புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழராகிய நாம் சிறுபான்மையோர்!
Page 1 of 1 •
இனி எந்த முயற்சி செய்தாலும், தமிழராகிய நாம் சிறுபான்மையோர் என்பது நினைவில் நிற்கவேண்டும். கிணற்றுக்குள் இருக்கும் தவளை கடலில் வாழ்வதாக எண்ணுமாம். அதுபோல், வடவேங்கடம் தென்குமரி எல்லைகளைப் பார்த்துக் கொண்டு நாம் பெரிய இனம் என்று இறுமாப்புக் கொண்டால் அது வீழ்ச்சிக்கு வித்தாகிவிடும். அந்த எண்ணம் நீராவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இருந்திருக்கலாம்; தவறு இல்லை. அந்தக் காலத்தில் போக்குவரவு குறைவு; ஒரு நாட்டுக்கும் மற்ற நாடுகளுக்கும் தொடர்பு குறைவு. வடவேங்கடம் தென்குமரி என்ற எல்லைகளை மட்டும் அன்று பார்த்துப் பெருமிதம் கொண்டிருந்ததால் தீங்கு ஒன்றும் இல்லை. இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. வடதுருவத்தையும் தென் துருவத்தையும் ஆப்பிரிக்காவையும் அமெரிக்காவையும் பார்த்து நாம் எம்மாத்திரம் என்று எண்ணவேண்டிய காலம் இது.நாம் சிறுபான்மையோர் என்று உணர்வதற்கு உலகத்தைப் பார்க்கத் தவறினாலும் இந்தியாவைப் பார்த்தால் போதும். இந்தியர் முப்பத்தைந்து கோடி. தமிழர் மூன்று கோடி; சிறுபான்மையோர்தானே?
சிறுபான்மையோர் எந்த முயற்சி செய்தாலும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் கட்டாயம் தேவை. இந்த இரண்டும் இருந்திருந்தால், தமிழர் வல்லமையான இனம் என்ற எண்ணம் டில்லிக்கு ஏற்பட்டிருக்கும். அதற்கு மாறாகவே இப்போது உள்ளது. இப்போது தமிழரைப் பற்றி பிறர் என்ன நினைக்கின்றார்கள்? மூளையர் சிலரும் முரடர் சிலரும் ஏமாளிகள் பலரும் உள்ள கூட்டம் தமிழர் என்றுதான் நினைக்கின்றார்கள். ஆங்கிலேயர் லண்டனில் தலைமை நிலையமும் டில்லியில் கிளைநிலையமும் வைத்து ஆட்சி நடத்திய போதும் அப்படித்தான் நினைத்தார்கள். தமிழரில் மூளையரை விலை கொடுத்து வாங்கிவிடுவது. முரடரை நயத்தாலும் பயத்தாலும் அடக்கிவிடுவது - இந்த இரண்டும் செய்தால் போதும்; மற்றத் தமிழர் பேசாமல் கிடப்பார்கள். இப்படித்தான் வெளியார் நம்மைப் பற்றிக் கருதுகிறார்கள்.
அதற்கு ஏற்றாற்போலவே, நாம் நம்முடைய பொதுத் தேவைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுவதில்லை. ஆனால் நமக்குள் இருக்கும் கட்சி வேறுபாடுகளுக்காகப் பிரிந்தும் பிளந்தும் போராடுவதில் மட்டும் வீரம் காட்டிவருகிறோம். இந்த வேறுபாடுகளும் இருக்கலாம்; ஒரு மூலையில் இருக்கலாம்; மேடையில் இருக்கவேண்டியதில்லை. இங்கிருக்கும் பத்திரிகைகளும் பொதுப் போராட்டங்களுக்கு விளம்பரம் தருவதில்லை; சில்லறைப் பூசல்களையே விளம்பரப் படுத்துகின்றன; சேர்ந்து தாளமும் போடுகின்றன.
தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும் ஆற்றல் வளர்ந்துவிட்டிருக்கிறது; பிணிக்கும் ஆற்றல் வளரவில்லை. ஒரு மேடையில் இரண்டு கட்சிகள் சேர்ந்து பொதுத்தேவை பற்றிப் பேசுவது தமிழகத்தில் கண்டு வியக்கும்படியான புதுமையாகவே உள்ளது. அது என்றைக்குப் பழக்கமான- இயல்பான - நிகழ்ச்சியாகப் பெருகுமோ, தெரியவில்லை.
தேர்தல் காலங்களில் தமிழரைக் கண்டு மற்றவர்கள் சிரிக்கின்றார்கள். ஓர் இடத்திற்குப் பத்துப் பதினைந்துபேர் நின்று போட்டியிடுவார்கள். கடைசியில் தமிழரல்லாத ஒருவன் தன்னைச் சார்ந்தவர்களின் ஓட்டுக்கள் எல்லாவற்றையும் சிதறாமல் ஒருசேரப் பெற்று இத்தனைத் தமிழரையும் தோற்கடித்துவிடுவான். பிறகு அந்தப் பொது எதிரியைக் கண்டு இத்தனைப் பேரும் நாணித் தலைகுனிந்தாலும் ஒருபடி முன்னேற்றம் என்று கருதலாம். அவன் வென்றானே என்று கவலைப்படுவதற்கு மாறாக, தன்னோடு போட்டியிட்ட தமிழர்கள் தோற்றதை நினைந்து ஒவ்வொரு தமிழனும் தனித்தனியே மகிழ்வான். பொதுவாகத் தமிழினம் தோற்கிறதே என்ற உணர்ச்சி தோன்றுவதில்லை; மற்றத் தமிழரை வீழ்த்தியது பற்றிய வீணான வீர உணர்ச்சியே தோன்றுகிறது. தன் இரண்டு கண்களும் போனாலும் சரி, தன் எதிரியின் ஒருகண்ணாவது போகவேண்டும் என்று ஒருவன் முயன்றதாக கதையில் படித்திருப்பாய். அத்தகைய வீண்வீரம் - வீரம் அல்ல. ஆணவம் - தமிழரிடையே மிகுதியாக உள்ளதே!
இவற்றை எல்லாம் எண்ணிப் பார். தமிழன், பொதுவாக, தன்னலம் மிகுந்தவன் என்று உணரலாம். தனித்தனியே தன்னலம் நாடிப் பொதுநலம் மறக்கும் கூட்டம் எப்படி ஒற்றுமை அடைய முடியும்? எப்படி முன்னேற முடியும்? மற்ற இனத்தாரைவிடத் தமிழர்க்குள் தன்னலம் மிகுதியா என்று நீ கேட்கலாம். ஆம் என்றே மறுமொழி சொல்லத் தோன்றுகிறது.
எண்ணிப்பார்; நான் தோற்றாலும் சரி, நம்மவன் எவனாவது வெற்றி பெறட்டும் என்ற உயர்ந்த எண்ணம் எத்தனை தமிழரிடையே காணமுடியும்? என் சொந்தக் கொள்கை புறக்கணிக்கப்பட்டாலும் சரி, தழிழினம் வளர்ந்த்து செழிக்கட்டும் என்ற உயர்ந்த நோக்கம் எத்தனைத் தமிழரிடையே காணமுடியும்? என் கட்சி அழிந்தாலும் சரி, தமிழ்நாடு வாழ்ந்து விளங்கட்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் எத்தனை தமிழரிடையே காணமுடியும்? தமிழரிடையே தன்னலம் மிகுதியா, பொதுநலம் மிகுதியா என்று ஆராய்ந்து அறிவதற்கு இந்த மூன்று 'பரீட்சை' வைத்துப்பார். நான் சொல்வதன் உண்மை தானாகவே விளங்கும்.
விதிவிலக்கு உண்டு. உயர்ந்தவர்கள் தமிழினத்தில் இல்லாமல் போகவில்லை. ஆனால் அத்தகையவர்கள் மிகச் சிலரே; ஒரு சிலரே. அவர்களால் மட்டும் நாடு முன்னேறிவிட முடியுமா? ஒற்றுமை ஏற்பட முடியுமா? பொதுவாக மக்களின் மனம் சீர்ப்பட்டால்தானே முடியும்?
பொதுவாக, தமிழன் முதலில் தன்னை நினைக்கிறான்; தன்னையே நினைக்கிறான். பிறகுதான் சில வேளைகளில் மேற்போக்காக மொழியையும் நாட்டையும் நினைக்கிறான். இவ்வளவு தன்னலம் முதிர்ந்திருப்பதால்தான், மிகப் பழங்காலத்திலிருந்தே பண்பாடு மிக்க இனமாக விளங்கியிருந்தும் இன்று தாழ்வான நிலையில் கிடக்கின்றது.
தன்னலம் மிகுந்தவனாக - முதலில் தன்னையே நினைப்பவனாக - தமிழன் இருக்கிறான் என்பதற்கு இன்னொரு சான்று சொல்லட்டுமா? தமிழன் ஒருவன் அதிகாரி ஆனால், தான் அதிகாரி என்ற எண்ணமே அவனுக்கு எப்போதும் இருக்கிறது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பிறகும், மாலை 5 மணிக்குப் பிறகும், ஞாயிற்றுக்கிழமை முதலிய விடுமுறை நாட்களிலும், கோயில் முதலிய பொது இடங்களிலும், விருந்து முதலிய பொது நிகழ்ச்சிகளிலும் அதிகாரி என்ற எண்ணமே நிறைந்து, மற்றவர்களிடமிருந்து விலகி உயர முயல்கின்றான். குடும்பத்தில் மனைவிமக்களின் முன்னும் அதிகாரியாகவே விளங்குவான் போலும்! ஆங்கிலேயன் அப்படி அல்ல என்பது சொல்லாமலே அறிவாய். அலுவலகத்தில் ஆங்கிலேயன் கடுமையாக நடந்துகொள்வான்; மாலை 5 மணிக்குப்பின் விளையாட்டுக் கழகத்தில் தோழன்போல் பழகுவான்; விருந்தில்களித்து மகிழ்வான்; கோயிலில் அமைந்து ஒழுகுவான். காரணம் என்ன? அவன்மனம் இடத்திற்கும் வேளைக்கும் சூழ்நிலைக்கும் நெகிழ்ந்து மாறி அமைகின்றது. அவன் உள்ளத்திலும் தன்னலம் உண்டு; ஆனால் குறைவு; அதனால்தான் அவன் நெகிழ்ந்து தோழனாக, மனிதனாக, அன்பனாக மாறி அமைய முடிகின்றது. தமிழனுடைய தன்னலமோ, இடம் வேளை சூழ்நிலை மொழி நாடு எதுவும் ஊடுருவி இடம் பெறாதவாறு இறுகியுள்ளது. அதனால் தமிழரில் அதிகாரி எங்கும் அதிகாரியாகவே இருக்கின்றான்; கட்சிஆள் எங்கும் (பொதுமேடையிலும் பொதுஇடங்களிலும்) கட்சி ஆளாகவே இருக்கிறான்.
தமிழனைத் தனியே பெயர் சொல்லிப் பழித்துப்பார்; உடனே சீறி விழுவான். ஆனால், அவனுடைய நாட்டையும் மொழியையும் இனத்தையும் பழித்துச் சொல்; பொறுமையோடு கேட்பான். ஆங்கிலேயனைத் தனியே பழித்துப்பார்; உன்னைப் புறக்கணிப்பான். அவனுடைய நாட்டையும் மொழியையும் பழித்துச் சொல்; பகையுள்ளம் கொள்வான். காரணம் மேலே சொன்னதுதான். தன் மொழியைவிடத் தன்நாட்டைவிடத் தானே முக்கியம் என்ற எண்ணம் தமிழனிடம் அவனை அறியாமல் ஊறிக்கிடக்கிறது. அது மட்டும் அல்ல; கட்சிப்பற்று மிகுந்தவனாய்த் தோன்றும் தமிழனும், நெருக்கடி நேருமானால், கட்சிநலத்தைவிடத் தன்னலத்தையே பெரிதாக நாடுவான். கட்சி சீர்குன்றினாலும் தான் வாழவேண்டும் என்று முயலவும் முயல்வான். இந்நிலையில் இவனுடைய நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் என்ன என்று சொல்வது?
உண்மையான நாட்டுப் பற்றுஇருக்குமானால், நாட்டை நினைக்கும் போதாவது தன்னை-தன்னலத்தை- மறக்கவேண்டாமா? அவ்வாறு மறக்கும் பண்பு இருந்தால், நாட்டின் பொதுத் தேவைகளுக்காகப் போராடும்போது ஒற்றுமைதானே ஏற்படாதா? ஒற்றுமை இல்லாதிருப்பதற்குக் காரணம் இப்போது விளங்கும் என எண்ணுகிறேன். பொதுத்தேவையை முதன்மையாக எண்ணும் மனம்தான் பலரையும் பிணைக்க முடியும். தன்னையே முதன்மையாக எண்ணும் மனம் சேர்ந்தவர்களையும் பிரிக்கவே முயலும்.
தேர்தல் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. அன்றுமட்டும் திடீரென்று ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உரிய வகையில் கடமையைச் செய்ய முடியுமா? எதுவும் பழக்கத்தில் வந்திருந்தால்தான் முடியும். ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உரிய வகையில் பலநாளும் பழகியிருந்தால், ஒருநாள் கூத்தாக நடைபெறும் தேர்தலிலும் அவ்வாறு நடந்து வெற்றி காணமுடியும்.
ஒரு கதை சொல்வார்கள். இரும்பைப் பொன்னாக்கும் கல் ஒன்று ஒரு மலையோரத்தில் இருப்பதாக ஒரு மந்திரவாதி சொன்னானாம். ஒரு சிறு இரும்புத்துண்டைக் கையில் வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன்மேல் வைத்துப் பார்க்கச் சொன்னானாம். எந்தக் கல்லை வைத்தவுடன் அந்த இரும்பு பொன்னாகிறதோ அதுவே மந்திரக்கல் என்றானாம். கேட்டவன் அவ்வாறே மலையோரத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு கல்லாக எடுத்து இரும்பின்மேல் வைத்து, அது பொன் ஆகாதது கண்டு உடனே வீசி எறிந்துவந்தானாம். வீசிய கற்கள் குவியல் குவியலாகக் குவிந்தனவாம். அவனும் இரவு பகலாகக் கற்களை எடுத்து எடுத்து எறிந்து களைத்துவிட்டானாம். கடைசியில் ஒரு நாள் திடீரென இரும்புத்துண்டு பொன்னாக ஒளி வீசியதாம். ஆனால், பாவம், அதற்குள் பொன்னாக்கிய அந்தக் கல் கையைவிட்டுப் போய்விட்டதாம். எறிந்து எறிந்து பழகிய பழக்கத்தால் உடனே அந்த மந்திரக்கல்லையும் கை எறிந்துவிட்டதாம். அவன் கதி என்ன ஆயிற்று? அப்படித்தான் தேர்தலிலும் பிரிக்கும் ஆற்றல் வளர்வதைக் காண்கின்றோமே தவிர, பிணைக்கும் ஆற்றலைக் காணோம். காரணம், பழக்கம்தான். மற்றக் காலங்களில் பிறர்மேல் பொறாமை கொண்டும், பிறர் மனத்தைப் புண்படுத்தியும், சேர்ந்தவர்களைப் பிரித்தும் தமிழர் வாழ்கின்றனர். இந்தப் பழக்கம் அன்றாட வாழ்க்கையில் ஊறிப்போன பிறகு, திடீரென ஒருநாள் காலையில் மாற்றிவிட முடியுமோ? முடியாது. அதனால் தேர்தலிலும் பொறாமை, இடையூறு, பகை இவைகளே விளைகின்றன. மந்திரக்கல் தேடியவனைப் போல் களைத்துச் சோர்வடைவதே கண்ட பயன்.
மு.வ வின் 'தம்பிக்கு கடிதங்கள்' புத்தகத்தில் இருந்து
சிறுபான்மையோர் எந்த முயற்சி செய்தாலும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் கட்டாயம் தேவை. இந்த இரண்டும் இருந்திருந்தால், தமிழர் வல்லமையான இனம் என்ற எண்ணம் டில்லிக்கு ஏற்பட்டிருக்கும். அதற்கு மாறாகவே இப்போது உள்ளது. இப்போது தமிழரைப் பற்றி பிறர் என்ன நினைக்கின்றார்கள்? மூளையர் சிலரும் முரடர் சிலரும் ஏமாளிகள் பலரும் உள்ள கூட்டம் தமிழர் என்றுதான் நினைக்கின்றார்கள். ஆங்கிலேயர் லண்டனில் தலைமை நிலையமும் டில்லியில் கிளைநிலையமும் வைத்து ஆட்சி நடத்திய போதும் அப்படித்தான் நினைத்தார்கள். தமிழரில் மூளையரை விலை கொடுத்து வாங்கிவிடுவது. முரடரை நயத்தாலும் பயத்தாலும் அடக்கிவிடுவது - இந்த இரண்டும் செய்தால் போதும்; மற்றத் தமிழர் பேசாமல் கிடப்பார்கள். இப்படித்தான் வெளியார் நம்மைப் பற்றிக் கருதுகிறார்கள்.
அதற்கு ஏற்றாற்போலவே, நாம் நம்முடைய பொதுத் தேவைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுவதில்லை. ஆனால் நமக்குள் இருக்கும் கட்சி வேறுபாடுகளுக்காகப் பிரிந்தும் பிளந்தும் போராடுவதில் மட்டும் வீரம் காட்டிவருகிறோம். இந்த வேறுபாடுகளும் இருக்கலாம்; ஒரு மூலையில் இருக்கலாம்; மேடையில் இருக்கவேண்டியதில்லை. இங்கிருக்கும் பத்திரிகைகளும் பொதுப் போராட்டங்களுக்கு விளம்பரம் தருவதில்லை; சில்லறைப் பூசல்களையே விளம்பரப் படுத்துகின்றன; சேர்ந்து தாளமும் போடுகின்றன.
தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும் ஆற்றல் வளர்ந்துவிட்டிருக்கிறது; பிணிக்கும் ஆற்றல் வளரவில்லை. ஒரு மேடையில் இரண்டு கட்சிகள் சேர்ந்து பொதுத்தேவை பற்றிப் பேசுவது தமிழகத்தில் கண்டு வியக்கும்படியான புதுமையாகவே உள்ளது. அது என்றைக்குப் பழக்கமான- இயல்பான - நிகழ்ச்சியாகப் பெருகுமோ, தெரியவில்லை.
தேர்தல் காலங்களில் தமிழரைக் கண்டு மற்றவர்கள் சிரிக்கின்றார்கள். ஓர் இடத்திற்குப் பத்துப் பதினைந்துபேர் நின்று போட்டியிடுவார்கள். கடைசியில் தமிழரல்லாத ஒருவன் தன்னைச் சார்ந்தவர்களின் ஓட்டுக்கள் எல்லாவற்றையும் சிதறாமல் ஒருசேரப் பெற்று இத்தனைத் தமிழரையும் தோற்கடித்துவிடுவான். பிறகு அந்தப் பொது எதிரியைக் கண்டு இத்தனைப் பேரும் நாணித் தலைகுனிந்தாலும் ஒருபடி முன்னேற்றம் என்று கருதலாம். அவன் வென்றானே என்று கவலைப்படுவதற்கு மாறாக, தன்னோடு போட்டியிட்ட தமிழர்கள் தோற்றதை நினைந்து ஒவ்வொரு தமிழனும் தனித்தனியே மகிழ்வான். பொதுவாகத் தமிழினம் தோற்கிறதே என்ற உணர்ச்சி தோன்றுவதில்லை; மற்றத் தமிழரை வீழ்த்தியது பற்றிய வீணான வீர உணர்ச்சியே தோன்றுகிறது. தன் இரண்டு கண்களும் போனாலும் சரி, தன் எதிரியின் ஒருகண்ணாவது போகவேண்டும் என்று ஒருவன் முயன்றதாக கதையில் படித்திருப்பாய். அத்தகைய வீண்வீரம் - வீரம் அல்ல. ஆணவம் - தமிழரிடையே மிகுதியாக உள்ளதே!
இவற்றை எல்லாம் எண்ணிப் பார். தமிழன், பொதுவாக, தன்னலம் மிகுந்தவன் என்று உணரலாம். தனித்தனியே தன்னலம் நாடிப் பொதுநலம் மறக்கும் கூட்டம் எப்படி ஒற்றுமை அடைய முடியும்? எப்படி முன்னேற முடியும்? மற்ற இனத்தாரைவிடத் தமிழர்க்குள் தன்னலம் மிகுதியா என்று நீ கேட்கலாம். ஆம் என்றே மறுமொழி சொல்லத் தோன்றுகிறது.
எண்ணிப்பார்; நான் தோற்றாலும் சரி, நம்மவன் எவனாவது வெற்றி பெறட்டும் என்ற உயர்ந்த எண்ணம் எத்தனை தமிழரிடையே காணமுடியும்? என் சொந்தக் கொள்கை புறக்கணிக்கப்பட்டாலும் சரி, தழிழினம் வளர்ந்த்து செழிக்கட்டும் என்ற உயர்ந்த நோக்கம் எத்தனைத் தமிழரிடையே காணமுடியும்? என் கட்சி அழிந்தாலும் சரி, தமிழ்நாடு வாழ்ந்து விளங்கட்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் எத்தனை தமிழரிடையே காணமுடியும்? தமிழரிடையே தன்னலம் மிகுதியா, பொதுநலம் மிகுதியா என்று ஆராய்ந்து அறிவதற்கு இந்த மூன்று 'பரீட்சை' வைத்துப்பார். நான் சொல்வதன் உண்மை தானாகவே விளங்கும்.
விதிவிலக்கு உண்டு. உயர்ந்தவர்கள் தமிழினத்தில் இல்லாமல் போகவில்லை. ஆனால் அத்தகையவர்கள் மிகச் சிலரே; ஒரு சிலரே. அவர்களால் மட்டும் நாடு முன்னேறிவிட முடியுமா? ஒற்றுமை ஏற்பட முடியுமா? பொதுவாக மக்களின் மனம் சீர்ப்பட்டால்தானே முடியும்?
பொதுவாக, தமிழன் முதலில் தன்னை நினைக்கிறான்; தன்னையே நினைக்கிறான். பிறகுதான் சில வேளைகளில் மேற்போக்காக மொழியையும் நாட்டையும் நினைக்கிறான். இவ்வளவு தன்னலம் முதிர்ந்திருப்பதால்தான், மிகப் பழங்காலத்திலிருந்தே பண்பாடு மிக்க இனமாக விளங்கியிருந்தும் இன்று தாழ்வான நிலையில் கிடக்கின்றது.
தன்னலம் மிகுந்தவனாக - முதலில் தன்னையே நினைப்பவனாக - தமிழன் இருக்கிறான் என்பதற்கு இன்னொரு சான்று சொல்லட்டுமா? தமிழன் ஒருவன் அதிகாரி ஆனால், தான் அதிகாரி என்ற எண்ணமே அவனுக்கு எப்போதும் இருக்கிறது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பிறகும், மாலை 5 மணிக்குப் பிறகும், ஞாயிற்றுக்கிழமை முதலிய விடுமுறை நாட்களிலும், கோயில் முதலிய பொது இடங்களிலும், விருந்து முதலிய பொது நிகழ்ச்சிகளிலும் அதிகாரி என்ற எண்ணமே நிறைந்து, மற்றவர்களிடமிருந்து விலகி உயர முயல்கின்றான். குடும்பத்தில் மனைவிமக்களின் முன்னும் அதிகாரியாகவே விளங்குவான் போலும்! ஆங்கிலேயன் அப்படி அல்ல என்பது சொல்லாமலே அறிவாய். அலுவலகத்தில் ஆங்கிலேயன் கடுமையாக நடந்துகொள்வான்; மாலை 5 மணிக்குப்பின் விளையாட்டுக் கழகத்தில் தோழன்போல் பழகுவான்; விருந்தில்களித்து மகிழ்வான்; கோயிலில் அமைந்து ஒழுகுவான். காரணம் என்ன? அவன்மனம் இடத்திற்கும் வேளைக்கும் சூழ்நிலைக்கும் நெகிழ்ந்து மாறி அமைகின்றது. அவன் உள்ளத்திலும் தன்னலம் உண்டு; ஆனால் குறைவு; அதனால்தான் அவன் நெகிழ்ந்து தோழனாக, மனிதனாக, அன்பனாக மாறி அமைய முடிகின்றது. தமிழனுடைய தன்னலமோ, இடம் வேளை சூழ்நிலை மொழி நாடு எதுவும் ஊடுருவி இடம் பெறாதவாறு இறுகியுள்ளது. அதனால் தமிழரில் அதிகாரி எங்கும் அதிகாரியாகவே இருக்கின்றான்; கட்சிஆள் எங்கும் (பொதுமேடையிலும் பொதுஇடங்களிலும்) கட்சி ஆளாகவே இருக்கிறான்.
தமிழனைத் தனியே பெயர் சொல்லிப் பழித்துப்பார்; உடனே சீறி விழுவான். ஆனால், அவனுடைய நாட்டையும் மொழியையும் இனத்தையும் பழித்துச் சொல்; பொறுமையோடு கேட்பான். ஆங்கிலேயனைத் தனியே பழித்துப்பார்; உன்னைப் புறக்கணிப்பான். அவனுடைய நாட்டையும் மொழியையும் பழித்துச் சொல்; பகையுள்ளம் கொள்வான். காரணம் மேலே சொன்னதுதான். தன் மொழியைவிடத் தன்நாட்டைவிடத் தானே முக்கியம் என்ற எண்ணம் தமிழனிடம் அவனை அறியாமல் ஊறிக்கிடக்கிறது. அது மட்டும் அல்ல; கட்சிப்பற்று மிகுந்தவனாய்த் தோன்றும் தமிழனும், நெருக்கடி நேருமானால், கட்சிநலத்தைவிடத் தன்னலத்தையே பெரிதாக நாடுவான். கட்சி சீர்குன்றினாலும் தான் வாழவேண்டும் என்று முயலவும் முயல்வான். இந்நிலையில் இவனுடைய நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் என்ன என்று சொல்வது?
உண்மையான நாட்டுப் பற்றுஇருக்குமானால், நாட்டை நினைக்கும் போதாவது தன்னை-தன்னலத்தை- மறக்கவேண்டாமா? அவ்வாறு மறக்கும் பண்பு இருந்தால், நாட்டின் பொதுத் தேவைகளுக்காகப் போராடும்போது ஒற்றுமைதானே ஏற்படாதா? ஒற்றுமை இல்லாதிருப்பதற்குக் காரணம் இப்போது விளங்கும் என எண்ணுகிறேன். பொதுத்தேவையை முதன்மையாக எண்ணும் மனம்தான் பலரையும் பிணைக்க முடியும். தன்னையே முதன்மையாக எண்ணும் மனம் சேர்ந்தவர்களையும் பிரிக்கவே முயலும்.
தேர்தல் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. அன்றுமட்டும் திடீரென்று ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உரிய வகையில் கடமையைச் செய்ய முடியுமா? எதுவும் பழக்கத்தில் வந்திருந்தால்தான் முடியும். ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உரிய வகையில் பலநாளும் பழகியிருந்தால், ஒருநாள் கூத்தாக நடைபெறும் தேர்தலிலும் அவ்வாறு நடந்து வெற்றி காணமுடியும்.
ஒரு கதை சொல்வார்கள். இரும்பைப் பொன்னாக்கும் கல் ஒன்று ஒரு மலையோரத்தில் இருப்பதாக ஒரு மந்திரவாதி சொன்னானாம். ஒரு சிறு இரும்புத்துண்டைக் கையில் வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன்மேல் வைத்துப் பார்க்கச் சொன்னானாம். எந்தக் கல்லை வைத்தவுடன் அந்த இரும்பு பொன்னாகிறதோ அதுவே மந்திரக்கல் என்றானாம். கேட்டவன் அவ்வாறே மலையோரத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு கல்லாக எடுத்து இரும்பின்மேல் வைத்து, அது பொன் ஆகாதது கண்டு உடனே வீசி எறிந்துவந்தானாம். வீசிய கற்கள் குவியல் குவியலாகக் குவிந்தனவாம். அவனும் இரவு பகலாகக் கற்களை எடுத்து எடுத்து எறிந்து களைத்துவிட்டானாம். கடைசியில் ஒரு நாள் திடீரென இரும்புத்துண்டு பொன்னாக ஒளி வீசியதாம். ஆனால், பாவம், அதற்குள் பொன்னாக்கிய அந்தக் கல் கையைவிட்டுப் போய்விட்டதாம். எறிந்து எறிந்து பழகிய பழக்கத்தால் உடனே அந்த மந்திரக்கல்லையும் கை எறிந்துவிட்டதாம். அவன் கதி என்ன ஆயிற்று? அப்படித்தான் தேர்தலிலும் பிரிக்கும் ஆற்றல் வளர்வதைக் காண்கின்றோமே தவிர, பிணைக்கும் ஆற்றலைக் காணோம். காரணம், பழக்கம்தான். மற்றக் காலங்களில் பிறர்மேல் பொறாமை கொண்டும், பிறர் மனத்தைப் புண்படுத்தியும், சேர்ந்தவர்களைப் பிரித்தும் தமிழர் வாழ்கின்றனர். இந்தப் பழக்கம் அன்றாட வாழ்க்கையில் ஊறிப்போன பிறகு, திடீரென ஒருநாள் காலையில் மாற்றிவிட முடியுமோ? முடியாது. அதனால் தேர்தலிலும் பொறாமை, இடையூறு, பகை இவைகளே விளைகின்றன. மந்திரக்கல் தேடியவனைப் போல் களைத்துச் சோர்வடைவதே கண்ட பயன்.
மு.வ வின் 'தம்பிக்கு கடிதங்கள்' புத்தகத்தில் இருந்து
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மு. வ. எவ்வளவு சரியாகக் கணித்துள்ளார்! எவ்வளவு உண்மை!! பதிவுக்கு நன்றி சாமி அவர்களே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|