புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 54 of 100 •
Page 54 of 100 • 1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேண்டாமே கிண்டல்!
குடும்பச் சூழ்நிலை காரணமாக, ஒரு மருந்துக் கடையில் பணிபுரிகிறேன். நான் பணிபுரியும் கடைக்கு அருகில் இருக்கும் சில வாலிபர்கள், கடை முதலாளி இல்லாத நேரத்தில் வந்து, 'அந்த காண்டம் வேண்டும், இந்த காண்டம் வேண்டும்...' என்று கேட்பதுடன், 'எது நன்றாக இருக்கும்; எத்தனை முறை உபயோகிக்கலாம்; எது நீண்ட நேரத்திற்கு வரும்...' என்று கொச்சையாக கேள்விகள் கேட்டு, என்னை சங்கடப்படுத்துகின்றனர்.
வேலை செய்தே ஆக வேண்டிய குடும்ப சூழ்நிலையில், கிடைத்த வேலையை செய்து, வாழ்க்கை நடத்தும் என்னைப் போன்ற பெண்களிடம், இதுபோன்று இழிவாக நடந்து கொள்வோர் என்று தான் திருந்துவரோ!
கே.பி.இந்திராணி, சேலையூர்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக, ஒரு மருந்துக் கடையில் பணிபுரிகிறேன். நான் பணிபுரியும் கடைக்கு அருகில் இருக்கும் சில வாலிபர்கள், கடை முதலாளி இல்லாத நேரத்தில் வந்து, 'அந்த காண்டம் வேண்டும், இந்த காண்டம் வேண்டும்...' என்று கேட்பதுடன், 'எது நன்றாக இருக்கும்; எத்தனை முறை உபயோகிக்கலாம்; எது நீண்ட நேரத்திற்கு வரும்...' என்று கொச்சையாக கேள்விகள் கேட்டு, என்னை சங்கடப்படுத்துகின்றனர்.
வேலை செய்தே ஆக வேண்டிய குடும்ப சூழ்நிலையில், கிடைத்த வேலையை செய்து, வாழ்க்கை நடத்தும் என்னைப் போன்ற பெண்களிடம், இதுபோன்று இழிவாக நடந்து கொள்வோர் என்று தான் திருந்துவரோ!
கே.பி.இந்திராணி, சேலையூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உற்சாகப் பிறந்த நாள்!
சமீபத்தில், என் நண்பரோட பிள்ளையின் முதலாவது பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு, ஓர் அறையில் குத்துவிளக்கு ஏற்றி, அதனடியில், சாக்லேட், கேக் மற்றும் வருக என மூன்று தட்டுகளும், அதற்கு கீழே நிறைய மண் அகல் விளக்குகளும் வைத்திருந்தனர்.
வாழ்த்த வந்திருந்த அனைவரையும், அந்த அகல் விளக்குகளை ஏற்றச் சொன்னார் நண்பர். அனைவரும் ஏற்றி முடித்த பின், அந்த அறையிலிருந்த மின் விளக்கை அணைத்ததும், அந்தக் குழந்தையின் பெயரான, 'ஆதி' என்ற தமிழ் எழுத்து வடிவத்தில், அந்த அகல் விளக்குகள் எரிந்ததைப் பார்க்க, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அதன்பின், மின் விளக்குகளை ஒளிரச் செய்து, ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ நண்பர்களின் பிரார்த்தனைகள் நடைபெற்றன. முடிவில், ஒவ்வொருவராக பரிசளித்து குழந்தையை வாழ்த்தினர்.
இது மட்டுமல்லாமல், தமிழ் கவிஞர் ஒருவருக்கு பொன்னாடை அணிவித்து, பரிசளித்து பாராட்டியது, மனதுக்கு நெகிழ்வாக இருந்தது.
மெழுகுவர்த்திகளை ஏற்றி, அவைகளை அபசகுணமாக அணைத்து, பின், கேக் வெட்டி கொண்டாடுவதை விடுத்து, தமிழர்களாகிய நாம் இப்படி ஒளி வெள்ளம் பாய்ச்சி, உற்சாகமாகப் பிறந்த நாளை கொண்டாடலாமே!
- தேன்தமிழன், நெய்வேலி
சமீபத்தில், என் நண்பரோட பிள்ளையின் முதலாவது பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு, ஓர் அறையில் குத்துவிளக்கு ஏற்றி, அதனடியில், சாக்லேட், கேக் மற்றும் வருக என மூன்று தட்டுகளும், அதற்கு கீழே நிறைய மண் அகல் விளக்குகளும் வைத்திருந்தனர்.
வாழ்த்த வந்திருந்த அனைவரையும், அந்த அகல் விளக்குகளை ஏற்றச் சொன்னார் நண்பர். அனைவரும் ஏற்றி முடித்த பின், அந்த அறையிலிருந்த மின் விளக்கை அணைத்ததும், அந்தக் குழந்தையின் பெயரான, 'ஆதி' என்ற தமிழ் எழுத்து வடிவத்தில், அந்த அகல் விளக்குகள் எரிந்ததைப் பார்க்க, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அதன்பின், மின் விளக்குகளை ஒளிரச் செய்து, ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ நண்பர்களின் பிரார்த்தனைகள் நடைபெற்றன. முடிவில், ஒவ்வொருவராக பரிசளித்து குழந்தையை வாழ்த்தினர்.
இது மட்டுமல்லாமல், தமிழ் கவிஞர் ஒருவருக்கு பொன்னாடை அணிவித்து, பரிசளித்து பாராட்டியது, மனதுக்கு நெகிழ்வாக இருந்தது.
மெழுகுவர்த்திகளை ஏற்றி, அவைகளை அபசகுணமாக அணைத்து, பின், கேக் வெட்டி கொண்டாடுவதை விடுத்து, தமிழர்களாகிய நாம் இப்படி ஒளி வெள்ளம் பாய்ச்சி, உற்சாகமாகப் பிறந்த நாளை கொண்டாடலாமே!
- தேன்தமிழன், நெய்வேலி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வித்தியாசமான திருமணநாள் கொண்டாட்டம்!
சமீபத்தில், என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவளுக்கு திருமணம் ஆகி, ஒரு ஆண்டு முடிய இருப்பதால், 'அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள். திருமண நாளை எப்படி கொண்டாடப் போறே...' எனக் கேட்டேன்.
அதற்கு, என் தோழி கூறிய பதிலில், ஆச்சரியப்பட்டு போனேன்.
'விழா, விருந்துன்னு செலவழிக்குற பணத்தில, எனக்குத் தெரிஞ்ச இரண்டு, மூணு ஏழைப் பெண்களுக்கு, திருமணத்திற்கு உதவும் வகையில, தாலி மற்றும் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க, நானும், என் கணவரும் முடிவு செய்திருக்கோம்.
நாங்க செய்யும் இச்சிறு உதவியால், அவர்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைச்சா, அதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்கு... மகளிர் சங்கம் மூலம் இதைக் கொடுத்து, எங்க திருமண நாளை, வித்தியாசமாக கொண்டாடப் போறோம்...' என்றாள்.
என் தோழியையும், அவள் கணவரையும் மனமார பாராட்டினேன். பணம் படைத்தோர் இந்த வழி முறையை பின்பற்றினால், முதிர்கன்னிகளின் எண்ணிக்கை, நம் நாட்டில் கணிசமாக குறையும். செய்வரா?
மு.இந்திராணி, விருதுநகர்.
சமீபத்தில், என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவளுக்கு திருமணம் ஆகி, ஒரு ஆண்டு முடிய இருப்பதால், 'அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள். திருமண நாளை எப்படி கொண்டாடப் போறே...' எனக் கேட்டேன்.
அதற்கு, என் தோழி கூறிய பதிலில், ஆச்சரியப்பட்டு போனேன்.
'விழா, விருந்துன்னு செலவழிக்குற பணத்தில, எனக்குத் தெரிஞ்ச இரண்டு, மூணு ஏழைப் பெண்களுக்கு, திருமணத்திற்கு உதவும் வகையில, தாலி மற்றும் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க, நானும், என் கணவரும் முடிவு செய்திருக்கோம்.
நாங்க செய்யும் இச்சிறு உதவியால், அவர்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைச்சா, அதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்கு... மகளிர் சங்கம் மூலம் இதைக் கொடுத்து, எங்க திருமண நாளை, வித்தியாசமாக கொண்டாடப் போறோம்...' என்றாள்.
என் தோழியையும், அவள் கணவரையும் மனமார பாராட்டினேன். பணம் படைத்தோர் இந்த வழி முறையை பின்பற்றினால், முதிர்கன்னிகளின் எண்ணிக்கை, நம் நாட்டில் கணிசமாக குறையும். செய்வரா?
மு.இந்திராணி, விருதுநகர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் உற்சாகப்படுத்தலாமே!
சமீபத்தில், விடுமுறைக்காக பிள்ளைகளுடன் என் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அண்ணனின் பிள்ளைகள், அவர்களுடைய பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளையும், சம்பவங்களையும் ஒவ்வொன்றாக கூற, சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்த போது, என் அண்ணி ஒரு கேடயத்தைக் காட்டி, 'உங்க அண்ணன் போன ஆண்டு முழுவதும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்குப் போனதால, அவங்க கம்பெனி ஆண்டு விழாவில இந்த விருதை குடுத்தாங்க...' என்று கூறி, அதன் புகைப்படங்களை காண்பித்தார்.
அத்துடன் நில்லாமல், பீரோவிலிருந்து, இரண்டு கிராம் தங்க நாணயத்தை எடுத்து வந்து காட்டி, 'உங்க அண்ணன் லீவு போடாம வேலைக்கு போனதற்கு, நானும் ஒரு காரணம்ன்னு என்னையும் மேடையில பாராட்டி, இதை ஊக்கப் பரிசாக கொடுத்தாங்க. இதைப் போல, இன்னும் நான்கைந்து தொழிலாளிகளின் மனைவியர் மற்றும் தாயாருக்கும், இது போன்ற தங்க நாணயம் பரிசாக கிடைத்தது...' என்றார்.
வேலைக்கு நேரந்தவறாமல் வருவதற்கும், நேர்மையாக உழைப்பதற்கும், மனைவியும் ஒரு தூண்டுகோல் என்பதை உணர்த்திய, அந்நிறுவனத்தை மனதார பாராட்டினேன்.
கே.பூஜா, விளாங்குடி.
சமீபத்தில், விடுமுறைக்காக பிள்ளைகளுடன் என் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அண்ணனின் பிள்ளைகள், அவர்களுடைய பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளையும், சம்பவங்களையும் ஒவ்வொன்றாக கூற, சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்த போது, என் அண்ணி ஒரு கேடயத்தைக் காட்டி, 'உங்க அண்ணன் போன ஆண்டு முழுவதும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்குப் போனதால, அவங்க கம்பெனி ஆண்டு விழாவில இந்த விருதை குடுத்தாங்க...' என்று கூறி, அதன் புகைப்படங்களை காண்பித்தார்.
அத்துடன் நில்லாமல், பீரோவிலிருந்து, இரண்டு கிராம் தங்க நாணயத்தை எடுத்து வந்து காட்டி, 'உங்க அண்ணன் லீவு போடாம வேலைக்கு போனதற்கு, நானும் ஒரு காரணம்ன்னு என்னையும் மேடையில பாராட்டி, இதை ஊக்கப் பரிசாக கொடுத்தாங்க. இதைப் போல, இன்னும் நான்கைந்து தொழிலாளிகளின் மனைவியர் மற்றும் தாயாருக்கும், இது போன்ற தங்க நாணயம் பரிசாக கிடைத்தது...' என்றார்.
வேலைக்கு நேரந்தவறாமல் வருவதற்கும், நேர்மையாக உழைப்பதற்கும், மனைவியும் ஒரு தூண்டுகோல் என்பதை உணர்த்திய, அந்நிறுவனத்தை மனதார பாராட்டினேன்.
கே.பூஜா, விளாங்குடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாசுக்காக கையாளுங்களேன்!
நண்பர் ஒருவரின் மகளுக்கு, படித்து முடித்த கையோடு வேலையும் கிடைத்தது. வேலைக்கு சென்று வந்த பெண், யாரோ ஒருவனை காதலிக்க ஆரம்பித்து, அவனுடன் ஊர் சுற்றுவதாக நண்பரின் மனைவிக்கு தகவல் வந்தது. விஷயத்தை கேள்விப்பட்டு பதறினாலும், அதை கணவரிடம் சொல்லாமல், தானே மகளிடம் மெதுவாக விசாரித்திருக்கிறார்.
அவள், 'ஆம்' என்று கூறியவுடன், பையனை பற்றி விசாரித்து, 'இந்த மாதம் வேணாம்; அடுத்த மாதம் அந்தப் பையன, அவங்க பெத்தவங்களோட நம்ம வீட்டுக்கு வந்து பெண் கேட்கச் சொல். வேறு ஜாதின்னாலும் பரவாயில்ல; அப்பாவ சமாளிச்சு, சம்மதிக்க வைக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார்.
விஷயம் தெரிந்து, அந்தப் பையன், பெற்றோருடன் வருவதாக கூறிச் சென்றதோடு சரி. பின், நண்பரின் மகளை சந்திக்கவே இல்லை.
இப்பெண் அவனை தேடிச் சென்று கேட்டதற்கு, 'சும்மா ஜாலிக்காக தான் காதலிச்சேன்...' என்று கூறியிருக்கிறான். அதிர்ந்த பெண், தன் தாயிடம் வந்து உண்மையை கூறி, அழுதிருக்கிறாள். ஆறுதல் கூறிய நண்பரின் மனைவி, 'இதை கெட்ட கனவா நெனச்சு மறந்துட்டு, ஒழுங்கா வேலைக்குப் போ; நல்ல இடமா பாத்து நாங்க உனக்கு திருமணம் செய்து வைக்கிறோம்...' என்று கூறியுள்ளார்.
தற்போது, தானுண்டு தன் வேலையுண்டு என்று வேலைக்கு சென்று வருகிறாள் பெண். சில பெற்றோர், தங்கள் மகள் காதலிக்கிறாள் என தெரிந்ததும், 'தாம் தூம்' என குதித்து, அதை ஊருக்கெல்லாம் தெரிய வைத்து, மகளையும், மரியாதை குறைவாக பேசி, தங்களுக்கும் தலைகுனிவை தேடிக் கொள்வர்.
நண்பர் மனைவியை போல் புத்திசாலித்தனமாக நாசுக்காய் நடந்து, காதலின் பின்விளைவு என்ன, காதல் உண்மையா என்பதையெல்லாம் விவரமாக புரிய வைத்து, அவர்களை மாற்றலாம்; அது, நம் கவுரவத்திற்கும் இழுக்கில்லை.
பெற்றோரே... காதல் விஷயம் கேட்டால், இனி, பக்குவமாய் நடக்க முயற்சியுங்களேன்!
அ. சந்திரசேகர், பொள்ளாச்சி.
நண்பர் ஒருவரின் மகளுக்கு, படித்து முடித்த கையோடு வேலையும் கிடைத்தது. வேலைக்கு சென்று வந்த பெண், யாரோ ஒருவனை காதலிக்க ஆரம்பித்து, அவனுடன் ஊர் சுற்றுவதாக நண்பரின் மனைவிக்கு தகவல் வந்தது. விஷயத்தை கேள்விப்பட்டு பதறினாலும், அதை கணவரிடம் சொல்லாமல், தானே மகளிடம் மெதுவாக விசாரித்திருக்கிறார்.
அவள், 'ஆம்' என்று கூறியவுடன், பையனை பற்றி விசாரித்து, 'இந்த மாதம் வேணாம்; அடுத்த மாதம் அந்தப் பையன, அவங்க பெத்தவங்களோட நம்ம வீட்டுக்கு வந்து பெண் கேட்கச் சொல். வேறு ஜாதின்னாலும் பரவாயில்ல; அப்பாவ சமாளிச்சு, சம்மதிக்க வைக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார்.
விஷயம் தெரிந்து, அந்தப் பையன், பெற்றோருடன் வருவதாக கூறிச் சென்றதோடு சரி. பின், நண்பரின் மகளை சந்திக்கவே இல்லை.
இப்பெண் அவனை தேடிச் சென்று கேட்டதற்கு, 'சும்மா ஜாலிக்காக தான் காதலிச்சேன்...' என்று கூறியிருக்கிறான். அதிர்ந்த பெண், தன் தாயிடம் வந்து உண்மையை கூறி, அழுதிருக்கிறாள். ஆறுதல் கூறிய நண்பரின் மனைவி, 'இதை கெட்ட கனவா நெனச்சு மறந்துட்டு, ஒழுங்கா வேலைக்குப் போ; நல்ல இடமா பாத்து நாங்க உனக்கு திருமணம் செய்து வைக்கிறோம்...' என்று கூறியுள்ளார்.
தற்போது, தானுண்டு தன் வேலையுண்டு என்று வேலைக்கு சென்று வருகிறாள் பெண். சில பெற்றோர், தங்கள் மகள் காதலிக்கிறாள் என தெரிந்ததும், 'தாம் தூம்' என குதித்து, அதை ஊருக்கெல்லாம் தெரிய வைத்து, மகளையும், மரியாதை குறைவாக பேசி, தங்களுக்கும் தலைகுனிவை தேடிக் கொள்வர்.
நண்பர் மனைவியை போல் புத்திசாலித்தனமாக நாசுக்காய் நடந்து, காதலின் பின்விளைவு என்ன, காதல் உண்மையா என்பதையெல்லாம் விவரமாக புரிய வைத்து, அவர்களை மாற்றலாம்; அது, நம் கவுரவத்திற்கும் இழுக்கில்லை.
பெற்றோரே... காதல் விஷயம் கேட்டால், இனி, பக்குவமாய் நடக்க முயற்சியுங்களேன்!
அ. சந்திரசேகர், பொள்ளாச்சி.
காதலுன்னா பக்குவமா அம்மாகையில
சொல்லிப்போடு செல்லக்கண்ணு !
அவங்க கல்யாணத்தை முடிப்பாங்க செல்லக்கண்ணு !
சொல்லிப்போடு செல்லக்கண்ணு !
அவங்க கல்யாணத்தை முடிப்பாங்க செல்லக்கண்ணு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129043Dr.S.Soundarapandian wrote:காதலுன்னா பக்குவமா அம்மாகையில
சொல்லிப்போடு செல்லக்கண்ணு !
அவங்க கல்யாணத்தை முடிப்பாங்க செல்லக்கண்ணு !
நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருமண அழைப்பிதழில் விலாசம்!
சமீப காலமாக சிலர், திருமண அழைப்பிதழை ஒரு மாதம் முன்பே தந்து விடுகின்றனர். இது, ஒரு வகையில் நல்லது தான் என்றாலும், சில சமயங்களில், 'இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே...' என்று அசிரத்தையாக இருந்து விடவும் வாய்ப்புகள் உள்ளன. இதில், சிலர், அழைப்பிதழில் வீட்டு விலாசத்தை குறிப்பிடுவதில்லை.
சமீபத்தில் எனக்கு வந்த திருமண அழைப்பிதழில், திருமண மண்டபத்தின் விலாசம் மட்டுமே இருந்தது. வெளியூரில் நடந்த அத்திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலையில், மண்டப விலாசத்திற்கு வாழ்த்து மடல் அனுப்பினேன். ஆனால், அது எனக்கே திரும்பி வந்தது. வாழ்த்து மடலை உரியவர்களிடம் அனுப்பும் பொறுப்பை, மண்டப உரிமையாளர்கள் செய்ய மாட்டார்கள் போலும்!
இதைத் தவிர்க்க, திருமண அழைப்பிதழில், மணமகன், மணமகள் இருவரது விலாசங்களையும் தந்துவிடுவது நல்லது. தவிர, திருமணத்திற்கு வருபவர்களை உபசரிப்பது போல், வாழ்த்து அனுப்பியவர்களுக்கும், 'நன்றி' தெரிவிப்பதே முறை. தொலை தொடர்பு வசதிகள் நிறைந்த இக்காலத்தில், அழைப்பிதழ் தருபவர்கள் தங்கள் விலாசத்தையோ, 'இ-மெயில்' முகவரியோ தந்தால் சிறப்பாக இருக்குமே!
ஜி.சுவாமிநாதன், சென்னை.
சமீப காலமாக சிலர், திருமண அழைப்பிதழை ஒரு மாதம் முன்பே தந்து விடுகின்றனர். இது, ஒரு வகையில் நல்லது தான் என்றாலும், சில சமயங்களில், 'இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே...' என்று அசிரத்தையாக இருந்து விடவும் வாய்ப்புகள் உள்ளன. இதில், சிலர், அழைப்பிதழில் வீட்டு விலாசத்தை குறிப்பிடுவதில்லை.
சமீபத்தில் எனக்கு வந்த திருமண அழைப்பிதழில், திருமண மண்டபத்தின் விலாசம் மட்டுமே இருந்தது. வெளியூரில் நடந்த அத்திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலையில், மண்டப விலாசத்திற்கு வாழ்த்து மடல் அனுப்பினேன். ஆனால், அது எனக்கே திரும்பி வந்தது. வாழ்த்து மடலை உரியவர்களிடம் அனுப்பும் பொறுப்பை, மண்டப உரிமையாளர்கள் செய்ய மாட்டார்கள் போலும்!
இதைத் தவிர்க்க, திருமண அழைப்பிதழில், மணமகன், மணமகள் இருவரது விலாசங்களையும் தந்துவிடுவது நல்லது. தவிர, திருமணத்திற்கு வருபவர்களை உபசரிப்பது போல், வாழ்த்து அனுப்பியவர்களுக்கும், 'நன்றி' தெரிவிப்பதே முறை. தொலை தொடர்பு வசதிகள் நிறைந்த இக்காலத்தில், அழைப்பிதழ் தருபவர்கள் தங்கள் விலாசத்தையோ, 'இ-மெயில்' முகவரியோ தந்தால் சிறப்பாக இருக்குமே!
ஜி.சுவாமிநாதன், சென்னை.
Page 54 of 100 • 1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 54 of 100
|
|