புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
48 Posts - 51%
heezulia
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
48 Posts - 51%
heezulia
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_m10குப்பைக் கிடங்காகும் வயிறு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பைக் கிடங்காகும் வயிறு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 03, 2013 2:09 pm

முன்பெல்லாம் சாதாரணக் கடைகளில்கூட சரம் சரமாய் தொங்கும் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், குட்கா போன்றவற்றைக் காண முடியும். இப்போது இதில் உணவுப் பொருள்களும் அடக்கம் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாயிலிருந்து தின்பண்டங்கள் சிறு பொட்டலங்களாய் பெட்டிக் கடைகளில் தொங்குகின்றன. சிறார்களின் உணவு ஆசை சட்சட்டென்று நிறைவேறிப் போகிறது. அவர்களின் வயிறும் சுலபமாக குப்பைக் கிடங்காகிறது. குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் வயிற்றைக் கழிவுகளின் இருப்பிடமாக்கிக் கொள்கிறார்கள்.

பெரியவர்கள் தெரிந்துகொண்டே இதைச் செய்கிறார்கள். அவசர உணவுத் தேவைக்கு இதுபோல் எதையாவது வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்கிறார்கள். அவற்றில் பிஸ்ஸா, பர்கர், ஹாட்-டாக், ஸ்பீக் மற்றும் சீன, இத்தாலியன், மெக்சிகன் வகை உணவுகளும் அடங்கியிருக்கின்றன.

அலுவலகம் போகும் ஆண்கள் கையில் சாப்பாட்டுப் பொட்டலம் கொண்டு போவதைத் தேவையில்லாததாக்கி இவற்றையே நாடுகின்றனர். வார இறுதிகளில் உணவு விடுதிகளை நாடுவது சாதாரணமாகிவிட்டது. அல்லது விதவிதமான சாப்பாடு சாப்பிடுவதற்காக வெளியூர் போகிறார்கள். வெளிநாடு சுற்றுலா போகிற பலர் அந்தந்த நாட்டு உணவை ருசிக்கவும் அதிகப் பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கிறார்கள். உணவுத் திருவிழாக்கள் என்ற பெயரில் நட்சத்திர விடுதிகளில் அவை நடைபெற்று வந்தன. இப்போது தெருக்களிலும், சாதாரணத் திருமண மண்டபங்களிலும் நடைபெறுகின்றன. அன்னிய வகை உணவுகள் சுலபமாக மேசைக்கு வந்துவிடும்போது யாருக்கும் சாப்பிடுவதற்கு ஆசை ஏற்படத்தான் செய்யும். உணவு, கேளிக்கை இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது.

இவ்வகை துரித, "ஜங்க்' உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன.

மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவைத் தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்ச்சத்து, ரசாயனக் கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்துவிட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருள்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும், குறைத்தும் விளையாட்டுக் காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கு உடல் உபாதைகளை மீறிக் கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்றவற்றுக்கு ஆளாகிறார்.

பெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவுப் பரிமாறலில் பல நூற்றாண்டுத் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதைக் காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய், ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம், ஆடு, கோழி இறைச்சி, பதநீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு, இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால், நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.

தொழிலுக்குத் தகுந்தபடியும், வருமானம், பருவ காலத்திற்கு ஏற்பவும் உணவு முறைகளைத் தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். வேனில் காலத்தில் தண்ணீர் கஞ்சி, குளிர் காலத்தில் சுடுசோறு கம்பு, களி உணவுகள் என்றும் வழக்கத்திலிருந்தது. தங்களுக்குக் கிடைக்கும் இளநீர், நுங்கு, மாம்பழம், கொய்யா ஆகியவற்றை சுலபமாக எடுத்துக் கொண்டனர். சமைக்காத சத்துள்ள உணவுகள் தொடர்ந்து கிடைக்க வழி இருந்தது. உணவைச் சமைக்க ஆரம்பித்த பின் அவை வெகு சுவையாகவும், எளிதில் செரிக்கும் தன்மையும் கொண்டிருந்ததால் சமையல் கலை வளர்ந்தது.

சமையல் கலை இன்று ஒருவகைப் படிப்பாகவும் வளர்ந்துவிட்டது. சிறு நகரங்களின் உணவு விடுதிகள், பள்ளி மாணவர் விடுதிகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவுக் கூடங்களில்கூட இவ்வகை படிப்புப் படித்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமையல் கலை சார்ந்த படிப்புகளும், கல்வி நிறுவனங்களும் வளர்ந்து அத்துறையிலும் வேலையில்லாத பட்டதாரிகளை உருவாக்கிவிட்டது. பரோட்டா, பிரியாணி, குஸ்கா, பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் என்று தமிழ்ப் பெயர்களற்று உணவுப் பண்டங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.

தினசரி சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட மாற்று உணவுகளை தேடிப் போனான் தமிழன். ஆனால் இன்று நமது பாரம்பரிய உணவுகளை மாற்று உணவு என்று மீண்டும் தேடி வர வேண்டியுள்ளது. நம்மிடம் நோய் தீர்க்கும் உணவுப் பொருட்கள் இருந்தன. இன்று நோய் கொண்டு வரும் உணவுப் பொருளைத் தேடுவதில் சுகம் கண்டு கொண்டான். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் பணி நேரம் தவிர சமையலில் அதிக நேரம் செலுத்த இயலாமல் துரித வகை உணவுப் பழக்கங்களில் முடங்கிப் போய்விடுகிறவர்களாக இருக்கிறார்கள்.

நோய்களுக்கும் வகை வகையான மருந்துகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, சுடுக்காய், சித்தரத்தை, மதுரம், கிராம்பு, வெட்டி வேர், வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள், மணத்

தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, புதினா, மல்லி, கீழா நெல்லி என்று வெவ்வேறு கீரை வகைகளும் சாதாரண உணவில் சேர்க்கப்படும்பொழுது நோய்க்கு மருந்தாகும். இன்று மருந்தைத் தனியாகத் தேடி நிறையச் செலவு செய்து உடம்பை மோசமான இயந்திரமாக்க வேண்டியிருக்கிறது.

வயிற்றைக் குப்பையாக்கும் குப்பைத் தீனிப் பழக்கம் இன்றைய இயந்திர வாழ்க்கையின் நெருக்கடியால் தவிர்க்க இயலாமல் வந்து சேர்ந்து விட்டாலும் நுகர்வுக் கலாசார உணவுப் பண்பாய் ரத்தத்தில் கலந்துவிட்டதை அறுவை சிகிச்சை மூலமே தவிர்க்க இயலும் நிலைக்கு வந்தாகிவிட்டது!.
நன்றி-தினமணி-சுப்ரபாரதிமணியன்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 3:16 pm

அருமையான பகிர்வு சாமி புன்னகை ஆழமான கருத்துகள் , பலவகையான உணவுகளை சாப்பிட்டுப்பார்ப்பாது தப்பில்லை என்பது என் அபிப்பிராயம். என்றாலும் நம்முடையத்தை தொலைக்க வேண்டாம். வேண்டாத வஸ்த்துகளை சாப்பிட்டு சாப்பிட்டு உடம்புக்கு நோய் களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பது சந்தேகமில்லாமல் உண்மை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Wed Jul 10, 2013 3:27 pm

நல்ல கருத்துக்களை கூறினீர்கள் தோழரே .மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக