புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 40 of 100 •
Page 40 of 100 • 1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதுகாப்பானது கூட்டுக் குடும்பமே!
எங்கள் பக்கத்து வீட்டு பெண்ணின் கணவர், 40 வயதிலேயே இறந்து விட்டார். இதில் என்ன ஆச்சரியமென்றால், கணவன் இறந்த போது இருந்த துயரம், சில மாதங்களிலேயே அந்த பெண்ணிடம் நீங்கி விட்டது. காரணம், பதினைந்து உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தில், அவர் வாழ்ந்து வந்தது தான்!
அந்த பெண் சோர்வுரும் போதெல்லாம், அவ்வீட்டில் உள்ளவர்கள், பல்வேறு ஆறுதல் வார்த்தை கூறுவதுடன், 'விடும்மா... அவனோட ஆயுசு அவ்வளவு தான்; போனவன நினைச்சு வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது... உனக்கு நாங்க இருக்கோம்; உன்னை கண் கலங்காம பாத்துப்போம்...' என்று கொடுத்த உற்சாக வார்த்தைகள் தான் அவளது துயரத்தை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
அத்துடன், உணவு மேஜையில் அனைவரும் ஒன்றாக கூடி உண்பதும், ஒரே அறையில் உள்ள, 'டிவி'யில் அனைவரும் நிகிழ்ச்சியை கண்டு களிப்பதும், பண்டிகை நாட்களில் அனைவரும் கலந்து உற்சாகமாய் கொண்டாடி மகிழ்வதும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் டூர் செல்வதும் என, தனிமையும், பாதுகாப்பற்ற உணர்ச்சியும் ஏற்பட வழியில்லாமல் செய்து விட்டது.
இதே தனிக்குடித்தனம் என்றால், பெரிதான கல்வி தகுதி இல்லாத அப்பெண், வாழ வழியின்றி, ஏதேனும் கம்பெனியில் சொற்ப சம்பளத்துக்கோ, கூலி வேலைக்கோ போய், வாழ்க்கையுடனும், துஷ்டர்களுடனும் போராட வேண்டியிருப்பதுடன், ஆறுதல் சொல்ல ஆளின்றி, தனி ஆளாய் தவிக்க வேண்டியிருக்கும்.
எனவே, கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவர்கள், எக்காரணம் கொண்டும் அந்த அழகிய கோலத்தை கலைத்து விடாதீர்கள்.
— கே. ஜெகதீசன், இடையர் பாளையம்.
எங்கள் பக்கத்து வீட்டு பெண்ணின் கணவர், 40 வயதிலேயே இறந்து விட்டார். இதில் என்ன ஆச்சரியமென்றால், கணவன் இறந்த போது இருந்த துயரம், சில மாதங்களிலேயே அந்த பெண்ணிடம் நீங்கி விட்டது. காரணம், பதினைந்து உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தில், அவர் வாழ்ந்து வந்தது தான்!
அந்த பெண் சோர்வுரும் போதெல்லாம், அவ்வீட்டில் உள்ளவர்கள், பல்வேறு ஆறுதல் வார்த்தை கூறுவதுடன், 'விடும்மா... அவனோட ஆயுசு அவ்வளவு தான்; போனவன நினைச்சு வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது... உனக்கு நாங்க இருக்கோம்; உன்னை கண் கலங்காம பாத்துப்போம்...' என்று கொடுத்த உற்சாக வார்த்தைகள் தான் அவளது துயரத்தை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
அத்துடன், உணவு மேஜையில் அனைவரும் ஒன்றாக கூடி உண்பதும், ஒரே அறையில் உள்ள, 'டிவி'யில் அனைவரும் நிகிழ்ச்சியை கண்டு களிப்பதும், பண்டிகை நாட்களில் அனைவரும் கலந்து உற்சாகமாய் கொண்டாடி மகிழ்வதும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் டூர் செல்வதும் என, தனிமையும், பாதுகாப்பற்ற உணர்ச்சியும் ஏற்பட வழியில்லாமல் செய்து விட்டது.
இதே தனிக்குடித்தனம் என்றால், பெரிதான கல்வி தகுதி இல்லாத அப்பெண், வாழ வழியின்றி, ஏதேனும் கம்பெனியில் சொற்ப சம்பளத்துக்கோ, கூலி வேலைக்கோ போய், வாழ்க்கையுடனும், துஷ்டர்களுடனும் போராட வேண்டியிருப்பதுடன், ஆறுதல் சொல்ல ஆளின்றி, தனி ஆளாய் தவிக்க வேண்டியிருக்கும்.
எனவே, கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவர்கள், எக்காரணம் கொண்டும் அந்த அழகிய கோலத்தை கலைத்து விடாதீர்கள்.
— கே. ஜெகதீசன், இடையர் பாளையம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆசிரியையின் சமயோசிதம்!
ஒன்றாம் வகுப்பு படிக்கும் பேரனை, தினமும் பள்ளிக்கு கூட்டிச் சென்று, அழைத்து வருவது என் வழக்கம்.
சமீபத்தில், அவனை வகுப்பறையில் கொண்டு விடும் போது, அவன் ஆசிரியை, மாணவர்களை பார்த்து, 'குழந்தைகளே... இதோ பாருங்கள்... இங்கே ஒரு ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கு; நீங்க யாராவது அடுத்தவங்க பென்சிலையோ, வேறு பொருட்களையோ எடுத்தீங்கன்னா அது இந்தக் கேமராவுல பதிவாயிடும்; அப்புறம், அதைப்பார்த்து நம்ம தலைமை ஆசிரியை, பொருளை எடுத்தவங்களுக்கு தண்டனை கொடுப்பாங்க. அதனால, யாரும் அடுத்தவங்களோட பொருளை எடுக்கக் கூடாது. அது தப்பு...' என்று கூறிக் கொண்டிருந்தார். அங்கு ஒரு, 'டம்மி' கேமரா தான் இருந்தது.
இரண்டு வாரங்களுக்கு பின், என் பேரனிடம், 'முன்னெல்லாம் தினம் ஒரு பென்சிலை தொலைச்சுட்டு வருவீயே... இப்ப, பென்சில், ரப்பர் எல்லாம் தொலைஞ்சு போகாம இருக்கா?' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'இருக்கு பாட்டி. கீழே ஏதாச்சும் பொருள் கிடந்தா, நாங்க அதை எடுத்து, 'மிஸ்' மேஜையில வைச்சிடுவோம். அவங்க, அது யாருதுன்னு கேட்டு கொடுத்துடுவாங்க. இப்பல்லாம் எங்க வகுப்புல யாருடைய பொருளும் காணாமல் போறதே இல்ல...' என்றான்.
இதைக்கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியையின் சமயோசித நடவடிக்கையால், அக்குழந்தைகள் அடுத்தவர் பொருளை எடுக்கக் கூடாது எனும் நல்ல பழக்கத்தை கடைபிடிக்கின்றனர் என்பது நல்ல விஷயம் தானே!
— எம்.விஜயலட்சுமி. மதுரை.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் பேரனை, தினமும் பள்ளிக்கு கூட்டிச் சென்று, அழைத்து வருவது என் வழக்கம்.
சமீபத்தில், அவனை வகுப்பறையில் கொண்டு விடும் போது, அவன் ஆசிரியை, மாணவர்களை பார்த்து, 'குழந்தைகளே... இதோ பாருங்கள்... இங்கே ஒரு ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கு; நீங்க யாராவது அடுத்தவங்க பென்சிலையோ, வேறு பொருட்களையோ எடுத்தீங்கன்னா அது இந்தக் கேமராவுல பதிவாயிடும்; அப்புறம், அதைப்பார்த்து நம்ம தலைமை ஆசிரியை, பொருளை எடுத்தவங்களுக்கு தண்டனை கொடுப்பாங்க. அதனால, யாரும் அடுத்தவங்களோட பொருளை எடுக்கக் கூடாது. அது தப்பு...' என்று கூறிக் கொண்டிருந்தார். அங்கு ஒரு, 'டம்மி' கேமரா தான் இருந்தது.
இரண்டு வாரங்களுக்கு பின், என் பேரனிடம், 'முன்னெல்லாம் தினம் ஒரு பென்சிலை தொலைச்சுட்டு வருவீயே... இப்ப, பென்சில், ரப்பர் எல்லாம் தொலைஞ்சு போகாம இருக்கா?' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'இருக்கு பாட்டி. கீழே ஏதாச்சும் பொருள் கிடந்தா, நாங்க அதை எடுத்து, 'மிஸ்' மேஜையில வைச்சிடுவோம். அவங்க, அது யாருதுன்னு கேட்டு கொடுத்துடுவாங்க. இப்பல்லாம் எங்க வகுப்புல யாருடைய பொருளும் காணாமல் போறதே இல்ல...' என்றான்.
இதைக்கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியையின் சமயோசித நடவடிக்கையால், அக்குழந்தைகள் அடுத்தவர் பொருளை எடுக்கக் கூடாது எனும் நல்ல பழக்கத்தை கடைபிடிக்கின்றனர் என்பது நல்ல விஷயம் தானே!
— எம்.விஜயலட்சுமி. மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏமாற்றுவதில் இது புதுவிதம்!
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நான், மாலை, அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்ப, பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எதிரே, நவநாகரிக உடை அணிந்த இளைஞன் ஒருவன், இரு சக்கர வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்தான். நான் அவனை கடந்த போது, 'மேடம்... என் பர்ஸ் மிஸ் ஆகிடுச்சு; பெட்ரோல் போடணும், 100 ரூபா வேணும். கொஞ்சம் உதவி செய்யுங்க...' என்று கேட்டான். எனக்கு இவன் பொய் சொல்கிறானா, உண்மை சொல்கிறானா என்று புரியவில்லை. சற்று யோசித்த பின், 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை...' என்று சொல்லி, வேகமாக சென்று விட்டேன். ஆனால், மனதிற்குள், 'உதவி செய்து இருக்கலாமோ...' என்று தோன்றியது.
மறுநாள், என் தோழியிடம் இது பற்றி சொன்ன போது, 'சில நாட்களுக்கு முன், இதே போன்று தான் என்னிடமும் ஒரு இளைஞன் கேட்டான்...' என்றாள்.
அப்பதான் புரிந்தது... இது ஒரு ஏமாற்று வேலை என்று!
ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக் கிறாங்க பாருங்க!
பெண்களே... உஷாராய் இருங்கள்!
- வி.வாசுகி, சென்னை.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நான், மாலை, அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்ப, பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எதிரே, நவநாகரிக உடை அணிந்த இளைஞன் ஒருவன், இரு சக்கர வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்தான். நான் அவனை கடந்த போது, 'மேடம்... என் பர்ஸ் மிஸ் ஆகிடுச்சு; பெட்ரோல் போடணும், 100 ரூபா வேணும். கொஞ்சம் உதவி செய்யுங்க...' என்று கேட்டான். எனக்கு இவன் பொய் சொல்கிறானா, உண்மை சொல்கிறானா என்று புரியவில்லை. சற்று யோசித்த பின், 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை...' என்று சொல்லி, வேகமாக சென்று விட்டேன். ஆனால், மனதிற்குள், 'உதவி செய்து இருக்கலாமோ...' என்று தோன்றியது.
மறுநாள், என் தோழியிடம் இது பற்றி சொன்ன போது, 'சில நாட்களுக்கு முன், இதே போன்று தான் என்னிடமும் ஒரு இளைஞன் கேட்டான்...' என்றாள்.
அப்பதான் புரிந்தது... இது ஒரு ஏமாற்று வேலை என்று!
ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக் கிறாங்க பாருங்க!
பெண்களே... உஷாராய் இருங்கள்!
- வி.வாசுகி, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏமாற்றுவதில் இது புது விதம்!
சென்னை புறநகரில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிக்கு, சமீபத்தில், ஒரு நாள், காலை நேரத்தில், ஒரு இளைஞனும், இரு இளம் பெண்களும் வந்தனர். எங்கள் குடியிருப் பில் நான்கு வீடுகள் மட்டுமே உள்ளன. வீட்டுக்கு ஒருவராக சென்றனர். அதில், என் வீட்டுக்கு வந்த பெண், தான் காஸ் ஏஜென்சியில் இருந்து வருவதாகவும், அவர்கள் கூறியதன் பேரில் தான் கொண்டு வந்துள்ள இரு பொருட்களை பயனீட்டாளர்கள், கட்டாயம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன், இப்பொருட்களை வாங்கியவர்களின் பெயர் பட்டியலை தான் ஏஜென்சியில் கொடுப்பதாகவும், அவர்கள் பட்டியலில், பெயர் உள்ள நபர்களுக்கு மட்டுமே, வருங் காலத்தில் பதிவு செய்யப்படும் புதிய சிலிண்டர்களை, 'டெலிவரி' செய்வர் என்றும் கூறினார்.
அதில் முதல் பொருளானது, நம் ஆட்காட்டி விரல் நீளமே உள்ள சிகப்பு நிற பிளாஸ்டிக் சிலிண்டர் பொம்மை. அதனுள், இருபுறமும் இரு காந்தத் துண்டுகளை பொருத்தியிருந்தனர். அந்தப் பொம்மை சிலிண்டரை, நீளவாக்கில் சமமாக திறந்து, நம் அடுப்பையும், சிலிண்டரையும் இணைக்கும், 'டியூபில்' பொருத்திவிட வேண்டும் என்றும், இதன் பெயர், 'மேக்னட் சேவர்' என்றும், இது காஸ் தீரும் தருவாயில், சற்று முன்னதாகவே சீட்டி ஒலி எழுப்பி எச்சரிக்கும் என்றும் கூறினார். இதன் விலை, 470 ரூபாய்!
இரண்டாவது பொருளின் பெயர், 'காஸ் சேவர்!' அதாவது, வட்ட வடிவிலான, தகர வளையத்தில் குறுக்கும், நெடுக்குமாக கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. இதை அடுப்பின் பர்னர் மீது வைத்தால், அடுப்பு எரியும் போது, தகர வளையம் விரைவிலேயே சூடாகி, சமையலை துரிதமாக்கி, எரிபொருளை சேமிக்க உதவும் என்றும் கூறினார். இது, அடுப்பு, 'பர்னரி'ன் அளவுக்கு ஏற்ற வகையில், இரு விதமாக வழங்கப்படுவதாகவும் கூறினார்.
ஒரு ஜோடி, 'கேஸ் சேவரின்' விலை, 490 ரூபாய்; மொத்தம், 960 ரூபாய். மேலும், கடந்த இரு நாட்களாக, தாங்கள் விற்பனை செய்து, ரசீது போட்டு கொடுத்துள்ள, எங்கள் பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய, ரசீதுப் புத்தகத்தையும் காட்டினாள்.
முதலாவது, இதை வாங்காவிட்டால், எங்கே இனி காஸ் சிலிண்டர் கிடைக்காதோ எனும் பதற்றம். இரண்டாவது, அலுவலகம் செல்லும் அவசரம். மூன்றாவது, ரசீது புத்தகத்தில் எங்கள் பகுதி மக்களின் கையெழுத்திடப்பட்ட ரசீது கிழிக்கப்பட்ட கவுன்ட்டர் பாயில்கள்.
எனவே, நான், நம்பி மொத்த பணத்தையும் கொடுத்து, அப்பொருட்களை வாங்கினேன். என் பக்கத்து வீட்டில் உள்ளவர், நான்கு, 'பர்னர்' மற்றும் கூடுதலாக ஒரு, 'மேக்னட் சேவரை'யும் வாங்கினார். அவர்கள் சென்றபின் பொருத்திப் பார்த்து பரிசோதித்த போது தான் தெரிந்தது, நாங்கள் நன்றாக ஏமாந்தது!
நடைபாதைக் கடைகளிலேயே கிடைக்கக் கூடிய பத்து ரூபாய்க்கும் பெறாத பொருளை, நூறு மடங்கு விலையில், ஏமாற்றி விற்று, எங்களுக்கு ஏமாளி பட்டமும் கொடுத்துள்ளனர்.
வாசகர்களே... இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் இனிமேல் உஷாராக இருங்கள்!
— டி.ஹேமா பிரியா, பள்ளிக்கரணை.
சென்னை புறநகரில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிக்கு, சமீபத்தில், ஒரு நாள், காலை நேரத்தில், ஒரு இளைஞனும், இரு இளம் பெண்களும் வந்தனர். எங்கள் குடியிருப் பில் நான்கு வீடுகள் மட்டுமே உள்ளன. வீட்டுக்கு ஒருவராக சென்றனர். அதில், என் வீட்டுக்கு வந்த பெண், தான் காஸ் ஏஜென்சியில் இருந்து வருவதாகவும், அவர்கள் கூறியதன் பேரில் தான் கொண்டு வந்துள்ள இரு பொருட்களை பயனீட்டாளர்கள், கட்டாயம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன், இப்பொருட்களை வாங்கியவர்களின் பெயர் பட்டியலை தான் ஏஜென்சியில் கொடுப்பதாகவும், அவர்கள் பட்டியலில், பெயர் உள்ள நபர்களுக்கு மட்டுமே, வருங் காலத்தில் பதிவு செய்யப்படும் புதிய சிலிண்டர்களை, 'டெலிவரி' செய்வர் என்றும் கூறினார்.
அதில் முதல் பொருளானது, நம் ஆட்காட்டி விரல் நீளமே உள்ள சிகப்பு நிற பிளாஸ்டிக் சிலிண்டர் பொம்மை. அதனுள், இருபுறமும் இரு காந்தத் துண்டுகளை பொருத்தியிருந்தனர். அந்தப் பொம்மை சிலிண்டரை, நீளவாக்கில் சமமாக திறந்து, நம் அடுப்பையும், சிலிண்டரையும் இணைக்கும், 'டியூபில்' பொருத்திவிட வேண்டும் என்றும், இதன் பெயர், 'மேக்னட் சேவர்' என்றும், இது காஸ் தீரும் தருவாயில், சற்று முன்னதாகவே சீட்டி ஒலி எழுப்பி எச்சரிக்கும் என்றும் கூறினார். இதன் விலை, 470 ரூபாய்!
இரண்டாவது பொருளின் பெயர், 'காஸ் சேவர்!' அதாவது, வட்ட வடிவிலான, தகர வளையத்தில் குறுக்கும், நெடுக்குமாக கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. இதை அடுப்பின் பர்னர் மீது வைத்தால், அடுப்பு எரியும் போது, தகர வளையம் விரைவிலேயே சூடாகி, சமையலை துரிதமாக்கி, எரிபொருளை சேமிக்க உதவும் என்றும் கூறினார். இது, அடுப்பு, 'பர்னரி'ன் அளவுக்கு ஏற்ற வகையில், இரு விதமாக வழங்கப்படுவதாகவும் கூறினார்.
ஒரு ஜோடி, 'கேஸ் சேவரின்' விலை, 490 ரூபாய்; மொத்தம், 960 ரூபாய். மேலும், கடந்த இரு நாட்களாக, தாங்கள் விற்பனை செய்து, ரசீது போட்டு கொடுத்துள்ள, எங்கள் பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய, ரசீதுப் புத்தகத்தையும் காட்டினாள்.
முதலாவது, இதை வாங்காவிட்டால், எங்கே இனி காஸ் சிலிண்டர் கிடைக்காதோ எனும் பதற்றம். இரண்டாவது, அலுவலகம் செல்லும் அவசரம். மூன்றாவது, ரசீது புத்தகத்தில் எங்கள் பகுதி மக்களின் கையெழுத்திடப்பட்ட ரசீது கிழிக்கப்பட்ட கவுன்ட்டர் பாயில்கள்.
எனவே, நான், நம்பி மொத்த பணத்தையும் கொடுத்து, அப்பொருட்களை வாங்கினேன். என் பக்கத்து வீட்டில் உள்ளவர், நான்கு, 'பர்னர்' மற்றும் கூடுதலாக ஒரு, 'மேக்னட் சேவரை'யும் வாங்கினார். அவர்கள் சென்றபின் பொருத்திப் பார்த்து பரிசோதித்த போது தான் தெரிந்தது, நாங்கள் நன்றாக ஏமாந்தது!
நடைபாதைக் கடைகளிலேயே கிடைக்கக் கூடிய பத்து ரூபாய்க்கும் பெறாத பொருளை, நூறு மடங்கு விலையில், ஏமாற்றி விற்று, எங்களுக்கு ஏமாளி பட்டமும் கொடுத்துள்ளனர்.
வாசகர்களே... இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் இனிமேல் உஷாராக இருங்கள்!
— டி.ஹேமா பிரியா, பள்ளிக்கரணை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசுக்கு ஒரு யோசனை!
திருவிழா நேரங்களில், குற்றம் மற்றும் திருடு போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவும், 'பிக்பாக்கெட்' திருடர்கள், செயின் திருடர்கள் மற்றும் சில முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை முக்கிய இடங்களில் மாட்டி வைத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்வர் காவல்துறையினர்.
இதைப்போலவே, மது போதையில் விபத்துக்குள்ளானவர்கள், குடித்து குடித்து குடல் அழுகி, பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இறந்தவர்களின் புகைப்படங்களை சேகரித்து, மதுக்கடை, பார்கள் மற்றும் பொது மக்கள் பார்வை படும் முக்கிய இடங்களில் ஒட்டி வைத்தால், மதுப்பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சமாவது யோசிப்பர்.
மதுபாட்டிலில், 'குடி குடியை கெடுக்கும்' என்று எழுதியுள்ளதை எத்தனை பேர் படிக்கின்றனர். இப்படி இறந்தவர்களின் புகைப்படத்தை ஒட்டி வைத்தாலாவது அதை பார்க்கும் ஒரு சிலருக்காவது, பயம் கலந்த விழிப்புணர்வு உண்டாகுமே!
அரசு மனம் வைத்தால் இது சாத்தியமே!
— ஆர்.நாகராஜ், மதுரை.
திருவிழா நேரங்களில், குற்றம் மற்றும் திருடு போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவும், 'பிக்பாக்கெட்' திருடர்கள், செயின் திருடர்கள் மற்றும் சில முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை முக்கிய இடங்களில் மாட்டி வைத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்வர் காவல்துறையினர்.
இதைப்போலவே, மது போதையில் விபத்துக்குள்ளானவர்கள், குடித்து குடித்து குடல் அழுகி, பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இறந்தவர்களின் புகைப்படங்களை சேகரித்து, மதுக்கடை, பார்கள் மற்றும் பொது மக்கள் பார்வை படும் முக்கிய இடங்களில் ஒட்டி வைத்தால், மதுப்பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சமாவது யோசிப்பர்.
மதுபாட்டிலில், 'குடி குடியை கெடுக்கும்' என்று எழுதியுள்ளதை எத்தனை பேர் படிக்கின்றனர். இப்படி இறந்தவர்களின் புகைப்படத்தை ஒட்டி வைத்தாலாவது அதை பார்க்கும் ஒரு சிலருக்காவது, பயம் கலந்த விழிப்புணர்வு உண்டாகுமே!
அரசு மனம் வைத்தால் இது சாத்தியமே!
— ஆர்.நாகராஜ், மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேச பக்தியா, என்ன விலை?
சில மாதங்களுக்கு முன், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிர் வரிசையில் அமர்ந்திருந்தவர், அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், எட்டி எட்டி பார்த்து படிக்கலானார். இதனால், பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவர் எரிச்சல் அடைந்து, 'சை...'ஓசி' கிராக்கி ஜென்மங்கள்...' என்று முணுமுணுத்தார்.
உடனே அந்த பெரியவர், 'பத்திரிகையில் வெளியிட்டிருந்த சுதந்திர தின தகவல்களும், தேசியக் கொடியும் என்னை ஈர்த்தது; தொந்தரவா இருந்தா மன்னிச்சுக்கங்க...' என்றார்.
இந்த இருவருடைய செயல்பாடுகள் மற்றும் உரையாடலை கவனித்த நான், அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்ற போது இறங்கி, அதே நாளிதழ் ஒன்றை வாங்கி, அந்த பெரியவரிடம் தந்தேன். அவரும் படித்து மகிழ்ந்து, சிரத்தையாக மடித்து, தன் பையில் சந்தோஷமாக வைத்துக் கொண்டார்,
'ஓசி கிராக்கி' என்று கமென்ட் செய்த அந்த பயணி, படித்து முடித்த அந்த பத்திரிகையில் தன் பாத்ரூம் செருப்பை சுருட்டி வைத்து, ஷு அணிந்து, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிப் போனார்.
தேசிய கொடியுடனான பேப்பரை, செருப்பு சுருட்டி வைக்க உபயோகப்படுத்தியதைக் கண்டு வேதனையடைந்தேன். ஆனால், அதேசமயம், நான் வாங்கி கொடுத்த அதே பத்திரிகையை பொக்கிஷமாக பத்திரப்படுத்தி எடுத்துச் சென்ற அந்த பெரியவர், எனக்கு தெய்வமாக தெரிந்தார். 'தேச பக்தியா, என்ன விலை?' என்று கேட்கும் இதுபோன்ற ஜென்மங்கள் என்று தான் திருந்துவரோ!
ஏ.ராமன், சென்னை.
சில மாதங்களுக்கு முன், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிர் வரிசையில் அமர்ந்திருந்தவர், அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், எட்டி எட்டி பார்த்து படிக்கலானார். இதனால், பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவர் எரிச்சல் அடைந்து, 'சை...'ஓசி' கிராக்கி ஜென்மங்கள்...' என்று முணுமுணுத்தார்.
உடனே அந்த பெரியவர், 'பத்திரிகையில் வெளியிட்டிருந்த சுதந்திர தின தகவல்களும், தேசியக் கொடியும் என்னை ஈர்த்தது; தொந்தரவா இருந்தா மன்னிச்சுக்கங்க...' என்றார்.
இந்த இருவருடைய செயல்பாடுகள் மற்றும் உரையாடலை கவனித்த நான், அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்ற போது இறங்கி, அதே நாளிதழ் ஒன்றை வாங்கி, அந்த பெரியவரிடம் தந்தேன். அவரும் படித்து மகிழ்ந்து, சிரத்தையாக மடித்து, தன் பையில் சந்தோஷமாக வைத்துக் கொண்டார்,
'ஓசி கிராக்கி' என்று கமென்ட் செய்த அந்த பயணி, படித்து முடித்த அந்த பத்திரிகையில் தன் பாத்ரூம் செருப்பை சுருட்டி வைத்து, ஷு அணிந்து, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிப் போனார்.
தேசிய கொடியுடனான பேப்பரை, செருப்பு சுருட்டி வைக்க உபயோகப்படுத்தியதைக் கண்டு வேதனையடைந்தேன். ஆனால், அதேசமயம், நான் வாங்கி கொடுத்த அதே பத்திரிகையை பொக்கிஷமாக பத்திரப்படுத்தி எடுத்துச் சென்ற அந்த பெரியவர், எனக்கு தெய்வமாக தெரிந்தார். 'தேச பக்தியா, என்ன விலை?' என்று கேட்கும் இதுபோன்ற ஜென்மங்கள் என்று தான் திருந்துவரோ!
ஏ.ராமன், சென்னை.
குடியால் இறந்தவர்கள் புகைப்படங்கைளை
மதுக் கடையில் மாட்டி வைத்தால் மது விற்பனை
குறைந்து விடுமே...!
-
அதனால் அப்படிச் செய்ய மாட்டார்கள்..!!
-
மாதாந்திர விற்பனையில் குறைவு ஏற்பட்டால்
கள்ள சாராயம் புழங்குவதாக , காவல் துறையை
முடுக்கி விடுவார்கள்,,
-
இதுதான் நடைமுறை...
-
மதுக் கடையில் மாட்டி வைத்தால் மது விற்பனை
குறைந்து விடுமே...!
-
அதனால் அப்படிச் செய்ய மாட்டார்கள்..!!
-
மாதாந்திர விற்பனையில் குறைவு ஏற்பட்டால்
கள்ள சாராயம் புழங்குவதாக , காவல் துறையை
முடுக்கி விடுவார்கள்,,
-
இதுதான் நடைமுறை...
-
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
சாராயம் என்னும்
திரவத்தீயைத் தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!
-கவிஞர் வைரமுத்து
திரவத்தீயைத் தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!
-கவிஞர் வைரமுத்து
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1107162ayyasamy ram wrote:குடியால் இறந்தவர்கள் புகைப்படங்கைளை
மதுக் கடையில் மாட்டி வைத்தால் மது விற்பனை
குறைந்து விடுமே...!
-
அதனால் அப்படிச் செய்ய மாட்டார்கள்..!!
-
மாதாந்திர விற்பனையில் குறைவு ஏற்பட்டால்
கள்ள சாராயம் புழங்குவதாக , காவல் துறையை
முடுக்கி விடுவார்கள்,,
-
இதுதான் நடைமுறை...
-
ரொம்ப சரி ராம் அண்ணா, இந்த மது அரக்கனை விற்பதே அரசு தானே?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
கள்ளுண்ணாமை - குறித்து பத்து திருக்குறள்
எழுதப்பட்டுள்ளது அல்லவா..?
-
குடிப்பழக்கம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே இருந்துள்ளது என்பதுதானே பொருள்...
-
எனவே அயல்நாட்டு மதுவகை கடைகளை மூடிவிட்டு
ஓரளவே உடலுக்கு தீங்கு செய்யும் கள்ளுக் கடைகளை
திறக்க வேண்டும்...!!
-
கள்ளுண்ணாமை - குறித்து பத்து திருக்குறள்
எழுதப்பட்டுள்ளது அல்லவா..?
-
குடிப்பழக்கம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே இருந்துள்ளது என்பதுதானே பொருள்...
-
எனவே அயல்நாட்டு மதுவகை கடைகளை மூடிவிட்டு
ஓரளவே உடலுக்கு தீங்கு செய்யும் கள்ளுக் கடைகளை
திறக்க வேண்டும்...!!
-
Page 40 of 100 • 1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 100
|
|