புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
34 Posts - 43%
heezulia
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
2 Posts - 3%
prajai
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
400 Posts - 49%
heezulia
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
27 Posts - 3%
prajai
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_m10நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 6:13 pm

பத்துப்பாட்டு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த சிறுபாணாற்றுப்படை ஓர் ஆற்றுப்படை இலக்கியம். 269 அடிகளைக் கொண்ட நெடும்பாடல். இது ஓய்மாநாட்டு நல்லிக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவரால் பாடப்பட்டது.

ஆற்றுப்படையின் தலையாய மாந்தராகிய ஆடி மகிழ்விக்கும் கூத்தரும், பாடிப் பரவசப்படுத்தும் பாணரும், இசைக் கருவியின் மூலம் இன்பமூட்டும் பொருநரும் விறலியும் ஆகிய நாற்பாலரும், அரசர்களையோ, வள்ளல்களையோ பாடிப்புகழ்ந்து தாம் பெற்றுவந்த பெருஞ் செல்வத்தை, எதிர்வந்த தம்போன்ற வறிய கலைஞனும் பெறவேண்டும் என அவருக்கு அறிவுறுத்தி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படை இலக்கியமாகும்.

இப்பாடலில், "செங்கோட்டியாழ்' என்னும் சீறியாழ் (சிறிய யாழ்) வாசிக்கும் யாழ்ப்பாணர் "சிறுபாணர்' என அழைக்கப்பட்டனர். சிறுபாணாற்றுப்படையில் பாணனது இல்லத்தில் உறையும் வறுமையின் கொடுமையை நல்லூர் நத்தத்தனார் ஓர் அழகிய ஓவியமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

""..... ....... இந்நாள்
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூமி பூத்த புழற்கா ளாம்பி
ஓங்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் வீடப்பொழிகவுள்
தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின்
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாமவன் நின்றும் வருதும்...'' (அடி.129-143)


"பிறந்து சில நாள்களேயான திறவாத கண்களை உடைய, வளைந்த செவிகளை உடைய நாய்க்குட்டி தன் தாயின் கறவாப் பால் முலையை இழுத்து பாலுண்ண முயற்சி செய்கிறது. ஆனால், ஈன்றணிமை நீங்காத தாய் நாய்க்கு உணவின்றி பால் சுரக்காததால் வலிதாங்க முடியாமல் வேதனையோடு குரைக்கிறது. கூரை கழிகள் கட்டவிழ்ந்து வீழ்கின்ற சுவரை உடைய அடுக்களையில் கூட்டமான கரையான் அரித்து ஈரமான புழுதியில் காளான்கள் பூத்துக்கிடந்து, அடுக்களையைப் பொலிவிழக்கச்செய்து கொண்டிருக்கிறது. பசியால் வாடி இளைத்த பாணன் மனைவி, ஒடுங்கிய இடையினையும் மெலிந்த கைகளையும் பெற்றிருக்கிறாள். "குப்பை' என்று ஒதுக்கப்பட்ட வேளைக் கீரையை தன் பெரிய நகத்தால் கிள்ளி, உப்புக்கும் வழியில்லாததால், கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, "வறுமையுறுதல் இயல்பு என்றுணராத அறிவற்றவர்கள் இதைக் காணக்கூடாது' என்று தன் வீட்டின் தலைவாயிலை மூடி, பசியால் வருந்தும் தம் சுற்றத்துடன் முழுதும் உண்பர்.

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் ஆகிய பத்தையும் அழிக்கும் பசி என்னும் பிணி போகுமாறு நல்லியக்கோடன் யானையும் தேரும் தர, யாம் அவற்றைப்பெற்று வந்துகொண்டிருக்கிறோம். நீங்களும் அவன்பால் சென்று உங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்று ஆற்றுப்படுத்துவதன் மூலம் நல்லியக்கோடனின் ஈகைத்திறத்தைப் போற்றி, வறுமையின் கொடுமையைக் கண்முன் நிறுத்துகிறார் புலவர்.

பசி, பிணி, பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு (குறள்.734) என்கிறார் வள்ளுவர். இம்மூன்றும் இல்லாத நாடு எது? என்பதே பலரும் கேட்கும் கேள்வி. ஆனால், சங்க காலத்தில் பசிக்கொடுமையும் இருந்தது; அப்பசி என்னும் பிணியைப் போக்கும் மருத்துவராக அக்கால அரசர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதே ஆற்றுப்படை இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும்.
நன்றி -தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக