புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
60 Posts - 41%
heezulia
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
41 Posts - 28%
Dr.S.Soundarapandian
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
311 Posts - 50%
heezulia
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
188 Posts - 30%
Dr.S.Soundarapandian
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
21 Posts - 3%
prajai
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_m10 இருளும் ஒளியும்  (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருளும் ஒளியும் (கதை சொல்லும் தொடர் கவிதை) -கிரிகாசன்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 07, 2013 1:25 pm

இது ஒரு நீண்ட கவிதை. கதை சொல்லும் பாணியிலான கவிதை. இது அண்ணளவாக
10  பகுதிகளை கொண்டிருக்கும். இது ஒரு வித்தியாசமான உணர்வைத் தரும் எனவே
தொடர்ந்து வாருங்கள்!



       இருளும் ஒளியும்  (தொடர்)

1. மயக்கும் மாலை

வானமக ளிதழான முகில்தன்னை
வண்ணச் சிவப்பினில் சாயமிட
தேனு மினியபொன் மாலையிளங் குளிர்
தென்றலலைந் தென்னை தேடிவர
ஞானமறை ஓதும் கோவில்களில் மணி
யோசை எழுந்து பரவிவர
போனதிசையினில் நேர்வழியி லந்தப்
புல்வெளிமீது நடைபயின்றேன்

தேனை உண்ணமலர் சேரும்வண்டு எனை
தீயன் எனஎண்ணித் துள்ளியெழ
சேனை வயல்கதிர் நெல்முறித்துகொண்டு
சேரும் பறவைகள் ஓசையிட
கூனை எடுத்தகதிர் வளைந்து நிலம்
கொஞ்சிட மண்ணை வளர்த்ததென
கானமிசைத்த நற்காட்டு குருவிகள்
கண்டு  பறந்தன சத்தமிட

வீசி அடித்திடும் காற்றினிலே மரம்
விழ்ந்து குதித்திடும் சின்ன அணில்
பாசிபிடித்த வயல் குளத்தில் நின்று
பாவம் தவித்தன பங்கயங்கள்
பேசிச் சிரித்திடும் நங்கையர்கள் கரை
பககமிருந் தள்ளிநீர் தெளித்து
கூசி சிரித்திட்ட கோலம் கண்டேநடை
கொண்டனன் அத்தனை யும்ரசித்து

நானும் நடந்தொரு தூரம்சிறிதிடை
நாடும் பொழுதினில் கண்ணெதிரே
கூனும் விழுந்து நரைதிரண்டு தடி
கொண்டொரு மாது அருகில்வந்தாள்
வானும் நடந்த முகிலெனவே பஞ்சை
வார்த்தன வெண்ணிற கூந்தல்முடி
மீனும் நடமிடும் ஆழிதிரையென
மேனி சுருங்கித் திரைந்திருக்க

கண்ணின் ஒளிசிறுத் தாகிவிட ஒரு
கையை எடுத்துஇமை பொருத்தி
அண்மையில் வாஎன கையசைத்து ஒரு
ஆணையிட்ட அந்தமூத்தவளும்
எண்ணிய தேதென நான்நினைத்தே அயல்
ஏகமுதல்கணீ ரென்ற ஒலி
தண்ணிலவின் தங்கை சின்னவளாய் மணி
தாளமிடஒரு தோகை வந்தாள்

எங்கு சென்றாயடி சின்னவளே இங்கு
என்னைவிட்டு என்று கோபமிடும்
தங்கமூதாட்டியும் தானவள் பேத்தியின்
தன்மைகண்டு நானும் எண்ணலுற்றேன்
பொங்கி வள ரிளம் பூரிப்புடன் எழில்
புத்தம்புது மலர் போலிருந்தாள்
சங்கு எனும் வெளிர் மின்னும் முகமதில்
சந்திரவண்ணக் குளுமை கண்டேன்

பிஞ்சென நின்றவள் நாளைவளர்ந்திடப்
பின்னல் கலைத்தொரு கொண்டையிட்டு
வஞ்சியென் றாகவளர்ந் தடைந்து நல்ல
வாழ்வின் சுவைகண்டு தான்மகிழ்ந்து
நெஞ்சமுவந்து கதைபடித்துப் பல
நீளவிழி சிந்தவும் நீர்துடைத்து
வெஞ்சினம் கொண்டும் வியந்து பலப்பல
வேடிக்கையால் மனம் புன்னகைத்து

இந்த உலகினில் வாழ்ந்து முதிர்ந்தபின்
ஊன்றுதடி கொண்டு கூனெடுத்து
விந்தை வளைந்து நடந்திடுவாள் இது
வேடிக்கையாமொரு வாழ்க்கையன்றோ?
சந்தடி என்னை உலுப்பிவிட நானும்
சற்று நிமிர்ந்தயல் கண்டுநின்றேன்
அந்த சிறுமகள் புன்னகைத்தே யெனைச்
`அண்மையில் வந்து கிளுகிளுத்தாள்

(தொடரும்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 08, 2013 5:47 pm


2. அந்தி மயக்கம்

கண்கள் இரண்டவை துள்ளுங் கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவு முகமென்னில் மதியிடை
ஏந்தும் இதழ் கொவ்வை என்பது பொய்
எண்ணீயிவள்இதழ் கொவ்வையெனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்துப் பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்த அன்னை தன்னை கண்விழித்து
”என்னுடை அன்னையின் அன்னையிவள்இன்று
தன்னுடை யில்லம் திரும்புகிறாள்

என்ன முயன்றுமூர் வண்டியை விட்டனம்
இன்று இனி ஒரு வண்டியில்லை
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படி என்றெண்ணி சோருகிறேன்
தன்னந்தனி துணைவந்த தவறெண்ணி
துன்பமுற்றேன் வழி செய்குவீரோ
கன்னம் விழிமழை கண்டிடுமோ என்னும்
வண்ணம் விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்கிணி நாதக் குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகி
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்றுத் தொலைவினில் சுந்தரத்தின் பையன்
சுற்றி வளைந்தொரு மாட்டுவண்டி
விற்றுவிடப் பெரும்சந்தையிலே பழம்
வைத்தொரு கூடை இறக்கிவிட்டு
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்தே - அந்த
நீலவிண் ணின்மதி தங்கையினை
சற்றுப் பொறு வழி தோன்றியதேயென்று
சஞ்சலம் விட்டிடென் றாற்றுவித்தேன்

ஒய்யாரமாய் நடைபோட்ட களைப்பினை
ஊடே நிறுத்திட மாடுகளும்
கையில் பிடித்தக யிற்றினிலே களைப்பாறத்
கடைவழி ஊற்றிநிற்க
வையகமீதினில் கவ்வும் இருள்வர
வாடும் மலர்களின் கூட்டத்திலே
மொய்த்த இனம் விட்டு வானெழவும் அந்த
மோகமலர்களும் வாடுதல்போல்

தன்னின் ஒளிதனை விட்டபகல்சோரத்
தூறும் மழைபோன்ற சத்தமுடன்
புன்னகைத்தே மக்கள் கூடக்கண்டேன் அந்தப்
போதினில் முன்னந்தி அங்காடியில்
சின்னஞ்சிறு பந்த தீயெரியச் சிலர்
சேர்த்த அகல்விளக் கேற்றி வைத்து
மின்னும் ஒளிமாலை ஆகமுன்னேயந்த
மேன்மைத் தமிழ்மாந்தர் கூடிநின்றார்

முன்னம் இருந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகிநான் சேதி சொன்னேன்
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி வைத்தான்
அன்னை தனும் அவள் ஆக இருவரும்
அந்தியிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் இருள்
ஆகமுதல் வழி கொள்ளுமென்றேன்

கண்மணி யாள்விழித் தச்சம்கொண்டே அந்த
கட்டழகன்தனைச் சுட்டியொரு
எண்ணமதில் பயம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது ஏற்றதன்று
உண்ணுமதுவெறிக் கண்களினால் ஏதோ
உள்ளேநினைந்தென்னில் புன்னகைத்தான்
அண்ணா கூட நீயும் வாருமென்றாள் விழி
ஆவலுற முகம் பார்த்துநின்றாள்

கூடிப்பயணமும் செய்தல் சரியெனக்
கேட்கமனம் கொண்டு சம்மத்தித்தேன்
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைவில்
பாடிக்களித்திட எண்ணியவன் ஒரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக