புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 46 of 100 •
Page 46 of 100 • 1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பரிகார ராசியா, பரிகாச ராசியா?
என் தோழியின் கணவருக்கு, ஜாதகப் பித்து அதிகம். சமீபத்தில், சனி பெயர்ச்சி பலன்களை படித்தவர், 'எனக்கு பிரச்னையில்லை; நல்ல பலன்கள் நடக்கப் போகுது. உனக்கு தான், பரிகார ராசி; வாயை திறந்தாலே வம்பு வருமாம். இனிமே, சாப்பிட மட்டும் வாயை திற...' என்று பரிகாசம் செய்ததோடு, 'உன்னை புடிச்ச கிரகம், எங்களையும் ஆட்டி வச்சு, கூத்து பாக்கப் போவுது...' என, வசவு மொழிகளால், சதா சர்வ காலமும் தீயாய் சுடுகிறார். இதை சொல்லி எங்களிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார் தோழி.
ஜாதக பலன்களை வைத்துக் கொண்டு, இப்படி அர்த்தமேயில்லாமல் பிறர் மனதை காயப்படுத்தும் போக்கை கை விட்டு, ஆக வேண்டியதை பார்ப்பதல்லவா இல்லற மாண்பு. இது, இவர்களுக்கு எப்போது தான் புரியப் போகிறதோ!
எல்.சிவகாமி,திருவள்ளூர்.
என் தோழியின் கணவருக்கு, ஜாதகப் பித்து அதிகம். சமீபத்தில், சனி பெயர்ச்சி பலன்களை படித்தவர், 'எனக்கு பிரச்னையில்லை; நல்ல பலன்கள் நடக்கப் போகுது. உனக்கு தான், பரிகார ராசி; வாயை திறந்தாலே வம்பு வருமாம். இனிமே, சாப்பிட மட்டும் வாயை திற...' என்று பரிகாசம் செய்ததோடு, 'உன்னை புடிச்ச கிரகம், எங்களையும் ஆட்டி வச்சு, கூத்து பாக்கப் போவுது...' என, வசவு மொழிகளால், சதா சர்வ காலமும் தீயாய் சுடுகிறார். இதை சொல்லி எங்களிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார் தோழி.
ஜாதக பலன்களை வைத்துக் கொண்டு, இப்படி அர்த்தமேயில்லாமல் பிறர் மனதை காயப்படுத்தும் போக்கை கை விட்டு, ஆக வேண்டியதை பார்ப்பதல்லவா இல்லற மாண்பு. இது, இவர்களுக்கு எப்போது தான் புரியப் போகிறதோ!
எல்.சிவகாமி,திருவள்ளூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'கொட்டு' வைத்தியம்!
சமீபத்தில், திடீரென்று எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் இரவு, 11:30 மணிக்கு மேல், அருகிலுள்ள குடும்ப மருத்துவரிடம் நானும், என் கணவரும் சென்றோம். தூங்கப் போவதற்கான முஸ்திபூகளில் இருந்த அவர், எங்களைக் கண்களாலேயே காத்திருக்கும்படி சொல்லி, ஒரு காகிதத்தை மேஜையிலிருந்து எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து, நான்கு முறை, தன் தலையில் தானே பலமாக குட்டிக் கொண்டார்.
பின், எழுதியவற்றை ஒவ்வொன்றாக பேனாவால் அடித்து முடித்தபின், மருத்துவம் பார்க்கத் துவங்கினார்.
வியப்புடன் இதுகுறித்து கேட்டதற்கு, 'தினந்தோறும் இரவு உறங்கச் செல்லும் முன், அன்றைக்கு தெரிந்தோ, தெரியாமலோ என்னென்ன தவறுகளைச் செய்தோம்ன்னு நினைவு கூர்ந்து, அவற்றை ஒரு தாளில் எழுதி, ஒவ்வொரு தவறுக்கும் தலையில் குட்டிக் கொள்வேன். அதே தவறை மறுபடியும் செய்தால், இரண்டு கொட்டு என, தவறுக்கேற்ப கொட்டுக்களும் அதிகமாகிக் கொண்டே போகும்.
'சிறுவயதில் நாம் செய்த தவறுக்கு தண்டனை அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர், வளர்ந்த பின், காணாமல் போய் விடுவர். அதனால், நம் தவறுகளுக்கு நாமே பொறுப்பேற்பது மட்டுமல்ல, தண்டனையும் அளித்து, அத்தவறு மீண்டும் நடக்காமல் தடுக்கவே இந்த கொட்டு வைத்தியம்...' என்றார்.
கொட்டு வைத்தியத்தின் பெருமையை உணர்ந்து நாங்களும் கடைப்பிடிக்க துவங்கி விட்டோம். அப்போ நீங்கள்?
சங்கமித்ரா நாகராஜன், கோவை.
சமீபத்தில், திடீரென்று எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் இரவு, 11:30 மணிக்கு மேல், அருகிலுள்ள குடும்ப மருத்துவரிடம் நானும், என் கணவரும் சென்றோம். தூங்கப் போவதற்கான முஸ்திபூகளில் இருந்த அவர், எங்களைக் கண்களாலேயே காத்திருக்கும்படி சொல்லி, ஒரு காகிதத்தை மேஜையிலிருந்து எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து, நான்கு முறை, தன் தலையில் தானே பலமாக குட்டிக் கொண்டார்.
பின், எழுதியவற்றை ஒவ்வொன்றாக பேனாவால் அடித்து முடித்தபின், மருத்துவம் பார்க்கத் துவங்கினார்.
வியப்புடன் இதுகுறித்து கேட்டதற்கு, 'தினந்தோறும் இரவு உறங்கச் செல்லும் முன், அன்றைக்கு தெரிந்தோ, தெரியாமலோ என்னென்ன தவறுகளைச் செய்தோம்ன்னு நினைவு கூர்ந்து, அவற்றை ஒரு தாளில் எழுதி, ஒவ்வொரு தவறுக்கும் தலையில் குட்டிக் கொள்வேன். அதே தவறை மறுபடியும் செய்தால், இரண்டு கொட்டு என, தவறுக்கேற்ப கொட்டுக்களும் அதிகமாகிக் கொண்டே போகும்.
'சிறுவயதில் நாம் செய்த தவறுக்கு தண்டனை அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர், வளர்ந்த பின், காணாமல் போய் விடுவர். அதனால், நம் தவறுகளுக்கு நாமே பொறுப்பேற்பது மட்டுமல்ல, தண்டனையும் அளித்து, அத்தவறு மீண்டும் நடக்காமல் தடுக்கவே இந்த கொட்டு வைத்தியம்...' என்றார்.
கொட்டு வைத்தியத்தின் பெருமையை உணர்ந்து நாங்களும் கடைப்பிடிக்க துவங்கி விட்டோம். அப்போ நீங்கள்?
சங்கமித்ரா நாகராஜன், கோவை.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நான் தவறை நினைத்துப் பார்ப்பேன், மீண்டும் அது நடக்காமல் கவனமாக இருப்பேன்... ஆனால் கொட்டு வைத்தியம்.... வித்தியாசமாக இருக்கிறது...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஒரு டாக்டர் --கொட்டு வைத்யம்--அதிசயம்தான் .பைத்யகாரத்தனமாக உள்ளது .
தினம் தினம் தவறு செய்வாராம் . கொட்டிப்பாராம் . ஜீரணிக்க முடியவில்லை என்னால் .
திருவாளர் நாகராஜன் இதை கடைப்பிடிக்கிராராம் . ஏன் ? டாக்டர் என்பதால் தானே !
அவருடைய பக்கத்து வீட்டுக்காரரோ /அவர் கீழ் வேலை செய்பவரோ இப்பிடி செய்து இருந்தால் ,
அதை அவர் கடைபிடிப்பாரா ? சந்தேகம் தான் . என் கணிப்பே !
ரமணியன்
தினம் தினம் தவறு செய்வாராம் . கொட்டிப்பாராம் . ஜீரணிக்க முடியவில்லை என்னால் .
திருவாளர் நாகராஜன் இதை கடைப்பிடிக்கிராராம் . ஏன் ? டாக்டர் என்பதால் தானே !
அவருடைய பக்கத்து வீட்டுக்காரரோ /அவர் கீழ் வேலை செய்பவரோ இப்பிடி செய்து இருந்தால் ,
அதை அவர் கடைபிடிப்பாரா ? சந்தேகம் தான் . என் கணிப்பே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நல்ல பதிவுகள் ! நன்றி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நண்பர்களே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தோனேசியாவில் உள்ள பாலி வனப் பகுதியில் உராங்உடான் குரங்குகளை படம்பிடித்துக்கொண்டிருந்தார் வனவிலங்கு புகைப்படக்காரர் ஆண்ட்ரூ சூர்யோனோ. அப்போது திடீரென மழை வரவே, தன் கேமராவை பெட்டியில் வைத்துவிட்டு, ஒதுங்க இடம் தேட ஆரம்பித்தார்.
ஆனால், ஒரு குட்டிக் குரங்கு துளியும் நகராமல், பக்கத்தில் இருந்த ஒரு பெரிய இலையை பறித்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு அவரை கவனித்தது. இதைப் பார்த்ததும் உடனே நனைவது பற்றிக் கவலைப்படாமல் கேமராவை பெட்டியிலிருந்து எடுத்து க்ளிக் செய்தார் ஆண்ட்ரூ. சோனியின் 2014 உலக புகைப்படப் போட்டிக்கு இறுதிச் சுற்றுக்குத் தேர்வான படம்தான் இது!
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண் குழந்தைகளை கொஞ்சும் போது...
என் நண்பருக்கும், அவரது மனைவிக்கும் அவர்களது மகள் மீது, அலாதி பிரியம்.
சமீபத்தில், நண்பரது இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, தெருவில் விற்ற பூவை வாங்கி, மகளுக்கு சூட்டிய நண்பரின் மனைவி, 'நீ இங்க இருக்கிற வரைக்கும் தாம்மா சந்தோஷமாக இருக்க முடியும்; நாளைக்கு போற இடத்துல, இதுவெல்லாம் கிடைக்குமோ என்னவோ... என்ன வேணும்ன்னாலும் கேட்டு வாங்கி, நல்லா அனுபவிச்சுக்கோ...' என்று கூறியதை கேட்டு, அதிர்ந்து போனேன்.
'எந்த அர்த்தத்தில் குழந்தைகிட்ட இப்படி எல்லாம் சொல்றீங்க?' எனக் கேட்டதற்கு, 'உண்மை தானே... போற இடத்துல புருஷன் பூ வாங்கித் தர்றானோ, இல்லையோ... சந்தோஷமா வச்சிருப்பான்னு யாருக்கு தெரியும். பொம்பள புள்ளைங்க சந்தோஷமெல்லாம் பிறந்த வீட்ல இருக்கிற வரைக்கும் தான்...' என்று கூறி, மேலும் அதிர்வூட்டினர்.
திருமணம் ஆன பெண்கள் எல்லாம் கஷ்டப் படுவதை போலவும், கணவனால் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதை போன்றும்,'கணவன் வீடு சென்றால் சந்தோஷம் இருக்காது...' என்று கூறி, பெண் குழந்தையை வளர்த்தால், அவள் மனதில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டு, கணவன் என்றால் கொடுமைக்காரன், மாமியார் வீடென்றால் நரகம், திருமணம் சந்தோஷத்துக்கு கேடு என்கிற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், அவளது எதிர்கால வாழ்வு என்னாகும் என, கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
பெண்ணைப் பெற்றவர்களே... இது போன்ற தவறான கருத்துகளை பெண் பிள்ளைகள் மீது திணித்து வளர்ப்பீர்களேயானால், அப்படி வளரும் குழந்தைகளை, கடைசி வரை நீங்களே வைத்துக் காப்பாற்றும் நிலை தான் ஏற்படும்.
எனவே, பிஞ்சு மனதில் வருங்கால வாழ்வை சூன்யமாக்கும் வண்ணம், கணவன், குடும்பம் பற்றிய தவறான கருத்தை பதிய வைப்பதை தவிருங்கள், ப்ளீஸ்!
— ஆர்.செந்தில்ராஜா,மதுரை.
என் நண்பருக்கும், அவரது மனைவிக்கும் அவர்களது மகள் மீது, அலாதி பிரியம்.
சமீபத்தில், நண்பரது இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, தெருவில் விற்ற பூவை வாங்கி, மகளுக்கு சூட்டிய நண்பரின் மனைவி, 'நீ இங்க இருக்கிற வரைக்கும் தாம்மா சந்தோஷமாக இருக்க முடியும்; நாளைக்கு போற இடத்துல, இதுவெல்லாம் கிடைக்குமோ என்னவோ... என்ன வேணும்ன்னாலும் கேட்டு வாங்கி, நல்லா அனுபவிச்சுக்கோ...' என்று கூறியதை கேட்டு, அதிர்ந்து போனேன்.
'எந்த அர்த்தத்தில் குழந்தைகிட்ட இப்படி எல்லாம் சொல்றீங்க?' எனக் கேட்டதற்கு, 'உண்மை தானே... போற இடத்துல புருஷன் பூ வாங்கித் தர்றானோ, இல்லையோ... சந்தோஷமா வச்சிருப்பான்னு யாருக்கு தெரியும். பொம்பள புள்ளைங்க சந்தோஷமெல்லாம் பிறந்த வீட்ல இருக்கிற வரைக்கும் தான்...' என்று கூறி, மேலும் அதிர்வூட்டினர்.
திருமணம் ஆன பெண்கள் எல்லாம் கஷ்டப் படுவதை போலவும், கணவனால் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதை போன்றும்,'கணவன் வீடு சென்றால் சந்தோஷம் இருக்காது...' என்று கூறி, பெண் குழந்தையை வளர்த்தால், அவள் மனதில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டு, கணவன் என்றால் கொடுமைக்காரன், மாமியார் வீடென்றால் நரகம், திருமணம் சந்தோஷத்துக்கு கேடு என்கிற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், அவளது எதிர்கால வாழ்வு என்னாகும் என, கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
பெண்ணைப் பெற்றவர்களே... இது போன்ற தவறான கருத்துகளை பெண் பிள்ளைகள் மீது திணித்து வளர்ப்பீர்களேயானால், அப்படி வளரும் குழந்தைகளை, கடைசி வரை நீங்களே வைத்துக் காப்பாற்றும் நிலை தான் ஏற்படும்.
எனவே, பிஞ்சு மனதில் வருங்கால வாழ்வை சூன்யமாக்கும் வண்ணம், கணவன், குடும்பம் பற்றிய தவறான கருத்தை பதிய வைப்பதை தவிருங்கள், ப்ளீஸ்!
— ஆர்.செந்தில்ராஜா,மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் செய்யலாமே!
எங்கள் பகுதியில் குடியிருப்போரின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க, சங்கம் ஒன்று வைத்துள்ளோம். இச்சங்கத்தின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு நில்லாமல், திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை மருத்துவரை வரவழைத்து, இலவச வைத்திய சேவை செய்கிறோம்
எந்த துறை மருத்துவர் எந்த நாள் வருவார் என்பதை, சங்க கட்டடத்தில் உள்ள அட்டவணையில் எழுதி வைத்து விடுவோம். இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இதன் மூலம் பயனடைகின்றனர். வாரம் ஒருமுறை, ௨:௦௦ மணி நேரம் மட்டும் செலவழிக்க வேண்டும் என்பதால், எங்கள் பகுதி மருத்துவர்களும் மகிழ்ச்சியுடன் இந்த சேவையை செய்கின்றனர். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கொடி ஏற்றி, இனிப்பு வழங்குவதோடு நின்று விடாமல், இதுபோன்ற பல நல்ல காரியங்களை குடியிருப்போர் சங்கங்கள் செய்யலாமே!
ஜெ.கண்ணன்,
சென்னை.
எங்கள் பகுதியில் குடியிருப்போரின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க, சங்கம் ஒன்று வைத்துள்ளோம். இச்சங்கத்தின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு நில்லாமல், திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை மருத்துவரை வரவழைத்து, இலவச வைத்திய சேவை செய்கிறோம்
எந்த துறை மருத்துவர் எந்த நாள் வருவார் என்பதை, சங்க கட்டடத்தில் உள்ள அட்டவணையில் எழுதி வைத்து விடுவோம். இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இதன் மூலம் பயனடைகின்றனர். வாரம் ஒருமுறை, ௨:௦௦ மணி நேரம் மட்டும் செலவழிக்க வேண்டும் என்பதால், எங்கள் பகுதி மருத்துவர்களும் மகிழ்ச்சியுடன் இந்த சேவையை செய்கின்றனர். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கொடி ஏற்றி, இனிப்பு வழங்குவதோடு நின்று விடாமல், இதுபோன்ற பல நல்ல காரியங்களை குடியிருப்போர் சங்கங்கள் செய்யலாமே!
ஜெ.கண்ணன்,
சென்னை.
Page 46 of 100 • 1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 46 of 100
|
|