புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_c10ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_m10ஆடி மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாத ராசி பலன்கள் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 6:53 pm

மேஷம் !

மேஷம்: சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நீங்கள் மற்றவர்களின் அதிகாரம், ஆணவத்திற்கு கட்டுப்படமாட்டீர்கள். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் பிரபல யோகாதிபதியான குருபகவானுடன் சேர்ந்து காணப்படுவதால் இந்த மாதம் முழுக்க நீங்கள் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை எல் லாம் முடிப்பீர்கள். ராசிநாதன் வலுவாக காணப்படுவதால் பதவிகள் தேடி வரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். 11ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.

சூரியன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாண முயற்சியில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி களை உடனுக்குடன் செலுத்தப் பாருங்கள். வழக்கு விவகாரங்களில் வழக்கறிஞரை பார்ப்பது நல்லது. ராசியிலேயே கேது நிற்பதாலும் உங்கள் ராசியை சனிபகவான் பார்த்துக் கொண்டிருப்பதாலும் கால் மற்றும் கழுத்து வலி வரும். தூக்கம் குறையும். 7ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு ஹார்மோன் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் ஏற்படும்.

அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், 3ல் குரு நிற்பதால் உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். மாணவர்களே! மறதி உண்டாகும். நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வேலைக்கு விண்ணப் பித்திருந்தவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் தாமதமாகும். காதல் விஷயத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்யும் அமைப்பு உண்டாகும். வேலையாட்கள் மூலமாக வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உணவு, கட்டிட உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால், உங்கள் ராசிநாதனான செவ்வாய் வலுவாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் கூடி வரும். விவசாயிகளே! மாற்றுப் பயிரிடுங்கள். அரசால் ஆதாயம் உண்டு. நீர்வளம் கிட்டும். விட்டுக்கொடுக் கும் மனப்பான்மையாலும் சமயோஜித புத்தியாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 17, 22, 23, 24, 25, ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 18ந் தேதி காலை 10 மணி முதல் 19, 20ந் தேதி நண்பகல் 12:30 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 14ந் தேதி மாலை 6 மணி முதல் 15, 16 ஆகிய தேதிகளில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்:

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்குள் அமைந்துள்ள வாராஹி அம்மனை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 6:54 pm

ரிஷபம் !

ரிஷபம்: உண்மையை விரும்பும் நீங்கள், மறைத்துப் பேசுபவர்களை கண்டால் கோபப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்ப தால் தன, தான்ய சம்பத்து அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். செல்வாக்கு உயரும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து உதவுவார்கள். பிள்ளைகளை எதிர்பார்த்த க ல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். 3ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். உங்கள் ரசனைக் கேற்ற வீடு அமையும்.

உங்களின் ராசிநாதனான சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் ஆரோக்யம், அழகு கூடும். இந்த மாதம் முழுக்க செவ்வாய் 2ல் நிற்பதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். மனைவியுடன் அவ்வப்போது ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாணவர்களே! உங் களுடைய நினைவாற்றல் கூடும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். படிப்பில் முன்னேற்றம் உண்டு. கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். காதல் பிரச்னை தீரும். பெற்றோரின் ஆதரவு கிட்டும்.

சனியும் ராகுவும் 6ல் நிற்பதால் வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்வீர்கள். பிரபலங்களும் உங்கள் வியாபாரத்திற்கு உதவிகரமாக இருப்பார்கள். சிமென்ட், ஸ்டேஷனரி, ஷேர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஹிந்தி, கன்னடம் பேசுபவர்களால் வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர் கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றும் சூழ்நிலை உருவாகும்.

உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். உங்கள் உழைப்பை புரிந்து கொள்ளும் அதிகாரி வருவார்.உங்களுடைய முழுத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். எதிர்பார்த்த அங்கீகாரம், இழந்த சலுகைகள், வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்திலிருந்து புது ஒப்பந்தம் வரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. வரப்புச் சண்டை தீரும். கடந்த கால கசப்புகள் நீங்கி, வெற்றிக் கனியை சுவைக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 17, 24, 25, 26, 27, 28, 29, 30, ஆகஸ்ட் 6, 9, 12, 13, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 20ந் தேதி நண்பகல் 12:30 மணி முதல் 21 மற்றும் 22ந் தேதி மாலை 3 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்:

திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் நெய்வேலி எனும் தலத்தில் அருளும் அக்னீஸ்வரரை தரிசித்துவிட்டு வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 6:55 pm

மிதுனம்: கொள்கை கோட்பாட்டுடன் வாழும் நீங்கள் மனதில் நினைப்பதை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். உங்கள் ராசிநாதனான புதனும் யோகாதிபதி யான சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஓரளவு பணவரவு உண்டு. தடைகளெல்லாம் நீங்கும். பழைய நண் பர்கள் வலிய வந்து பேசுவார்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கேதுபகவான் லாப வீட்டில் நிற்பதால் வேற்று மாநி லத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குருவும் செவ்வாயும் உங்கள் ராசிக்குள் ளேயே நிற்பதால் ஆரோக்யம் பாதிக்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

அசைவ உணவு களை தவிர்ப்பது நல்லது. உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். 5ல் சனியும் ராகுவும் நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். 2ல் சூரியன் நிற்பதால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். காரசாரமாகப் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். தலைமைக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் தரப்பு செயல்பாடுகளை நியாயப்படுத்த தக்க ஆதாரங்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களே! சுறுசுறுப்பு கூடும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விளை யாட்டிலும் ஆர்வம் உண்டாகும். கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் தீரும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் ஓர ளவு லாபம் வரும். சந்தை நிலவரத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப புது முதலீடு செய்வீர்கள். வேலையாட்களை அதிகம் விரட்ட வேண்டாம். கமி ஷன் வகை களால் லாபம் உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல் லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். அவசரப்பட்டு வேலையை விட்டுவிடாதீர்கள். மூத்த அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் பயன்ப டுத்தி கொள்ளப் பாருங்கள். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வாருவீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 19, 20, 21, 27, 28, 29, 30 ஆகஸ்ட் 1, 6, 8, 9, 10, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 22ந் தேதி மாலை 3 மணி முதல் 23 மற்றும் 24ந் தேதி மாலை 6 மணி வரை நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்:

கரூருக்கு அருகேயுள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதிக்கு சென்று வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 6:56 pm

ஆடி மாச காத்தாடிச்சா
அம்மாவோட பலன் பதிவு வரும்
மானே மாங்குயிலே... புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 6:56 pm

கடகம்: கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்ட நீங்கள் காலத்திற்கேற்ப கோலத்தை மாற்றிக் கொண்டாலும் ஒழுக்கம் தவறாதவர்கள். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சில வேலைகளை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் துரத்திக் கொண்டே இருக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். மனைவி ஆறுதலாகப் பேசுவார். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதிகளான குருவும் செவ்வாயும் 12ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அலைச்சல்கள், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். பாகப்பிரிவினையில் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. பழைய வழக்குகள் குறித்து வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. சிலர் புது வழக்கறிஞரை சந்தித்து தீர்வு தேடுவீர்கள். சமூக எதிர் நடவடிக்கைகள் உள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.

தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல் கள் வரும். நேரம் தவறி சாப்பிட வேண்டிய சூழ்நிலை வரும். அசிடிட்டி தொந்தரவால் அவதிப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களே! தொடக்கத்திலிருந்தே ஆர்வமாக படிக்கத் தொடங்குங்கள். வகுப்ப றையில் கடைசி வரிசையில் அமராமல் முதல் வரிசைக்கு முன்னேறுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. நட்பு வட்டத்தில் யாரிடமும் எல்லைமீறி பழக வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரத் தில் பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.

கடன் வாங்கி பெரிய முதலீடு செய்ய வேண்டாம். உங்களின் உத்தியோக ஸ்தானாதிபதியான செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். இட மாற்றம் வரும். மூத்த அதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். சம்பள பாக்கியை போராடிப் பெற வேண்டியது வரும். சிலர் வேலையை விட வேண்டி யது வரும். உயரதிகாரிகளைப்பற்றி சக ஊழியர்கள் மத்தியில் விமர்சிக்க வேண்டாம். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறு வீர்கள். விவசாயிகளே! விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். மகசூலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை பயன்படுத்துவீர்கள். நாவடக்கமும் பொறுமையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 17, 21, 22, 29, 30, ஆகஸ்ட் 1, 2, 8, 9, 10, 11, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 22ந் தேதி மாலை 6 மணி முதல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

பரிகாரம்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலுள்ள பைரவரை தரிசியுங்கள். தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோரும் பானகமும் கொடுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 6:57 pm

சிம்மம்: ஆரவாரத்துடன் அடுக்கு மொழியாக பேசாமல் நறுக்கென்று நாலு வார்த்தை சொல்பவர்களே! உங்கள் ராசிக்குள் சுக்கிரன் நுழைந்து சாதகமான வீடுகளில் செல்வதால் அழகு, இளமை கூடும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வீடு, மனை விற்பது லாபகரமாக முடியும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த வெள்ளி, தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தி யில் அந்தஸ்து உயரும். உங்களின் பிரபல யோகாதிபதிகளான குருவும் செவ்வாயும் லாப வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். பூர்வீகச் சொத் துப் பிரச்னைகள் தீரும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். இழந்த பதவிக்கு நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர் கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 12ல் மறைந்து நிற்பதால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

குலதெய்வப் பிரார்த்தனையை சிறப்பாக முடிப்பீர்கள். சனியும் ராகுவும் 3ம் வீட்டில் தொடர்வதால் புது பொறுப்புகளும் பதவிகளும் தேடிவரும். தன் னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியின் மேல் மட்டம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கோஷ்டிப் பூசலை தீர்ப்பீர்கள். மாணவர் களே! விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கன்னிப் பெண்களே! பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும்.

வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பங்குதாரர்களால் பல னடைவீர்கள். வேலையாட்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பவர் புராஜெக்ட், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்காகவும் சில சலுகை களை பெற்றுத் தருவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! மாற்றுப்ப யிர் மூலமாக மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை நீங்கும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 17, 18, 23, 24, 25, ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும்.

பரிகாரம்:

பண்ருட்டிக்கு அருகேயுள்ள திருவதிகை தலத்தில் அருளும் சயன நரசிம்மரை தரிசியுங்கள். தந்தையை இழந்த குழந்தைக்கு உதவுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 6:58 pm

கன்னி: காசு பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் நீங்கள் கடந்த காலத்தை விட வருங்காலத்தைப்பற்றி அதிகம் யோசிப்பீர்கள். கலகலப்பா கவும் கவித்துவமாகவும் பேசும் நீங்கள், அவ்வப்போது ஆகாயக் கோட்டை கட்டுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் சாதகமான வீடுகளில் செல்வ தால் உங்களுடைய தனித்திறமை அதிகரிக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கூடிவரும். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமாநிலத்தில் இருப்பவர்களால் சில உதவிகள் கிடைக்கும்.

சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். ஷேர் மூலமாக பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். ராசிக்கு 10ல் குரு நிற்பதால் உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார் கள். உங்கள் புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். இனம்புரி யாத ஒரு பயம் அடிமனதில் இருந்து கொண்டே இருக்கும். ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் வந்து நீங்கும்.

10ம் வீட்டிலேயே செவ்வாய் இருப்பதால் வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட் வகைகளால் பணம் வரும். பாதச்சனி நடைபெறுவதால் காலில் அடிபடும். தூக்கம் குறையும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விடாதீர்கள். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். அரசியல்வாதிகளே! பதவியை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும். மாணவர்களே! வகுப்பாசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். ஓவியம், இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வரும் மாதவிடாய்க் கோளாறு குறையும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. பிரச்னை தந்த பங்குதாரரை நீக்குவீர்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உணவு, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோக ஸ்தானமான 10ம் வீட்டில் குருவும் செவ்வாயும் நிற்பதால் வேலைச்சுமை இருக்கும். அதிகாரிகளிடம் கவனமாகப் பழகுங்கள். வீண்பழி வரக்கூடும். கலைத்துறையினரே! பிறமொழிப் பாடங்களால் புகழடைவீர்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். நிலத்தகராறுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். தொந்தரவு தந்த பம்பு செட் டை மாற்றுவீர்கள். கடின உழைப்பால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 19, 20, 21, 25, 27, 28, ஆகஸ்ட் 3, 4, 6, 9, 13, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 29, 30 மற்றும் 31ந் தேதி மதியம் 1:30 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்:

சீர்காழிக்கு அருகேயுள்ள அண்ணங்கோயில் ஸ்ரீநிவாசப் பெரு மாளை தரிசித்துவிட்டு வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 6:59 pm

துலாம்: தோல்வியால் துவண்டு வருபவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசுபவர்களே! 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கான வழி கிடைக்கும். 9ம் வீட்டிலேயே செவ்வாயும் நிற்பதால் தந்தையாருக்கு முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சிலர் வேலையில் இருந்து கொண்டே மீதி நேரத்தில் வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்பு கிட்டும்.

உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 11ந் தேதி வரை லாப வீட்டிலேயே நிற்பதால் சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களைப் பற்றிய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். சூரியன் 10ல் நிற்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஜென்மச் சனி நடைபெறுவதாலும் ராசியிலேயே ராகுவும் தொடர்வதாலும் இரவு நேரத்தில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 7ல் கேது தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் வாக்குவாதங்கள் வரும். கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

அரசியல்வாதிகளே! தலைமை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புதுப் பொறுப்புகளை ஏற்க வேண்டியது வரும். மாணவர்களே! வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது மறதி ஏற்படும். விடைகளை எழுதிப் பாருங்கள். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். உயர்கல்வியிலும் முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். பங்குதாரர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. பதவி உயர்விற்காக நீதிமன்றம் சென்றீர்களே! நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். என்றாலும் 10ம் வீட்டில் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லைகள் குறையும். ஏழரைச் சனி நடைபெறுவதால் பக்கத்து நிலத்தாருடன் வாய்ச் சண்டை, வரப்புச் சண்டையெல்லாம் வேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 19, 20, 21, 22, 27, 28, 30, ஆகஸ்ட் 6, 8, 9, 10, 11, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 31ந் தேதி மதியம் 1:30 மணி முதல் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் உடல் நலத்தில் கவனம் தேவை.

பரிகாரம்:

திருச்செந்தூருக்கு அருகேயுள்ள கற்குவேல் ஐயனாரை தரிசித்து விட்டு வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 7:00 pm

விருச்சிகம்: வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பிக்கலாம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கும், நீங்கள், வருங்காலத்தைப்பற்றி அதிகம் யோசிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவானும் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவானும் 8ல் நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். பயணங்களும் அடுத்தடுத்து இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகளும் அதிகமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமாநிலத்தில் சிலருக்கு வேலை அமையும். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள குறுகியகால கோர்ஸில் சேருவீர்கள். சூரியன் 9ல் நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும்.

அவருக்கு மருத்துவச் செலவுகளும் வரக்கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளை கிளறிக் கொண்டிருக்காதீர்கள். வழக்குகள் தாமதமாகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விஐபிகளின் ஆதரவால் முன்னேறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களும் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனின் உதவி தாமதமாக கிடைக்கும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். ஏழரைச்சனி நடைபெறுவதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு, தூக்கமின்மை வந்துபோகும்.

யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசாதீர்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். கோஷ்டிப் பூசலை ஊக்குவிக்க வேண்டாம். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் விளம்பர யுக்தியை கையாளுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மூலமாக புதியவர்கள் அறிமுகமாவார்கள். இருந்தாலும் பற்று வரவு மந்தமாகத்தான் இருக்கும். பெரிய முதலீடுகள் இந்த மாதத்தில் வேண்டாம். பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலையாட்கள் அதிக முன் பணம் தந்து தொந்தரவு தருவார்கள். உத்தியோகத்தில் அலைச்சலும் வேலைச்சுமையும் சிறுசிறு அவமானங்களும் விரும்பத்தகாத இடமாற்றமும் வந்து நீங்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவார்கள். அவர்களால் பாராட்டுகள் கிடைக்கும். விவசாயிகளே! எலித் தொல்லை, பூச்சித் தொல்லை அதிகரிக்கும். தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். ராஜ தந்திரத்தால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 21, 22, 23, 24, 25, 29, 30, ஆகஸ்ட் 2, 3, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 3, 4 மற்றும் 5ந் தேதி நண்பகல் 12 மணி வரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

மயிலாடுதுறை - கும்பகோணம் பாதையில் குத்தாலத்திற்கு அருகேயுள்ள கதிராமங்கலம் வனதுர்க்கையை தரிசியுங்கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 7:01 pm

தனுசு: மற்றவர்களை குறை சொல்லாது தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், ஓசைப்படாமல் பூக்கள் மலர்வதைப் போல, ஆரவாரம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சனியும் ராகுவும் நிற்பதால் புது விதமாக யோசிப்பீர்கள். புதிய பாதையும் தெரியும். வெளி மாநிலத்தை சார்ந்தவர்கள் மூலமாக திடீர் திருப்பம் உண்டாகும். கடந்த காலத்தில் சவாலாக நினைத்திருந்த வேலைகளெல்லாம் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதர வகையில் பயனடைவீர்கள். உங்கள் ராசிநாதனான குருவும், பூர்வ புண்யாதிபதி செவ்வாயும் சேர்ந்து 7ம் வீட்டில் நிற்பதால் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணம் கூடி வரும். திடீர் பணவரவு உண்டு.

கணவன்- மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கு இடம் தேடினீர்களே! உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 8ல் மறைந்து நிற்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். சோர்வு, களைப்பு வந்து நீங்கும். தந்தையாருடன் மோதல்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். காசோலை கொடுப்பதற்கு முன்னர் வங்கி இருப்பை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வழக்குகள் சாதகமாகும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களை சந்தித்து மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களே! மொழித் திறன் வளரும். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பெற்றோரின் அறிவுரையில் உண்மைகள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

வியாபாரத்தில் அலட்சியப் போக்குடன் இருந்த நீங்கள் இனி ஆர்வமாக செயல்படத் தொடங்குவீர்கள். விலகிச்சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உங்களின் புதுத் திட்டங்களுக்கு பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். கலைத்துறையினரே! புகழ் கூடும். தனித்திறமையை வெளிப் படுத்துவீர்கள். விவசாயிகளே! நீண்ட கால பயிர்களால் லாபமடைவீர்கள். வங்கிக்கடனின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 17, 24, 26, ஆகஸ்ட் 1, 2, 3, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 5ந் தேதி நண்பகல் 12 மணி முதல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் எதிலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்:

சென்னை-மயிலாப்பூர் ஷீரடி பாபா கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக