புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_m10இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jul 13, 2013 10:17 pm

இந்தியாவிலேயே முதல் முறையாக கைராட்டின நூல் நெசவுத் தொழிற்சாலை துவக்கப்பட்ட பெருமைக்குரிய ராஜபாளையம் நகரில் 1898 ஜூலையில் பிறந்தவர் பி.எஸ்.குமாரசாமி ராஜா.

ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், சென்னை மாகாண முதல்வர் (ஏப்ரல் 6, 1949 - ஏப்ரல் 10, 1952), ஒரிசா மாநில ஆளுநர் (1954-56) என பல்வேறு பதவிகளை வகித்தவர்.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து, தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் உயர்ந்தவர். ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும் வகித்த அனைத்துப் பதவிகளுக்கும் பெருமை சேர்த்தவர். எந்தப் பதவியும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தபோதும் நேரு, ராஜாஜி போன்ற தலைவர்களின் வற்புறுத்தலுக்காகவே ஒரிசா மாநில ஆளுநர் பதவியை ஏற்றவர்.

1946-இல் முதல்வராக டி.பிரகாசம் தேர்வு செய்யப்பட்டபோது அவரது அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

இது அவருக்கே தெரிவிக்கப்படாத நிலையில், வானொலி மூலம் இதனை அறிந்து கொண்ட அவரது உறவினர்களும், நண்பர்களும் அவரது வீட்டுக்கு (ராஜபாளையம்) இச்செய்தியைச் சொல்ல வந்தனர்.

அப்போது தனது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் ராஜா. அமைச்சராக நியமிக்கப்பட்ட செய்தியை அவரிடம் சொன்னபோது எந்தவித பூரிப்பும் அடையவில்லை.

""அமைச்சர் பதவி என்பது எனது சொந்த நலனுக்காகக் கொடுக்கப்படவில்லை, மக்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதவியின் மூலம் நேர்மையாகப் பணியாற்றி மக்களால் பாராட்டும்படி நடந்து கொள்வதுதான் அமைச்சர் பதவிக்கு சிறப்பாக இருக்கும்'' என தன் இல்லத்துக்கு வந்தவர்களிடம் சொல்லி அவர்களது உள்ளத்தில் இடம் பிடித்தார். அப்படிச் சொன்னது மட்டுமின்றி அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார்.

1952 பொதுத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இரவு நேரத்தில் எப்போதும் போல இரவு 10 மணிக்கு தூங்கச் சென்று விட்டார். அப்போது அவரது பத்திரிகைத்துறை நண்பர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை எழுப்பி, "தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல் தூங்கப் போகிறீர்களே?' எனக் கேட்டார்; "தேர்தல் முடிவு வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோதான் இருக்கும். அதற்காகத் தூங்காமல் இருக்க முடியுமா?' என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கச் சென்றுவிட்டார். அந்தத் தேர்தலில் அவர் தோற்றுப்போய்விட்டதாகத் தகவல் வந்தபோது சிரித்துக் கொண்டே, "அப்படியா, சரி பரவாயில்லை' என்று பதிலளித்துவிட்டு தனது பணிகளை வழக்கம் போலவே செய்யத் தொடங்கினாராம்.

முதல்வராகப் பதவி வகித்தபோது நிர்வாகத்துறையும், நீதித்துறையும் ஒன்றாக இருந்ததை இரண்டாகப் பிரித்து நீதித்துறையை தனியாக உருவாக்கினார். நிர்வாகம் எப்போதும் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்க முடியும் என்றும் சொன்னார்.

சமூக நலத்துறையிடம் இணைந்திருந்த ஹரிஜன நலத்துறையைத் தனியாகப் பிரித்து அத்துறைக்கென தனியாக ஒரு அமைச்சரையும் நியமித்து அம்மக்களின் உயர்வுக்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வகுத்தளித்தார்.

தமிழகத்தில் இருந்த 60 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களையும் கணக்கெடுத்து அவையனைத்தையும் இரண்டே ஆண்டுகளில் விளை நிலங்களாக மாற்றினார்.

ஏழை விவசாயிகளை இனம் கண்டு அவர்களுக்கு இலவசமாகவே பட்டாவும் தந்து உதவினார்.

தமிழகத்தில் ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான இடங்களை மீட்டு அவையனைத்தையும் அரசின் கீழ் கொண்டுவந்து ஜமீன்களே இல்லாத முதல் குடியரசு தின விழாவை 1950-இல் கொண்டாட வைத்தார்.

சென்னை மாகாணத்தின் "பிரதமர்' என அழைக்கப்பட்ட பி.எஸ்.குமாரசாமி ராஜா, இந்தியாவின் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நாடு குடியரசு ஆனதும், பிரதமர் என்ற பதவி எடுக்கப்பட்டு முதல் முதலாக "முதலமைச்சர்' எனும் புதிய பெயரில் அதே பதவியினைத் தொடர்ந்து அலங்கரித்தார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்குத் திட்டத்தை அமல்படுத்தியதுடன் ""தமிழகம் முன்னேற வேண்டுமானால், குடும்பங்கள் மதுவால் சீரழியாமல் இருக்க வேண்டுமானால் மக்கள் அனைவரும் பூரண மதுவிலக்குத் திட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்'' என்று மக்களிடையே மன்றாடினார்.

இத்திட்டத்தை அமல்படுத்தினால் அரசின் வருமானம் குறைந்துவிடும். மக்கள் மீது தேவையில்லாமல் அதிக வரி வசூலிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் என்று தலைவர்கள் சிலர் குரல் எழுப்பியபோது, "நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும்போது சில தியாகங்களையும் செய்யத்தான் வேண்டும், மக்களின் முன்னேற்றம் பூரண மதுவிலக்கில்தான் இருக்கிறது'' என்று பதிலளித்தார்.

மக்களின் நலனுக்காகத்தான் அரசு செயல்பட வேண்டுமே தவிர வியாபாரம் செய்வதற்காக அரசை நடத்தக் கூடாது என்று சொன்னதோடு நில்லாமல் காவல்துறையில் மதுவிலக்குப் பிரிவையும் துவக்கினார். இத்திட்டம் பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதால் வெற்றியையும் தொட்டது.

இதனால் சென்னை மாகாண அரசு செயற்கரிய செயலை செய்திருப்பதாக மத்திய அரசும் பாராட்டியது. ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முதல்வரே நேரடியாக அழைத்து விசாரித்ததால், லஞ்சமே இல்லாத நேர்மையான ஆட்சி இவரது ஆட்சிக் காலத்தில் நடந்தது.

முதல்வராக, ஆளுநராகப் பதவி வகித்த இவர், தேச விடுதலைக்காக பட்ட துயரங்கள் எண்ணிலடங்காதவை. பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் தொண்டு செய்யும் தியாக உணர்வோடும், பரந்த மனப்பான்மையோடும் எதையும் எதிர்பார்க்காமலும், மிகைப்படுத்தாமலும் வாழ்ந்து காட்டியவர்.

இத்தகைய அப்பழுக்கற்ற மனிதருக்கு அவரது பிறந்த ஊரான ராஜபாளையத்தில் 115-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

தான் வாழ்ந்த வீட்டையே பொதுமக்களுக்கு தானமாக தந்துவிட்டு அரசுக்குச் சொந்தமான கூட்டுறவு காலனியில், குடியிருக்க மட்டும் வீடு ஒதுக்க முறைப்படி மனுச்செய்து அந்த வீட்டில் சென்று தங்கி வாழ்ந்தார்.




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jul 13, 2013 11:06 pm

thamizhil pathive varavillai...



இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... 224747944

இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Rஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Aஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Emptyஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Rஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 13, 2013 11:17 pm

இவரல்லவோ பொன்மன செம்மல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jul 13, 2013 11:37 pm

பதிவு சூப்பருங்க 

இப்போதைய தலைவர்களின் நிலைமை அநியாயம் அநியாயம் அநியாயம் 




இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Mஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Uஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Tஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Hஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Uஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Mஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Oஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Hஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Aஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Mஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Eஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 13, 2013 11:40 pm

Muthumohamed wrote:பதிவு சூப்பருங்க 

இப்போதைய தலைவர்களின் நிலைமை அநியாயம் அநியாயம் அநியாயம் 
இப்போது இருக்குற ..... வர்கள் இருக்காங்களே யப்பா! ஆள உடுங்க ஜீட்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jul 13, 2013 11:41 pm

அசுரன் wrote:
Muthumohamed wrote:பதிவு சூப்பருங்க 

இப்போதைய தலைவர்களின் நிலைமை அநியாயம் அநியாயம் அநியாயம் 
இப்போது இருக்குற ..... வர்கள் இருக்காங்களே யப்பா! ஆள உடுங்க ஜீட்

என்ன சொல்ல அத்துணை நல்லவர்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 




இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Mஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Uஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Tஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Hஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Uஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Mஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Oஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Hஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Aஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Mஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... Eஇப்படியும் இருந்தார் ஒரு தலைவர்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக