புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
21 Posts - 70%
heezulia
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
1 Post - 3%
viyasan
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
213 Posts - 42%
heezulia
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
21 Posts - 4%
prajai
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10தேனு.... தேனு - கௌசிகன் Poll_m10தேனு.... தேனு - கௌசிகன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனு.... தேனு - கௌசிகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 5:02 pm


அன்று வழக்கம் போல காலையில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்ரீராமின் காதில் “தேனு, தேனு’ என்ற குரல் கேட்டது. ஓர் ஆசாமி மொபெட்டின் பின்னால் அலுமினியப் பாத்திரம் வைத்துக்கொண்டு வந்தான்.

“என்னப்பா இது?’ என்று வினவினான் ஸ்ரீராம்.

“தேனு, சாமி, தேனு, சுத்தமான மலைத்தேனு’

“எங்கிருந்து வர்றேப்பா?’

“பச்சைமலை சாமி, பெரம்பலூர பக்கம்’

அவன் சற்று சந்தேகத்துடன் பார்த்ததும், “சாமி, என்னை நம்புங்க. நான் கும்படற காளி ஆத்தாள் மேல சத்தியமா இது சுத்தமான தேனு தான். நாங்க, காட்டுல தேன் எடுக்க லைசன்ஸு வச்சுருக்கோம். பாருங்க, என் கையில பச்சை குத்தியிருக்கேன்.’ கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. ஸ்ரீராமுக்குச் சற்று நம்பிக்கை வரத் தொடங்கியது. ஆனாலும் உள்ளூர சந்தேகம், அது தேன்தானா என்று.

ஸ்ரீராமின் முக பாவத்தை பார்த்த அந்த ஆசாமி, “சாமி, போய் ஒரு நியூஸ் பேப்பர் கொண்டு வாங்க’ என்றான்.

அவன் கொண்டு வந்த பேப்பரில், ஒரு தேக்கரண்டி அளவு தேனை ஊற்றினான். பின் பேப்பரைப் பொட்டலமாக மடித்தான். “இதை இன்னும் அச்சு நிமிஷம் கழிச்சுப் பாப்போம். சாமி, இப்ப ஒரு கிளாசில் தண்ணி கொண்டு வாங்க’ என்றான்.

ஆஃபீஸுக்கோ நேரம் ஆகிறது. இருந்தும், தேனின் கவர்ச்சியால் உந்தப்பட்டு, அந்த ஆசாமி கேட்டபடி, ஒரு எவர்சில்வர் தம்பளரில் தண்ணீர் கொண்டு வந்தான் ஸ்ரீராம்.

தேன் விற்பவன் “தண்ணீரைக் குடிச்சுப் பாருங்க’ என்றான். இதில் என் அதிசயம், வெறும் தண்ணீர் சுவைதானே என்று நினைத்துக் கொண்டு அருந்தினான். பிறகு, அந்த ஆசாமி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவுதேனை ஊற்றினான். “இப்ப குடிங்க, என்ன டேஸ்ட் இருக்கு பாருங்க.’

தண்ணீர் தண்ணீராகத்தான் சுவைத்தது. தித்திப்பாக இல்லை.

“சரி சாமி, தீக்குச்சியும் பெட்டியும் கொண்டு வாங்க’ என்று மீண்டும் பணித்தான். ஆர்வத்தால் மீண்டு உள்ளே சென்று, தீப்பெட்டி கொண்டு வந்தான். தீக்குச்சி ஒன்றை தேனில் தோய்த்துப் பெட்டியின் பக்கவாட்டில் உரசினான். உடனேயே நெருப்புப் பற்றிக்கொண்டது.

“வெறும் வெல்லப்பாகானால் தீப்பற்றுங்களா?’ என்று கேட்டான்.

“அந்தப் பேப்பரைப் பாருங்க, இருக்கா.’

ஒரு துளி கூட உறிஞ்சவில்லை.

அறிவியலைப் பாடமாகப் படித்திருந்த ஸ்ரீராம், அதற்கு மேலும் சோதனை செய்ய நாட்டமில்லாதவனாய், “என்ன விலை’ என்றான்.

“நூறு மில்லி அறுபதுங்க. ஒரு லிட்டர் கொடுக்கட்டுமா?’

“ஒன்றரை லிட்டர் கொடப்பா.’

“நல்ல ஏனம் வேணும். ஒரு வருஷம் ஆனாலும் கெடாத பொருளுங்க.’

மீண்டும் ஒர நடை உள்ளே சென்று, ஒரு எவர்சில்வர் தூக்கைத் தேடி கண்டுபிடித்துக் கொண்டு வந்தான், வெளியே கடைக்குப் போன தன் மனைவி ஏன் இன்னமும் வரவில்லை என்று நினைத்துக் கொண்டே.
“இது மருந்து சாமி, காலைல வெறும் வயித்துல வெந்நீரோடு குடிச்சா ஒடம்பு இளைக்கும். ராத்திரி பாலோடு குடிச்சா ஒடம்பு பெருக்கும். நல்ல கரண்டியா உபயோகப்படுத்துங்க. கெடாது’

ஸ்ரீராம் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு, சரியாகக் கணக்குப் பார்த்து மீதி நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான். மலைவாழ் மக்களின் முன்னேற்றத்தைக்கண்டு அவன் வியந்து கொண்டிருக்கும்போது, அவன் மனைவி துளசி வந்தாள். அவளை பார்த்தவுடன், “அம்மா கொளந்தைக்குத் தூளி கட்டணும். ஏதாச்சும் பழைய நூல் சேலை இருந்தால் தாங்க’ என்றான். கணவனின் கண் ஜாடையின் அர்த்தத்தை உணர்ந்த அவள், இரண்டு பழைய, கிழியாத நூல் புடைவைகளைக் கொடுத்தாள்.

“மவராசியாய் இருங்க. சாமி, நான் நாலு மாசம் கழிச்சு வரேன்’ என மனமார வாழ்த்திவிட்டுப் போனான் அந்த மலை வாழ் ஆசாமி.

“சுத்தமான தேன்தானா? எவ்வளவு வாங்கினீங்க? என்ன விலை?’ சற்று அதட்டலாகக் கேட்டாள். சொன்னான்.

“ஆங்க். ஒண்ணரை லிட்டரா? யாருக்காவது தேனாபிஷேகமா? அதுவும் தொள்ளாயிரம் ரூபா கொடுத்து? தேனுன்னு நம்பி எதை வாங்கினீங்களோ! வயத்த என்ன பண்ணுமோ? அவ்வளவும் எப்படிச் செலவழியுமோ?’

“இங்க பார் துளசி, எங்கப்பா தேனை டெஸ்ட் பண்ணச் சில முறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கார். அந்த ஆசாமி செஞ்சதெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன். பயப்படாதே. நம்ம சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் வினியோகம் பண்ணினாப் போச்சு. தேனில், அன்னாசிப்பழம், பலாப்பழம், வாழைப்பழம் உறவச்சுச் சாப்பிடலாம். அம்மா, அப்பா ஸ்ராத்தத்தில் உபயோகப்படுத்தலாம். ஏன், நீ கூட உடம்பு இளைக்கச் சாப்பிடேன். அவன் சொன்ன மாதிரி’ என்றவன், அவளது கனலெனும் பார்வையைத் தவிர்த்து, தொடர்ந்தான்:

“நம்ப மாதிரி ஆட்களெல்லாம் பெரிய பெரிய மால்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஷாப்பிங் செய்து, பிராண்ட் நேமை நம்பி பொருளை வாங்கி ஏமாறுவோம். வயிற்றுப் பிழைப்புக்காக நல்ல பொருளை விற்கும் ஏழையைச் சந்தேகப்படுவோம். அவன் வறுமையைப் பார். அவன் விற்றது தேனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஓர் ஏழையிடம் ஏமாந்து போறதுல எனக்குப் பெருமைதான்!’

என்னதான் துளசியிடம் வீராப்பாகப் பேசினாலும், ஸ்ரீராமுக்கு உள்ளூர சந்தேகம். மறுநாள் ஒரு சின்ன பாட்டிலில், அந்தத் தேனை ஊற்றி ஆஃபீஸுக்கு எடுத்துப் போனான். உணவு இடைவேளையில், சகாக்களுக்குக் கொடுத்தான். அனைவரும் அது சுத்தமான தேன்தான் என்று சான்றிதழ் கொடுத்தனர். சிலர், அந்த ஆசாமி மீண்டும் வந்தால் தத்தம் வீடுகளுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

பின்னர், அவர்களது வீட்டுக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் அவர்கள் அளித்தத் தேனின் இன்சுவையில் மயங்கினர். ஸ்ரீராம் தனது தந்தையையும் அடிக்கடி நினைத்துக்கொண்டான். எத்தனை நாள் தேனில் ஊறவைத்த அன்னாசிப்பழத்தை வாயில் ஊட்டிவிட்டிருக்கிறார்?

மறுமாதம் அப்பாவின் திவசம் பண்ணும்போது, பித்ரு ஸ்வரூபமாக வந்த வாத்தியார், கலத்தில் வாழைப்பழம் மீதுத் தேனை ஊற்றும்போது ஸ்ரீராமின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைக் கவனிக்கத் தவறவில்லை அவனது அன்பு மனைவி.

“தேனு... தேனு...’ வெகு தொலைவில் ஒரு குரல் மெலிதாக கேட்டது.





தேனு.... தேனு - கௌசிகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 10:21 am

அருமையான பதிவு ....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக