புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_m10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10 
32 Posts - 55%
heezulia
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_m10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_m10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_m10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_m10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10 
32 Posts - 55%
heezulia
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_m10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_m10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_m10நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஈ - குழந்தைகளுக்கான கதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 07, 2013 8:11 pm

நீங்கள் சிறு வயதில் கேட்ட, பகிர்ந்த, மகிழ்ந்த கதைகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எனது ஒன்றரை வயது மகனின் கதை கேட்கும் ஆசைக்காக நான் தேடியபோது எனது நினைவலைகளில் சிக்கி மீண்ட சில கதைகளை இங்கே பதிவு செய்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில கதைகள் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் முழுவதுமாக நினைவில் அப்படியே நிற்கின்றன.

இந்தக் கதையின் கட்டமைப்பும், அது குழந்தைகளுக்கு மறைமுகமாக சொல்லித்தரும் விசயங்களும் (ஆடு மேய்ப்பது இடையன். மீன் பிடிப்பது வலைஞன். சட்டி செய்வது குயவன்) போன்ற விசயங்கள் மிகவும் வியப்பானவை. இந்தக் கதையை சொல்வதற்கு என்று தனி முறை வேறு வைத்து இருக்கிறார்கள். சொல்கிற விதமாக சொன்னால் உத்தரவாதமாக குழந்தைகள் தூங்கிவிடுகின்றன. முடிந்தவரையில் நான் கேட்ட கதைகளை அப்படியேதான் கொடுத்திருக்கிறேன். இறுதியில் மட்டும் சில பிற்சேர்க்கைகள் இருக்கலாம்.

சந்தோஷமா சிரிச்சுப் பறந்துகிட்டிருந்த 'ஈ'க்கு ஒரு சோகம். திடீர்ன்னு அதோட பேரு அதுக்கு மறந்து போச்சு. சுத்துமுத்தும் பாத்த ஈ அங்கே மேய்ஞ்சிகிட்டிருந்த ஒரு ஆட்டுகுட்டியப் பாத்து கேட்டதாம்:

ஈ: கொழு கொழு கண்ணே! என் பெயர் என்ன?

ஆகு: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
எங்க அம்மாகிட்டப் போய் கேளு.

உடனே அந்த ஈ அந்த குட்டியோட அம்மாகிட்டப் போய் கேட்டுதாம்.

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
என் பெயர் என்ன?


ஆகு அம்மா: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை மேய்க்கும் இடையன்கிட்ட போய் கேளு!

சரிதான்னுட்டு... அங்க பக்கத்திலேயே இருந்த ஆடு மேய்க்கிற இடையன்கிட்டப் போய்,

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! என் பெயர் என்ன?

இடை: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கும் கோல்கிட்டக் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
என் பெயர் என்ன?


கோல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் வளர்ந்த கொடிமரத்துகிட்டப் போய்க் கேளு!

அந்த கொடிமரத்தை தேடிப் போய்க் கேட்டுதாம்....

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே!
என் பெயர் என்ன?


கொடி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேலிருக்கிற கொக்குகிட்டப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
என் பெயர் என்ன?


கொக்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் தண்ணி குடிக்கிற குளத்துகிட்டேப் போய்க் கேளு!

அந்த கொக்கு தண்ணி குடிக்கும் குளத்துக்குப் போய்

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே!
என் பெயர் என்ன?


குள: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்கிட்டே இருக்கற மீன்கிட்டப் போய்க் கேளு!

உடனே அந்த ஈ மீன்களைத் தேடிப் பிடிச்சுக் கேட்டுச்சாம்...

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
என் பெயர் என்ன?


மீன்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைப் பிடிக்கும் வலைஞன்கிட்டப் போய்க் கேளு!

உடனே அந்த ஈ வலைஞனை தேடிப் போய் கேட்டுச்சாம்.

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா!

என் பெயர் என்ன?

வலை: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற சட்டிகிட்டப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
என் பெயர் என்ன?


சட்டி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை செய்யும் குயவன்கிட்டப் போய்க் கேளு!

சரிதான். இன்னைக்கு பேரைக் கண்டுபிடிக்காம விட்டுர்றதில்லைன்னுட்டு அந்த குயவனைத் தேடிப் போச்சாம்.

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா!
என் பெயர் என்ன?


குய: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற மண்ணுகிட்டப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
என் பெயர் என்ன?


மண்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல் வளந்திருக்கிற புல்கிட்டேப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
மண் மேலிருக்கும் புல்லே!
என் பெயர் என்ன?


புல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைத் திங்குற குதிரைகிட்டப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
மண் மேலிருக்கும் புல்லே! புல் தின்னும் குதிரை!
என் பெயர் என்ன?


குதி: ஹீஈஈஈஈஈ! ஹீஈஈஈஈ

அப்படின்னு குதிரை சிரிச்சிச்சாம். உடனே ஈ-க்கு தன்னோட பெயர் 'ஈ'ன்னு ஞாபகம் வந்திடுச்சு. குதிரைக்கு ஒரு நன்றி சொல்லிட்டு சந்தோசமா புறப்பிட்டுச்சாம்.

குதி: ஏ! ஈ.... தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கனும். இல்லைன்னா இந்த மாதிரிதான் பெயர் மறந்து போய் ஒவ்வொருத்தரா கேட்டுட்டு இருக்கனும்.

அப்படின்னு சொல்லிச்சாம். அதனால எல்லா குழந்தைகளும் தினமும் ஒரு டம்ளர் பால் கட்டாயம் குடிச்சிடுங்க!!!

(நன்றி-ஸ்ரீதர்ப்ளாக்.)

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 07, 2013 8:25 pm

நான் டெய்லி குடிப்பேன் நைட்



நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Mநான் ஈ - குழந்தைகளுக்கான கதை Aநான் ஈ - குழந்தைகளுக்கான கதை Dநான் ஈ - குழந்தைகளுக்கான கதை Hநான் ஈ - குழந்தைகளுக்கான கதை U



நான் ஈ - குழந்தைகளுக்கான கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 08, 2013 6:45 am

MADHUMITHA wrote:நான் டெய்லி குடிப்பேன் நைட்

ஐயையோ ,இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.கூடாது 

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 08, 2013 6:51 am

அருமை சாமி அவர்களே.

ரமணியன்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 10:41 am

T.N.Balasubramanian wrote:
MADHUMITHA wrote:நான் டெய்லி குடிப்பேன் நைட்

ஐயையோ ,இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.கூடாது 

ரமணியன்
அய்யோ அப்பா மில்க் குடிப்பேன் சிவா அண்ணா யினியவன் அண்ணா மாதிரி என்னையும் நினைக்க கூடாது சோகம்



நான் ஈ - குழந்தைகளுக்கான கதை Mநான் ஈ - குழந்தைகளுக்கான கதை Aநான் ஈ - குழந்தைகளுக்கான கதை Dநான் ஈ - குழந்தைகளுக்கான கதை Hநான் ஈ - குழந்தைகளுக்கான கதை U



நான் ஈ - குழந்தைகளுக்கான கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 9:14 am

அருமை சாமி, எங்க தாத்தா எங்களுக்கு இதை சொல்லுவார், ஆனால் ஒரு சின்ன திருத்தம் முதல் வரி இல் . நாங்க "கொழு கொழு கன்றே!" என்று சொல்வோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 10, 2013 9:30 am

முதல்லயே குதிரைக்கிட்ட கேட்டிருக்கலாம் ஹி ஹி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 9:34 am

அசுரன் wrote:முதல்லயே குதிரைக்கிட்ட கேட்டிருக்கலாம் ஹி ஹி
அதுல பாருங்க அசுரன்.... அந்த ஈ க்கு தன் ஒற்றை எழுத்து பேர் நினைவில் இல்லையாம் ஆனால் இவ்வளவு பெரிய பாடலை தொடர்ந்து  சொல்லுமாம் புன்னகை
.
.

இப்படி சொல்வதால் குழந்தைகளின் நினைவுத்திறன் பெருகும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 12:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jul 16, 2013 12:37 pm

அருமை சாமி,சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக