புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
293 Posts - 42%
heezulia
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவின் கதை


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:03 pm

First topic message reminder :

பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.


1 முதல் 4 வாரம் வரை


சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது

நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.

முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.

முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:32 pm

11வது வாரம்

இந்த வாரத்தில் உங்களுடைய வயிற்றில் இருக்கும் கருவானது 1.75 இஞ்ச் முதல் 2.4 இஞ்ச் சைசுக்கு அதாவது கிட்டத்தட்ட ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவுக்கு காணப்படும். எடை 1 அவுன்சில் 10-ல் 3 பங்கு இருக்கும். இப்போது உங்களுடைய குழந்தையின் இதயத் துடிப்பை நவீன டோப்ளார் சவுண்ட்-வேவ் ஸ்டெத்தாஸ்கோப் உதவியுடன் கேட்க முடியும். வெளிப்புற வளர்ச்சியைப் பொறுத்த வரை கை விரல் நகங்களும், பிறப்புறுப்பு பகுதிகளும் குறிப்பிடத் தக்க அளவுக்கு வளர்ச்சி அடையும். இந்த வாரத்தின் போது உங்களுடைய குழந்தை உதைக்கும், பெரிதாக திரவங்களை, உணவுகளை விழுங்கும். ஆனால் இன்னும் உங்களால் எதையும் உணர முடியாது.

உங்கள் கரு இடுப்புபெலும்பு குழியை நிரப்பும் அளவுக்கு பெரிதாகி இருக்கும். அடிவயிற்றில் மாறுதல்கள் மூலம் இதை உங்களால் உணர முடியும். உங்களுடைய தலைமுடி, கால் நகங்கள், விரல் நகங்கள், தோல் ஆகியவற்றிலும் சில மாறுதல்கள் ஏற்படும்.

டிப்ஸ்

கர்ப்ப காலத்தின் போது உங்களுடைய பல்லை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் நன்றாக தேய்த்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற நேரத்தில் பற்களில் ஈறுகளில் இருந்து ரத்தம் வடியத் தொடங்கும். இதைப் பார்த்து உடனே பயந்து விட வேண்டாம். ஏனெனில் பிரசவ காலத்தில் ஏற்படும் ஹர்மோன் மாற்றங்களும், ரத்த அளவு அதிகரிப்பதுமே இதற்கு காரணம். ஏதாவது பிரச்சினைகள் இருப்பது போல உணர்ந்தால் ஒரு பல் மருத்துவரை உடனே அணுகவும்;

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:32 pm

12-வது வாரம்

இந்த வாரத்தில் உங்களுடைய கருவானது தலை முதல் பின் பாகம் வரை 2.5 இஞ்ச் நீளம் இருக்கும். கருவின் எடை 1 அவுன்சில் 10ல் 3 பாகம் மற்றும் 1 அவுன்சில் பாதி ஆகியவற்றுக்கு இடையில் ஏதாவதொரு அளவில் இருக்கும். இந்த வாரத்தில் உங்களுடைய குழந்தை முழுமையாக உருவாகி இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வயிற்றில் குழந்தை என்ன வேலை செய்து கொண்டிருக்கும் தெரியுமா? இப்போது மட்டுமில்லாமல் பிரசவ காலத்தின் எஞ்சியுள்ள நாட்கள் முழுவதும் பெரிதாகவும், வலுவானதாகவும் மாறும் முக்கிய மான வேலையில் சீரியஸாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும். குழந்தை கிட்டத்தட்ட முழுமையாக உருவாகி விட்டபடியினால் இந்த வாரம் கடந்து விட்டால் கருக்கலையும் அபாயம் கணிசமாக குறைந்து விடும்.

வாந்தி-மயக்கம், தலைசுற்றல் உள்ளிட்ட மசக்கை பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும். அதற்குப் பதிலாக எப்போதாவது தலைசுற்றல், தலைவலிகள், உடல் பருமனாதல் போன்ற இடையூறு கள் ஏற்படலாம். இது உங்களுடைய முதல் பிரசவமாக இருந்தாலும் சாp, 2-வது, 3-வது பிரசவமாக இருந்தாலும் சரி, தளர்வான உடையில் இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய எடை 3 பவுண்டுகள் முதல் 5 பவுண்டுகள் வரை அதிகரிக்கலாம்.

டிப்ஸ்

இந்த வாரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அடி வயிறு, மார்பகங்கள். இடுப்பு, பின்பாகம். ஆகியவை சற்றே பெரிதாகும். இதுபோன்ற பெரிதாகுதல்களை குறைக்கும் என்று கூறி பல்வேறு வகையான கிரீம்களும். ஆயில்களும் விற்கப்படுகின்றன. ஆனால் அவைகள் எதுவும் வேலைக்கு ஆகாது. அவைகளால் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் வழக்கமாக பிரசவம் முடிந்ததும் மறைந்து பழைய நிலைக்கு வந்து விடும். அதுவரை தொடரும். எந்தளவுக்கு பழைய நிலைக்கு வரும் என்பது உங்களுடைய தோலின் மீட்சித் தன்மையை பொறுத்தே அமையும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:33 pm

உங்களுடைய குழந்தையின் நகங்களும், கால் பாதங்களும் நல்ல வடிவத்துக்கு வந்து இருக்கும். கண் இமைகள், அந்த இமைகளில் இருக்கும் முடிகள், புருவங்கள், நகங்கள், தலைமுடி ஆகியவை உருவாகும். எலும்பு மற்றும் பற்கள் அடர்த்தியாகும். குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருந்தால் பெற்றோர் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவர். ஆனால் உண்மையில் இந்த கைசூப்பும் பழக்கம் கருவிலேயே தொடங்கி விடுகிறது. அதுவும் இந்த வாரங்களிலேயே ஆரம்பிக்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாங்க இந்த வாரங்களில் கருவில் இருக்கும் உங்கள் குழந்தை கை சூப்பும். வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விடும். இதுபோன்ற செயல்கள் மூலம் முகம் பெரிதாகும். அதாவது முகம் ஒரு உருவத்தை நோக்கி விரைவாகச் செல்லும்.

நரம்பு மண்டலம் தன்னுடைய இயக்கத்தை ஆரம்பிக்கும். சந்ததியை உருவாக்கும் உறுப்புகளும், பிறப்புறுப்பு பகுதியும் முற்றிலுமாக உருவாகி விட்டிருக்கும். ஆகையினால் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனர் பரிசோதனை மூலமாக நீங்கள் கருவில் சுமந்து கொண்டிருப்பது பையனா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியும். முந்தைய வாரங்களை விட உங்களுடைய குழந்தையின் இதயம் துடிப்பதை டோப்ளார் கருவி உதவியுடன் இன்னும் தெளிவாக கேட்க முடியும்

4-வது மாதத்தின் முடிவில் உங்களுடைய குழந்தை 6 இஞ்ச் நீளமும், 4 அவுன்ஸ் எடையும் கொண்டிருக்கும்;.

இனி ஒவ்வொரு வாரமாக என்னென்ன மாற்றங்கள் நடை பெறுகின்றன? என்பது பற்றி பார்ப்போமா?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:33 pm

13-வது வாரம்

முழுமையான வளர்ச்சி அடைந்துவிட்ட உங்களுடைய கரு பீச் பழம் போல 2.6 இஞ்ச் முதல் 3.1 இஞ்ச் நீளம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரை 1 அவுன்சில் 10-ல் 7 பங்கு மற்றும் 1 அவுன்சில் பாதி பங்கு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும். இப்போது உடம்பை விட தலை பெரிதாக காணப்படும். பயப்பட வேண்டாம். ஏனெனில் இனி வரும் நாட்களில் உடம்பும் தன்னுடைய வளர்ச்சியை எட்டிப்பிடித்து விடும். இதனால் இந்த நாட்களில் உங்களுடைய குழந்தை வேக வேகமாக வளரும். முகம் கிட்டத்தட்ட மனித உருவத்தை நெருங்கி வரும். கண்கள் நெருக்கமாக நகரும். கால் பாதங்களும், விரல்களும் நன்றாக பிரியும். முட்டுக்கள் மற்றும் மணிக்கட்டு ஆகியவை உருவாகி இருக்கும். பிறப்புறுப்பு பகுதியை தெளிவாக பார்க்க முடியும். உள்ளுறுப்புகள் அவற்றுக்கான இடத்துக்கு சென்று கொண்டிருக்கும்

இதுபோன்ற மாற்றங்களினால் உங்களுடைய கரு நிறையவே வளர்ந்து இருக்கும். இப்போது உங்களுடைய இடுப்பெலும்பு குழிக்குள் முழுவதுமாக நிரம்பி அடிவயிற்றில் மேல்நோக்கி வளர ஆரம்பிக்கும். இப்போது கருவை பார்ப்பதற்கு ஒரு மென்மையான, வழவழப்பான பந்து போல தெரியும். மசக்கை காரணமாக உங்களுடைய எடையில் அதிகரிப்பு எதுவும் இருக்காது. இந்த வாரத்தில் அந்த நிலைமையில் நல்ல மாற்றம் தெரியும்.

டிப்ஸ்

உங்களுடைய உடல் அமைப்பில் வெளிப்படையாக ஏற்படும் மாற்றங்கள் மூலம் நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரால் புரிந்து கொள்ள முடியும். இதையடுத்து அதற்கேற்றவாறு அவர் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். இதனால் உங்களுடைய கவலைகள், இன்பங்களை அவரும் பகிர்ந்து கொள்ள முடியும். இதையடுத்து வயிற்றில் உள்ள குழந்தை எப்படி இருக்கிறது, வளர்ச்சி சரியாக இருக்கிறதா? என்றெல்லாம் அவர் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார். உங்களை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய் வயிற்றில் உள்ள தன்னுடைய குழந்தையின் இதயத் துடிப்பு எப்படி இருக்கிறது என்று காதார கேட்டு மகிழ்வார். தன்னுடைய உணர்வுகளை உங்களுக்கும் சொல்லி உங்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:34 pm

14-வது வாரம்

உங்களுடைய குழந்தை 3.2 அவுன்சில் இருந்து 4.1 அவுன்ஸ் வரை நீளம் இருக்கும். எடையைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 1 அவுன்சை எட்டிப்பிடித்திருக்கும். இதுவரை கழுத்துப் பகுதியில் இருந்து வந்த காதுகள் நகன்று தலைப்பகுதியை நோக்கி செல்லும். அதே நேரம் கழுத்து நீளமாகும். கன்னங்களும் ஒரு அமைப்பை நோக்கி முன்னேறும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தான பிரத்யேகமான கைரேகையும், முக அமைப்பு ஆகிய எல்லாமே உருவாகி இருக்கும். இப்போது வெளிப்புற தூண்டுதல்களுக்கு உங்களுடைய குழந்தை பதில் தர ஆரம்பிக்கும். அதாவது வெளிப்புற தூண்டுதல்கள் எப்படி எப்படி இருக்கின்றனவோ, அதற்கேற்றாற்போல குழந்தையின் உடல் இயங்கும். உதாரணமாக உங்களுடைய அடி வயிற்றில் இடையூறு கள் ஏதாவது ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உள்ளே இருக்கும் குழந்தை மேற்படி இடையூறுக்கு தகுந்தாற் போல உடலை நெளித்துக் கொடுக்கும்.

இந்த வாரத்தில் நீங்கள் கட்டாயம் பிரசவ கால உடைகளை அணிய வேண்டும். உங்களுடைய குழந்தையின் வளர்ச்சிக்கு போதிய இடம் கிடைக்கும் வகையில் உங்களுடைய தோல், தசைகள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும். இந்த நேரத்தில் உங்களுக்கு மலச்சிக்கல் வரலாம். இதற்கு பிரசவ கால ஹர்மோன்கள் மலக்குடல் சற்று தளர்வாக்குவதுதான் காரணம்.

டிப்ஸ்

மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு மிதமான உடற்பயிற்சிகள் செய்யலாம். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அதுபோல நிறைய காய்கறிகளையும், பழங்களையும் கூடுமானவரை பச்சையாக சாப்பிடலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:34 pm

15-வது வாரம்

13 வார கால உங்களுடைய கரு தற்போது 41. இஞ்ச் முதல் 4.5 இஞ்ச் வரை வளர்ந்து இருக்கும். 1.75 பவுண்டுகள் எடை இருக்கும். இப்போது குழந்தையின் உடம்பு மற்றும் மூட்டுக்களை சுற்றி மெல்லிய, லேசான நிறமுள்ள முடியால் மூடி இருக்கும். இதில் பெரும்பாலான முடிகள் குழந்தையின் 7-வது மாதத்தில் உதிர்ந்து விடும். மீதியுள்ள முடிகள் பிரசவத்துக்குப் பிறகு மறைந்து விடும். தலை முடி மற்றும் கண் இமைகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். உங்களுடைய குழந்தை இப்போதும் கை சூப்பும். எலும்புகள் கடினமாக வலிமையாக மாறிக் கொண்டிருக்கும்.

தொப்புளில் இருந்து கீழே 3 முதல் 4 இஞ்ச் வரை விரல்களால் மெதுவாக அழுத்திப் பார்த்தீர்களேயானால் உங்களுடைய கருவை புரிந்து கொள்ள முடியும். அடுத்த வருகின்ற 5 வாரங்களில் உங்களுக்கு maternal serum screening test எனப்படும் முப்பரிமாண சோதனை தேவைப்படலாம். இந்த சோதனையின் போது alpha-fetoprotein (AFP), human chorionic gonadotropin (HCG) பிளசண்டாவினால் தயாரிக்கப்படும் estrogen ஆகியவை கணக்கிடப் படும். இவைகள் மூன்றும் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் எடுப்பதன் மூலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் ஏதாவது குறை ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டுபிடிக்கலாம். இது AFP டெஸ்ட்டை விட துல்லியமான முடிவை தரும். இதுதவிர கருவையும், அதைச் சுற்றியுள்ள திரவத்தையும் கொண்ட பையில் இருந்து அல்ட்ரா சவுன்ட் உதவியுடன் செயல்படும் நீளமான ஊசி மூலமாக சிறிதளவு திரவத்தை எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்துவர். இந்த சோதனை 15 முதல் 18 வாரங்களுக்குள் எடுப்பார்கள். நீங்கள் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராய் இருந்தால், மேற்கண்ட முப்பரிமாண சோதனை மற்றும் AFP டெஸ்ட் ஆகியவற்றின் முடிவுகள் சந்தேகத்துக்கு இடமாக இருக்கும் சூழ்நிலையிலும் இந்த சோதனையை மருத்துவர்கள் செய்வதுண்டு.

டிப்ஸ்

நீங்கள் இடப்புறமாக படுத்து தூங்க வேண்டும். ஏனெனில் இம்முறையில் தான் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். 4 அல்லது 5 மாதங்களுக்குப் பிறகு மல்லாக்க படுத்து தூங்குவதும், குப்புற படுத்து தூங்குவதும் உங்களுடைய வயிற்றில் உள்ள குழந்தை மீது கூடுதலான அழுத்தத்தை திணிக்கும் செயல்களாகும். மேலும் இம்முறைகளில் படுத்து தூங்கினால் குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து போகும். ஒருவேளை இப்படி தூங்க முடியாமல் தவிப்பவர்கள் இடதுபுறமாக சாய்ந்து படுத்தபடி முதுகுக்கு பின்புறமும், கால்களுக்கு இடையிலும் தலையணைகளை வைத்துக் கொள்ளலாம். தற்போது கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற தலையணைகளை தயாரிக்கிறார்கள். அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இந்த வகை தலையணைகள் உங்கள் உடம்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:35 pm

16-வது வாரம்

உங்களுடைய குழந்தை இப்போது தலையில் இருந்து பின்பகுதி வரை 4.3 முதல் 4.6 இஞ்ச் நீளம் இருக்கும். சராசரியாக 2.8 அவுன்ஸ்கள் எடை இருக்கும். கை விரல்களில் நகங்கள் நன்றாக உருவாகி இருக்கும். தலையில் லேசான நிறமுள்ள மென்மையான முடி காணப்படும். முன் கைகளும், கால்களும் நகரும். நரம்பு மண்டலம் இயங்கத் தொடங்கும். மூளையின் தூண்டுதல்களுக்கு ஏற்றபடி உங்கள் குழந்தைகளின் தசைகளில் இயக்கம் காணப்படும். உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை மருத்துவரின் அறையில் வைத்து உங்களால் சிரமம் ஏதுமின்றி எளிதாக கேட்க முடியும்.

கருப்பை எடை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகாpத்து இருக்கும். அது சராசரியாக 8.75 அவுன்ஸ் எடை இருக்கும். அடுத்து வரப்போகும் சில வாரங்களில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இயக்கத்தை உணர்ந்து கொள்வீர்கள். அது மென்மையான காற்று நிரப்பப்பட்ட பலூன் நகருவதைப் போல இருக்கும். இந்த உணர்வு அடிக்கடி காணப்படும். இதுதவிர வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ரத்தம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வகையில் உங்களுடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக ரத்தக் குழாய்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதை சாதாரணமாகவே காண முடியும். இப்போது உங்களுடைய கருப்பை நகர்ந்து விடும் என்பதால் நீங்கள் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும்.

டிப்ஸ்

கால்களில் வீக்கம் ஏற்படும். இதனை சின்ன சின்ன உடற் பயிற்சிகள் மூலம் மாற்றி விடலாம். அதனால் ரத்த ஓட்டம் சீராகி விடும். ஆகையால் கால்கள் வீங்குவதைப் பார்த்து பயந்து விட வேண்டாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:35 pm

குழந்தையின் தலையில் முடி வளரத் தொடங்கும். லானுகோ எனப்படும் மென்மையான முடி குழந்தையின் தோள்பட்டைகள், பின்பாகம் மற்றும் கன்னப் பொறிகளில் முடி இருக்கும். குழந்தை களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த மென்மையான முடி, குழந்தை பிறந்த முதல் வாரத்திற்குள் மறைந்து விடும்.

கருப்பையில் காணப்படும் அம்னியோடிக் திரவம் குழந்தையின் தோலை தாக்கி விடாமல் பாதுகாக்கும் வகையில் வெர்னிக் காசியோசா எனப்படும் வெண்ணெய் போன்ற வெண்ணை நிற வழுவழுப்பு திரவம் தோலை மூடிக் கொண்டிருக்கும். இந்த படலம் குழந்தை பிறப்பதற்கு சற்றுமுன் தானாகவே அகன்று விடும்.

குழந்தைக்கு தசைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் என்பதால் அது உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும். அதனால் குழந்தையின் இயக்கத்தை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர முடியும்.

5-வது மாத முடிவில் குழந்தை 10 இஞ்ச் நீளமும், 1_2 பவுண்டு முதல் 1 பவுண்டு எடையுடனும் இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:36 pm

17-வது வாரம்

உங்கள் குழந்தை அதனுடைய தொடர் வளர்ச்சியில் 15-வது வாரத்தில் இருக்கும். இந்த கால கட்டத்தில் குழந்தையின் நீளம் தலை முதல் பின் பாகம் வரை 4.4 முதல் 4.8 இஞ்ச் வரையிலும், எடையைப் பொறுத்த மட்டில் கடந்த இரண்டு வாரங்களில் இருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்கு, அதாவது 3.5 அவுன்ஸ்கள் கூடி இருக்கும். கொழுப்பு உருவாகத் தொடங்கி குழந்தையின் வளர்சிதை மாற்றத்துக்கும், வெப்ப உற்பத்திக்கும் உதவி செய்யும். நுரையீரல்கள் அம்னியோடிக் திரவத்தை வெளியே தள்ள ஆரம்பிக்கும். ரத்த ஓட்ட மண்டலமும், சிறுநீரக அமைப்புகளும் வேலை செய்யும். தலை, கண் புருவம், கண் இமைகள் ஆகியவற்றில் முடி நிரம்பி இருக்கும்.

இந்த வாரத்தில் உங்களுடைய அடி வயிற்றில் ஒரு வீக்கம் காணப்படும். எடை யானது 5 முதல் 10 பவுண்டுகள் வரை கூடும். அதே நேரத்தில் பசி உணர்வும் அதிகரித்திருப்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இவ்வாரத்துக்கான டிப்ஸ்

இந்த வாரத்தில் நீங்கள் கீழே உட்காரும் போதும், படுத்திருந்து விட்டு எழுந்திருக்கும் போதும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மெதுவாக செய்ய வேண்டும். தக்கு.. புக்கு.. என்று துள்ளி குதிக்க வேண்டாம். தலை சுற்றல், மயக்கம் வருவது போல தெரிந்தால் பேசாமல் தரையில் உட்கார்ந்து விடுங்கள். ஒருவேளை லேசாக தலைவலிக்குமானால் கீழே உட்கார்ந்து தலையை குனிந்து கொள்ளுங்கள். அல்லது கொஞ்சம நேரம் படுத்துக் கொள்ளுங்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:36 pm

18-வது வாரம்

தற்போது குழந்தையானது 5 முதல் 5.6 இஞ்ச்கள் வரை நீளமும், 5.25 பவுண்டுகள் எடையும் கொண்டிருக்கும். வயிற்றில் உள்ள உங்களுடைய செல்லக்குட்டி வேகமாக வளருவதையும், அதன் எதிரொலியாக செல்லமான உதைகள் அதிகரிப்பதையும் நீங்கள் காணலாம். இந்த வாரத்தில் குழந்தை கொட்டாவி விடும். உடம்பை நீட்டி நெளிக்கும். முகத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கும். அத்தனை ஏன்? உங்கள் குழந்தை கோபம் படவும் செய்யும். நாக்கில் உள்ள ருசி மொட்டுக்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் காரணமாக இனிப்பான உணவுகளை மற்ற கசப்பான உணவுகளில் இருந்து பிரித்தறிய இயலும். உதடுகளை கூட்டி சப்புக் கொட்டும். விக்கல் கூட வரும். குழந்தையின் கண் விழித்திரை வெளிச்சத்துக்கு தகுந்தாற் போல இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்கள் அடிவயிற்றில் அதிகமான வெளிச்சம் பட்டால் குழந்தை அதிலிருந்து தப்பிக்கும் வகையில் நகர்ந்து கொள்ளும். அது வெளிச்சம் கண்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் அமையும்.

கருப்பையின் அளவு பெரிதாகுவதன் காரணமாக தொப்புள் கொடிக்கு சற்று கீழ் வரை வளர்ந்திருப்பதை உங்களால் அறிய முடியும். குழந்தையின் இயக்கத்தை மேலும் தெளிவாக உணர்வீர்கள். கர்ப்பத்தின் இடைக்காலத்தில் எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை இந்த வாரத்திலிருந்து 22-வது வாரம் வரை எடுக்கலாம். அதன் மூலம் கருவின் வளர்ச்சி, உறுப்புகளின் வளர்ச்சி, டெலிவரி நாள் ஆகியவற்றை கணக்கிட முடியும். குழந்தை சரியான நிலையில் இருக்குமானால் அல்ட்ராசவுண்ட் டெஸ்ட் மூலம் அது ஆணா? பெண்ணா? என்று கூட கண்டுபிடிக்க முடியும். கருவில் உள்ள குழந்தைக்கு சப்போர்ட் செய்வதற்காக உங்களுடைய இதயம் 40 முதல் 50 சதவீதம் கூடுதலாக வேலை செய்யும்.

இவ்வாரத்துக்கான டிப்ஸ்

அல்ட்ராசவுண்ட் டெஸ்டுக்கு உங்களுடன் கணவரையும் அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் உங்கள் குழந்தையின் முதல் புகைப்படத்தை இரண்டு பேரும் சேர்ந்து பார்த்து மகிழும் வாய்ப்பு உள்ளது. அந்தப் படத்தை உங்கள் நண்பர்களிடமும், நெருக்கமான உறவுக்காரர் களிடமும் காட்டி மகிழலாம். ஆனால் சோனோகிராம் டெஸ்ட் எடுப்பதால் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் உள்ளது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் சில குறைபாடுகளை அதனால் சுட்டிக் காட்ட முடியும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக