி பெயர்ந்துள்ளனர் தோழியின் குடும்பத்தார்.
சரியான நேரத்தில் அப்பெண்ணிற்கு மறுமணம் செய்து வைத்திருந்தால், இப்படி ஒரு அவமானம் அக்குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்காது.
கணவனை இழந்தோருக்கு மறுமணம் செய்து வைப்பதில், எந்த கேவலமும் இல்லை. அவர்களுக்கும் உணர்வுகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் பெற்றோரே!
சுஜாதா பாலகணேஷ், மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேஸ் ஏஜன்சிகள் கவனிக்குமா?
கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் போது, கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அதை, வீட்டில் இருந்து பெற முடியாத சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், மும்பையில் இப்படி வேலைக்கு செல்வோருக்காகவே, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், கேஸ் சிலிண்டர் சப்ளை செய்கின்றனர். வாடிக்கையாளர் அட்டையில், 'வார இறுதி நாட்களில் வினியோகிக்கவும்...' என்று முத்திரை குத்தி, அலுவலக பதிவேட்டிலும் பதிவு செய்து விடுகின்றனர். நம் ஊர் கேஸ் ஏஜன்சிகளும், இதை பின்பற்றலாமே!
ஆர்.கங்கா, கீரமங்கலம்.
கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் போது, கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அதை, வீட்டில் இருந்து பெற முடியாத சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், மும்பையில் இப்படி வேலைக்கு செல்வோருக்காகவே, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், கேஸ் சிலிண்டர் சப்ளை செய்கின்றனர். வாடிக்கையாளர் அட்டையில், 'வார இறுதி நாட்களில் வினியோகிக்கவும்...' என்று முத்திரை குத்தி, அலுவலக பதிவேட்டிலும் பதிவு செய்து விடுகின்றனர். நம் ஊர் கேஸ் ஏஜன்சிகளும், இதை பின்பற்றலாமே!
ஆர்.கங்கா, கீரமங்கலம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளம் பெண்ணுக்கு வந்த, 'பலான' புத்தகம்!
கடந்த வாரம், நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த போது, வீட்டினர் அனைவரும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். 'என்ன?' என்று விசாரித்ததில், 'பலான' புத்தகம் ஒன்று நண்பனின் தங்கை பெயருக்கு கூரியரில் வந்திருக்கிறது. தங்கை வீட்டில் இல்லாததால், பணம் கட்டி புத்தகத்தை வாங்கிய நண்பர், பிரித்துப் பார்த்ததும், அதிர்ச்சியடைந்து விட்டார்.
நண்பரின் தங்கையோ, தனக்கும், இப்புத்தகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்குவதற்குள் படாதபாடுபட்டு விட்டார். யாரோ வேண்டாதவர்கள், நண்பரின் வீட்டு விலாசத்தை தெரிந்து, பதிப்பகத்துக்கு எழுதி, புத்தகம் அனுப்பச் சொல்லியுள்ளனர்.
ஜாலியாக கிண்டல் செய்வதற்கு, எத்தனையோ வழிகள் இருக்கிறது. அதை விட்டு விட்டு, இப்படியா மனம் பாதிக்கப்படும்படி செய்வது!
நண்பனின் தங்கை மற்றும் குடும்பத்தினர் அடைந்த வேதனையை நேரில் பார்த்து மனம் நொந்து சொல்கிறேன்... இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலை செய்யாதீர் இளைஞர்களே!
பி.தினேஷ் குமார், சென்னை.
கடந்த வாரம், நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த போது, வீட்டினர் அனைவரும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். 'என்ன?' என்று விசாரித்ததில், 'பலான' புத்தகம் ஒன்று நண்பனின் தங்கை பெயருக்கு கூரியரில் வந்திருக்கிறது. தங்கை வீட்டில் இல்லாததால், பணம் கட்டி புத்தகத்தை வாங்கிய நண்பர், பிரித்துப் பார்த்ததும், அதிர்ச்சியடைந்து விட்டார்.
நண்பரின் தங்கையோ, தனக்கும், இப்புத்தகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்குவதற்குள் படாதபாடுபட்டு விட்டார். யாரோ வேண்டாதவர்கள், நண்பரின் வீட்டு விலாசத்தை தெரிந்து, பதிப்பகத்துக்கு எழுதி, புத்தகம் அனுப்பச் சொல்லியுள்ளனர்.
ஜாலியாக கிண்டல் செய்வதற்கு, எத்தனையோ வழிகள் இருக்கிறது. அதை விட்டு விட்டு, இப்படியா மனம் பாதிக்கப்படும்படி செய்வது!
நண்பனின் தங்கை மற்றும் குடும்பத்தினர் அடைந்த வேதனையை நேரில் பார்த்து மனம் நொந்து சொல்கிறேன்... இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலை செய்யாதீர் இளைஞர்களே!
பி.தினேஷ் குமார், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு பெண் தனியே நின்றால்...
அலுவலகம் முடிந்து வரும் தங்கையை அழைத்து வர, பஸ் நிலையம் சென்ற போது, பரபரப்பான அந்த சாலையின் நடுவே, 'ஏண்டா... பொம்பளைங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா... பொறுக்கி நாயே...' என திட்டியபடி, ஒருவனை, செருப்பால் விளாசினார் இளம் பெண் ஒருவர்.
'என்ன விஷயம்?' என்று அவரிடம் விசாரித்தோம். 'உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாக்குறேன். ஸ்பெஷஸ் கிளாஸ் முடிச்சுட்டு வர, லேட்டாகிடுச்சு. அதனால, பஸ் ஸ்டாப்பில தனியாக நின்றிருந்தேன். இருட்டில் தனியாக நிற்கிறத பார்த்ததும், அருகில் யாரும் இல்லாத தைரியத்தில், 'வர்றியா'ன்னு கேட்டான்.
'அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால, இவனுக்கு பாடம் புகட்டணும் என்பதற்காக, 'வர்றேன்'ன்னு சொல்லி இங்க அழைச்சுட்டு வந்தேன்...' என்றார்.
உடனே, எல்லாரும் சேர்ந்து, தர்ம அடி கொடுத்து, புத்தி சொல்லி அனுப்பினோம். அப்பெண்ணின் தைரியத்தை பாராட்டி, பின், பத்திரமாக பஸ் ஏற்றி விட்டோம். பெண்களே... ஆபத்து நேரத்தில் பயப்படுவதை தவிர்த்து, சமயோசிதமாக செயல்பட ஆரம்பித்தால், ரவுடிகள் உங்களிடம் வாலாட்ட மாட்டார்கள்!
பி.மகேந்திரன், திருப்பூர்.
அலுவலகம் முடிந்து வரும் தங்கையை அழைத்து வர, பஸ் நிலையம் சென்ற போது, பரபரப்பான அந்த சாலையின் நடுவே, 'ஏண்டா... பொம்பளைங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா... பொறுக்கி நாயே...' என திட்டியபடி, ஒருவனை, செருப்பால் விளாசினார் இளம் பெண் ஒருவர்.
'என்ன விஷயம்?' என்று அவரிடம் விசாரித்தோம். 'உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாக்குறேன். ஸ்பெஷஸ் கிளாஸ் முடிச்சுட்டு வர, லேட்டாகிடுச்சு. அதனால, பஸ் ஸ்டாப்பில தனியாக நின்றிருந்தேன். இருட்டில் தனியாக நிற்கிறத பார்த்ததும், அருகில் யாரும் இல்லாத தைரியத்தில், 'வர்றியா'ன்னு கேட்டான்.
'அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால, இவனுக்கு பாடம் புகட்டணும் என்பதற்காக, 'வர்றேன்'ன்னு சொல்லி இங்க அழைச்சுட்டு வந்தேன்...' என்றார்.
உடனே, எல்லாரும் சேர்ந்து, தர்ம அடி கொடுத்து, புத்தி சொல்லி அனுப்பினோம். அப்பெண்ணின் தைரியத்தை பாராட்டி, பின், பத்திரமாக பஸ் ஏற்றி விட்டோம். பெண்களே... ஆபத்து நேரத்தில் பயப்படுவதை தவிர்த்து, சமயோசிதமாக செயல்பட ஆரம்பித்தால், ரவுடிகள் உங்களிடம் வாலாட்ட மாட்டார்கள்!
பி.மகேந்திரன், திருப்பூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குடும்ப ஒற்றுமை நீடிக்க...
தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள் ஆறு பேர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஆனால், சிறு வயதில் எங்களுக்குள் இருந்த ஒற்றுமை, இப்போது இல்லை. ஏதாவது விசேஷ நாட்களில் சந்தித்தால் மட்டும் நலம் விசாரித்துக் கொள்வோம்; மற்றபடி எந்த ஒரு தொடர்பும் எங்களுக்குள் இல்லை.
இந்நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் உறவுமுறை குறித்து பிள்ளைகளுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால், குடும்ப உறுப்பினர் அனைவரின் மொபைல் நம்பரை வாங்கி, 'வாட்ஸ்ஆப்'பில், எங்க அம்மாவின் பெயரில் ஒரு குரூப் துவங்கினேன்.
இப்போது, குடும்ப உறுப்பினர் அனைவரும் தங்களுடைய கருத்துகளுடன், புகைப்படங்கள் மற்றும் அன்றாட குடும்ப நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்; இதனால், நாங்கள் அனைவருக்கும் ஒரு கூட்டு குடும்ப உணர்வை உணர்கிறோம்
ரா.ஸ்ரீதர், திருப்பூர்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள் ஆறு பேர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஆனால், சிறு வயதில் எங்களுக்குள் இருந்த ஒற்றுமை, இப்போது இல்லை. ஏதாவது விசேஷ நாட்களில் சந்தித்தால் மட்டும் நலம் விசாரித்துக் கொள்வோம்; மற்றபடி எந்த ஒரு தொடர்பும் எங்களுக்குள் இல்லை.
இந்நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் உறவுமுறை குறித்து பிள்ளைகளுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால், குடும்ப உறுப்பினர் அனைவரின் மொபைல் நம்பரை வாங்கி, 'வாட்ஸ்ஆப்'பில், எங்க அம்மாவின் பெயரில் ஒரு குரூப் துவங்கினேன்.
இப்போது, குடும்ப உறுப்பினர் அனைவரும் தங்களுடைய கருத்துகளுடன், புகைப்படங்கள் மற்றும் அன்றாட குடும்ப நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்; இதனால், நாங்கள் அனைவருக்கும் ஒரு கூட்டு குடும்ப உணர்வை உணர்கிறோம்
ரா.ஸ்ரீதர், திருப்பூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு தாயின் எச்சரிக்கை!
என் இரண்டு வயது குழந்தையுடன், பேருத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு பின் சீட்டிலிருந்த இளைஞன் ஒருவன், குழந்தைக்கு வேடிக்கை காட்டுவதும், அதனுடன் விளையாடுவதுமாக இருந்தான்.
குழந்தை அவனுடன் சிறிது பழகியதும், 'பாப்புக்குட்டி... வா வா...' என குழந்தையை அழைக்க, குழந்தை அவனிடம் தாவியது. குழந்தையை என்னிடமிருந்து வாங்குவதும், திருப்பிக் கொடுப்பதும், விளையாட்டு காட்டுவதுமாக இருந்த அவன், குழந்தையை வாங்கும் போதும், கொடுக்கும் போதும், மெல்ல கையால் என்னை உரசுவதும், தடவுவதுமாக சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான். அவனை முறைத்த நான், அதன்பின், குழந்தையை என்னிடமே வைத்துக் கொண்டேன்.
குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்களே... உங்கள் குழந்தைக்கு வேடிக்கை காட்டும் ஆண் நரிகளின் இறுதி நோக்கம், உங்கள் உடலாக தான் இருக்கும். எனவே, வேடிக்கை காட்டும் கோமாளிகளிடம் கவனமாக இருங்கள்!
ஜெயலஷ்மி நந்தக்குமார், தேனி.
என் இரண்டு வயது குழந்தையுடன், பேருத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு பின் சீட்டிலிருந்த இளைஞன் ஒருவன், குழந்தைக்கு வேடிக்கை காட்டுவதும், அதனுடன் விளையாடுவதுமாக இருந்தான்.
குழந்தை அவனுடன் சிறிது பழகியதும், 'பாப்புக்குட்டி... வா வா...' என குழந்தையை அழைக்க, குழந்தை அவனிடம் தாவியது. குழந்தையை என்னிடமிருந்து வாங்குவதும், திருப்பிக் கொடுப்பதும், விளையாட்டு காட்டுவதுமாக இருந்த அவன், குழந்தையை வாங்கும் போதும், கொடுக்கும் போதும், மெல்ல கையால் என்னை உரசுவதும், தடவுவதுமாக சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான். அவனை முறைத்த நான், அதன்பின், குழந்தையை என்னிடமே வைத்துக் கொண்டேன்.
குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்களே... உங்கள் குழந்தைக்கு வேடிக்கை காட்டும் ஆண் நரிகளின் இறுதி நோக்கம், உங்கள் உடலாக தான் இருக்கும். எனவே, வேடிக்கை காட்டும் கோமாளிகளிடம் கவனமாக இருங்கள்!
ஜெயலஷ்மி நந்தக்குமார், தேனி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தகாத உறவு தேவையா?
என் நண்பர், 'பலான' பெண்களிடம் பழக்கம் உள்ளவர். இவர் சொல்லும், 'பலான' அனுபவங்களை கேட்பதற்கு, இவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.
திடீரென்று யாருக்கும் தெரியாமல், ரகசிய திருமணம் செய்து கொண்ட நண்பர், சமீபத்தில், புது மனைவியுடன் சினிமா பார்க்கச் சென்றிருக்கிறார். தியேட்டரில், 'டேய் மாப்ளே... கட்டை செமத்தியா இருக்கு; எங்கிருந்து தள்ளிகிட்டு வந்த...' என்று, கேட்டுள்ளனர் அவரது நண்பர்கள்.
மனைவி எதிரில், நண்பர்கள் இவ்வாறு கேட்டதும், பதறிப் போனவர், 'இவள் என் மனைவி...' என்று அழாத குறையாக கூறியிருக்கிறார். ஆனால், அதை நம்பாத நண்பர்கள், 'எங்களுக்கு நாமம் போட்டுட்டு, நீ மட்டும் ஜமாய்க்கலாம்ன்னு பாக்குறியா...
இவ, உன் மனைவிங்கிறதுக்கு என்ன சாட்சி...' என்று வெறுப்பேத்த, ரகசிய
திருமணம் செய்து கொண்ட உண்மையை நிரூபிக்க முடியாமல், நொந்து விட்டார் நண்பர்.
தகாத உறவு வைத்திருந்ததுடன், அதை தம்பட்டம் அடித்து திரிந்த நண்பருக்கு கிடைத்த அவமானத்தை பார்த்தீர்களா... இதை விட வேறு தண்டனை வேண்டுமா என்ன!
எம்.பாலமுருகன், திண்டுக்கல்
என் நண்பர், 'பலான' பெண்களிடம் பழக்கம் உள்ளவர். இவர் சொல்லும், 'பலான' அனுபவங்களை கேட்பதற்கு, இவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.
திடீரென்று யாருக்கும் தெரியாமல், ரகசிய திருமணம் செய்து கொண்ட நண்பர், சமீபத்தில், புது மனைவியுடன் சினிமா பார்க்கச் சென்றிருக்கிறார். தியேட்டரில், 'டேய் மாப்ளே... கட்டை செமத்தியா இருக்கு; எங்கிருந்து தள்ளிகிட்டு வந்த...' என்று, கேட்டுள்ளனர் அவரது நண்பர்கள்.
மனைவி எதிரில், நண்பர்கள் இவ்வாறு கேட்டதும், பதறிப் போனவர், 'இவள் என் மனைவி...' என்று அழாத குறையாக கூறியிருக்கிறார். ஆனால், அதை நம்பாத நண்பர்கள், 'எங்களுக்கு நாமம் போட்டுட்டு, நீ மட்டும் ஜமாய்க்கலாம்ன்னு பாக்குறியா...
இவ, உன் மனைவிங்கிறதுக்கு என்ன சாட்சி...' என்று வெறுப்பேத்த, ரகசிய
திருமணம் செய்து கொண்ட உண்மையை நிரூபிக்க முடியாமல், நொந்து விட்டார் நண்பர்.
தகாத உறவு வைத்திருந்ததுடன், அதை தம்பட்டம் அடித்து திரிந்த நண்பருக்கு கிடைத்த அவமானத்தை பார்த்தீர்களா... இதை விட வேறு தண்டனை வேண்டுமா என்ன!
எம்.பாலமுருகன், திண்டுக்கல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உஷார்!
என் நண்பர் ஒருவர், எப்போதும் செயின், மோதிரம், வாட்ச் அணிந்திருப்பார். சமீபத்தில், அவர் இரவு நேர பஸ்சுக்காக காத்திருந்த போது, இரண்டு பேர் அவரிடம் வந்து ஏதோ விசாரித்து, பின், கீழே கிடந்த கர்சீப்பை எடுத்து, 'இது உங்களுடையதா?' என்று கேட்பது போல, நண்பரின் மூக்கருகே காட்டியுள்ளனர்.
அதில், மயக்க மருந்தை தெளித்திருக்கின்றனர். அதை சுவாசித்ததில், மயங்கி விழுந்துள்ளார் நண்பர்.
உடனே அந்த இருவரும், 'இவர் எங்கள் நண்பர்; அடிக்கடி இது போல் இவருக்கு மயக்கம் வரும்...' என்று அருகில் இருந்தவர்களிடம் சொல்லி, ஆட்டோ ஒன்றில், நண்பரை ஏற்றி சென்றுள்ளனர்.
இருளான இடத்திற்கு சென்றதும், அவரிடம் இருந்த நகை, பணத்தை பிடுங்கிக் கொண்டு, அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இரவு, 2:00 மணியளவில், மயக்கம் தெளிந்து, தட்டுத்தடுமாறி, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்திருக்கிறார் நண்பர்.
இரவுப் பயணம் செல்வோரே... அறிமுகம் இல்லாத நபரிடம், பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாதீர்கள்; எப்போதும் விழிப்புடன் இருங்கள்!
— ஏ.ராமகிருஷ்ணன், மதுரை.
என் நண்பர் ஒருவர், எப்போதும் செயின், மோதிரம், வாட்ச் அணிந்திருப்பார். சமீபத்தில், அவர் இரவு நேர பஸ்சுக்காக காத்திருந்த போது, இரண்டு பேர் அவரிடம் வந்து ஏதோ விசாரித்து, பின், கீழே கிடந்த கர்சீப்பை எடுத்து, 'இது உங்களுடையதா?' என்று கேட்பது போல, நண்பரின் மூக்கருகே காட்டியுள்ளனர்.
அதில், மயக்க மருந்தை தெளித்திருக்கின்றனர். அதை சுவாசித்ததில், மயங்கி விழுந்துள்ளார் நண்பர்.
உடனே அந்த இருவரும், 'இவர் எங்கள் நண்பர்; அடிக்கடி இது போல் இவருக்கு மயக்கம் வரும்...' என்று அருகில் இருந்தவர்களிடம் சொல்லி, ஆட்டோ ஒன்றில், நண்பரை ஏற்றி சென்றுள்ளனர்.
இருளான இடத்திற்கு சென்றதும், அவரிடம் இருந்த நகை, பணத்தை பிடுங்கிக் கொண்டு, அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இரவு, 2:00 மணியளவில், மயக்கம் தெளிந்து, தட்டுத்தடுமாறி, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்திருக்கிறார் நண்பர்.
இரவுப் பயணம் செல்வோரே... அறிமுகம் இல்லாத நபரிடம், பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாதீர்கள்; எப்போதும் விழிப்புடன் இருங்கள்!
— ஏ.ராமகிருஷ்ணன், மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐந்து செகண்டு கார்டினால்...
பெரும்பாலான வீடுகளில், பெண்கள், மாலை, 6:00 மணிக்கு, 'ரிமோட்'டுடன் அமர்ந்தால், இரவு, 11:00 மணி வரை அத்தனை தொடரையும் பார்த்து விட்டு தான், 'டிவி'யை, 'ஆப்' செய்கின்றனர். இரவு சமையல், சாப்பாடு எல்லாம், தொடரின் இடைவேளையின் போது, அவசர கோலத்தில் முடிக்கப்படுகின்றன.
இப்படி அரக்க பரக்க வீட்டு வேலைகளை செய்வதால், தூங்கப் போகும் முன், கேஸ் சிலிண்டர் மற்றும் தேவை இல்லாத மின் இணைப்புகளை, சில நேரம், 'ஆப்' செய்ய மறந்து விடுகின்றனர்.
எனவே, இரவில் ஒளிபரப்பாகும் தொடர்களில், 'கேஸ் சிலிண்டரை மூடி விட்டீர்களா, அவசியமற்ற மின் இணைப்புகளை துண்டித்து விட்டீர்களா...' எனக் கேட்டு, ஒரு கார்டு போட்டால், குடும்ப தலைவிகளுக்கு நினைவூட்டலாய் அமையுமே! ஐந்து செகண்டு கார்டினால், சில அசம்பாவிதங்களை தவிர்க்கலாமே... செய்வார்களா?
அஜித், சென்னை
பெரும்பாலான வீடுகளில், பெண்கள், மாலை, 6:00 மணிக்கு, 'ரிமோட்'டுடன் அமர்ந்தால், இரவு, 11:00 மணி வரை அத்தனை தொடரையும் பார்த்து விட்டு தான், 'டிவி'யை, 'ஆப்' செய்கின்றனர். இரவு சமையல், சாப்பாடு எல்லாம், தொடரின் இடைவேளையின் போது, அவசர கோலத்தில் முடிக்கப்படுகின்றன.
இப்படி அரக்க பரக்க வீட்டு வேலைகளை செய்வதால், தூங்கப் போகும் முன், கேஸ் சிலிண்டர் மற்றும் தேவை இல்லாத மின் இணைப்புகளை, சில நேரம், 'ஆப்' செய்ய மறந்து விடுகின்றனர்.
எனவே, இரவில் ஒளிபரப்பாகும் தொடர்களில், 'கேஸ் சிலிண்டரை மூடி விட்டீர்களா, அவசியமற்ற மின் இணைப்புகளை துண்டித்து விட்டீர்களா...' எனக் கேட்டு, ஒரு கார்டு போட்டால், குடும்ப தலைவிகளுக்கு நினைவூட்டலாய் அமையுமே! ஐந்து செகண்டு கார்டினால், சில அசம்பாவிதங்களை தவிர்க்கலாமே... செய்வார்களா?
அஜித், சென்னை
Page 76 of 100 • 1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 76 of 100
|
|