புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 74 of 100 •
Page 74 of 100 • 1 ... 38 ... 73, 74, 75 ... 87 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1165622ராஜா wrote:நல்ல யோசனை ... இங்கும் எனது நண்பர்கள் பயன்படுத்துகின்றனர்krishnaamma wrote:வடமாநிலத்தில் இது சகஜம்!
நான் பணிபுரியும் அலுவலகத்தில், ஒரே பகுதியிலிருந்து அலுவலகத்திற்கு வரும், இரு வடமாநில நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும், தனித்தனியே இருசக்கர வாகனம் இருந்தாலும், அலுவலகத்திற்கு வரும் போது, ஒரு வாகனத்தில் தான் வருவர். விசாரித்ததில், ஒருநாள் ஒருவருடைய வாகனத்தையும், அடுத்த நாள் மற்றொருவரின் வாகனத்தையும் பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
இப்படி செய்வதன் மூலம் பெட்ரோல் செலவு மிச்சமாவதாகவும், வண்டியும் விரைவில் தேய்மானம் ஆகாதென்றும் விளக்கமளித்தனர்.
'வடமாநிலத்தில் இது சகஜமான விஷயம்; இங்கு ஏன் அது போல இல்ல?' என்றும் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆரம்பத்தில், அவர்களை கருமிகள் என்று கிண்டல் செய்த சக நண்பர்கள், தற்போது, அவர்களுடைய யோசனையை காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். நீங்களும் இந்த யோசனையை பின்பற்றலாமே?
ஜெ.கண்ணன், சென்னை.
நன்றி ராஜா .......அங்குமா?.............பரவாஇல்லையே....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வீட்டுக்கும், நாட்டுக்கும்...
சமீபத்தில் என் நண்பர் ஒருவர், 'இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வரும் கரன்ட் பில்லைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. வீட்டில் யாருக்கும் விழிப்புணர்வு இல்ல; இதே என் கம்பெனியில் பணி புரியும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர், திறமையாக வேலை செய்து, குறைவாக செலவு வைக்கிறார். அவரது செயலை பாராட்டி, அவருக்கு நல்ல சம்பளமும், செலவு குறைவுக்கு ஏற்ப ஊக்கத் தொகையும் கொடுக்கிறேன்...' என்று புலம்பினார். அலுவலகத்தில் செய்யும் அதே வேலையை வீட்டிலும் செய்ய சொன்னேன்.
'பில் தொகையை எவ்வளவு மிச்சப் படுத்துகிறாயோ, அதை நீயே வைத்துக் கொள்...' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறார் நண்பர். இப்போது பலன் கை மேல். பாதிக்கு பாதி கரன்ட் பில் குறைந்து விட்டதாம்.
வீட்டுக்கும், நாட்டுக்கும் ஒரே நேரத்தில் நல்லது செய்து விட்ட நண்பரை பாராட்டினேன்.
பிரகாஷ், திருச்செங்கோடு.
சமீபத்தில் என் நண்பர் ஒருவர், 'இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வரும் கரன்ட் பில்லைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. வீட்டில் யாருக்கும் விழிப்புணர்வு இல்ல; இதே என் கம்பெனியில் பணி புரியும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர், திறமையாக வேலை செய்து, குறைவாக செலவு வைக்கிறார். அவரது செயலை பாராட்டி, அவருக்கு நல்ல சம்பளமும், செலவு குறைவுக்கு ஏற்ப ஊக்கத் தொகையும் கொடுக்கிறேன்...' என்று புலம்பினார். அலுவலகத்தில் செய்யும் அதே வேலையை வீட்டிலும் செய்ய சொன்னேன்.
'பில் தொகையை எவ்வளவு மிச்சப் படுத்துகிறாயோ, அதை நீயே வைத்துக் கொள்...' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறார் நண்பர். இப்போது பலன் கை மேல். பாதிக்கு பாதி கரன்ட் பில் குறைந்து விட்டதாம்.
வீட்டுக்கும், நாட்டுக்கும் ஒரே நேரத்தில் நல்லது செய்து விட்ட நண்பரை பாராட்டினேன்.
பிரகாஷ், திருச்செங்கோடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166845krishnaamma wrote:வீட்டுக்கும், நாட்டுக்கும்...
சமீபத்தில் என் நண்பர் ஒருவர், 'இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வரும் கரன்ட் பில்லைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. வீட்டில் யாருக்கும் விழிப்புணர்வு இல்ல; இதே என் கம்பெனியில் பணி புரியும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர், திறமையாக வேலை செய்து, குறைவாக செலவு வைக்கிறார். அவரது செயலை பாராட்டி, அவருக்கு நல்ல சம்பளமும், செலவு குறைவுக்கு ஏற்ப ஊக்கத் தொகையும் கொடுக்கிறேன்...' என்று புலம்பினார். அலுவலகத்தில் செய்யும் அதே வேலையை வீட்டிலும் செய்ய சொன்னேன்.
'பில் தொகையை எவ்வளவு மிச்சப் படுத்துகிறாயோ, அதை நீயே வைத்துக் கொள்...' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறார் நண்பர். இப்போது பலன் கை மேல். பாதிக்கு பாதி கரன்ட் பில் குறைந்து விட்டதாம்.
வீட்டுக்கும், நாட்டுக்கும் ஒரே நேரத்தில் நல்லது செய்து விட்ட நண்பரை பாராட்டினேன்.
பிரகாஷ், திருச்செங்கோடு.
மகா கேவலமாய் இருக்கே என்று இதை இங்கு போட்டேன்............ அந்த வீடுக்குடையவள் தானா அவள்?............தான் சாப்பிடும் இல்லை லேயே திருடுவது போல இருக்கே இது ........சீ சீ.......என்ன செய்யப்போறா அந்த பணத்தை வைத்துக்கொண்டு?...............முதலில் பொறுப்பாய் சேமிக்க முடியாதவள் இப்போ எதற்காக செமிக்கிறாள்?...........தன் குடுமபத்துகாக சேர்க்க முடியாதவள் தனக்கு சேர்க்கிறாள் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியலை....இப்படி 'ஓரங்கானியாய் ' அதாவது சுயநலமாய் சிந்தித்தால், அப்புறம் அது குடும்பமே இல்லை தானே?..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆறுபதிலும் உற்சாகம் குறையாமல்...
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நண்பரை, சமீபத்தில் சந்தித்த போது, பேச்சினிடையே, 'வேலை பார்க்கும் போது ரொம்ப பிசியா இருந்துட்டு, இப்ப பொழுதுபோறது ரொம்ப கஷ்டமா இருக்குமே...' என்றேன்.
சத்தம் போட்டு சிரித்த நண்பர், 'வேலை பார்க்கும் போது, 24 மணி நேரமும் என் கட்டுப்பாட்டில் இல்லைங்கிறது தான் உண்மை. ஆனா, இப்போ சுதந்திரமா செயல்பட முடியுது. ஓய்வுன்னா, வேலை எதுவும் செய்யாம, சும்மா இருப்பது இல்ல. ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதுதான். இந்த மனோபாவத்தில் வளர்ந்ததால் தான், 60 வயதை தாண்டிய பின்பும், இன்னும் உற்சாகம் குறையாம இருக்கேன். இப்போ, 'ஆர்கானிக்' காய்கறிகளை, ஏற்றுமதி செய்யும் தொழிலில், மும்முரமாய் இறங்கியிருக்கிறேன்...' என்றார்.
சோர்வோ, தயக்கமோ இல்லாமல், உற்சாகமாக பேசிய நண்பரின் தன்னம்பிக்கையில் ஆனந்தம் மட்டுமல்ல, அரிய பாடமும் கிடைத்தது!
பி.ஜி.பி., இசக்கி, பொட்டல்புதூர்.
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நண்பரை, சமீபத்தில் சந்தித்த போது, பேச்சினிடையே, 'வேலை பார்க்கும் போது ரொம்ப பிசியா இருந்துட்டு, இப்ப பொழுதுபோறது ரொம்ப கஷ்டமா இருக்குமே...' என்றேன்.
சத்தம் போட்டு சிரித்த நண்பர், 'வேலை பார்க்கும் போது, 24 மணி நேரமும் என் கட்டுப்பாட்டில் இல்லைங்கிறது தான் உண்மை. ஆனா, இப்போ சுதந்திரமா செயல்பட முடியுது. ஓய்வுன்னா, வேலை எதுவும் செய்யாம, சும்மா இருப்பது இல்ல. ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதுதான். இந்த மனோபாவத்தில் வளர்ந்ததால் தான், 60 வயதை தாண்டிய பின்பும், இன்னும் உற்சாகம் குறையாம இருக்கேன். இப்போ, 'ஆர்கானிக்' காய்கறிகளை, ஏற்றுமதி செய்யும் தொழிலில், மும்முரமாய் இறங்கியிருக்கிறேன்...' என்றார்.
சோர்வோ, தயக்கமோ இல்லாமல், உற்சாகமாக பேசிய நண்பரின் தன்னம்பிக்கையில் ஆனந்தம் மட்டுமல்ல, அரிய பாடமும் கிடைத்தது!
பி.ஜி.பி., இசக்கி, பொட்டல்புதூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'கிசு கிசு' சிகாமணிகள் கவனத்திற்கு!
எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண், மிக அழகாக இருப்பாள். அவள், வேலைக்கு சேர்ந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன. நவநாகரிக உடை அணிந்து அலுவலகத்துக்கு வருபவள்; திடீர் திடீரென விடுப்பு எடுத்துச் செல்வாள். எங்கே செல்கிறாள் என, யாரிடமும் சொல்ல மாட்டாள். இதனால், அனைவருமே அவளைப் பற்றி, பலவிதமாக, 'கிசு கிசு' பேசுவோம்.
ஒரு நாள் அவளிடம் பேசியபோது, ஒரு உண்மையைச் சொன்னாள்... உயிரை பறிக்கும் நோய் அவளை பீடித்திருக்கிறது!
'என் உடல், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. உடல் உறுப்புகளில் பெரும்பாலானவை, மருந்து, மாத்திரைகளால் செயல்படுகின்றன. இதையெல்லாம் மத்தவங்ககிட்டே சொல்லி, எதுக்கு அவங்கள துக்கப்படுத்தணும்...' என்றாள். காற்று வற்றிய பூரி போல் ஆனது என் முகம்.
'மனதில் இவ்வளவு சோகத்தை வைத்து, எப்படி உன்னால் இத்தனை கவர்ச்சியா உடை அணிய முடியுது...' எனக் கேட்டேன். 'நான் கவர்ச்சியாகவா உடை அணிகிறேன்... ஜீன்ஸ் போடும் போது ஷர்ட்டின் மேல் பட்டன் போடாமலோ, 'டைட்'டாவோ போடுறதில்லயே... இடுப்புக்கு கீழே, நீளமாக தான் போடுகிறேன். புடவையக் கூட, தொப்புள் தெரிவது போல் கட்டறதில்ல.
'என்னைப் பொறுத்தவரை, இருக்கும் வரை, நல்லா உடை உடுத்தணும். என் உடல் நிலையை காரணமாக வைத்து, ஏனோதானோ என்று, 'டிரஸ்' செய்ய விரும்பவில்லை. சுய பச்சாதாபம் ஏற்படாமல் இருக்கவும், என்னை நானே உற்சாகபடுத்திக் கொள்ளவும் விதவிதமாக ஆடை, அலங்காரம் செய்து கொள்கிறேன்...' என்றாள்.
அன்று முதல், அவளை மட்டுமல்ல, யாரைப் பற்றியும், 'கிசு கிசு' பேசுவதை நிறுத்தினோம்.
வெளித்தோற்றத்தை வைத்து, உண்மை தெரியாமல், அடுத்தவர் பற்றி வம்பளக்கும், 'கிசு கிசு' சிகாமணிகள் இனி, மாறலாமே!
பி.பானுமதி, சென்னை.
எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண், மிக அழகாக இருப்பாள். அவள், வேலைக்கு சேர்ந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன. நவநாகரிக உடை அணிந்து அலுவலகத்துக்கு வருபவள்; திடீர் திடீரென விடுப்பு எடுத்துச் செல்வாள். எங்கே செல்கிறாள் என, யாரிடமும் சொல்ல மாட்டாள். இதனால், அனைவருமே அவளைப் பற்றி, பலவிதமாக, 'கிசு கிசு' பேசுவோம்.
ஒரு நாள் அவளிடம் பேசியபோது, ஒரு உண்மையைச் சொன்னாள்... உயிரை பறிக்கும் நோய் அவளை பீடித்திருக்கிறது!
'என் உடல், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. உடல் உறுப்புகளில் பெரும்பாலானவை, மருந்து, மாத்திரைகளால் செயல்படுகின்றன. இதையெல்லாம் மத்தவங்ககிட்டே சொல்லி, எதுக்கு அவங்கள துக்கப்படுத்தணும்...' என்றாள். காற்று வற்றிய பூரி போல் ஆனது என் முகம்.
'மனதில் இவ்வளவு சோகத்தை வைத்து, எப்படி உன்னால் இத்தனை கவர்ச்சியா உடை அணிய முடியுது...' எனக் கேட்டேன். 'நான் கவர்ச்சியாகவா உடை அணிகிறேன்... ஜீன்ஸ் போடும் போது ஷர்ட்டின் மேல் பட்டன் போடாமலோ, 'டைட்'டாவோ போடுறதில்லயே... இடுப்புக்கு கீழே, நீளமாக தான் போடுகிறேன். புடவையக் கூட, தொப்புள் தெரிவது போல் கட்டறதில்ல.
'என்னைப் பொறுத்தவரை, இருக்கும் வரை, நல்லா உடை உடுத்தணும். என் உடல் நிலையை காரணமாக வைத்து, ஏனோதானோ என்று, 'டிரஸ்' செய்ய விரும்பவில்லை. சுய பச்சாதாபம் ஏற்படாமல் இருக்கவும், என்னை நானே உற்சாகபடுத்திக் கொள்ளவும் விதவிதமாக ஆடை, அலங்காரம் செய்து கொள்கிறேன்...' என்றாள்.
அன்று முதல், அவளை மட்டுமல்ல, யாரைப் பற்றியும், 'கிசு கிசு' பேசுவதை நிறுத்தினோம்.
வெளித்தோற்றத்தை வைத்து, உண்மை தெரியாமல், அடுத்தவர் பற்றி வம்பளக்கும், 'கிசு கிசு' சிகாமணிகள் இனி, மாறலாமே!
பி.பானுமதி, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனதை நெகிழ வைத்த மாற்றுத் திறனாளி!
சமீபத்தில், ரயிலில் பயணித்தபோது, கண் தெரியாத மாற்றுத் திறனாளி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்காக, நான் இருந்த பெட்டியில் ஏறினார்.
சிறிது நேரம் பொருட்களை கூவி விற்றவர், பின், உரத்த குரலில், 'பெரியோர்களே, தாய்மார்களே... இந்த ரயில், இனி தாம்பரம், மாம்பலம் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்; இன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் தினம் என்பதால், மேற்குறித்த ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து, குழந்தைகளுக்கு வழங்க முகாம் அமைத்துள்ளனர். குழந்தைகளுடன் இறங்கும் தாய்மார்கள் போலியோ சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாம்...' என்று அறிவித்தார்.
மாற்றுத் திறனாளியாக இருந்தும், அவரின் இந்த சமுதாயப் பணி, ரயிலில் பயணம் செய்த எல்லோரது மனதையும், நெகிழ வைத்தது.
இச்சம்பவத்தை பார்த்ததிலிருந்து, 'நாமும் இம்மாதிரி ஏதாவது ஒரு வகையில், சமுதாயத்துக்கு உதவ வேண்டும்...' என்ற முடிவை எனக்குள் ஏற்படுத்தியது.
வி.பரமசிவம், சென்னை.
சமீபத்தில், ரயிலில் பயணித்தபோது, கண் தெரியாத மாற்றுத் திறனாளி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்காக, நான் இருந்த பெட்டியில் ஏறினார்.
சிறிது நேரம் பொருட்களை கூவி விற்றவர், பின், உரத்த குரலில், 'பெரியோர்களே, தாய்மார்களே... இந்த ரயில், இனி தாம்பரம், மாம்பலம் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்; இன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் தினம் என்பதால், மேற்குறித்த ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து, குழந்தைகளுக்கு வழங்க முகாம் அமைத்துள்ளனர். குழந்தைகளுடன் இறங்கும் தாய்மார்கள் போலியோ சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாம்...' என்று அறிவித்தார்.
மாற்றுத் திறனாளியாக இருந்தும், அவரின் இந்த சமுதாயப் பணி, ரயிலில் பயணம் செய்த எல்லோரது மனதையும், நெகிழ வைத்தது.
இச்சம்பவத்தை பார்த்ததிலிருந்து, 'நாமும் இம்மாதிரி ஏதாவது ஒரு வகையில், சமுதாயத்துக்கு உதவ வேண்டும்...' என்ற முடிவை எனக்குள் ஏற்படுத்தியது.
வி.பரமசிவம், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கிறீர்களா?
வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்த உடனே கிடைக்கும் பிரின்ட் - அவுட் விவரங்கள், சில நாட்களில் சத்தமாக அழிந்து விடுவதாலும், பாஸ் - புக்கை அதிகம் பயன்படுத்தாத காரணத்தாலும், சமயத்தில் வங்கி வரவு - செலவு மற்றும் இருப்பு விவரம், நமக்கு தெரியாமல் போய், தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நான் கையாளும் ஐடியா இது...
நான்கைந்து முறை ஏ.டி.எம் பயன்படுத்தியபின், ஒரு ஸ்டேட்மென்ட் எடுத்து, அதை என் மொபைலில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வேன். அதனால், பணம் கட்டியதையும், எடுத்த விவரங்களையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிவதுடன், அடுத்த முறை பணம் எடுக்கும்போது பேலன்சை, செக் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கு இதை பின்பற்றலாமே!
ரா. ரவிச்சந்திரன், சென்னை.
வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்த உடனே கிடைக்கும் பிரின்ட் - அவுட் விவரங்கள், சில நாட்களில் சத்தமாக அழிந்து விடுவதாலும், பாஸ் - புக்கை அதிகம் பயன்படுத்தாத காரணத்தாலும், சமயத்தில் வங்கி வரவு - செலவு மற்றும் இருப்பு விவரம், நமக்கு தெரியாமல் போய், தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நான் கையாளும் ஐடியா இது...
நான்கைந்து முறை ஏ.டி.எம் பயன்படுத்தியபின், ஒரு ஸ்டேட்மென்ட் எடுத்து, அதை என் மொபைலில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வேன். அதனால், பணம் கட்டியதையும், எடுத்த விவரங்களையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிவதுடன், அடுத்த முறை பணம் எடுக்கும்போது பேலன்சை, செக் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கு இதை பின்பற்றலாமே!
ரா. ரவிச்சந்திரன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாதும் ஊரே!
உடல் நலக் குறைவால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் தங்கியிருந்த, 'வார்டின்' எதிர் வரிசையில், நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். பார்வையாளர் நேரத்தில், நோயாளிகளை பார்க்க, பழம், பட்சணங்களுடன் நிறைய பேர் வருவர். ஆனால், அவரை பார்க்க ஒருத்தரும் வருவதில்லை. அதனால், அது போன்ற சமயத்தில், அவர் மெல்ல எழுந்து, வெளியில் போய் விடுவார் அல்லது கண்களை மூடி படுத்திருப்பார்.
அவரைப் பார்த்தால், வாழ்க்கையே வெறுத்து விட்டவர் போல் இருப்பார். நான், அவரை கவனித்தது போல், அவருக்கு அடுத்த, 'பெட்' நோயாளியை பார்க்க வந்த ஒருவரும் கவனித்துள்ளார்.
ஒருநாள், அவரிடமும் பேச்சு கொடுத்து, 'எந்த ஊர்?' என்று விசாரித்திருக்கிறார்.
நோயாளி பதில் கூறியதும், வந்தவர், 'ஓ... நீங்க நம்ம ஊர்க்காரர்...' என்று சொல்லி, மறுநாள் வரும் போது, அவருக்கும் பழங்கள் மற்றும் பட்சணங்கள் வாங்கிக் வந்து கொடுத்து, இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார். அதுவரை, கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தவரிடம், 'பார்வையாளர் நேரம்' வரும் போது, ஒரு உற்சாகம் தொற்றி கொண்டது போல் தெரிந்தது.
மேலும், ஒரு வாரம் சென்றபின், நான், 'டிஸ்சார்ஜ்' ஆகி போகும் போது, அந்த பார்வையாளரை சந்தித்து, 'அந்த நோயாளி உங்க ஊர்க்காரரா?' என்று கேட்டேன்.
'இல்ல சார்... அவருக்கு தைரியத்த வரவழைக்கிறதுக்காக தான், நான் அப்படி சொன்னேன். அதனால் என்ன... நாம் மேலே போய் சேர்கிற வரைக்கும் எல்லாருமே ஒரே ஊர்க்காரர் தானே...' என்று சொல்லி சென்றார். 'இப்படியும் சிலர் இருக்கின்றனரே...' என்று எண்ணும் போது மகிழ்ச்சியாய் இருந்தது.
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி.
உடல் நலக் குறைவால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் தங்கியிருந்த, 'வார்டின்' எதிர் வரிசையில், நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். பார்வையாளர் நேரத்தில், நோயாளிகளை பார்க்க, பழம், பட்சணங்களுடன் நிறைய பேர் வருவர். ஆனால், அவரை பார்க்க ஒருத்தரும் வருவதில்லை. அதனால், அது போன்ற சமயத்தில், அவர் மெல்ல எழுந்து, வெளியில் போய் விடுவார் அல்லது கண்களை மூடி படுத்திருப்பார்.
அவரைப் பார்த்தால், வாழ்க்கையே வெறுத்து விட்டவர் போல் இருப்பார். நான், அவரை கவனித்தது போல், அவருக்கு அடுத்த, 'பெட்' நோயாளியை பார்க்க வந்த ஒருவரும் கவனித்துள்ளார்.
ஒருநாள், அவரிடமும் பேச்சு கொடுத்து, 'எந்த ஊர்?' என்று விசாரித்திருக்கிறார்.
நோயாளி பதில் கூறியதும், வந்தவர், 'ஓ... நீங்க நம்ம ஊர்க்காரர்...' என்று சொல்லி, மறுநாள் வரும் போது, அவருக்கும் பழங்கள் மற்றும் பட்சணங்கள் வாங்கிக் வந்து கொடுத்து, இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார். அதுவரை, கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தவரிடம், 'பார்வையாளர் நேரம்' வரும் போது, ஒரு உற்சாகம் தொற்றி கொண்டது போல் தெரிந்தது.
மேலும், ஒரு வாரம் சென்றபின், நான், 'டிஸ்சார்ஜ்' ஆகி போகும் போது, அந்த பார்வையாளரை சந்தித்து, 'அந்த நோயாளி உங்க ஊர்க்காரரா?' என்று கேட்டேன்.
'இல்ல சார்... அவருக்கு தைரியத்த வரவழைக்கிறதுக்காக தான், நான் அப்படி சொன்னேன். அதனால் என்ன... நாம் மேலே போய் சேர்கிற வரைக்கும் எல்லாருமே ஒரே ஊர்க்காரர் தானே...' என்று சொல்லி சென்றார். 'இப்படியும் சிலர் இருக்கின்றனரே...' என்று எண்ணும் போது மகிழ்ச்சியாய் இருந்தது.
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1168298ayyasamy ram wrote:நாம் மேலே போய் சேர்கிற வரைக்கும் எல்லாருமே ஒரே ஊர்க்காரர் தானே...'
-
Page 74 of 100 • 1 ... 38 ... 73, 74, 75 ... 87 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 74 of 100
|
|