புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:28

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:27

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:26

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 13:36

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:16

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
1 Post - 6%
Guna.D
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
143 Posts - 34%
mohamed nizamudeen
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
17 Posts - 4%
prajai
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
9 Posts - 2%
jairam
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_m10அந்தரங்கம் இனி ரகசியமில்லை!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தரங்கம் இனி ரகசியமில்லை!


   
   

Page 1 of 2 1, 2  Next

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed 3 Jul 2013 - 11:55

உலகமே அதிர்ச்சியில் சமைந்திருக்கிறது. 29 வயதேயான எட்வர்ட் ஸ்நோடென்னை, அமெரிக்க அரசின் ஒற்றாடலை உலகத்துக்குத் தெரியவைத்த "நாயகன்’ என்று போற்றுவதா இல்லை தனது அரசின் நம்பிக்கையைத் தகர்த்த "துரோகி’ என்று தூற்றுவதா என்பது அவரவர் பார்வையைப் பொருத்த விஷயம். அமெரிக்க அரசின் ஒற்று நிறுவனமான சி.ஐ.ஏ.வில் மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த ஸ்நோடென், கூகுள், மைக்ரோ சாப்ட், யாகூ, ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதள நிறுவனங்களிலிருந்தும், வேறு பல வழிகளிலும் உலகளாவிய அளவில் தனிநபர்களாலும், அரசுகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் அமெரிக்க அரசு, அவர்களுக்குத் தெரியாமல் ஒற்றாடுகிறது என்கிற ரகசியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தனது மனசாட்சிக்கு விரோதமான செயலாக அது இருப்பதாலும், தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயலாக அது இருப்பதாலும், அமெரிக்க அரசின் இந்தத் தவறான செயலைத்தான் உலகறியச் செய்வதாகக் கூறியிருக்கிறார் அவர். அமெரிக்க உளவு அமைப்பின் பெயருக்குக் களங்கமும், தேசவிரோதமுமான இந்தச் செயலுக்காக, ஸ்நோடென் கைது செய்யப்பட்டு தேசத் துரோகக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள்.

இன்னொரு புறம், தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுவதை எதிர்த்துக் குரலெழுப்பி இருக்கும் ஸ்நோடெனின் செயல் பாராட்டுக்குரியது என்றும், அமெரிக்காவின் ஆன்மாவாக இருக்கும் தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கத் துணிந்த ஸ்நோடென் தண்டனைக்குரியவர் அல்ல என்றும் லட்சக்கணக்கான மக்கள் உரிமை ஆர்வலர்களும், இணையதளப் பயனாளிகளும் அமெரிக்க அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். ""அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்பு வெளிநாட்டவர்களைத்தான் உளவு பார்த்ததே தவிர, எந்தவொரு அமெரிக்கரின் தனிமனிதச் சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தவும் இல்லை, அமெரிக்க சட்டதிட்டங்களை மீறவும் இல்லை. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பையும், தேச நலனையும் கருதிச் செய்யப்பட்டதுதான் இந்த இணையதளக் கருத்துப் பரிமாற்றங்களைக் கண்காணித்த செயல்” என்பது அதிபர் ஒபாமாவின் விளக்கம்.

அமெரிக்காவின் கிரிமினல் செய்கையை உலகுக்கு அம்பலப்படுத்துவதற்காகத்தான் இப்போது ஹாங்காங்கில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் எட்வர்ட் ஸ்நோடன். சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் ஸ்நோடென் தஞ்சம் அடைந்திருப்பதிலிருந்து, அவரது செய்கைகளுக்கு சீனாவின் ஆதரவு இருக்கக்கூடுமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

அமெரிக்க உளவு நிறுவனத்தின் இணையதள வேவு பார்க்கும் முயற்சியில், சீனா, ரஷியா போன்ற நாடுகளைவிட அதிகமாக ஒற்று நடத்தப்பட்ட நாடு இந்தியா என்பதுதான் அதிர்ச்சியான தகவல். வெரிசான், ஏ.டி அன்ட் டி போன்ற சர்வதேசத் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், யாகூ, பேஸ்புக், ட்விட்டர் போன்ற தேடுதள இணையங்களும் அமெரிக்க நிறுவனங்களாக இருப்பதால் உலகளாவிய அளவில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்துமே அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்கின்றன என்பது அதிர்ச்சியை அதிகரிக்கிறது.

இது தெரிந்துதான் சீனா, தனக்கென்று "பைடூ’ என்கிற இணையத்தைத் தொடங்கி இருக்கிறது. ஒருவேளை, அமெரிக்கா இதுபோலத் தகவல்களை ரகசியமாக ஒற்று நடத்துவது தெரிந்ததால்தான் சீன அரசு "பைடூ’வை அறிமுகப்படுத்தியதோ என்றுகூடச் சந்தேகமாக இருக்கிறது. ஸ்நோடென் சீன ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங்கில் தஞ்சமடைந்திருப்பது, இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்கா தனது நாட்டின் பாதுகாப்புக்காகவும், தனது தேசிய நலனுக்காகவும் உலகளாவிய அளவில் இணையதளத் தகவல்களை ஒற்று நடத்தியது சரியா, தவறா என்று கேட்டால், அமெரிக்காவின் பார்வையில் சரி, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பார்வையில் தவறு என்று சொல்வதைத்தவிர வேறு வழியில்லை. அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்புக்கு அளிக்கப்பட்ட சில அதிகாரங்களில் இத்தகைய தொலைபேசி, இணையதளங்களை ஊடுருவிப் பார்க்கும் அதிகாரம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு முகத்தை நாம் பார்க்கத் தவறுகிறோம். கைப்பேசி வைத்திருக்கும் அனைவரின் நடமாட்டமும் கண்காணிப்புக்கு உட்பட்டது. அதிலும் குறிப்பாக, தனியார் செல்பேசி நிறுவனங்கள் யாருடைய உரையாடலையும் ஒட்டுக்கேட்க முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவு செய்யும் தகவல்கள் அடுத்த சில நொடிகளில் உலகளாவிய அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்ட் வைத்திருந்தால், அந்த நபரைப் பற்றிய அத்தனை தகவல்களும் எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கையூட்டின் உதவியால் பெற முடியும் என்பது வேதனையான உண்மை.

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் ஒட்டுக் கேட்கவும், ஒற்றர்கள் மூலம் வேவு பார்க்கவும் தொடங்கிவிட்ட நிலையில், அமெரிக்காவின் செயல் ஆச்சரியப்படுத்தவில்லை. மாறாக, சீனாவைப்போல நாம் விழிப்புடன் இல்லையே என்று வருத்தப்படத் தோன்றுகிறது.

தனிமனித உரிமை பற்றிப் பேசும் தகுதியை நம்மிடமிருந்து விஞ்ஞானமும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பறித்துவிட்டன!

நன்றி-தினமணி



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

Vigneshseetha இந்த பதிவை விரும்பியுள்ளார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 3 Jul 2013 - 12:56

உளவு பார்ப்பதும் , ஒற்று அறிவதும் மன்னர் ஆட்சி காலங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருவது தானே. இதில் என்ன தவறு இருக்கிறது.

என்னை பொறுத்தவரை தன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக ஆகிய இவன் தேசத்துரோகி.

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed 3 Jul 2013 - 13:24

கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 3 Jul 2013 - 13:30

:அடபாவி: 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 3 Jul 2013 - 14:09

manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed 3 Jul 2013 - 14:23

ராஜா wrote:
manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அடுத்த நாட்டுடன் நட்புறவு கொள்ளவேண்டும் தவிர அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிமையாக்குவது தவறு ......(குறிப்பாக இந்தியாவின் அரசியல் தலைவர்களை அமெரிக்கா இப்படித்தான் பணியவைக்கிறது ...)



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 3 Jul 2013 - 14:48

manikandan.dp wrote:
ராஜா wrote:
manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அடுத்த நாட்டுடன் நட்புறவு கொள்ளவேண்டும் தவிர அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிமையாக்குவது தவறு ......(குறிப்பாக இந்தியாவின் அரசியல் தலைவர்களை அமெரிக்கா இப்படித்தான் பணியவைக்கிறது ...)
சீனா & பாகிஸ்தான் நாடுகளுடன் எப்படி நட்புறவாக இருப்பது என்று அரசியல் தலைவர்களுக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள் பாவம் தெரியாததால் கஷ்டபட்டுக்கொண்டு உள்ளார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 14:52

manikandan.dp wrote:
ராஜா wrote:
manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அடுத்த நாட்டுடன் நட்புறவு கொள்ளவேண்டும் தவிர அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிமையாக்குவது தவறு ......(குறிப்பாக இந்தியாவின் அரசியல் தலைவர்களை அமெரிக்கா இப்படித்தான் பணியவைக்கிறது ...)

கூடாது கூடாது கூடாது எனக்கு ராஜா சொல்வது தான் சரி என்று படுகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed 3 Jul 2013 - 17:33

krishnaamma wrote:
manikandan.dp wrote:
ராஜா wrote:
manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அடுத்த நாட்டுடன் நட்புறவு கொள்ளவேண்டும் தவிர அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிமையாக்குவது தவறு ......(குறிப்பாக இந்தியாவின் அரசியல் தலைவர்களை அமெரிக்கா இப்படித்தான் பணியவைக்கிறது ...)

கூடாது கூடாது கூடாது எனக்கு ராஜா சொல்வது தான் சரி என்று படுகிறது புன்னகை

@ ராஜா,krishnaamma
சீனா & பாகிஸ்தான் நாடுகளுடன் நட்புறவை ஒரு சில அரசியல் தலைவர்கள் தவறான நடத்தையால் (சுயநலம்) எதிரி நாடக மாறிவிட்டன.எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் பார்த்துகொள்வது நல்லது.

சர்வதேசத் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், யாகூ, பேஸ்புக், ட்விட்டர் போன்ற தேடுதள இணையங்களும் அமெரிக்க நிறுவனங்களாக இருப்பதால் உலகளாவிய அளவில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்துமே அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்கின்றன.

இதனால் அமெரிக்கா அவர்களை பற்றிய உண்மையான செய்திகளை தவறானது என்று கூறி நிக்குவது எந்த விதத்தில் சரியாகும்....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed 3 Jul 2013 - 17:40

ஒரு நாட்டை மட்டும் அல்ல தனி மனிதனியும் உளவு பார்ப்பது தனிமனித சுகந்திரத்தை பாதிக்கும்.

நினைத்து  பாருங்கள் உங்களை ஒருவர் வேவு பார்க்கிறார் என்றால் உங்களால் நிம்மதியாக இருக்க முடியுமா ......



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக