புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
77 Posts - 36%
i6appar
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jul 05, 2013 8:54 pm

First topic message reminder :

திவ்யாவின் காதல் கணவன் தர்மபுரி இளவரசனின் இறப்பு யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த சம்பவத்திற்கு சாதிவெறி முக்கிய காரணம் என்றாலும் ஊடகங்களுக்கும் அதில் பக்கு உண்டு. இதற்கிடையே சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இளவரசனின் இறப்பு கொலையா ? தற்கொலையா ? என்ற ஒரு பெரிய கேள்வி மனதில் குடிகொள்ள காரணங்கள் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் அதைப் பற்றிய எனது பார்வையை மட்டும் பதிவு செய்ய கனத்த மனதுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

1. நீதிமன்ற விசாரணையின் போது இளவரசன் தன்னை வற்புறுத்தி கூட்டிச் சென்றார், மிரட்டினார், கடத்தினார் என்ற எந்த பழியையும் இளவரசன் மீது திவ்யா போடவில்லை. இரண்டு தினங்களுக்கு முன், எனது தாயாரின் நலன் கருதி அவருடன் வாழ்வேன், இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று நீதி மன்றத்தில் திவ்யா கூறினார். ஆனால் இளவரசனை வெறுத்து விலகியதாகக் கூறவில்லை. திவ்யா தன்னை முற்றிலும் வெறுத்திருக்கும் பட்சத்தில் இளவரசன் தற்கொலை முயற்சி செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் திவ்யா தன்னுடன் வாழப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் அவர் எனக்குக் கிடைப்பார், நம்பிக்கை இருக்கிறது. திவ்யாவைச் சுற்றி இருப்போர் அவரை சுயமாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று சலமில்லாமல் தனது கடைசிப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

2. இளவரசனின் முந்தய பேட்டிகளைப் பார்த்தல் அவரின் தெளிவும், தைரியம் நமக்குத் தெரியும். அதோடு திவ்யாவை விட்டுவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள இளவரசனுக்கு திவ்யா வெறும் காதலியல்ல, மனைவி. தனக்குச் சொந்தமானவள். திவ்யா வார்த்தையளவில் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அவள் தனது மனைவி என்பதால் சட்டம் இருக்கிறது எப்படியும் சேரமுடியும் என்ற நம்பிக்கை இளவரசனுக்கு இருந்திருக்கும்.

3. அப்படியே திவ்யாவின் வார்த்தைகளால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக வைத்துக் கொண்டாலும், புகைப்படங்களில் காணப்படும் இளவரசனின் உடல், ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவில்லை. காரணம், அவ்வளவு வேகமாக வரும் ரயிலின்முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பரின் உடல் இவ்வாறு சில காயங்களுடன் தப்பி இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்க முகமும், தலையும் மட்டும் காயம் அடைந்திருக்கிறது, சட்டைகூட பெரிதாக கசங்கவில்லை என்று செய்திகளில் படிக்க முடிகிறது. ரயில் விபத்தில் பெருத்த காயங்கள் இல்லாமல், சட்டை கசங்காமல் தலையில் மட்டும் காயங்களுடன் சாவது பெரும் ஆச்சர்யத்திற்குரியது.

4. சாதிய சக்திகள் ஒன்றுகூடி இளவரசனுடன் வாழபோவதில்லை என்று திவ்யாவைக் கூற வைத்த பிறகு, அவர்களின் அடுத்த நோக்கம் தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு ஆணிற்கு அந்தப் பெண்ணை கூடியவிரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன்-திவ்யாவின் திருமணம் நாடறிந்தது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அது சட்டப்படி செல்லக்கூடிய திருமணம்.

மறுமணம் செய்து வைக்க வேண்டுமானால் விவாகரத்துப் பெறவேண்டும். அதற்கு அந்தப் பெண்ணை ஒத்துக் கொள்ளவைத்தாலும், இளவரசன் இருந்த நிலைப்பாட்டில் அவர் திவ்யாவைப் பிரிய ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படியே ஒத்துகொண்டாலும் குறைந்தது ஒருவருடம் விவாகரத்திற்காக காத்திருக்கவேண்டும். அதற்குள் திவ்யா மீண்டும் தனது மனதை மாற்றிக்கொண்டு இளவரசனுடன் போனால் இதுவரை தங்கள் சாதியைக் காக்க செய்த போராட்டங்கள் வீணாகிவிடும் என்று அவர்கள் கருதி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இளவரசன் இறந்துவிட்டால் உடனடி மறுமணம் சாத்தியம் என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கலாம். அதனால் இந்த அவலமும் அரங்கேற்றப் பட்டிருக்கலாம்.

திவ்யா தனது தாயுடன் போக மிக முக்கியமான காரணம் அவர் தந்தையின் இறப்பு. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த ஒரு காரணத்தை வைத்தே சாதிய சக்திகள் திவ்யாவை உணர்வுப் பூர்வமாக அணுகி, அவரது சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். இளவரசனோடு போனால் நானும் இறந்துவிடுவேன் என்று அவரது தாயும் பயமுறுத்தி இருப்பார். என்ன செய்வதென்று தெரியாத பேதையாய், மன அழுத்தம், சாதிய நிர்பந்தம் இவற்றிற்கிடையே வேறு வழியில்லாமல் திவ்யா இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று வார்த்தையளவில் மட்டுமே சொல்லி இருக்க வேண்டும்.

இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா ? இல்லை இது தற்கொலையானால் அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பதை சாதிய/அரசியல் ஈடுபாடில்லாத, முறையான விசாரணை நடத்தப்பட்டால் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன். அப்படி நடக்குமா என்பதும், அப்படியே நடத்தாலும் விசாரணையை முடிக்க எத்தனை வருடங்கள் இழுப்பார்கள் என்பதும் பெரும் கேள்விக்குறியே !

"சாதி வெறியால் இளம் காதலர்களை இந்த நிலைக்குத் தள்ளிய நமது சமூகத்தை நினைத்து, ஒரு தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன்"

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/07/blog-post_5.html

அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jul 07, 2013 2:37 pm

யினியவன் wrote:சாதியை ஒழித்துவிட்டால் சரித்திரத்தில்
அரசியலே ஒழிந்துவிடும் நம் நாட்டில்

அப்புறம் அவனுக என்ன பண்ணுறது?

(சாதி புரையோடிப்போன ஒன்று - மாறி வருகிறார்கள் மக்கள் ஆனால் அரசியல் மாற விட மாட்டேங்கிறது)
ஆமோதித்தல் 



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 07, 2013 5:53 pm

உங்களின் ஆய்வு மிக மிகச் சரியானதே. தமிழன் என்று சொல்லடா, தலைகுனிந்து நில்லடா என்று சொல்லவேண்டிய நிலையில்தான் தற்போழ்து நாம் உள்ளோம். சோகம் 
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jul 07, 2013 6:59 pm

அகல் ஈர்ப்பு காதாலாகாது என்பதே எங்கள் வாதம். ஈர்ப்பு அதன் தேவைகள் முடிந்தவுடன் அவர் அவர் வழிகளில் சென்று விடும். நாடோடிகள் திரைப்படம் இத தான் சுட்டிக்காட்டியது. பதினெட்டு வயது நிரம்பாத யாரும் வேலைக்கு அப்ளை செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்*(அரசு வேலைக்கு) முன்னாடி கூட பாய்ஸ் சர்வீஸ் என்று இருந்தது ஆனால் இப்போது அதெல்லாம் கிடயாது. அது போல நீங்கள் பார்வையற்றவரை உதாரணம் காட்டியுள்ளீர்கள் அதுவும் புரியவில்லை. தன்னால் தனக்கும் தான் வீட்டுக்கும் தன்னை நேசிப்பவர்களுக்கும் ஊருக்கும் எந்த கொடுமையும் வராமல் ஒருவன் வாழ்தால் தான் வாழ்க்கை. வாழ்க்கை வெறும் விளயாட்டல்ல. நீங்கள் ஒரு உணர்ச்சியில் பேசுகிறீர்கள் நாங்கள் இந்த மாதிரி சம்பவங்களை நேரில் பார்துக்கொண்டு உள்ளோம். பல திருமணங்களை ஆதரித்து கல்யாணம் வரை கூட இருந்துள்ளோம். நாங்கள் ஒன்றுமே தெரியாமல் தினசரி படித்து பேசுவதாக தயவு செய்து நினைக்கவேண்டாம். என் ஊர் மதுரை அங்கே நடக்கும் கொடுமைகளெல்லாம் யாருக்குமே வரக்கூடாது என்பதே என் நோக்கம். இளவரசன் திவ்யா ஒரு தவறான் முன் உதாரணமாக வரும் இளைஞர்களுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். அதுவும் இந்த தகவல் தொழில் நுட்பகாலங்களில் இளைஞர்கள் தங்களை காதலிக்கும் பெண்களை அருவருக்க தக்க வகயில் புகை படம் வீடியோ எடுத்து இன்டெர்நெட்டில் போட்டு சீரழித்து கொண்டு உள்ளனர். அதெல்லாம் பெண்குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்ற பயமே மேலோங்கி இருக்கிறது. ஒவ்வொரு தாயி தந்தையார் எவ்வளவு சீராட்டி வளர்த்து நம்மை வளர்த்திருக்கிறார்கள் அதற்க்கு நாம் செய்யும் நன்றி இது தானா ?



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 07, 2013 8:56 pm

தமிழன் தலைகுனிந்து செல்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதை முதலில் சரி செய்ய வேண்டும்.காதலை வைத்து தமிழன் தலைகுனிவை ஏற்படுத்துகிறான் என்பது சற்று அதிகம் தான்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 08, 2013 12:16 pm

தர்மா wrote:அகல் ஈர்ப்பு காதாலாகாது என்பதே எங்கள் வாதம்.

ஈர்ப்பு என்பது காதலின் அடிப்படை நிலை. ஈர்ப்பில்லாமல் காதல் எப்படி சாத்தியம்? ஈர்ப்பையும் காதலையும் பிரித்துப் பார்ப்பதே முரணான ஒன்று. நான் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறேன் என்றால், அவளிடம் உள்ள ஏதோ ஒன்றால் நான் ஈர்க்கப்பட்டால்தானே அது சாத்தியம்? அது ஆரம்பத்தில் அழகாகவோ அல்லது பழகும் விதமாகவோ இருக்கலாம். மென்மேலும் அவர்களைக் கூர்ந்து கவனிக்கும்போது அவர்களிடமிருக்கும் நமக்குப் பிடித்த மற்ற குணங்களாலும் ஈர்க்கப்படுகிறோம். இந்த ஈர்ப்புகளின் மொத்தக் கலவையையே காதல் என்கிறோம்.

ஒரு பெண்ணின் அழகால் மட்டுமே நான் ஈர்க்கப்படுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவழிடம் மென்மேலும் பழகும்போது அவளது பழக்க வழக்கங்களோ அல்லது அவளது குணாதிசயங்களோ எனக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அவளைக் காதலிக்க என் மனம் ஒத்துக்கொள்ளாது. அவளிடமுள்ள அநேக விடயங்களால் நான் ஈர்க்கப்பட்டால் மட்டுமே காதல் அங்கு சாத்தியம். நமது ஹார்மோன்களின் அடிப்படையே பெண் ஆணை ஈர்க்கும்படியும் ஆண் பெண்ணை ஈர்க்கும்படியும்தானே அமைந்துள்ளது? அந்த ஹார்மோன்கள் மட்டும் தங்கள் வேலையைச் செய்வதை நிறுத்திக் கொண்டால், காதலாவது கத்திரிக்காயாவது!

எனவே ஈர்ப்பையும் காதலையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதே நான் சொல்ல வருவது. தவிர, 18 வயதில் ஒருவனால் தனது வாழ்க்கைத் துணையைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் குறைவு என்பதுதான் பொதுவான கருத்தே ஒழிய, வாய்ப்புகளே இல்லை என்று சொல்ல முடியாது. விதிவிலக்குகள் எல்லா விடயங்களிலும் (நிறையேவே) உள்ளன. 18 வயதிலேயே காதல் திருமணம் செய்துகொண்டு 60 வயது கடந்த பின்னும் அதே காதலோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கு தம்பி இளவரசன் 18 வயதில் திருமணம் செய்ததன் பின்னணியில் பல அழுத்தங்கள் இருந்தன. தோழர் குறிப்பிட்டதைப் போல மற்ற காதல் விவகாரங்களில் இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு அழுத்தங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமானது இக்காதலை முறிக்கக் காத்திருந்த சாதீய சக்திகள். இளவரசிக்கு அவசரமாக வேறு திருமணம் செய்து வைக்குமளவு அந்த சக்திகள் வீரியம் காட்டின. இப்படிப்பட்ட ஒரு நிலையில் அந்த இளைஞனால் வேறு என்ன முடிவு எடுத்திருக்க இயலும். ஏன் நாமே அந்நிலையில் இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்போம்?

இதுபோன்ற அழுத்தங்கள் இல்லாதிருந்தால் நிச்சயமாக அவர்களால் சில ஆண்டுகள் வரை காத்திருந்திருக்க இயலும். வேறு வழியே இல்லாதபோது அவர்கள் திருமண முடிவை அவசரமாக எடுத்திருக்கிறார்கள். சொந்தக் காலில் நிற்பதற்கு முன் திருமணம் செய்துகொண்டால் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் அறிந்திருக்காவிட்டாலும் நிச்சயம் நெருங்கியவர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள். நிறையத் திரைப்படங்கள் அம்மாதிரியான சிக்கல்களைச் சொல்லியிருக்கின்றன. இது ஒரு பொதுவான காதல் விவகாரமாக இருந்து, அதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமேயானால் அவர்களுக்குப் பக்குவமில்லை என்று நாம் சாடுவதில் அர்த்தம் இருக்கிறது.

பெரும்பாலான காதல்களில் சாதி என்பது ஒரு பிரச்சனைதான். ஆனால் இளவரசனின் காதலில் அது மிகப் பூதாகரமான பிரச்சனையாகவே இருந்தது, இருக்கிறது. அது உயிரிழப்பு வரைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. ஒரு வேளை, இந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சியோ அல்லது நம்மால்தானே இவ்வளவு பிரச்சனைகள் என்று கருதியோ அவர்கள் பிரிந்து போயிருந்தால், நாடகக் காதல் என்று சிலர் பிதற்றுவதை உண்மை என்று ஆக்கியிருக்கும் இவர்களது பிரிவு முடிவு. ஏற்கனவே நாடகக் காதல் என்று கூப்பாடு போட்ட வெறும் வாய்களுக்கு இவர்களின் பிரிவு முடிவு அவலாக போயிருக்கும். "இது என்னய்யா உண்மைக் காதல்? இப்போது பிரச்சனை என்றவுடன் பிரிந்து போய்விட்டான் பார்த்தீர்களா? அவன் நோக்கமே வேறு!" என்று ஏளனம் செய்திருப்பார்கள்.

எனவே நாம் எடுத்து வைக்கும் வாதங்களான உடல் கவர்ச்சி என்பதோ, வயதுக் கோளாறு என்பதோ, பக்குவமற்ற வயதில் எடுக்கும் முடிவுகள் இப்படித்தான் ஆகும் என்பதோ, மற்ற காதல் விவகாரங்களுக்குப் பொருந்தும் அளவிற்கு இளவரசன் காதலுக்குப் பொருந்தாது!

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக