புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 31 of 100 •
Page 31 of 100 • 1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'சுகர் ப்ரீ' கொள்ளை!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள என் அப்பாவைக் காண, பிறந்த வீட்டுக்கு போகும் போதெல்லாம், 'சுகர் ப்ரீ' இனிப்புகளும், காரங்களும் வாங்கி செல்வது வழக்கம். ஒரு முறை, அவ்வாறு நான் வாங்கிச் சென்றவற்றை சாப்பிட்டவருக்கு, 'சுகர்' அதிகமாகி, மாத்திரை சாப்பிட்டதும் தான் குறைந்தது.
இதனால், அடுத்தமுறை நான் செல்வதற்கு ஒரு நாள் முன்னரே, ரத்த பரிசோதனை எடுத்து வைக்க சொன்னேன். நான் வாங்கிட்டு போன, 'சுகர் ப்ரீ' ஸ்வீட்டுகளை அப்பாவுக்கு சாப்பிட கொடுத்த ஒன்றரை மணி நேரத்தில், 'ப்ளட் டெஸ்ட்' எடுக்க சொன்னேன். என்ன ஆச்சர்யம்... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கட்டுக்கடங்கா வகையில் உயர்ந்திருந்தது. அப்புறம் எதுக்கு ஸ்வீட் ஸ்டால்களில் தனியாக, 'சுகர் ப்ரீ' இனிப்புகள்! விலையும் இரண்டு, மூன்று பங்கு அதிகம். சாதாரண இனிப்பு வகைகளை பல மடங்கு விலை உயர்த்தி விற்க, 'சுகர் ப்ரீ' லேபிள் தேவை தானா?
கிருத்திகா, பூனாம்பாளையம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள என் அப்பாவைக் காண, பிறந்த வீட்டுக்கு போகும் போதெல்லாம், 'சுகர் ப்ரீ' இனிப்புகளும், காரங்களும் வாங்கி செல்வது வழக்கம். ஒரு முறை, அவ்வாறு நான் வாங்கிச் சென்றவற்றை சாப்பிட்டவருக்கு, 'சுகர்' அதிகமாகி, மாத்திரை சாப்பிட்டதும் தான் குறைந்தது.
இதனால், அடுத்தமுறை நான் செல்வதற்கு ஒரு நாள் முன்னரே, ரத்த பரிசோதனை எடுத்து வைக்க சொன்னேன். நான் வாங்கிட்டு போன, 'சுகர் ப்ரீ' ஸ்வீட்டுகளை அப்பாவுக்கு சாப்பிட கொடுத்த ஒன்றரை மணி நேரத்தில், 'ப்ளட் டெஸ்ட்' எடுக்க சொன்னேன். என்ன ஆச்சர்யம்... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கட்டுக்கடங்கா வகையில் உயர்ந்திருந்தது. அப்புறம் எதுக்கு ஸ்வீட் ஸ்டால்களில் தனியாக, 'சுகர் ப்ரீ' இனிப்புகள்! விலையும் இரண்டு, மூன்று பங்கு அதிகம். சாதாரண இனிப்பு வகைகளை பல மடங்கு விலை உயர்த்தி விற்க, 'சுகர் ப்ரீ' லேபிள் தேவை தானா?
கிருத்திகா, பூனாம்பாளையம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அட... நாங்களும் ராசியானவங்கதாம்மா!
தனியார் நிறுவனத்தில் பணி புரியும், விவாகரத்தான பெண் நான்; என்னுடன் பணிபுரியும் பெண்களில் சிலர், பல நேரங்களில் சகஜமாக பழகினாலும், முக்கிய நிகழ்வுகளில் என்னை தவிர்க்க நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம், வீடு பால் காய்ச்சுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை என்னிடம் சொல்லவே தயங்குகின்றனர்.
என் நேரடி உயர் அதிகாரியின் வீட்டில் நடந்த விசேஷம் கூட, என் கீழ் பணிபுரியும் நபர் சொல்லித்தான் தெரிய வந்தது; பரிசுப் பொருட்கள் வாங்க செல்லும் போது கூட, என்னை ஒரு தடையாகத் தான் பார்க்கின்றனர். இவர்கள் சகுனம் பார்க்கின்றனரா அல்லது இதற்கெல்லாம் என்னை போன்றவர் ஏங்குவர் என்று நினைக்கின்றனரா... புரியவில்லை.
வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து, முன்னேற துடிக்கும் என்னை போன்றோருக்கு, உங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகள் சஞ்சலப்படுத்தப் போவதில்லை. மேலும், கணவனுடன் வாழ்ந்தால் மட்டுமே ஒருவரின் வாழ்த்து பலிக்கும் என்றில்லை; நல்ல மனதோடு யார் வாழ்த்தினாலும், அது சிறந்த ஆசிர்வாதமே என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
தனியார் நிறுவனத்தில் பணி புரியும், விவாகரத்தான பெண் நான்; என்னுடன் பணிபுரியும் பெண்களில் சிலர், பல நேரங்களில் சகஜமாக பழகினாலும், முக்கிய நிகழ்வுகளில் என்னை தவிர்க்க நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம், வீடு பால் காய்ச்சுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை என்னிடம் சொல்லவே தயங்குகின்றனர்.
என் நேரடி உயர் அதிகாரியின் வீட்டில் நடந்த விசேஷம் கூட, என் கீழ் பணிபுரியும் நபர் சொல்லித்தான் தெரிய வந்தது; பரிசுப் பொருட்கள் வாங்க செல்லும் போது கூட, என்னை ஒரு தடையாகத் தான் பார்க்கின்றனர். இவர்கள் சகுனம் பார்க்கின்றனரா அல்லது இதற்கெல்லாம் என்னை போன்றவர் ஏங்குவர் என்று நினைக்கின்றனரா... புரியவில்லை.
வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து, முன்னேற துடிக்கும் என்னை போன்றோருக்கு, உங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகள் சஞ்சலப்படுத்தப் போவதில்லை. மேலும், கணவனுடன் வாழ்ந்தால் மட்டுமே ஒருவரின் வாழ்த்து பலிக்கும் என்றில்லை; நல்ல மனதோடு யார் வாழ்த்தினாலும், அது சிறந்த ஆசிர்வாதமே என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயணிகள் ஆட்டு மந்தைகளா!
அண்மையில், மாநகர பஸ்சில் பயணித்த போது, ஒரு மூதாட்டி, மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, ௫௦ காசு நாணயங்களை நடத்துனரிடம் கொடுத்த போது, 'என்னம்மா... பிச்சை எடுத்த காசையெல்லாம் கொண்டு வந்து தர்ற... ௫௦ காசெல்லாம் செல்லாது; வேறு ரூபா கொடு...' என்று கேட்டு, அவரை அவமதித்ததைக் கண்டு திடுக்கிட்டேன். அந்த மூதாட்டியோ, 'வேறு சில்லரை இல்லை...' என்று கூறி, நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். ௧௦ ரூபாய், ௧௫ ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை கொடுத்தாலே எறிந்து விழும் நடத்துனர், மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை வாங்கி, மீதி சில்லரையை கொடுத்த அதிசயமும் நடந்தது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய், ௫௦ காசு என்றும், டீசல் விலையை ஒரு ரூபாய், ௫௦ காசு என்றும், சமையல் சிலிண்டர் விலையை, ௪௫ ரூபாய், ௫௦ காசு என்றும், ௫௦ காசுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையை உயர்த்தும் போது, பஸ் நடத்துனர்களுக்கு மட்டும், ௫௦ காசு செல்லாதாம். 'நாணயங்கள் செல்லாது...' என்று அறிவிக்கும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை, நடத்துனர்களுக்கு யார் கொடுத்தது? பயணிகளை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?
பஸ் நடத்துனர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்து வந்த தேவர்களும் அல்ல; பயணிகள் எல்லாம் ஆட்டு மந்தைகளும் அல்ல என்பதை, நடத்துனர்கள் இனிமேலாவது உணர்ந்து திருந்துவரா!
ஜி.கலைவாணி, பனங்கோட்டூர்.
அண்மையில், மாநகர பஸ்சில் பயணித்த போது, ஒரு மூதாட்டி, மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, ௫௦ காசு நாணயங்களை நடத்துனரிடம் கொடுத்த போது, 'என்னம்மா... பிச்சை எடுத்த காசையெல்லாம் கொண்டு வந்து தர்ற... ௫௦ காசெல்லாம் செல்லாது; வேறு ரூபா கொடு...' என்று கேட்டு, அவரை அவமதித்ததைக் கண்டு திடுக்கிட்டேன். அந்த மூதாட்டியோ, 'வேறு சில்லரை இல்லை...' என்று கூறி, நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். ௧௦ ரூபாய், ௧௫ ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை கொடுத்தாலே எறிந்து விழும் நடத்துனர், மூன்று ரூபாய் டிக்கெட்டுக்கு, நூறு ரூபாய் நோட்டை வாங்கி, மீதி சில்லரையை கொடுத்த அதிசயமும் நடந்தது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய், ௫௦ காசு என்றும், டீசல் விலையை ஒரு ரூபாய், ௫௦ காசு என்றும், சமையல் சிலிண்டர் விலையை, ௪௫ ரூபாய், ௫௦ காசு என்றும், ௫௦ காசுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையை உயர்த்தும் போது, பஸ் நடத்துனர்களுக்கு மட்டும், ௫௦ காசு செல்லாதாம். 'நாணயங்கள் செல்லாது...' என்று அறிவிக்கும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை, நடத்துனர்களுக்கு யார் கொடுத்தது? பயணிகளை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?
பஸ் நடத்துனர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்து வந்த தேவர்களும் அல்ல; பயணிகள் எல்லாம் ஆட்டு மந்தைகளும் அல்ல என்பதை, நடத்துனர்கள் இனிமேலாவது உணர்ந்து திருந்துவரா!
ஜி.கலைவாணி, பனங்கோட்டூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிள்ளையார் படும்பாடு!
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பின், பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்து வருகிறோம்; ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதன் உண்மைக் காரணம் தெரியுமா?
மழைக்காலத்தில் விநாயக சதுர்த்தி பூஜை வருவதால், நம் முன்னோர்கள், மழை நீரை குளத்தில் சேமிக்க, களிமண்ணால் செய்த பிள்ளையாரின் தொப்புளில் ஒரு ரூபாய் காசு வைத்து குளத்தில் விடுவர். மக்கள் அக்காசை எடுக்க குளத்தில் இறங்குவர். அப்போது, களிமண்ணால் செய்த பிள்ளையார் அமுக்கப்பட்டு, களிமண் குளத்திலுள்ள மணல் பரப்பை மூடி, குளத்து நீரை வற்ற விடாமல் செய்வதால், தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பயனளித்தது.
மழைநீர் சேமிப்பின் அவசியம் உணர்ந்த நம் முன்னோர், அதை செயல்படுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தினர். இதனால், எவ்வித பணவிரயமும் அரசுக்கு ஏற்படவில்லை. ஆனால், தற்போது பிள்ளையார் உருவத்தை பலவிதமான பொருட்களால் செய்து, நீர்நிலைகளில் விட்டு தண்ணீரை மாசுபடுத்துகின்றனர். அத்துடன், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் வீடுகளை கட்டி, மழை நீரை சாலைகளில் விடுகிறோம். அது கழிவுநீராகி, கடலில் கலக்கிறது. இப்படி எல்லா வகைகளிலும் நீர் நிலைகளை மாசுபடுத்தி, தண்ணீர் இல்லை என, குடங்களை தூக்கி கொண்டு, தெருவில் போராடி வருகிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் உள்ள குளம் மற்றும் ஏரிகளை பாதுகாக்க அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலமும், அரசு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதன் மூலமாகவும் தான் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
ஏ.வி.வீரா,புதுச்சேரி.
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பின், பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்து வருகிறோம்; ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதன் உண்மைக் காரணம் தெரியுமா?
மழைக்காலத்தில் விநாயக சதுர்த்தி பூஜை வருவதால், நம் முன்னோர்கள், மழை நீரை குளத்தில் சேமிக்க, களிமண்ணால் செய்த பிள்ளையாரின் தொப்புளில் ஒரு ரூபாய் காசு வைத்து குளத்தில் விடுவர். மக்கள் அக்காசை எடுக்க குளத்தில் இறங்குவர். அப்போது, களிமண்ணால் செய்த பிள்ளையார் அமுக்கப்பட்டு, களிமண் குளத்திலுள்ள மணல் பரப்பை மூடி, குளத்து நீரை வற்ற விடாமல் செய்வதால், தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பயனளித்தது.
மழைநீர் சேமிப்பின் அவசியம் உணர்ந்த நம் முன்னோர், அதை செயல்படுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தினர். இதனால், எவ்வித பணவிரயமும் அரசுக்கு ஏற்படவில்லை. ஆனால், தற்போது பிள்ளையார் உருவத்தை பலவிதமான பொருட்களால் செய்து, நீர்நிலைகளில் விட்டு தண்ணீரை மாசுபடுத்துகின்றனர். அத்துடன், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் வீடுகளை கட்டி, மழை நீரை சாலைகளில் விடுகிறோம். அது கழிவுநீராகி, கடலில் கலக்கிறது. இப்படி எல்லா வகைகளிலும் நீர் நிலைகளை மாசுபடுத்தி, தண்ணீர் இல்லை என, குடங்களை தூக்கி கொண்டு, தெருவில் போராடி வருகிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் உள்ள குளம் மற்றும் ஏரிகளை பாதுகாக்க அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலமும், அரசு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதன் மூலமாகவும் தான் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
ஏ.வி.வீரா,புதுச்சேரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!
எங்கள் தெருவில், தினமும் இரவு, 7:00 மணிக்கு, பதினாறு வயது சிறுவன் ஒருவன், வேர்க்கடலை விற்றுக் கொண்டு வருவான். 'பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில், இந்த சிறுவன் இப்படி கஷ்டப்படுகிறானே... இவனை நாம் படிக்க வைச்சா என்ன...' என்று நினைத்து, ஒருநாள் அவனிடம் என் எண்ணத்தை சொன்னேன்.
'உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. நான் படிக்கலன்னு நீங்க நினைக்க வேணாம்; நான் இப்போ, 'ப்ளஸ் ௧' படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எங்க அம்மா, அப்பா கூலி வேலை செய்றதுனால, அவங்க வருமானம் குடும்ப செலவுகளுக்கு பத்தல. அதனால் தான், நான் இரவு நேரத்தில கடல விக்றேன். உண்மையாகவே எனக்கு உதவி செய்ய விரும்பினா தினமும் ஒரு சிறு தொகைக்கு, கடலை வாங்குங்க; அது போதும்...' என்றான்.
பிரமித்து போனேன்; தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு அன்று முதல் வாடிக்கையாளரானேன்.
சி.ரங்கராஜன், மேட்டுப்பாளையம்.
எங்கள் தெருவில், தினமும் இரவு, 7:00 மணிக்கு, பதினாறு வயது சிறுவன் ஒருவன், வேர்க்கடலை விற்றுக் கொண்டு வருவான். 'பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில், இந்த சிறுவன் இப்படி கஷ்டப்படுகிறானே... இவனை நாம் படிக்க வைச்சா என்ன...' என்று நினைத்து, ஒருநாள் அவனிடம் என் எண்ணத்தை சொன்னேன்.
'உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. நான் படிக்கலன்னு நீங்க நினைக்க வேணாம்; நான் இப்போ, 'ப்ளஸ் ௧' படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எங்க அம்மா, அப்பா கூலி வேலை செய்றதுனால, அவங்க வருமானம் குடும்ப செலவுகளுக்கு பத்தல. அதனால் தான், நான் இரவு நேரத்தில கடல விக்றேன். உண்மையாகவே எனக்கு உதவி செய்ய விரும்பினா தினமும் ஒரு சிறு தொகைக்கு, கடலை வாங்குங்க; அது போதும்...' என்றான்.
பிரமித்து போனேன்; தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு அன்று முதல் வாடிக்கையாளரானேன்.
சி.ரங்கராஜன், மேட்டுப்பாளையம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு என்னுடைய ![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1082300விமந்தனி wrote:தன்னம்பிக்கையுடன், நெஞ்சுறுதியோடு செயல்படும் அச்சிறுவனுக்கு என்னுடைய
நன்றி விமந்தினி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாதக பயம்!
எனது நண்பரின் மகள், சமீபத்தில், தன் கூட படிக்கும் மாணவனோடு வீட்டை விட்டு சென்று விட்டாள். நல்லவேளையாக, உடனே புகார் கொடுத்து அன்றே கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். நண்பரின் மகளிடம், 'ஏன் இப்படி நடந்து கொண்டாய்?' எனக் கேட்டேன்; அதற்கு அவள் சொன்ன பதில் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
'பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நிலைக்காது...' என்று ஜாதகத்தில் இருப்பதாக கூறி நண்பரும், அவர் மனைவியும் மகள் முன்னிலையிலேயே அடிக்கடி புலம்புவார்களாம். அதுதான், 'நாமளே ஒருத்தன கணவனா தேர்ந்தெடுத்தா பிரச்னை இல்லையே'ன்னு நண்பரின் மகள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள்.
நண்பரிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'ஆமாம்; அவ ஜாதகத்துல இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா சொன்னாங்க; அத அவ இருக்கிறப்போ பேசி இருக்கிறோம்; ஆனா, அந்த பேச்சு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும்ன்னு நினைக்கல...' என்றார்.
ஜாதகம் பார்த்து அதில் உள்ள நன்மை, தீமைகளை பிள்ளைகள் முன் பெற்றோர் விவாதிப்பது தேவையற்றது; இம்மாதிரி தவறான முடிவை பிள்ளைகள் எடுக்க, பெற்றோரே உதாரணமாகி விடக் கூடாது.
எஸ்.சுந்தரமூர்த்தி, பொன்னேரி.
எனது நண்பரின் மகள், சமீபத்தில், தன் கூட படிக்கும் மாணவனோடு வீட்டை விட்டு சென்று விட்டாள். நல்லவேளையாக, உடனே புகார் கொடுத்து அன்றே கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். நண்பரின் மகளிடம், 'ஏன் இப்படி நடந்து கொண்டாய்?' எனக் கேட்டேன்; அதற்கு அவள் சொன்ன பதில் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
'பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நிலைக்காது...' என்று ஜாதகத்தில் இருப்பதாக கூறி நண்பரும், அவர் மனைவியும் மகள் முன்னிலையிலேயே அடிக்கடி புலம்புவார்களாம். அதுதான், 'நாமளே ஒருத்தன கணவனா தேர்ந்தெடுத்தா பிரச்னை இல்லையே'ன்னு நண்பரின் மகள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள்.
நண்பரிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'ஆமாம்; அவ ஜாதகத்துல இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா சொன்னாங்க; அத அவ இருக்கிறப்போ பேசி இருக்கிறோம்; ஆனா, அந்த பேச்சு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும்ன்னு நினைக்கல...' என்றார்.
ஜாதகம் பார்த்து அதில் உள்ள நன்மை, தீமைகளை பிள்ளைகள் முன் பெற்றோர் விவாதிப்பது தேவையற்றது; இம்மாதிரி தவறான முடிவை பிள்ளைகள் எடுக்க, பெற்றோரே உதாரணமாகி விடக் கூடாது.
எஸ்.சுந்தரமூர்த்தி, பொன்னேரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருந்துவரா!
அண்மையில், என் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தேன். விழா முடிந்த மறுநாள் காலை, தேநீர் அருந்துவதற்காக அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றிருந்தேன்.
அப்போது, தள்ளுவண்டி ஒன்றில், நடக்க இயலாத வெண்படை நோயாளி ஒருவர் அமர்ந்திருக்க, அந்த வண்டியை நடுத்தர வயது பெண்மணி தள்ளிக் கொண்டு வந்து கடைக்கு அருகில் நிறுத்தி, ஒரு அலுமினிய குவளையை நீட்டி, 'ஒரு கப் டீ வேணும்...' என்று கையில் சில்லரையை வைத்துக் கொண்டு கேட்டார். கடைக்காரர் டீ கொடுக்க மறுத்து விட்டார். அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் சிலர், 'காசு வாங்கிட்டு டீ போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...' என்றனர்.
அதற்கு அந்தக் கடைக்காரர், 'இம்மாதிரி ஆளுங்களுக்கு டீ கொடுத்தா வாடிக்கையாளர்ங்க இங்கு வர மாட்டாங்க...' என்றார்.
எவ்வளவு தான் சமுதாயம் முன்னேறி இருந்தாலும், இப்படியும் மனிதநேயமே இல்லாத மனிதர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.
இவரைப் போன்றோர் இனியாவது திருந்துவரா!
போஸ்குமார், சென்னை.
அண்மையில், என் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தேன். விழா முடிந்த மறுநாள் காலை, தேநீர் அருந்துவதற்காக அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றிருந்தேன்.
அப்போது, தள்ளுவண்டி ஒன்றில், நடக்க இயலாத வெண்படை நோயாளி ஒருவர் அமர்ந்திருக்க, அந்த வண்டியை நடுத்தர வயது பெண்மணி தள்ளிக் கொண்டு வந்து கடைக்கு அருகில் நிறுத்தி, ஒரு அலுமினிய குவளையை நீட்டி, 'ஒரு கப் டீ வேணும்...' என்று கையில் சில்லரையை வைத்துக் கொண்டு கேட்டார். கடைக்காரர் டீ கொடுக்க மறுத்து விட்டார். அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் சிலர், 'காசு வாங்கிட்டு டீ போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...' என்றனர்.
அதற்கு அந்தக் கடைக்காரர், 'இம்மாதிரி ஆளுங்களுக்கு டீ கொடுத்தா வாடிக்கையாளர்ங்க இங்கு வர மாட்டாங்க...' என்றார்.
எவ்வளவு தான் சமுதாயம் முன்னேறி இருந்தாலும், இப்படியும் மனிதநேயமே இல்லாத மனிதர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.
இவரைப் போன்றோர் இனியாவது திருந்துவரா!
போஸ்குமார், சென்னை.
Page 31 of 100 • 1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 31 of 100
|
|