புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
21 Posts - 4%
prajai
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
7 Posts - 1%
mruthun
 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_m10 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 20, 2013 12:56 am



ரிசர்வ் வங்கி அண்மையில் ஒரு முக்கியமான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வங்கிகள் தங்களது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் "தனிப்பட்ட அடையாள எண்' (யுனீக் கஸ்டமர் ஐடென்டிஃபிகேஷன் கோடு) குறிப்பிட்ட கால வரம்புக்குள் கொடுத்திட வேண்டும் என்பதே அது.

ஏற்கெனவே, இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) "ஆதார்' அட்டையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கத் தொடங்கிவிட்டது. அந்த அட்டையில், இரண்டு செய்திகள் காணப்படுகின்றன. ஒன்று, "ஆதார்' நாடு முழுவதும் செல்லுபடியாகும். இரண்டு, வருங்காலத்தில் அரசு மற்றும் அரசு-சாரா சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள "ஆதார்' உதவிகரமாக இருக்கும்.

இந்நிலையில், வங்கிகள் மீண்டும் ஒரு பிரத்தியேக, தனிப்பட்ட அடையாள எண் வழங்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு ஒரு வருந்தத்தக்க பின்னணி இருக்கிறது.

""கோப்ரா போஸ்ட்'' என்கிற புலனாய்வு இணையதளம், தான் நடத்திய ரகசிய விசாரணை அடிப்படையில், பரபரப்பான செய்தியை, இரண்டு தவணைகளில் வெளியிட்டிருந்தது. முதல் தவணையில், மூன்று பிரபல தனியார் வங்கிகள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முறைகேடான முயற்சிக்குத் துணைபோயின என்பதுதான் அது.

அதிர வைக்கும் இச் செய்தி உண்மைதானா என்பதை அறிவதற்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, சம்பந்தப்பட்ட வங்கிகள் விசாரணையைத் தொடங்கின. ரிசர்வ் வங்கியும் தனது நேரடியான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த விசாரணைகளின் முடிவுகள் வெளிவருவதற்குள் மேலும் ஒரு பூதம் கிளம்பியது.

மேற்கூறிய இணையதளம் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 23 அரசுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நபர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இன்றி உதவ முன் வருகின்றன என்பதுதான் அந்த அறிக்கையின் சாரம்.

வங்கிகள் மட்டும் அல்லாமல், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. மற்றும் பல காப்பீட்டு நிறுவனங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கான முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக, நாட்டில் பல விதிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில், "வாடிக்கையாளர்களைப்பற்றி நன்கு அறிதல்' என்கிற விதிமுறை முக்கியமானது. இதன்படி, வங்கியில் பணம் டெபாசிட் செய்பவர்கள் அல்லது கணக்கு தொடங்குபவர்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தையும், வசிக்கும் இடத்தின் முகவரியையும் உறுதி செய்யும் வகையில், உரிய சான்றிதழ்களைத் தாக்கல் செய்திட வேண்டும். "கேட்பு வரைவோலை' (டிமாண்டு டிராப்ட்) வாங்குவது உள்ளிட்ட ரூ. 50,000/-க்கு அதிகமான ரொக்கப் பணப் பரிமாற்றத்துக்கு, "பான்' அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

"கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதளம் என்ன கூறுகிறது என்றால், அவர்களது செய்தியாளர்கள், பல்வேறு வங்கிகளுக்குச் சென்று, தாங்கள் செய்தியாளர்கள் என்று தெரிவிக்காமல், மாறாக, தாங்கள் பெரிய தொகைகளை டெபாசிட் செய்திட விரும்புவதாகச் சொல்லி, வங்கி அதிகாரிகளை அணுகினார்களாம்.

மேற்கூறிய விதிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமலேயே, பெரிய பெரிய தொகைகளை டெபாசிட்டாகப் பெற்றுக்கொள்ள வங்கிகள் தயாராக இருந்தன என்று குற்றம் சுமத்தி இருக்கின்றது.

அதுமட்டும் அல்லாமல், மேற்கூறிய விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கு என்ன வழி என்று தெரிவிக்கவும் வங்கி அதிகாரிகள் தயங்கவில்லை என்கிறது அந்தப் புலனாய்வு. உதாரணமாக, ரூ. 50,000/-க்கு அதிகமான டெபாசிட்டுக்கு "பான்' அட்டை தேவை என்பதால், ஒரே கிளையில், ஒருவரது பெயரில் பெரிய தொகையைப் போடாமல், அந்தப் பெரிய தொகையை ரூ. 49,000/-க்கு மிகாமல், பல்வேறு கிளைகளில் சிறிய, சிறிய டெபாசிட்டுகளாகப் பிரித்துப் போடலாம் என்கிற யோசனையையும் வழங்கினார்களாம்! "பல்வேறு பெயர்களில்' பணத்தைப் பிரித்துப் போடலாம் என்றும் சொன்னதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், பெரும் தொகைகளுக்கான "பாலிசி' வழங்குவதற்குத் தயாராக இருந்தன என்பது குற்றச்சாட்டு.

இச் செய்திகள் வெளிவந்தவுடன், வங்கிகளுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும், மத்திய அரசு, நிதி அமைச்சகத்திலிருந்து உத்தரவுகள் பிறந்தன. முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணி இடைநீக்கம், கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு, பணி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தப் பின்னணியில்தான், மேற்கூறியபடி, வங்கிகள் தங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கிட வேண்டும் என்கிற புதிய ஆணையை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

இதனால் என்ன நன்மை என்றால், ஒரே நபர் ஒரு வங்கியின் வெவ்வேறு கிளைகளில் பணத்தைப் பிரித்துப் பிரித்துப் போட்டு, விதிமுறைகளிலிருந்து தப்பிக்க முடியாது. அப்படிச் செய்ய முயன்றால், அதைக் கணினி வாயிலாக உடனே கண்டுபிடித்துவிடலாம்.

அதேபோல், அனைத்து வங்கிகளிலும் வழங்கப்பட உள்ள தனிப்பட்ட அடையாள எண்கள் பற்றிய தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும் என்பதால், விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், பெரிய அளவிலான பணப் பரிமாற்றம் சாத்தியம் இல்லை.

இந்த விதிமுறைகளின் உண்மையான முக்கியத்துவம் என்னவென்றால், இது வெறும் வரி ஏய்ப்புக்காக மட்டும் உதவும் கறுப்புப்பண விஷயம் அல்ல. இது நாட்டின் பாதுகாப்புக்கே உலை வைக்கக்கூடியதாகும். பயங்கரவாதச் செயல்களுக்கு தீனிபோடும் வகையில், வெளிநாடுகளிலிருந்து ""ஹவாலா'' மூலமாக வரக்கூடிய பணம், உள்நாட்டில் ஊடுருவல் செய்து, வங்கிகளுக்குள் நுழைந்து வெள்ளைப் பணமாகலாம்.

இது ஒருபுறம் இருக்க, தனியார் வங்கிகளிலும் சரி, அரசுடமை வங்கிகளிலும் சரி, டெபாசிட் பெருக்கத்துக்கான இலக்கு, லாப அதிகரிப்புக்கான இலக்கு ஆகியவை ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படுகின்றன. எளிதில் எட்டிட முடியாத இலக்குகளை, எட்ட வேண்டிய நெருக்கடி வங்கி அதிகாரிகளுக்கு இருக்கிறது. இந்நிலையில் எப்படியாவது அதிக டெபாசிட் தொகையைத் திரட்ட வேண்டும் என்கிற உந்துதல் இவர்களுக்கு ஏற்படக்கூடும். இதன் காரணமாகவும் சிலர் தவறான பாதையில் செல்லத் துணிகிறார்களா? இது மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் நடப்பது சாத்தியமா என்பன போன்ற கோணங்களிலிருந்தும் ஆராயப்பட வேண்டும்.

அதே நேரம், கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் பணிபுரியும் வங்கித் துறையில், மிகச் சிலரே இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று மனதைச் சமாதானம் செய்து கொள்ள முடியாது.

வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்கள் பெறுவது தொடர்பான விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய 3 தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முறையே 5 கோடி ரூபாய், 4.5 கோடி ரூபாய் மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதற்குமுன் ரிசர்வ் வங்கி இவ்வளவு பெரிய ரொக்க அபராதத்தை விதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 36 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் கணக்குகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் குறிப்பிட்ட குற்றத்தை வேண்டுமானால், புதிதாக அமல்படுத்தப்பட உள்ள விதிமுறைகளின் வாயிலாகத் தடுத்து நிறுத்தி விடலாம் என்பது வேறு விஷயம்.

ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வங்கிகள் மீது பொதுமக்கள் அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வேறு எந்த ஓர் அமைப்பின் மீதும் மக்கள் இந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்களா என்பது சந்தேகம்தான்! அப்படியிருக்கும்போது, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக, வங்கியாளர்கள் செயல்பட வேண்டாமா? வங்கிகளின் மீதான நம்பிக்கை ஆட்டம் காண, வழி வகுக்கலாமா?

அவர்களே, ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!

கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் துணை பொது மேலாளர்.



 வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 1:09 am

எம்புட்டு நம்பரத்தான் வாங்கறது?




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக