புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
46 Posts - 78%
dhilipdsp
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
3 Posts - 5%
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
41 Posts - 80%
dhilipdsp
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!


   
   

Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 14, 2014 3:11 pm

krishnaamma wrote:சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?

மாலை நேரத்தில், நண்பர்கள் சிலருடன் நடைபயிற்சி சென்றிருந்தேன். நடைபயிற்சிக்கு பின், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரிடத்தில் அமர்ந்தோம். சற்று தள்ளி, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனோம்.

ஒருவன், 'வீட்டுக்கு போகவே புடிக்கலடா; எங்கம்மாவும், அப்பாவும் எப்பப் பாரு சண்ட போடுறாங்க. எங்கப்பா ஒரு லூசுப்பயன்னா, எங்கம்மா ஒரு கிறுக்குடா. இவங்க போடுற சண்டையில படிக்கவே முடியல. ஆனா, 'படிடா... படிடா'ங்கறான் அந்த பரதேசி; ஆனா, படிக்க விடறதில்ல. இதுகளையெல்லாம் முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டுடணும்டா...' என்றான்.

அவனைத் தொடர்ந்து மற்றவர்களும், தம் பெற்றோரை சகட்டு மேனிக்கு மண் வாரி தூற்றினர். ஒருவன் கூட தன் பெற்றோரை, மரியாதையாய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது பெற்றோர்களின், 'வருங்காலம்' எப்படி இருக்கும் என்பது இப்போதே தெரிந்தது. பெற்றவர்கள் சரி வர நடந்து கொள்ளாததால், பிள்ளைகள் சிறுவயது முதலே, அவர்கள் மீது வெறுப்பை மனதில் பதித்து, பின்னாளில் அது பழிவாங்கும் எண்ணமாக மாறி, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர் என்பதும் புரிந்தது. இதை, சண்டைக்கோழி பெற்றோர்கள் உணர்ந்து திருந்துவரா?

டி.ஆறுமுகம், விஜயமங்கலம்.
மேற்கோள் செய்த பதிவு: 1096222

இப்படி மனநிலையில் பிள்ளைகள் இருந்தால் எப்படி படித்து முன்னேறுவார்கள். சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 6:20 pm

ம்.............ரொம்ப சரி பானு சோகம்...ஆனால் இதுக்கு அப்பா அம்மாவும் காரணம் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கணும். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:02 pm

உழைப்பில் கவுரவம் பார்க்காதீர்!

நான் பணிபுரியும் நூலகத்துக்கு, பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஒருவன், தினமும் வருவான். ஒருநாள், கட்டுமானப் பணி நடைபெறும் ஒரு கட்டடத்தின் அருகே, கடும் வெயிலில், அழுக்கு பனியன் அணிந்து, வியர்வை சொட்ட சொட்ட சுத்தியலால் கம்பியை அடித்து, உடைத்துக் கொண்டிருந்தான்.

மாலை, நூலகம் வந்த அவனிடம், 'கம்பி அடிக்கும் வேலை செய்துட்டு இருந்தியே... இன்று கல்லூரிக்கு போகலயா...' என்று கேட்டேன். அதற்கு அவன், 'பாலிடெக்னிக்கில் போதுமான ஆசிரியர்கள் இல்ல; ஒருநாள் விட்டு ஒருநாள் தான் வகுப்பு நடத்துறாங்க. அதனால தான் வகுப்பு இல்லாத நாட்கள்ல இப்படி கட்டட வேலைக்கு போறேன். பணத்துக்கு பணம் கிடைப்பதுடன், பொழுது போன மாதிரியும் ஆச்சு; ஒரு வேலையை கத்துக்கிட்ட திருப்தியும் கிடைக்குது...' எனக் கூறி, ஆச்சரியப்பட வைத்தான்.

'கவுரவமான வேலை கிடைத்தால் மட்டுமே வேலைக்கு செல்வேன்; இல்லை என்றால் வேலைக்கே போக மாட்டேன்...' என்று சொல்பவர்கள் மத்தியில், படிக்கும் மாணவன் ஒருவனின் உழைப்பு குறித்த சிந்தனையும், உழைப்பில் கவுரவம் பார்க்காத அவனது குணத்தையும் நினைத்து பெருமிதம் அடைந்தேன்.

எம்.இளங்கோ, திருவள்ளூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:04 pm

ஓட்டல் பில்லில் கவனம் தேவை!

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி. எங்கள் வகுப்பு தோழி ஒருத்திக்கு, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதை கொண்டாட, மதுரையில் உள்ள பிரபல சைவ உணவகத்துக்கு, அனைவரும் சென்றோம். மொத்தம், 18 பேர்; அவரவருக்கு பிடித்ததை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என, தோழி கூறிவிட்டாள். அதனால், எங்களுக்கு பிடித்ததை ஆர்டர் கொடுத்தோம்.

நான், என் தோழியிடம், ஆர்டர் செய்வதை குறித்துக் கொள்ளும்படி சொன்னேன். உடனே, என் தோழிகள் என்னை கேலியாக பார்த்து, 'பெரிய கடை, நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆர்டரும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னரே சமையலறைக்கு செல்லும். எனவே, தேவையில்லாமல் சந்தேகப்படாதே...' என்றனர். ஆனால், நான் பிடிவாதமாக குறிக்கச் சொன்னதால் என் தோழிகள், குறித்துக் கொண்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், 6,300 ரூபாய்க்கு பில் வந்தது. எங்கள் பட்டியலையும், பில்லையும் ஒப்பிட்டுப்பார்த்தபோது அதிர்ந்து போனோம். காரணம், பல பொருட்கள் கூடுதலாக போட்டிருந்தனர். 18 பேரில், நாலு பேர் ஐஸ்கிரீம் சாப்பிடவில்லை. ஆனால், 18 என இருந்தது. புலாவ் ஆறு பேர் சாப்பிட்டனர்; எட்டு பேர் என இருந்தது. மொத்தத்தில், நாங்கள் சாப்பிட்டதை விட, 800 ரூபாய் கூடுதலாக இருந்தது. நாங்கள் உடனே மேலாளரை அழைத்து கேட்டோம். அவர் சப்ளையரை அழைத்து கேட்டார். இப்படி ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, இறுதியில் அனைவரும் எங்களிடம் மன்னிப்புக் கேட்டனர். பில்லையும் குறைத்துக் கொண்டனர்.

கல்லூரி மாணவியர் தானே, எவ்வளவு சாப்பிட்டோம் என்று தெரியவா போகிறது என்ற எண்ணமா அல்லது உண்மையிலேயே தவறுதலாக பில்லை போட்டுவிட்டனரா என்று தெரியாது. ஆனால், பில்லில் ஏமாற்ற முயன்றது மட்டும் உறுதி.

எனவே, குழுவாக சாப்பிடச் செல்வோர், சாப்பிடும் பொருட்களை கணக்கு வைத்துக்கொள்வது நல்லது.

ச.ஸ்வேதிதா, மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:06 pm

krishnaamma wrote:ஓட்டல் பில்லில் கவனம் தேவை!

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி. எங்கள் வகுப்பு தோழி ஒருத்திக்கு, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதை கொண்டாட, மதுரையில் உள்ள பிரபல சைவ உணவகத்துக்கு, அனைவரும் சென்றோம். மொத்தம், 18 பேர்; அவரவருக்கு பிடித்ததை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என, தோழி கூறிவிட்டாள். அதனால், எங்களுக்கு பிடித்ததை ஆர்டர் கொடுத்தோம்.

நான், என் தோழியிடம், ஆர்டர் செய்வதை குறித்துக் கொள்ளும்படி சொன்னேன். உடனே, என் தோழிகள் என்னை கேலியாக பார்த்து, 'பெரிய கடை, நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆர்டரும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னரே சமையலறைக்கு செல்லும். எனவே, தேவையில்லாமல் சந்தேகப்படாதே...' என்றனர். ஆனால், நான் பிடிவாதமாக குறிக்கச் சொன்னதால் என் தோழிகள், குறித்துக் கொண்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், 6,300 ரூபாய்க்கு பில் வந்தது. எங்கள் பட்டியலையும், பில்லையும் ஒப்பிட்டுப்பார்த்தபோது அதிர்ந்து போனோம். காரணம், பல பொருட்கள் கூடுதலாக போட்டிருந்தனர். 18 பேரில், நாலு பேர் ஐஸ்கிரீம் சாப்பிடவில்லை. ஆனால், 18 என இருந்தது. புலாவ் ஆறு பேர் சாப்பிட்டனர்; எட்டு பேர் என இருந்தது. மொத்தத்தில், நாங்கள் சாப்பிட்டதை விட, 800 ரூபாய் கூடுதலாக இருந்தது. நாங்கள் உடனே மேலாளரை அழைத்து கேட்டோம். அவர் சப்ளையரை அழைத்து கேட்டார். இப்படி ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, இறுதியில் அனைவரும் எங்களிடம் மன்னிப்புக் கேட்டனர். பில்லையும் குறைத்துக் கொண்டனர்.

கல்லூரி மாணவியர் தானே, எவ்வளவு சாப்பிட்டோம் என்று தெரியவா போகிறது என்ற எண்ணமா அல்லது உண்மையிலேயே தவறுதலாக பில்லை போட்டுவிட்டனரா என்று தெரியாது. ஆனால், பில்லில் ஏமாற்ற முயன்றது மட்டும் உறுதி.

எனவே, குழுவாக சாப்பிடச் செல்வோர், சாப்பிடும் பொருட்களை கணக்கு வைத்துக்கொள்வது நல்லது.

ச.ஸ்வேதிதா, மதுரை.
மேற்கோள் செய்த பதிவு: 1097865

கண்டிப்பாக இப்படி நடக்கும் தான், நாம் தான் உஷாராக இருக்கணும்......ஹோட்டலில் மட்டும் இல்லை............பெரிய பெரிய மால் களில் பில் போட்ட பிறகும் கொஞ்சம் தள்ளி நின்று பொறுமையாக முழு பில்லையும் சரி பார்க்கணும்......நிறைய முறை நான் தப்பு கண்டு பிடித்து அவர்களிடம் பணம் வாங்கி இருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:08 pm

உ.பா., வேண்டாமே!

அரசு அலுவலரான என் நண்பன் புதிதாக கட்டியிருந்த வீட்டின் கிரகப்பிரவேச விழாவுக்கு சென்றிருந்தேன். பக்கத்து வீட்டில், 'உ.பா., பார்ட்டி'க்கு ஏற்பாடு செய்திருந்தான். வெளிநாட்டு சரக்குகள் தாராளமாக வழங்கப்பட்டது. வெள்ளமாய் ஓடிய தண்ணியால், அதீத உற்சாகத்தில் இருந்த நண்பர்களிடையே சின்ன தகராறு வர, அது பெரிய சண்டையாக உருவெடுத்து விட்டது.

'உற்சாகத்தில்' மிதந்த நண்பர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொள்ள, ஏக ரகளையாகி விட்டது. கிரகப்பிரவேசம் நடத்திய நண்பரின் உறவினர்கள் முகம் சுளித்ததோடு, 'இவரது நட்பு வட்டமே இப்படிதானா...' என பேச, நண்பருக்கு பெருத்த அவமானமாகி விட்டது.

உறவினர்களிடையே தலைகுனிய நேர்ந்ததோடு, சண்டையிடும் நண்பர்களில் யாருக்கு பரிந்து பேசுவது என, தவித்தது போனான் நண்பன்.கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற விழாக்களை நடத்துவோரே... இது போன்ற விழா சமயங்களில், 'உ.பா., பார்ட்டி' வைக்க வேண்டுமா என யோசியுங்கள். அப்படியே பார்ட்டி கொடுக்க தான் வேண்டும் என்றால், விழா நாளில்லாமல் வேறு ஒரு நாளில் கொடுங்கள்; மானம், மரியாதையாவது மிஞ்சும்.

வி.சந்திரசேகர், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:08 pm

உ.பா., வேண்டாமே!

அரசு அலுவலரான என் நண்பன் புதிதாக கட்டியிருந்த வீட்டின் கிரகப்பிரவேச விழாவுக்கு சென்றிருந்தேன். பக்கத்து வீட்டில், 'உ.பா., பார்ட்டி'க்கு ஏற்பாடு செய்திருந்தான். வெளிநாட்டு சரக்குகள் தாராளமாக வழங்கப்பட்டது. வெள்ளமாய் ஓடிய தண்ணியால், அதீத உற்சாகத்தில் இருந்த நண்பர்களிடையே சின்ன தகராறு வர, அது பெரிய சண்டையாக உருவெடுத்து விட்டது.

'உற்சாகத்தில்' மிதந்த நண்பர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொள்ள, ஏக ரகளையாகி விட்டது. கிரகப்பிரவேசம் நடத்திய நண்பரின் உறவினர்கள் முகம் சுளித்ததோடு, 'இவரது நட்பு வட்டமே இப்படிதானா...' என பேச, நண்பருக்கு பெருத்த அவமானமாகி விட்டது.

உறவினர்களிடையே தலைகுனிய நேர்ந்ததோடு, சண்டையிடும் நண்பர்களில் யாருக்கு பரிந்து பேசுவது என, தவித்தது போனான் நண்பன்.கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற விழாக்களை நடத்துவோரே... இது போன்ற விழா சமயங்களில், 'உ.பா., பார்ட்டி' வைக்க வேண்டுமா என யோசியுங்கள். அப்படியே பார்ட்டி கொடுக்க தான் வேண்டும் என்றால், விழா நாளில்லாமல் வேறு ஒரு நாளில் கொடுங்கள்; மானம், மரியாதையாவது மிஞ்சும்.

வி.சந்திரசேகர், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 7:03 pm

இவரல்லவா தலைவர்!

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 37 H8iEj5WMTQyqWR4HdptP+E_1414064232

ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுரைக்குப் பயணம் மேற் கொண்டிருந்தார். வழியில் வேறொரு கட்சியினர் அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.

வழியில் யாரும் எதிர்படாமல் போகவே, ராஜாஜி தன் கார் ஓட்டுனரிடம், "கறுப்புக் கொடி காட்ட வந்தவர்கள் எங்கே?' என்று கேட்டார்.

"அவர்கள் இருக்கும் பகுதிக்கு செல்லாமல் வேறு பாதை வழியாக வந்து விட்டேன்!' என்றார் கார் ஓட்டுனர்.
"வண்டியைத் திருப்புங்கள். அவர் களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடாது!' என்று சொல்லி கறுப்புக் கொடி பிடிப்பவர் கள் இருந்த வழியே சென்று, அவர்களின் கண்டனச் சொற்களை ஏற்றுக் கொண்டு சென்றார் ராஜாஜி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 6:55 pm

ஆண்களைப் போல் பெண்களும்...

எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன; என் மனைவியும் வேலை பார்க்கிறார். எனக்கு பதவி உயர்வுடன், வெளியூருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவே, நான் மட்டும் வெளியூர் சென்று, ரூம் எடுத்து தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வருகிறேன். என் சபல புத்தியால், ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது; ஒரு கட்டத்தில் அப்பெண்ணுடனான உறவை துண்டித்து விட்டேன். ஆனால், என்னுடைய துரோக செயலை என் மனைவி எப்படியோ தெரிந்து, என்னிடம் விசாரித்தாள். 'ஏதோ சிறு சபலம்; வேலை வேலைன்னு சலித்துப் போய் ஒரு வேகத்தில் தவறு செய்து விட்டேன்...' என்று மழுப்பலாக பதில் கூறினேன்.

உடனே என் மனைவி, 'அப்படியானால் நானும் சலித்து போய் இன்னொரு ஆணிடம்...' என்று கூறி, அழுது விட்டாள். 'இனி, இது போன்ற தவறு செய்ய மாட்டேன்...' என்று உறுதி கூறி, அவளை சமாதானப்படுத்தினேன்.
ஆண்கள் நினைப்பது போல பெண்களும் நினைக்க ஆரம்பித்து விட்டால், வாழ்க்கை, குடும்பம் எல்லாம் நாசமாகி விடும் என்பதை உணர்ந்து, என் மனைவி போட்ட கோட்டுக்குள் அடங்கி, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்.
சபலிஸ்ட்களே... கண நேர தடுமாற்றத்தால், வாழ்க்கையை தொலைத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

என்.பார்த்திபன்,சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 27, 2014 7:00 pm

krishnaamma wrote:ஆண்களைப் போல் பெண்களும்...

எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன; என் மனைவியும் வேலை பார்க்கிறார். எனக்கு பதவி உயர்வுடன், வெளியூருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவே, நான் மட்டும் வெளியூர் சென்று, ரூம் எடுத்து தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வருகிறேன். என் சபல புத்தியால், ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது; ஒரு கட்டத்தில் அப்பெண்ணுடனான உறவை துண்டித்து விட்டேன். ஆனால், என்னுடைய துரோக செயலை என் மனைவி எப்படியோ தெரிந்து, என்னிடம் விசாரித்தாள். 'ஏதோ சிறு சபலம்; வேலை வேலைன்னு சலித்துப் போய் ஒரு வேகத்தில் தவறு செய்து விட்டேன்...' என்று மழுப்பலாக பதில் கூறினேன்.

உடனே என் மனைவி, 'அப்படியானால் நானும் சலித்து போய் இன்னொரு ஆணிடம்...' என்று கூறி, அழுது விட்டாள். 'இனி, இது போன்ற தவறு செய்ய மாட்டேன்...' என்று உறுதி கூறி, அவளை சமாதானப்படுத்தினேன்.
ஆண்கள் நினைப்பது போல பெண்களும் நினைக்க ஆரம்பித்து விட்டால், வாழ்க்கை, குடும்பம் எல்லாம் நாசமாகி விடும் என்பதை உணர்ந்து, என் மனைவி போட்ட கோட்டுக்குள் அடங்கி, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்.
சபலிஸ்ட்களே... கண நேர தடுமாற்றத்தால், வாழ்க்கையை தொலைத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

என்.பார்த்திபன்,சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1099798

இந்த ஆணும் பெண்ணும் மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்திருக்காங்க.................இதே அந்த ஆள் 'நான் என்ன வேணா செய்வேன் நான் ஆண்' என்று சொல்லி மனைவி யை அடித்திருந்தாலும் போச்சு.........அதே போல சம்பாதிக்கிறோம் என்று வீம்புக்கு மனைவி சொன்னதை செய்து காட்டி இருந்தாலும் போச்சு...........இது போன்ற நிகழ்வுகளால் தான் விவாக ரத்துகள் பெருகி விட்டன இந்நாளில்....................பெண்கள் 'உனக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா' என்று கேட்டு பாரதி சொன்னாற்போல " கற்பை பொதுவில் வையுங்கள்" ....என்று கேட்பதால் பிரச்சனை வருகிறது............இதை புரிந்து ஒழுக்கமாக நடக்கணும்  ஆண் பெண் இருவருமே புன்னகை

தன் துணை இடம் தான் எதிர்பார்க்கும் நேர்மை, ஒழுக்கத்தை தானும் அவங்களுக்கு தரணும் என்று நினைத்தால் போறும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக