புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
98 Posts - 49%
heezulia
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
7 Posts - 4%
prajai
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
2 Posts - 1%
Barushree
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
2 Posts - 1%
cordiac
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
225 Posts - 52%
heezulia
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
18 Posts - 4%
prajai
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
2 Posts - 0%
Barushree
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_m10நிறம் என்ற திரை நீக்கி.,,,, Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறம் என்ற திரை நீக்கி.,,,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Jul 06, 2013 4:35 pm

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவர் - 19 வயது - ஒரு பெரிய பென்சில் கம்பெனி மீது நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் வாங்கிய கிரேயான் பெட்டியில் தோல் நிறம் என்று குறிப்பிடப்பட்ட கிரேயான், இளஞ்சிவப்பு நிறமாக இருந்திருக்கிறது.

அவர் குறை என்னவென்றால் நம் நாட்டில் பெரும்பான்மை மக்களின் நிறம் இளஞ்சிவப்பு அல்ல. அதனால் அந்த வர்ணனை உண்மைக்குப் புறம்பாக உள்ளதென்றும், மேலும் இளஞ்சிவப்பு நிறத்தை தோல் அல்லது சருமத்தின் நிறம் என்று குறிப்பிடுவது இனத்தின் அடிப்படையில் புண்படுத்துவதாக உள்ளதென்றும், இழிவுபடுத்துவதாக உள்ளதென்றும் கூறி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் முன் அந்த நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி அந்த வர்ணனையை மாற்றி விடுங்களேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இசைவாகப் பதிலளிக்கவில்லை.

இதற்காக ஒரு வழக்கா? இது கவனம் ஈர்க்கும் நடவடிக்கை என்றெல்லாம் முணுமுணுப்புகள் காதில் விழுகின்றன. அவர் வழக்கு ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ தெரியாது. அவர் எழுப்பியிருக்கும் விவாதத்தில் ஆழம் இருக்கிறது என்பதைப் பலவித கோணங்களிலிருந்து பார்க்கலாம். நிறங்களில் உயர்வு எது, மட்டம் எது? இந்த உயர்வு, தாழ்வு அடிப்படையில் பார்த்தோமானால் எப்படி எல்லாம் அதிர்வலைகள் கிளம்புகின்றன.

அமெரிக்காவில் "நீக்ரோ' என்று கறுப்பு நிறம் கொண்டவர்களை அழைக்கக்கூடாது. அது இழிவுபடுத்துவதான சொல். இப்பொழுது அவர்களை "ஆப்ரோ அமெரிக்கர்கள்' என்று அழைக்கிறார்கள். நிறத்தின் அடிப்படையில் அந்த இனமே அடிமையாகிப் போனது. அதை எதிர்த்தவர் ஆபிரகாம் லிங்கன். அதுபோலவே நிறம் சார்ந்த பிரிவினைக் கொள்கையை (அபார்தெய்ட்) எதிர்த்தவர் நெல்சன் மண்டேலா. தன் இன மக்கள் இந்த இழிவிலிருந்து விடுபடப் போராடியவர்.

ஆனால், நம் நாட்டில் வெண்மை ஆள்வதும், கருமை ஒதுக்கப்படுவதும் கண்முன்னால் பல சூழ்நிலைகளில் நடைபெறுகிறது. குழந்தை பிறந்தவுடன் ஆணா, பெண்ணா, அடுத்தது நிறம். அதேபோல திருமணங்களிலும் சிவப்பு நிறத்தவர்களுக்கு மதிப்பெண்கள் கூடும். இந்த நிறம் சார்ந்த பாகுபாடு நம் மனதில் ஊறிப்போன ஒன்று.

மொழி என்பது வலுவான ஆயுதம். நேராக அப்பட்டமாகச் சொல்லாமல் ஒரே சொல்லினால் பல விஷயங்களை மனதில் ஏற்றிவிடலாம். பிறகு தகர்க்க முடியாத அபிப்ராயங்கள் நிரந்தரமாக வேரூன்றிவிடுகின்றன.

""வெளுத்த உள்ளம்'' ""வெள்ளை உடையணிந்த தேவதைபோல'' இவை ஒருபுறம். ""கருத்த அச்சமூட்டும் உருவம்'' மறுபுறம். இதுபோன்ற சொல் சேர்க்கைகள் மேலாக ஒன்று கூறுகின்றன. ஆனால், சொல்லாது அடியில் புதைந்த பொருள் என்ன? வெண்மை என்றால் தூய்மை, நல்லது, விரும்பத்தக்கது, கருமை என்றால் அச்சமூட்டுவது, தீமை. சரியா? நாம் எல்லோரும் சிவந்த நிறம் படைத்தவர்கள் அல்லர், பெரும்பாலும் பழுப்பு அல்லது கருமை சார்ந்த நிறம்தான். அப்பொழுது நாமெல்லோரும் நல்லவர்கள் இல்லையா?

முன்பு வரும் சிறுவர்களுக்கான கதைகள். அங்கே அமரசிம்மன் என்று ஒரு அரசனிருப்பார்,அவர் வெள்ளை நிறமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பார். அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி செய்யும் அமைச்சர் தந்திரசேனன் பழுப்பு நிறமாக இருப்பார். எந்த வயதிலிருந்து இந்த நிற வேற்றுமை விஷம் ஏறுகிறது பாருங்கள்.

அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஒரு பரீட்சை வைத்தார்கள். சின்னக் குழந்தைகள் படிக்கும் வகுப்பு, அவர்களுக்கு சில பொம்மைகளைக் கொடுத்து இதில் எது நல்ல பொம்மை, எது கெட்ட பொம்மை என்று தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். வெள்ளை நிற பொம்மைகளை நல்ல பொம்மைகள் என்றும், கறுப்பு நிற பொம்மைகளை கெட்ட பொம்மைகள் என்றும் குழந்தைகள் பிரித்தார்களாம்.

முதன்முதலாக டாக்டர் கென்னத் கிளார்க் என்பவர் 1939-ஆம் ஆண்டில் இந்தப் பரிசோதனையைச் செய்தார். 1950-ஆம் ஆண்டு மறுபடியும் அவரே இந்தப் பரிசோதனையைச் செய்து பார்த்தார். முடிவு மாறவில்லை.

2005-ஆம் ஆண்டில் கிரி டேவிஸ் என்பவர் திரும்பச் செய்து பார்த்தார். அதே குழந்தைகள் என்ன நிறமாக இருந்தாலும் அதே முடிவு. ஆண்டுகள் மாறலாம், பள்ளிக்கூடங்கள் மாறலாம், குழந்தைகள் மாறலாம். ஆனால், முடிவு மாறவில்லை. ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டு முறைதான் வரட்டுமே, இந்த மூடத்தனமான வெறுப்பு இன்னும் போகவில்லை.

இங்கு மட்டும் என்ன, ""கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு'' எல்லாம் சும்மா. அதுவும் கதாநாயகர்களுக்கு மட்டும்தான். கதாநாயகிகள் வெள்ளையம்மாக்களாகத்தான் இருக்க வேண்டும். இது அடிப்படை இலக்கணம். இது மாறாது. திருமணம் நடக்க வேண்டிய வேளையில் சிவப்பு நிறத்திற்கு மதிப்பெண்கள் கூடும் என்றேன். வெள்ளையாக இருந்தால் வேலைகூட கிடைக்குமாம். தோலை வெளுக்க வைப்பேன் என்று உறுதி கூறும் களிம்பு விளம்பரங்களைப் பாருங்கள். இவ்வளவு விளம்பரங்கள் என்றால் எவ்வளவு விற்பனை ஆக வேண்டும். யாரும் தோற்கும் குதிரை மீது பணம் கட்ட மாட்டார்கள். ஒரு பெண் சோகமாக இருப்பாள். பின் அந்த அறிவுரைபெற்ற பின் டக் டக்கென்று மேனி சிவந்துவிடும். பிறகு எல்லாம் இன்பமயம். வேலை கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். எல்லாம் எதனால்? அவள் படித்த படிப்பிற்கல்ல, அவள் தகுதிக்கல்ல, அவள் குணங்களுக்குமல்ல, அவள் நிறத்திற்கு.

ஒரு பிரபல விளம்பரப் படத்தயாரிப்பாளர் இதுபோன்ற விளம்பரங்களை ஒப்புக்கொள்ள மாட்டாராம். பாராட்ட வேண்டிய விஷயம். இந்த நிற பாரபட்சத்திற்குப் பல முகங்கள் உள்ளன. கருப்பு-வெளுப்பு, தாழ்வு-உயர்வு இரண்டும் இரு பாலரிடையே மட்டும் வேற்றுமையை ஏற்படுத்துவதில்லை. இனங்களிடையே வேற்றுமை, ஜாதிகளிடையே வேற்றுமை. எல்லாவற்றிலும் மேலிடம் வெளுப்பிற்கு.

உலகில் எத்தனை நிற மக்கள்! கிழக்காசியாவில் மஞ்சள் தோய்ந்த நிறம், அதிலும் வித்தியாசங்கள். ஆப்பிரிக்காவில் நல்ல கறுப்பு, சற்று லேசான கறுப்பு என்ற மாறுபாடுகள், பிறகு கோதுமை நிறம், வெளுத்த வெள்ளை, சிவந்த வெள்ளை, தந்த நிறம் இப்படி பல நிறங்கள் எல்லாம் தோலளவு ஆழந்தானே! அமெரிக்காவில் கறுப்பர் இன சமத்துவத்திற்காகப் போராடி உயிரை இழந்த மாபெரும் தலைவர் மார்டின் லூதர் கிங் ""எனக்கு ஒரு கனவு'' என்று ஒருமுறை சொற்பொழிவாற்றினார். அதில் சொல்வார் ""எனக்கு ஒரு கனவு - என் நாலு குழந்தைகள் வாழும் இந்நாட்டில் ஒரு நாள் வரும், அன்று அவர்கள் தோலின் நிறத்தின் அடிப்படையில் அல்லாது அவர்களின் குணங்களின் சாரத்தை ஒட்டி மதிப்பிடப்படுவார்கள்'' என்று. அங்கு 17-ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக கறுப்பு நிறத்தவர்கள் அடிமைகளாக வந்திறங்கினார்கள்.

பிறகு பருத்தித் தோட்டங்களில் ஊழியம் புரிய மேலும் வரவழைக்கப்பட்டார்கள். அங்கு இனப்பிரிவுடன் ஆண்டான்-அடிமை என்ற வேறுபாடு இருந்தது. இதேதான் தென்னாப்பிரிக்காவிலும். நம் நாட்டில் நமக்குள்ளேயே இந்த அநீதி.

இங்குதான் ஒரு வயதானவர் தன் பெண்ணை அவள் கரிய திருமேனி கொண்ட மணாளன் அழைத்துச் சென்றதும் ""செங்கண்மால் தான் கொண்டு போனான்'' என்று தன்னைத் தேற்றிக்கொண்டார். அதுபோல மழை முகில்வண்ணம் கொண்ட அரசகுமாரனை ""அய்யோ இவன் வடிவென்பதை எப்படி வர்ணிப்பேன்'' என்று ஒரு கவி வியந்தார். இங்குதான் அமாவாசையை பௌர்ணமி என்று சொன்ன ஒரு பித்தர் பச்சை வண்ணமும் ஆகிய பெருமாட்டியே என்று பாடினார். அது... அது அவர்களுக்கு. நமக்கில்லையா?

எஸ்.பி. சொக்கலிங்கம் எழுதிய "மதுரை சுல்தான்' என்ற புத்தகத்தில் மார்கோபோலோவின் நாட்குறிப்பிலிருந்து பின்வரும் பதிவைப் பார்க்கலாம்.

""கருப்புத்தோல் உடையவர்கள் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்கள். இதனால் அக்குழந்தை மேலும் கருப்பாக வளரும் என்று நம்புகிறார்கள்.

கடவுள் சிலைகள் அனைத்தும் கருப்பாகத் தோற்றம் அளிக்கச் செய்கிறார்கள். சாத்தான்களுக்கு பனிபோல வெண்மை நிறத்தை உருவமாக வைக்கிறார்கள்''.

வியப்பாக இல்லை? 13 - 14 நூற்றாண்டில் நம் நாட்டுக்கு வந்த ஒருவரின் பதிவு இது.

அப்படியென்றால் வெள்ளை நிறத்தவர்களுக்கு அடிமையான பின்தான் இந்த மாற்றமா? அரசு அங்கீகாரம் பெற்ற நிறம் இதுதான் என்று வெள்ளை முன்னுக்கும், கறுப்பும் பழுப்பும் பின்னுக்கும் தள்ளப்பட்டுவிட்டனவா?

சுதந்திரம்தான் வந்துவிட்டதே. பிறகு அரசு ஆதிக்கத்துடன் நிற ஆதிக்கம் முதலிய ஆதிக்கங்களை ஏன் களையவில்லை. அரசியலமைப்பு சாசனத்தில் ஷரத்து 16(2) மதம், இனம், ஜாதி, பால், பிறப்பு, பிறப்பிடம், உறைவிடம் காரணமாக யாரையும் குறைவுபடுத்தக்கூடாது என்று கூறுகிறது. மேலே கூறியவைகளுடன் நிறமும் சேர்க்க வேண்டும் என்று சில சமயம் தோன்றும். தோற்றம் முக்கிய அங்கம் வகிக்கும் துறைகளில் பணிபுரிபவர்கள் வெளுத்த நிறமாகவே பெரும்பாலும் இருப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள்.

""மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா

நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா

இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா''

அவர்..... கவி.

கட்டுரையாளர்:

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.
தினமணி,,

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Jul 06, 2013 4:48 pm

டார்வின் wrote:
சுதந்திரம்தான் வந்துவிட்டதே. பிறகு அரசு ஆதிக்கத்துடன் நிற ஆதிக்கம் முதலிய ஆதிக்கங்களை ஏன் களையவில்லை. அரசியலமைப்பு சாசனத்தில் ஷரத்து 16(2) மதம், இனம், ஜாதி, பால், பிறப்பு, பிறப்பிடம், உறைவிடம் காரணமாக யாரையும் குறைவுபடுத்தக்கூடாது என்று கூறுகிறது. மேலே கூறியவைகளுடன் நிறமும் சேர்க்க வேண்டும்ந்தித்துப் பாருங்கள்.
"",,
சூப்பருங்க என்ன? 

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sat Jul 06, 2013 6:15 pm

ஆழமான பதிவு...... அருமை...சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக