புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jul 26, 2013 11:18 am

தமிழின் கலாசாரத் தலைநகராகக் கருதப்படும் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் 102 ஆண்டுகள் பாரம்பரியமிக்க தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் தற்போது தடுமாற்றத்தில் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் தமிழறிஞர்கள்.

மதுரையில் 1901- ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 3 நாள் சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் தலைமை வகித்த பாண்டித்துரைத் தேவர் தமிழ் மொழி நிலை பெற்று வளர தமிழ்ச் சங்கம் அவசியம் என்றார். அதன்படி, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ச் சான்றோர் கூடி தமிழ்ச் சங்கம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரை தமிழ்ச் சங்கம் உருவானது. அதன் நிறுவனராக பொன்.பாண்டித்துரைத் தேவரும், தலைவராக மன்னர் பாஸ்கர சேதுபதியும் இருந்தனர். பாஸ்கர சேதுபதி ரூ.10 ஆயிரத்தை தமிழ்ச் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்க, பாண்டித்துரைத் தேவர் தமது ஜமீனை விற்று சங்கத்துக்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.

அதன்படி, பழைய தமிழ் நூல்கள் புதுப்பிக்கப்படவும், ஓலைச்சுவடிகள் காப்பாற்றப்படவும், தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் செயல்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ்ச் சங்கத்துடன் செந்தமிழ் கலாசாலை, பாண்டியன் புத்தகசாலை, நூலாராய்ச்சி சாலை ஆகியவையும் தொடங்கப்பட்டன.

செந்தமிழ்க் கலாசாலைக்கு இலக்கணப் புலவர் நாராயண ஐயங்காரும், நூலாராய்ச்சி சாலைக்கு தமிழறிஞர் மு. ராகவையங்காரும் தலைமை வகித்தனர். சங்கத்தில் 49 தமிழ்ப் புலவர்கள் இடம் பெற்றனர். தமிழ்த் தாதா உ.வே. சாமிநாதய்யர் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் மணிமேகலையை முழுமையாகவும், சிலப்பதிகாரத்தின் விடுபட்ட பகுதிகளையும் புதுப்பித்தார்.

இச் சங்க வெளியீடாக தொடர்ந்துவரும் செந்தமிழ் இதழில்தான் பரிதிமாற் கலைஞர் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கக் கோரி கட்டுரை எழுதினார். சங்கம் 1908-ல் முறையாக அரசிடம் பதிவுபெற்றது. அதன்படி, சங்கங்களது சட்டப்படி செயல்படுவது அவசியம். சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றான தமிழ்க் கல்லூரி தொடங்கும் வகையில் செந்தமிழ்க் கல்லூரி 1957-ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்ப் புலவர் கல்வி கற்பிக்கப்பட்டுவந்த இக் கல்லூரியில் தற்போது தமிழ் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளுடன், சம்ஸ்கிருதம், கணினி வழிக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சி, ஓலைச்சுவடி ஆய்வு ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன.

இங்கு 50 ஆயிரம் தமிழ் நூல்கள் உள்ளன. இங்குள்ள வைத்தியசாரசங்கிரகம் எனும் ஜோதிட நூலும், பன்னூல் திரட்டும், 86 சிற்றிலக்கியத் தொகுப்பு உள்ளிட்ட பலவகை நூல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை.

மேலும், தமிழின் இலக்கண விளக்கம், பாகவதம், தொன்னூல் விளக்கம் உள்ளிட்ட மிக அரிய ஓலைச்சுவடிகள் இங்குள்ளன. தற்போது 256 ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதிலிருந்துதான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கே ஓலைச்சுவடிகள் பார்வையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 1981-ல் மதுரையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவரின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டது. திமுக ஆட்சியிலும் சங்கக் கட்டடத்துக்கு நிதி அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதாவால் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்பட்டது. இது மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட முதல் விருது மட்டுமல்ல, முதல் மரியாதையாகும். விருதுடன் ரூ.5 லட்சம் நிதியும் கிடைத்துள்ளது.

ஆனால், கடந்த 2007 முதலே சங்கம் மற்றும் கல்லூரியில் நிர்வாக ரீதியில் ஏற்பட்ட பிரச்னை நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளது. சங்கத்தை தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் வாரிசுகளைக்கூட சங்கத்திலிருந்து நீக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழறிஞர்கள். இதனால் சங்க நடவடிக்கை முடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சங்கம் சார்பில் மாதந்தோறும் தமிழறிஞர்களது சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்படும். புதிய தமிழ் இலக்கிய, சொற்பொழிவு நூல்கள் வெளியிடப்படும். வெளிநாட்டு அறிஞர்களது, வெளி மாநில மொழி ஆய்வாளர்களது நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். பிரச்னை காரணமாக கடந்த ஓராண்டில் எவ்வித செயல்பாடும் நடைபெறவில்லை என்கிறார்கள் தமிழறிஞர்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்ச் சங்கத்தின் அசாதாரண பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கல்லூரி காலி பணியிடங்களை நிரப்புவதில் பிரச்னை ஏற்பட்டு, தமிழ்ச் சங்கத்தின் செயல்பாட்டையும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போதைய நிர்வாகத் தரப்பினரிடம் கேட்டபோது, பிரச்னையைத் தீர்க்க சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர் தரப்பினர் நீதிமன்றத்தை நாடுவதால் எதுவும் செய்ய முடியவில்லை என்கின்றனர்.

எது எப்படியோ, தமிழின் அடையாளமாகத் திகழும் மதுரை தமிழ்ச் சங்கத்தை எந்த நோக்கத்தில் பாண்டித்துரைத் தேவர் அமைத்தாரோ, அதை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்டோர் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. கல்வி என்பது வர்த்தகமாகிவிட்ட நிலையில், அதிலிருந்து தமிழ்ச் சங்கமாவது விலகியிருக்க வேண்டும் என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

ஆகவே, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கவும், 100 அடி உயர தமிழ்த்தாய் சிலை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா நான்காம் தமிழ்ச் சங்கத்தின் சிக்கலைத் தீர்க்கவும் முன்வர வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி-தினமணி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 26, 2013 11:31 am

எது எப்படியோ, தமிழின் அடையாளமாகத் திகழும் மதுரை தமிழ்ச் சங்கத்தை எந்த நோக்கத்தில் பாண்டித்துரைத் தேவர் அமைத்தாரோ, அதை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்டோர் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.

சங்கம் மீண்டும் சிறப்பாக செயல்படும் என்று நம்புவோம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 11:46 am

சோகம் சோகம் சோகம்



தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Mதடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Aதடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Dதடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Hதடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? U



தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக