புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா


   
   

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 17, 2013 2:23 pm

First topic message reminder :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Madurai-+Meenakshi_Amman_Temple_Tank

இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 91784079.uTFNzvCh.meenakshi35
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக  விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.

(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம்,  )

ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை  என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும்  உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்




என்னுடைய காலேஜ் project  இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்  புன்னகை  புன்னகை  புன்னகை



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 2:50 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 562226_235993893211364_1870546917_n



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 2:56 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 541249_237290149748405_34484068_n



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 3:00 pm

முக்குறுணி விநாயகர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 543502_238654482945305_1315623946_n

னாக்ஷி அம்மன் திருக்கோவிலில்ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி (6கிலோ). விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறத ு. அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது .

திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாக்ஷி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் இந்த விநாயகர் முன்பு உள்ள் நிலை விளக்குகளில் திருமலைநாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின ்உருவங்களை பார்க்கலாம்.



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 28, 2013 5:14 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 485448_376954245739306_1415791735_n



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 28, 2013 5:25 pm

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் உள் பிரகாரம்
ஓவியங்கள் ..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 61203_307259702751449_1240529799_n



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 28, 2013 7:59 pm

48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது.

கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்தது.

சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 29, 2013 12:36 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால்
மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 1002471_307888946021858_1454821292_n

இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாய் தாங்கி கொண்டு நடப்பது போன்று
வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சிற்பியின்
கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின்
வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை,

அவள்
கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட
கூடை போன்று வைத்துள்ளாள். அந்த
கூடையை எங்கள் ஊரில்
கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில்
சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம்
செதுக்கப்பட்ட விதம் சிற்பியின்
பொறுமையை என்னவென்று பாராட்டுவது....

அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு, நீங்க
அதை நேரில் சென்று பார்த்தல்
நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும்
அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள்
போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில்
சுமந்து கொண்டும்
மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன்
துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக
வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நாம்
குறவன் குறத்திகள் வாழ்கை முறையில்
பார்த்து இருப்போம் ,

இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம்
நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில்,
வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில்
பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்ட
ு குழந்தைகளை கொண்டு செல்கின்றனர், அந்த
குழந்தை அவளின் மார்பில் பால்
குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம்
நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க
இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின்
அரவணைப்பில்
நடப்பது போன்று உள்ளது.

மறுபக்கம்
பனைஒலைபெட்டி தன முழங்கையால்
இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த
குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற
அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள்
அனைத்துவிதமான பொருள்களும்
அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள்
எல்லோரும்
வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்குவார்கள்
அப்போது தன்
குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள்.

குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவ
ிட்டு அவன் வெகுதூரம்
நடக்கவேண்டும, அழாமலும் இருக்கவேணும்
என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்
தருவார்கள் முட்டாய்
அல்லது ரொட்டி எதோ ஒரு தீன்
பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும்
நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த
சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்ட
ு இருக்கலாம்.

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின்
உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும்
ஒரு வகை பிரசவிப்பு தானே.

சிற்பியின் மனதுக்குள்
இருப்பதை கற்பனை கருவை மனசால்
சுமந்து அதை ஒரு பாறையில்
இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும்
பொது அதை அவன்
பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன்.

கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த
கண்ணீர் தான் வரும்.
தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த
வேலையை தொடங்குவார்கள். சாரம்
கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட
இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய
பிறகு சிற்பங்கக் செதுக்கும் போது சேதம்
ஆனாலும் தூணை அப்புறபடுத்துவத
ு என்பது இயலாத காரியம்.சிற்பியின்
முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும்

இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட
அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம்
தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள்,
கலைகள் எல்லாம் நம்
தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும்
பெருமையாக இருக்கிறது.
இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்க
வேண்டும்.நம் முன்னோர்களின்
பெருமையை அடுத்த
தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்

அதை எடுத்துசொல்ல நாம் என்றும்
மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும்
நம் மண்ணின் பெருமையும், திறமையும்
அற்பனிப்பையும் சொல்ல வேண்டும் .
சிற்பங்களை நாம் பாதுக்க வேண்டும், அதில்
வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம்
கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல்
சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்
முன்னாடி இது போல நடந்தாலும்
அதை உடனே தட்டி கேட்க வேண்டும் அவர்களிடம்
நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .

நன்றி முகநூல்



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 29, 2013 12:41 pm

சித்திரை:
`````````
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்
சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும்,
மதுரையில் தான்
சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக
கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன்,
விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன்
கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள்
ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம்
பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன்
குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான்
அவனிடம் பூலோகம்
சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால்
ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார்.
அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில்
வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில்
கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப்
பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன்
மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில்
சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர்
அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன்
சிவபெருமானுக்கு கோவில் கட்ட
நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம்
வரவழைத்தான்.
இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம்
அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும்,
விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம்
என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த
இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும்
சித்ரா பௌர்ணமி நாளில்
என்னை இங்கு வந்து வழிபடுக
என்று கட்டளையிட்டார்.
அதன்படி ஒவ்வொரு வருடமும்
சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன்
இங்கு வந்து வழிபடுகிறான்
என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில்
விசேஷமாகக் கருதப்படுகிறது.

வைகாசி:
``````````
வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா.
திருவாதிரை நக்ஷத்திரத்திலே
இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு
நடக்கிறது.

ஆனி:
`````
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல்
உற்சவம். தினமும்
மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது ம
நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில்
சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல்
ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க
வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட
ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

ஆடி:
````
ஆடி மாதத்தில் ஆயில்ய நக்ஷத்திரம்
துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம்
நடைபெறுகிறது. கொடியேற்றம்
மீனாக்ஷிக்கு மட்டுமே நடை பெறும்.

ஆவணி:
`````````
ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூல
உற்சவம் என்றே பெயர் பெற்றது.
நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும்,
சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவார்கள். வளையல்
திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த
திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது,
விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள்
நடைபெறும். மூல நக்ஷத்திரத்தன்ற
ு சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிசேகம்
நடைபெறுகிறது.

புரட்டாசி:
`````````
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில்
மீனாக்ஷி அலங்கரிக்கப்படுகிறார்.

ஐப்பசி:
``````
ஐப்பசி மாதப்
பிரதமையிலே இருந்து சஷ்டி வரையிலும்
கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன்
கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள்
கூடி இருந்து கோலாட்டம் ஆட, உற்சவம்
நடக்கிறது.

கார்த்திகை:
```````````
கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம்.
கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும்,
சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப்
பனை கொளுத்தப்படுகிறது.

மார்கழி:
````````
மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில்
சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு அர்
ஜாமம் முடிந்து விடுகின்றது. தினமும்
வெள்ளியம்பல நடராஜர் சந்நதியில் மாணிக்க வாசகர்
முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள்
திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார
்கள். அதிகாலை ஐந்தரை மணியில்
இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள்
எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப்
பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும்
புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர்
மட்டுமே புறப்பாடு காணுவார். பதினோராம் நாள்
ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில்
வலம் வருகிறார்.

தை :
````
தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும்.
வண்டியூரில் திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட
தெப்பக் குளத்தில் வசந்த மண்டபத்தில் தெப்பம்
கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில்
எழுந்தருளச் செய்து தெப்போற்சவம்
நடைபெறுகிறது.

மாசி:
`````
மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும்
சேர்த்து மண்டல உற்சவம் நடக்கிறது.
இது கோயிலோடு நெருங்கிய
தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த
ஒன்று. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த
உற்சவம் கொஞ்சம் பெரியது என்றே சொல்லலாம்.

பங்குனி:
````````
பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும்
சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக்
கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம்
நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும்
வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக்
காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்ற
ு இருவரும் மகனின் திருமணக் கோலம் காண
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச்
செல்லப்படுகிறார்கள்.
மேலும், இங்கு தினசரி பூஜைகள்
செய்யப்படுவதுடன் சிவபெருமானுக்கு உகந்த
நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும்
சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 06, 2013 6:13 pm

உங்களுக்கு தெரியுமா???
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்
சுவாரசியமான தகவல்:-
1) மொத்தம் 33000 சிற்பங்கள்
உள்ளன
2) புதிதாக போட்டி இட்ட உலக
அதிசயம் பட்டியலில் 30வது இடம்.
3)
ஒரு நாளைக்கு குறைந்தது 15000
பேர் வருகை தருகிறார்கள்,
வெள்ளி கிழமை மட்டும் 25000
பேர்.
4) ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 1
கோடி.

இதில் கடைசி செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை தினமும் 15000 பேர் வந்து செல்லும் மீனாட்சி அம்மன் கோவில் வருமானம் 1 கோடி என்பது மிகவும் குறைவாக தெரிகிறது

நன்றி முகநூல்



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 10, 2013 9:12 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவன்
சந்நிதிக்கு மேல் உள்ள தங்க கோபுரத்தின்
விமானத்தை எட்டு வெள்ளை யானைகள்
தாங்கி நிற்கிறது.
சிவன் சந்நிதியை சுற்றி வரும் பிரகாரத்தில்
ஆறு வெள்ளை யானைகளையும், சிவன்
சந்நிதிக்கு உட்புறம்
இரண்டு வெள்ளை யானைகளையும் பார்க்கலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 1098505_312983155512437_1893622278_n



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக