புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
77 Posts - 36%
i6appar
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
2 Posts - 1%
prajai
பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_m10பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 29, 2013 8:46 pm

பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Astro-articles-47

‘‘நவகிரகங்களிலும் நாம் அதிகமாக பயப்படுவது சனி பகவானுக்கு மட்டும்தான். இவரைப் பிடிக்காது நமக்கு. அதே சமயம், இவர் நம்மைப் பிடித் துக்கொண்டு விடுவாரோ என்கிற பயமும் உண்டு. கோயில்களிலும் நவகிரக சந்நதியைவிட, தனியாக சனிபகவான் வீற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்த சந்நதியில்தான் கூட்டம் அதிக மாக இருக்கிறது. அந்த அளவுக்கு, நமக்கு பயம்! அதனால்தான், திருநள்ளாறுக்குச் சென்றால்கூட, சனிபகவானுக்கே முக்கியத்துவம் தருகிறோம். ‘‘திருநள்ளாறில் இருக்கும் சுவாமி பெயர், தர்பாரண் யேஸ்வரர்’’ என்று சொல்ல, நமக்குத் தெரியவில்லை.

தர்பாரண்யேஸ்வரர் என்னும் சிவபெருமானை ஒதுக்கி விட்டு, சனிபகவானிடம்தான் மனம் பதிகி றது. உள்ளே போய், தர்பாரண்யேஸ்வரரைத் தரிசிப்போம் என்ற எண்ணமே இருக்காது. அந்த அளவுக்கு, சனிபகவானிடம் பயம்! ஆனால், நம்மை சோதனைக்குள்ளாக்கி, நம்மைத் துன்புறுத்தி மகிழ்வதில் பகவான் எனப் போற்றப்படும் சனிக்கு என்ன சுகம் இருக்க முடியும்? ஒரு மாணவனுக்கு பரீட்சை போலத்தான் அவர் நமக்களிக்கும் சோதனைகளும். அதுவரையிலான அனுபவ அறிவை வைத்து இதுபோன்ற சோதனைக் காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை வழங்குபவர்தான் சனிபகவான்.

சனிபகவானைப் பற்றிய நம் எண்ணங்கள் இவ்வாறு பலவாறாக இருந்தாலும் ஆராய்ச்சியிலேயே வாழ்நாளைக் கழிக்கும் அயல்நாட்டுக்காரர்கள், வேறோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, சனிபகவானைப் பற்றிய அபூர்வமான தகவல்கள் வெளிப்பட்டன. நாசா ஆராய்ச்சியில் இறங்கியது. ஆகாயத்தில் திருநள்ளாறு வழியாக வரும் தகவல்கள்தான் தாமதமாக வருகின்றன என்று தெரிந்தது. இந்தக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. உடனே, ‘‘ஏன் அப்படி?’’ என்று ஆராய்ந்தார்கள். விடை கிடைத்தது.

சனி கிரகத்திலிருந்து, மெல்லியதான ஓர் நீல நிற ஒளிக்கற்றை புறப்பட்டு வந்து, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் வந்து ஐக்கியமாவ தாகத் தெரிந்தது. அந்த ஒளிக்கற்றையின் அடர்த்தியும் அளவும் சனிப்பெயர்ச்சி நாளில் அதிகமாவதும் தெரிந்தது. சனி கிரகத்திற்கு உரிய தலமாக, திருநள்ளாரை இதற் காகத்தான் சொல்லி வைத்தார்களோ என்பதை உணர்ந்து அதிசயித்தார்கள். ஆகையால், முன்னோர்கள் எல்லாம் ஏதோ தம் வாய்க்கு வந்தபடி சொல்லிவிட்டார்கள் என்று எண்ணக்கூடாது. நமக்கு எளிமையாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே, பலவிதமான தகவல்களை கதைகளாகச் சொல்லி வைத்தார்கள்.

தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 29, 2013 8:47 pm

பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Images?q=tbn:ANd9GcQ_WaAwhZ4v63iKkK4fzSrm7tDYqeAuXAVkwIU_ZN6tqj8YNWXjzQ

வாருங்கள்! சனி பகவானிடம் செல்வோம்! அட! ஏன் பயப்படுகிறீர்கள்? பயப்படாமல் வாருங்கள்! அவர் நல்லதுதான் செய்வார், நம்புங்கள்! முதலில், இரண்டு அறிவாளிகளின் செயல்களைப் பார்க்கலாம். ராவணன், வேதங்களில் கரை கண்டவன், இசைபாடி இறைவனையே மயக்கியவன், அளவில்லாத ஆற்றலும் வீரமும் படைத்தவன், கற்புக்கரசியான, மகளிரில் தலைசிறந்தவளான மனைவி, இந்திரனையே வெற்றிகொண்ட மகன் - இவ்வளவும் இருந்தால், கூடவே ஒன்று இருக்குமே...! ஆணவம்! அது ராவணனிடம் நிறையவே இருந்தது. தேவர்களை எல்லாம் ஆட்டிப்படைத்தான் அவன்.

அனைவரையும் தன் ஆட்சிக்குக் கீழே கொண்டுவந்த அவன் நவகிரகங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த நவகிரகங்களை அடிமைப்படுத்தி, அவற்றைத் தன் சிம்மாசனத்திற்குப் படிக்கட்டுகளாக அமைத்துக் கொண்டான். நவகிரகங்களும் குப்புறப்படுத்தபடி படிக்கட்டுகளாக இருந்தன. அவற்றின் முதுகின்மேல் கால்வைத்து மிதித்து ஏறி, சிம்மாசனத்தில் அமர்வான், ராவணன். ஒருநாள், ராவணன் சிம்மாசனத்தில் ஏறுவதற்காகப் படிக்கட்டு அருகில் சென்றபோது அங்கு நாரதர் வந்தார். ‘‘என்ன ராவணா! எல்லோரும் உன் னை வீரன் என்கிறார்கள்.

நீயோ, நவகிரகங்களுக்குப் பயந்தவன்போல, அவர்களின் முதுகில் மிதிக்கிறாயே! அவர்களை எல்லாம் நிமிர்த்திப் படுக்க வைத்து, அவர்களின் நெஞ்சில் அல்லவா காலை வைத்து ஏறவேண்டும். உனக்கும் ஏதாவது பயமா?’’ எனக் கேட்டார். இப்படி யாராவது கேட்டால், ஆணவக்காரர்களுக்குதான் உடனே ‘ஜிவ்’வென்று ஏறுமே! ராவணனுக்கும் அப்படித்தான் ஏறியது. உடனே, நவகிரகங்களை நோக்கி, ‘‘நிமிர்ந்து படுங்களடா எல்லோரும்’’ என்றான். எல்லோரும் நிமிர்ந்து படுத்தார்கள். சனிபகவான் பார்வை ராவணன் மீது விழுந்தது. அதேநேரத்தில், அயோத்தியில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி அவதரித்தார். ராவணனுக்கு அழிவுகாலம் ஆரம்பமாயிற்று.

ராவணனின் வீரமும் அனுபவித்த சுகங்களும் அவனுக்கு ஆணவத்தைத் தந்தது. அந்த ஆணவம் அவனுடைய வாழ்க்கையையே முடித்தது. அடுத்தது, ஒரு சமயம் சனி பகவான் விநாயகப் பெருமானிடம் சென்றார். ‘‘ஆனைமுகக் கடவுளே! நான் உங்களைப் பிடிக்க வேண்டும். இப்போது பிடிக்கப் போகிறேன்’’ என்றார். அதற்கு விநாயகர், ‘‘இப்போது வேண்டாம். நாளை வந்து பிடித்துக்கொள்! நீயே அதை, வேண்டுமானால் என் முதுகில் எழுதிவிட்டுப் போ!’’ என்றார். சனிபகவானும் விநாயகரின் முதுகில், ‘‘நாளை வந்து பிடித்துக் கொள்!’’ என எழுதிவிட்டுச் சென்றார். மறுநாள் சனிபகவான் விநாயகரிடம் வர, விநாயகர் முதுகைத் திருப்பிக் காட்டினார். அங்கே, அவர் எழுதிய ‘‘நாளை வந்து பிடித்துக் கொள்!’’ என்பது அவர் பார்வையில் பட்டது.

தொடரும் ..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 29, 2013 8:48 pm

பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் 7_b

அப்புறம் என்ன, நாளை, நாளை என்று, சனிபகவானின் எண்ணம் பலிக்காமலே போனது. இங்கே வென்றது, அமைதியான விநாயகரின் அறிவாற்றல். ராவணனைப் போல் ஆணவம் பிடித்த அறிவல்ல. இதேபோல், சனிபகவானைப் பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. இனி சனி பகவானைப் பற்றிய மற்ற தகவல்களைப் பார்க்கலாம். சூரியன், துவஷ்டாவின் மகளான சஞ்ஞிகை என்பவளை மணம் செய்து வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு வைவஸ்வத மனு, யமன், யமுனை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதன் பிறகு, சஞ்ஞிகை சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாததால், தன் தந்தை வீட்டிற்கு, சூரியனுக்குத் தெரியாமல் செல்ல எண்ணினாள்.

அதற்காகத் தன் நிழலையே, தன்னைப் போலவே ஒரு பெண்ணாகச் செய்து, அங்கேயே விட்டுவிட்டு, தந்தையிடம் சென்றுவிட்டாள். அவளுடைய நிழலில் தோன்றிய பெண் சாயாதேவி எனப்பட்டாள். அந்த சாயாதேவி, சஞ்ஞிகையின் விருப்பப்படியே தான் வேறொருத்தி என்பதைச் சொல்லாமலேயே சூரியனுடன் வாழ்ந்தாள். அவளுக்கு சாவர்ணீ என்ற மனு, சனிபகவான், பத்திரை என்ற பெண் ஆகியோர் பிறந்தனர். தனக்குக் குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி, சஞ்ஞிகையின் குழந்தைகளிடம் வெறுப்பைக் காட்டத் தொடங்கினாள். அதனால் கோபம் கொண்ட யமன், ஒருநாள் சாயாதேவியை உதைக்கப் போனான்.
‘‘என்னையா உதைக்க வருகிறாய்? உன் கால் முறியட்டும்’’ என சாபம் கொடுத்தாள் சாயாதேவி.

இத்தகவலை, யமன் தன் தந்தையான சூரியனிடம் போய்ச் சொன்னான். சந்தேகப்பட்ட சூரியன் விசாரித்து உண்மையை உணர்ந்தான். அதன் பிறகு சூரியன், சஞ்ஞிகையைத் தேடிச் சென்று, தவம் செய்து கொண்டிருந்த அவளை அடைந்தது தனிக் கதை. இதன் பிறகு, சனிபகவான் காசிக்குச் சென்று தன் பெயரால் ஒரு சிவலிங்கம் நிறுவி வழிபட்டுத் தவம் செய்தான். அதன் பயனாக, கிரகங்களில் ஒன்றா கப் பதவியும் பெற்றான். சனி பகவானுக்கு, ஒரு கால் சற்று சிறியதாக இருப்பதால், அவன் மெள்ளமாக நடப்பான். அதனால் அவனுக்கு ‘சனைச்சரன்’ (மந்தமாக நடப்பவன்) என்ற பெயரும் உண்டு. ஆகமங்கள் சனிபகவானின் வடிவம், உடை ஆகியவற்றைப் பற்றிக் கூறுகின்றன.

சனிபகவான் - கரு நிறத்தவன், கரிய ஆடை, குட்டையான வடிவம், இரு கால்களில் ஒன்று ஊனம், இரு கரங்கள், வலது கரத்தில் தண்டம், இடதுக ரத்தில் வரத முத்திரை, பத்ம பீடத்தில் வீற்றிருப்பவன் என ஓர் ஆகமம் கூறுகிறது. சனிபகவான், கரங்களில் தண்டமும் அட்ச மாலையும் உள்ளன. எட்டுக் குதிரைகள் பூட்டப்பட்ட இரும்பு ரதத்தில் பவனி வருபவன் என விஷ்ணு தர் மோத்திரம் என்ற நூல் கூறுகிறது. நவகிரகங்களுக்கு உண்டான வழிபாட்டு முறைகளை விவரிக்கும் நவகிரக ஆராதனம் என்ற நூலில் காணப்படும் சனிபகவானைப் பற்றிய தகவல்கள்: சனிபகவான் வில் போன்ற ஆசனத்தில் வீற்றிருப்பான். கழுகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி அமர்ந்திருப்பான்.

நீலமேனி உடையவன், முடி தரித்திருப்பான், சூலம், வில், அபயம், வரதம் ஆகியவை கொண்ட நான்கு திருக்கரங்களை உடையவன். மெள்ள நடப்பான். கருஞ்சந்தனம், கருமலர், நீலமலர் மாலை ஆகியவற்றை அணிபவன், கருநிறக்குடை கொண்டு மேருவை வலம் வருபவன், சௌராஷ்டிர தேசத்தில் தோன்றியவன், மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் அதிபதி. நவகிரக மண்டலத்தில் சூரியனுக்கு மேற்காக வில் வடிவம் கொண்ட மண்டலத்தில் இருப்பவன். சனிக்கு அதிதேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நிறம் - கருமை. தானியம் -எள். சனிபகவானுக்கு மலர் - கருங்குவளை, மந்தாரை; ஆடை - கருப்புநிறம், மணி - நீலம், உலோகம் - இரும்பு, மனைவி நீளாதேவி, மகன் - குளிகன், பண்பு -குரூரம், குணம் - தாமசம், சுவை - கசப்பு.

தொடரும்...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 29, 2013 8:49 pm

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் சனிபகவானைக் குறித்து கீர்த்தனை பாடி இருக்கிறார். அப்பாடலில் அவர் கூறியிருக்கும் தகவல்கள்: சனிபகவான் - கதிரவனின் புதல்வர், மிகுந்த தைரியம் உடையவர், பிறவிப் பெருங்கடலில் மூழ்கக் கூடிய பயத்தை உண்டாக்கிக் கொடிய பலன்களை அளிப்பவர். சிவபெருமானின் கடைக்கண் பார்வைக்கு ஆளான அடியவர்களுக்கு, ஆச்சரியப்படும்படியான நற்பயன்களை வழங்குபவர். மை போலக் கறுத்த திருமேனி கொண்டவர், நீல உடை, நீல மலர்மாலை அணிந்தவர், மாலினி மந்திரத்தால் துதிக்கப்பட்ட குருகுகனுக்குக் களிப்பளிப்பவர். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி. எள் கலந்த உணவு, நல்லெண்ணெய் விளக்கு ஆகியவற்றில் மிகுந்த விருப்பம் கொண்டவர்.

கருணையின் கடல் போன்றவர். பயமில்லாதவர், யமனுடைய தண்டத்தால் அடிக்கப்பட்டு முடமான கால் உடையவர். வழிபடுபவர்களுக்கு விரும்பிய பலன்களை அளிப்பதில் காமதேனுவைப் போன்றவர், கால சக்கரத்தைப் பிளப்பதில் கதிரவனுக்கு நிகரானவர், சாயா தேவியின் குமாரர், மெள்ளமாக நடப்பவர். இப்படிப்பட்ட சனிபகவானை எப்பொழுதும் பிரார்த்திக்கிறேன் என்கிறார் தீட்சிதர். தமிழ்நாட்டில், சனிபகவானுக்குக் காக்கையை வாகனமாகச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. ஆலயங்களில் உள்ள சனிபகவான் விக்கிரகங்களிலும் காகமே வாகனமாக அமைக்கப்பட்டிருக்கிறது. திருப்பனந்தாள், காசி மடத்தார் வெளியிட்டுள்ள ‘சனி பகவான் தோத்திரம்’ என்னும் நூல், பன்னிரண்டு பாடல்களால் சனிபகவானைத் துதிக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ‘சனியனே! காகமேனும் தம்பிரானே!’ என்று நிறைவு பெறுகிறது.

வடமொழியில் உள்ள தியான சுலோகங்களோ, சனிபகவானுக்குக் கழுகையே வாகனமாகக் குறிப்பிடுகின்றன. சனிபகவானுக்கு மந்தன், பிணிமுகன், காரி, முடவன், முதுமகன், சமீபுஷ்பப் பிரியன், நிர்மாம்ச காத்ரன், சுஷ்கன், சுஷ்கோதரன், ஜடாதரன் எனப் பல பெயர்கள் உண்டு. சனிபகவானால் பீடிக்கப்பட்டுப் படாதபாடு பட்டவர்கள் என்று நளன், தசரதர் ஆகியோரைக் குறிப்பிடுவார்கள். இறைவனை வழிபட்டு, அத்துயரில் இருந்து அவர்கள் விடுபட்டதையும் கூறுவார்கள். ஒழுக்கசீலர்கள், உத்தமர்கள், மனதாலும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்காதவர்கள் என்றெல்லாம் புகழப்படும் நளன், தசரதர் ஆகியோரே சனிபக வானால் பீடிக்கப்பட்டார்கள் என்றால், நாம் எம்மாத்திரம்? இறைவனை வழிபட்டு, சனிபகவானால் துயரம் நேரிடாதவாறு வேண்டுவோம்! இறைவன் அருள்வான்.

நன்றி _பி.என்.பரசுராமன் - தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 8:41 am

நல்ல பதிவு என்னுடைய நம்பிக்கையும் இது தான்




பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Mபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Uபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Tபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Hபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Uபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Mபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Oபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Hபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Aபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Mபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் Eபயமுறுத்திப் பண்படுத்தும் பகவான் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக