புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_lcapசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_voting_barசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_lcapசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_voting_barசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_lcapசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_voting_barசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_lcapசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_voting_barசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_lcapசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_voting_barசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 9:07 pm

1. ஜாடிக்கேத்த மூடி.

ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்த பழமொழியை வைத்து கூறுவார்கள். அதாவது மிக பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

2. ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

ஏழைகள் விலையுயர்ந்த சாப்பாடு சாப்பிட முடியாது. கஞ்சியோ கூழோ எது கிடைத்தாலும் அதை மன நிறைவுடன் சாப்பிடுவார்கள். சாப்பிடும்போது இந்த பழமொழியைக் கூறிக்கொண்டே திருப்தியாக சாப்பிடுவார்கள்.

3. சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை.

கண்டிப்பாக நமக்கு வாழ்கையில் துணை என்றால் அது நாம் செய்யும் தொழில் அல்லது வேலைதான். அதில் சோம்பேறித்தனமா இருந்தால் வாழ்வே நமக்கு சோதனைதான்.

4. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

ஒரு பொருளின் அருமை, அது நமக்கு கிடைக்காமல் ஏங்கும்போதுதான் தெரியும்.

5. நொய் அரிசி கொதிக்குத் தாங்காது.

இளகிய மனம் கொண்டவர்களை லேசாக திட்டினால் கூட அழுதுவிடுவார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது.

6. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

ஒரு சிறு கதை:

எங்கள் ஊரில் ஒருவனுக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு தன் கணவன் இன்னொரு பெண்ணை வைத்திருப்பது தெரியவர வீட்டில் தினமும் சண்டைதான். இரண்டாவது மனைவியை விட முதல் மனைவிதான் மிகவும் அழகு மற்றும் நல்லவள். ஆனால் அடிக்கடி சண்டை நடப்பதால் கோபத்தில் முதல் மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்றுவிட்டான்.

இதனை தன் பெற்றோர்களிடம் கூறினான். அவர்கள் இவ்வாறாக கூறினர்.

“ஒன்னு, நீ இந்த ஊர விட்டுட்டு கண் காணாத இடத்திற்கு ஓடிடு. இல்லை அவள மாதிரியே நீயும் செத்திடு. இல்லன்னா போலீஸ் எங்கள நிம்மதியா வாழவிடாது”

இதனைக் கேட்டதும் தன் பெற்றோர்களின் மீது ஆத்திரம் கொண்டு வாழ பிடிக்காமல் விஷம் சாப்பிட்டு இறந்தான். அவனது இரண்டாவது மனைவி இப்போது தனியாக தவிக்கிறாள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை இவன் விஷயத்தில் நன்கு உணரலாம்.

7. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்

பொய் மட்டும் அல்ல. ஒரு கெட்ட செயலை செய்ய ஆரம்பித்தால் மேலும் பல கெட்ட செயல்களை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

8. ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை

எப்போதாவது அபூர்வமாக செய்வதை இப்படிக் குறிப்பிடலாம். உதாரணம்: “இவன் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருகிறான்.”

9. பிஞ்சு வத்தினா புளி ஆகாது

புளியங்காய் பழுத்து அதனை காயவைத்து கொட்டை எடுத்தால்தான் அது புளி. பிஞ்சை பறித்து அதிலிருந்து புளி எடுக்க முடியாது. அதுபோல, பிள்ளைகளை புளியாக மாற்றவேண்டுமென்றால் பெற்றோர்கள் அவர்களை பிஞ்சிலே வத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

10.தடிக்கும் நோகாம பாம்புக்கும் வலிக்காம

அதாவது யாராவது நமக்கு பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என்றால், நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவருக்கும் மனம் வலிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவேண்டும்.

11.பாம்புன்னும் மிதிக்க முடியாம பழுதுன்னும் தாண்ட முடியாம

ஒரு சிலர் இருப்பார்கள். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றே தெரியாது. அவர்களை ஒரு பிரச்சினையில் எப்படி அனுகுவது மற்றும் கையாள்வது என்று தெரியாது. அந்த சமயத்தில் இந்த பழமொழி அவர்களைக் குறிக்கும். அதாவது அவர்களை பாம்பு என நினைத்து மிதித்து கொல்லவும் முடியாது. பழுதென்று நினைத்து தாண்டவும் முடியாது.

12.பட்டாதான் தெரியும் பல்லிக்கு சுட்டாதான் தெரியும் நண்டுக்கு.

பல்லி நம் மேல் வந்து விழுவது, சாப்பாட்டில் விழுவது போன்ற பல ஐசாட்டியங்களைச் செய்யும். அது தவறு என்று அதனால் உணர முடியாது. நாம் அதனை அடிக்கும்போதுதான் உணரும். நண்டை நாம் சுட்டுத் திங்கும்போதுதான் அது புரிந்துகொள்ளும் வலையை விட்டு வெளியே வருவதால் வரும் ஆபத்தை.

அதுபோல, ஒருசிலருக்கு அவர்களது தவறை உணரமுடியாத அளவுக்கு மூளை மழுங்கியிருக்கும். அவர்கள் தவற்றின் விளைவுகளை அனுபவித்தால்தான் திருந்துவார்கள்.

13.உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யாதே.

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பார்கள். அதுபோல நமக்கு ஆபத்தில் உதவியவர்கள் மற்றும் பசிக்கு சோறு போட்டவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது.

14.வாழப் பழத்தில் ஊசி ஏத்துவது போல்

சிலர் பேசுவது நம்மை திட்டுவது போல் இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அவர்கள் சாதாரணமாக பேசுவதுபோல்தான் தெரியும். நமக்குதான் தெரியும் அவர்கள் பேசுவதில் எவ்வளவு சூழ்ச்சிமம் இருக்கிறது என்று. ஏன் என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்கவும் முடியாது. ஏனென்றால் அவர்கள் பேசுவது மறைமுகமாக இருக்கும். இப்படியாக எப்போது பார்த்தாலும் சாதாரணமாக பேசுவதுபோல் பேசி நம்மை அசிங்கப்படுத்துபவர்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பேசுகிறார்கள் என்போம்.

15.கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.

பிரச்சினைகளுக்கான சூழ்நிலையை (கெட்ட நண்பர்கள், கெட்ட பழக்கங்கள்) சுமந்து கொண்டிருந்தால், நம்மைத்தேடி பிரச்சினைகள் வந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை தூக்கிபோடுங்கள். ஒரு பிரச்சினையும் நம்மை அணுகாது.

நன்றி தமிழ்ப்ரியன்.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 21, 2013 10:53 pm

பழமொழிகளின் விளக்கப் பகிர்வு நன்று ராஜூ




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 7:06 pm

இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் பழமொழிகளின் விளக்கம் அருமையிருக்குஅருமையிருக்குஅருமையிருக்கு

இதை தெரியாமலே நான் எத்துணை முறை இந்த பழமொழிகளை உபயோகித்து இருக்கிறேன்
இப்போ தெரிந்து விட்டது மிக்க மகிழ்ச்சி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Mசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Uசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Tசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Hசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Uசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Mசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Oசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Hசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Aசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Mசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Eசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக